என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 107604"
மதுரை:
மதுரை மாவட்டம், சோழவந்தான் பங்களா பேட்டையைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி மாயக்காள் (வயது 38). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சபரிமலை என்பவரது மகன் சுரேஷிடம் ரூ. 10 ஆயிரம் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார்.
இந்த நிலையில் மாத வட்டியை சரியாக கொடுத்து வந்ததாகவும், ஆனால் சுரேஷ் மற்றும் அவரது உறவினர்கள் கந்து வட்டி கேட்டு தாக்கியதாக மாயக்காள் சோழவந்தான் போலீசில் புகார் செய்தார்.
இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலாஜி விசாரணை நடத்தினார். சுரேஷ், அவரது சகோதரர் முத்துக்குமார் மற்றும் மாரிச்சாமி ஆகிய 3 பேர் மீது கந்து வட்டி வழக்கில் வழக்குப்பதிவு செய்து சுரேஷை, போலீசார் கைது செய்தனர்.
மதுரை:
மதுரை மாவட்டம், கருமாத்தூரைச் சேர்ந்தவர் மலைச்சாமி. இவரது மகள் கற்பகம் (வயது 19). செக்கானூரணியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கற்பகம் இளநிலை 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
அந்த கல்லூரி அருகே டெய்லரிங் கடை நடத்தி வந்தவர் மான்சிங். உசிலம்பட்டி அருகே உள்ள நரசிங்கபுரத்தைச் சேர்ந்த இவர், மாணவி கற்பகத்தை காதலித்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் திருமண ஆசை காட்டி கற்பகத்தை மான்சிங் கடத்திச் சென்று விட்டார். இந்த தகவல் அவரது பெற்றோருக்கு தெரியவந்தது.
செக்கானூரணி போலீ சில் மலைச்சாமி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட கல்லூரி மாணவியையும், கடத்திய வாலிபரையும் தேடி வருகிறார்கள்.
மதுரை:
மதுரை பழங்காநத்தம், திருவள்ளுவர் நகர், 8-வது தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் சண்முகப்பாண்டி (வயது 23).
பிரபல ரவுடியான சண்முகப்பாண்டி மீது மதுரை நகரில் நகைபறிப்பு மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாக பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சண்முகப்பாண்டி மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மதுரை நகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார்.
இதையடுத்து சண்முகப் பாண்டி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மதுரை கே.கே.நகர் 100 அடி ரோட்டில் பிரபல வணிக வளாகம் அருகே உள்ள கட்டிடத்தில் 2-வது மாடியில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் இன்சூரன்ஸ் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்தில் இன்று காலை 8 மணியளவில் தீப்பிடித்தது. இதனால் பெரிய அளவில் கரும்புகை வெளியேறியது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக 3 வண்டிகளில் வந்த தீயணைப்பு படையினர் ராட்சத ஏணியை பயன்படுத்தி 2-வது மாடிக்கு சென்று தண்ணீரை பீய்ச்சி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் நேரம், ஆக... ஆக... அங்குள்ள அலுவலகம் முழுவதும் தீப்பிடித்ததால் கரும்புகை சூழ்ந்தது. இதனால் தீயை அணைப்பதிலும் சிரமம் ஏற்பட்டது. ஆனாலும் 30-க்கும் மேற்பட்ட தீயணைக்கும் வீரர்கள் தீ மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஆனாலும் புகை மண்டலம் இன்னும் இருப்பதால் தொடர்ந்து தீயணைப்பு படையினர் அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
2 மணி நேரமாக தீ பிடித்ததால் அங்குள்ள சேத மதிப்பு இன்னும் மதிப்பிடப்படவில்லை. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் உள்ள கட்டிடம் தீ பிடித்து எரிந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பொதுமக்களும் ஏராளமானோர் திரண்டு தீயை அணைக்கும் பணிக்கு உதவினர். தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. #Tamilnews
மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து அழகர் கோவில் செல்லும் வழியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் தனியார் செல்போன் டவர் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த டவரில் செல்போன் சிக்னலுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த சக்தி வாய்ந்த 15 பேட்டரிகள் திடீரென காணவில்லை. இதன் மதிப்பு ரூ.80 ஆயிரம் ஆகும்.
இதுதொடர்பாக அங்கிருந்த பாதுகாவலர் ரவிச்சந்திரன் மேலவளவு போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தஞ்சாவூர் பள்ளி அக்ரகாரத்தைச் சேர்ந்த தியாகராஜன் (வயது 52), ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த செல்வமூர்த்தி (17) ஆகியோர் இந்த பேட்டரிகளை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மாணாக்கர்களின் கல்வி வளர்ச்சியில் எப்போதும் தனி அக்கறை கொண்டுள்ள அம்மாவின் அரசு, தமிழ்நாட்டில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணாக்கர்கள், உலக தரத்திற்கு இணையான தொழிற்கல்வியினை பெற்று தங்களது திறமைகளையும், செயல் திறன்களையும் மேம்படுத்திக் கொள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்து வருகிறது.
இந்தியாவிலேயே தர வரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகம், சென்னையில் 4 வளாகங்களிலும், சென்னை தவிர தமிழ்நாடு முழுவதும் 13 உறுப்புக் கல்லூரிகளிலும் பொறியியல் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் பயிற்றுவித்து வருகின்றன. ஆனால், திருநெல்வேலி, மதுரை மற்றும் கோயம் புத்தூர் மண்டல வளாகங்களில் பொறியியல் முதுநிலை பட்டப்படிப்பு மட்டும் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.
