search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரியாணி"

    வந்தவாசி அருகே பிரிட்ஜில் வைத்திருந்த பிரியாணியை சாப்பிட்ட கர்ப்பிணி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த மேல்பாதிரி கிராமத்தை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி. இவரது மனைவி உமா (வயது 30. இருவருக்கும் திருமணம் ஆகி 4 ஆண்டு ஆகிறது. ராகுல் (2) என்ற ஆண் குழந்தை உள்ளது.

    உமா தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று முன்தினம் பகல் உமா பிரியாணி செய்து சாப்பிட்டார். மீதமான பிரியாணியை பிரிட்ஜில் வைத்து அன்று இரவு சாப்பிட்டுள்ளார்.

    சிறிது நேரத்தில் உமாவுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. வந்தவாசி அரசு மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி உமா பரிதாபமாக இறந்தார். வந்தவாசி வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் விசாரணை நடத்தினார்.

    திருமணமாகி 4 ஆண்டே ஆவதால் உமா மரணம் குறித்து செய்யாறு சப்-கலெக்டர் அன்னம்மாள் விசாரணை நடத்தி வருகிறார்.

    பிரியாணி சாப்பிட்டதால் தான் உமா இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பிரியாணி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று சீரக சம்பா அரிசி சேர்த்து ஆந்திரா ஸ்டைலில் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - அரை கிலோ
    சீரக சம்பா அரிசி - அரை கிலோ
    பச்சை மிளகாய் - 10
    வெங்காயம் - 2
    தக்காளி - 2
    இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
    புதினா - ஒரு கட்டு
    கொத்தமல்லித்தழை - ஒரு கட்டு
    பால் - கால் லிட்டர்
    தயிர் - 100 மில்லி
    எண்ணெய் - 50 மில்லி
    நெய் - 2 டீஸ்பூன்
    பட்டை, கிராம்பு, ஏலக்காய்  - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை:

    சிக்கனை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    புதினா, கொத்தமல்லி, தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    பாலை நன்றாக காய்ச்சி ஆறவைத்து கொள்ளவும்.

    அரிசியை அரை மணி நேரம் ஊறவிடவும்.

    பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி - பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் அதனுடன் கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து வதக்கவும்.

    தக்காளி சேர்த்து குழைய வேக விடவும்.

    தக்காளி நன்றாக குழைய வெந்ததும் சிக்கன், தயிர், உப்பு, பால், அரை லிட்டர் தண்ணீர், சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

    தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அரிசியைச் சேர்த்து வேகவிடவும்.

    அரிசி பாதியளவு வெந்த பிறகு தம் போட்டு இறக்கவும்.

    கொத்தமல்லித்தழை, புதினா, நெய் சேர்த்து 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.

    பிறகு ராய்த்தாவுடன் பரிமாறவும்.

    சூப்பரான ஆந்திரா ஸ்டைல் சிக்கன் பிரியாணி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அனைவருக்கும் பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சிக்கன் சேர்த்து வெள்ளை நிறத்தில் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - 1/2 கிலோ,
    பாஸ்மதி அரிசி - 1/2 கிலோ,
    (பட்டை - 1, கிராம்பு - 2, ஏலக்காய் - 1, கருப்பு ஏலக்காய் - 1, சீரகம் - 1½ டீஸ்பூன், ஜாதிக்காய் - 1, பிரியாணி இலை - 2) (ஒரு துணியில் கட்டி வைத்துக்கொள்ளவும்)
    மல்லி தூள் - 1/4 டீஸ்பூன்,
    சோம்பு - 1/4 டீஸ்பூன்,
    மிளகு - 1/4 டீஸ்பூன்,
    பச்சை மிளகாய் - 5,
    பெரிய வெங்காயம் - 2,
    இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்,
    புதினா, கொத்தமல்லி - சிறிதளவு
    தயிர் - 1/2 கப்,
    எலுமிச்சம்பழம் - 1,
    உப்பு - தேவைக்கு,
    எண்ணெய், நெய் - 1/2 கப்.



    செய்முறை :


    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி துணியில் கட்டி வைத்த மசாலாவினை அதில் போட்டு கல் உப்பு, பச்சை மிளகாய், சிக்கன் சேர்த்து நன்றாக வேக விடவும்.

    பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் அதில் சீரகம், சோம்பு, மிளகு போட்டு தாளித்த பின்னர் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் அதில் வேக வைத்த சிக்கன் மசாலாவினை நன்றாகப் பிழிந்து வெளியே எடுத்துவிடவும்.

    பின் சிக்கனை வெங்காயத்துடன் சேர்த்து அதனுடன் அரிசி, தனியா தூள், தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து 10 நிமிடம் வேக வைத்து பிறகு கொத்தமல்லி, புதினா, எலுமிச்சை சாறு சேர்த்து தம் போட வேண்டும்.

    இப்பொழுது சுவையான கமகமக்கும் வெள்ளை சிக்கன் பிரியாணி தயார்.

    இதனுடன் சில்லி சிக்கன் மற்றும் சிக்கன் கிரேவி வைத்து பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    நண்டில் சூப், வறுவல், கிரேவி செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று நண்டை வைத்து சுவையான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    நண்டு - 400 கிராம்
    தக்காளி - 2
    பாசுமதி அரிசி - 300 கிராம்
    வெங்காயம் - 2
    பச்சை மிளகாய் - 5
    இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்
    சிவப்பு மிளகாய் தூள் -1 1/2 ஸ்பூன்
    புதினா, கொத்தமல்லி, உப்பு - தேவையான அளவு
    மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
    தேங்காய் பால் - கால் கப்
    தயிர் - 4 ஸ்பூன்
    கரம் மசாலா - அரை ஸ்பூன்
    பட்டை - 2
    ஏலக்காய் -5
    அன்னாசிப்பூ - 2
    மல்லித்தூள் - 1 ஸ்பூன்
    எலுமிச்சை - 1
    நெய், எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    நண்டை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாசுமதி அரிசியை நன்றாக கழுவி உதிரியாக வேக வைத்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய், ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும் ஏலக்காய், அன்னாசிப்பூ, கல்பாசி, பட்டை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் கலர் மாறியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளி, புதினா, ப.மிளகாய், கொத்தமல்லி சேர்த்து வதக்கியதும்

    பின்னர் தயிர், மிளகாய்தூள், மஞ்சள்தூள், தனியாதூள், கரம்மசாலா சேர்த்து கிளறி சுத்தம் செய்த நண்டை சேர்த்து கிளறி, போதுமான அளவு தேங்காய் பால் ஊற்றி, அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து பத்து நிமிடங்