அதனை ஏற்று, ஏழை, எளிய மாணவர்களும் உலகத்தரம் வாய்ந்த அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பொறியியல் இளநிலை பட்டப்படிப்பு பயில்வதற்கு வசதியாக, தற்போது திருநெல்வேலி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் மண்டல வளாகங்களில் ஏற்கனவே உள்ள பொறியியல் முதுநிலை பட்டப் படிப்புகளோடு ஒவ்வொரு மண்டத்திலும் நான்கு இள நிலை படிப்புகளை ஒவ்வொரு பாடப் பிரிவிற்கும் 60 மாணவர் சேர்க்கை என்ற வீதத்தில் இந்த கல்வியாண்டு (2018-19) முதல் தொடங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
எனவே, இந்த வருடத்திற்கான (2018-19) பொறியியல் மாணாக்கர் சேர்க்கையில் திருநெல்வேலி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய ஒவ்வொரு மண்டத்திற்கும் 4 பாடப் பிரிவுகளில் தலா 240 சேர்க்கை இடங்கள் வீதம் மொத்தம் 720 இடங்கள் கூடுதலாக கிடைக்கும்.
இதன் மூலம், அதிக மதிப்பெண்கள் பெற்ற ஏழை, எளிய மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணாக்கர்கள், குறைந்த கட்டணத்தில் தரமான தொழிற்கல்வியை பெறுவார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கம், தென்னக கரும்பு விவசாயிகள் மேம்பாட்டு சங்கம் மற்றும் முல்லை பெரியாறு ஒருபோக விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த ஏராளமானோர் இன்று கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர்.
அவர்கள் நுழைவுவாயில் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கிருந்த போலீசார் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த அனுமதியில்லை. எனவே கலைந்து செல்லுங்கள் என்று எச்சரித்தனர்.
ஆனால் விவசாயிகள் இதற்கு மறுப்பு தெரிவித்ததோடு கலெக்டர் அலுவலக மெயின் ரோட்டில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது தேசிய கூட் டுறவு சர்க்கரை ஆலையில் 3 ஆண்டுகளாக அரவை செய்த கரும்பு கொள்முதல் தொகை ரூ. 212 கோடியை உடனே வழங்க வேண்டும்.
தமிழக அரசு வருவாய் பங்கீட்டு முறையை அமல்படுத்தக்கூடாது. கரும்பு டன்னுக்கு ரூ. 4 ஆயிரம் நிர்ணயிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
இந்த மறியலால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து விவசாய சங்கத் தலைவர்கள் பழனிச்சாமி, முருகன், அப்பாஸ் மற்றும் 75-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். #tamilnews
மதுரை தமுக்கம் மைதானம் அருகில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று நள்ளிரவு இங்கு வந்த மர்ம கும்பல் ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்தது.
பின்னர் பயங்கர ஆயுதங்களுடன் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் பணம் இருக்கும் பெட்டியை உடைக்க முடியவில்லை.
இதற்குள் அந்தப்பகுதியில் ஆள் நடமாட்டமும் வருவதை அறிந்த மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டு விட்டு அங்கிருந்து தப்பினர்.
இன்று காலை ஏ.டி.எம். மையத்தில் இருந்த எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட அந்தப்பகுதி மக்கள் வங்கிக்கும், தல்லாகுளம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஏ.டிஎம். மையத்தை ஆய்வு செய்தனர். அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை எடுத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகரின் மையப்பகுதியில் உள்ள ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் ஷாலினி (வயது 18).
சம்பவத்தன்று வீட்டில் இருந்த ஷாலினி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் எந்த பலனும் இல்லை.
இது குறித்து முருகேசன், அலங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதில், எனது மகளை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த சாக்ரடீஸ் மகன் சச்சின் என்பவர் கடத்திச் சென்று விட்டார்.
இதற்கு உடந்தையாக அவரது தாயார் சாரதா, உறவினர்கள் பிச்சை, முத்துப்பிள்ளை, பாசப்பிரியன், சசி ஆகியோர் உள்ளனர். எனவே அவர்களிடம் இருந்து எனது மகளை மீட்டுத்தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில் அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள தென்கரையைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி சாந்தி. இவர்களது மகள் மதுமிதா (வயது 20). விவசாய கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று செல்வம் வேலைக்கு சென்று விட, சாந்தி வங்கிக்கு சென்று விட்டார். வீட்டில் மதுமிதா மட்டும் தனியாக இருந்தார்.
சிறிது நேரத்தில் சாந்தி வீட்டுக்கு வந்தபோது மதுமிதா மாயமாகி இருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மகளை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் சாந்தியின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் உங்கள் மகளை கடத்தி இருக்கிறோம். ரூ. 5 லட்சம் கொடுத்தால் விடுவிப்போம் என்று மிரட்டி விட்டு செல்போன் அழைப்பை துண்டித்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சாந்தி மிரட்டல் குறித்து காடுபட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மிரட்டல் வந்த செல்போன் எண் ஹரீஷ் என்பவரது முகவரியில் வாங்கியிருப்பது தெரியவந்தது. மதுமிதா உண்மையில் கடத்தப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை மீனாம்பாள்புரம் சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மகன் ராஜபாண்டி (வயது 14).
இவன், விராட்டிப்பத்து பகுதியில் உள்ள மர ஆலையில் வேலை பார்த்து வந்தான். கடந்த 12-ந் தேதி ராஜபாண்டி அங்கு பணியில் இருந்த போது கங்காராம் (50), பவானி ஆகிய 2 பேர் எந்திரத்தை சுத்தம் செய்யுமாறு கூறினர். அதனை செய்தபோது மின்சாரம் தாக்கியதில் ராஜபாண்டி தூக்கிவீசப்பட்டான்.
அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த மற்றவர்கள், மயங்கி விழுந்த ராஜ பாண்டியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜபாண்டி பரிதாபமபக இறந்தான்.
இது குறித்து அவனது தந்தை கோபாலகிருஷ்ணன், எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கங்காராம், பவானி ஆகியோரை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்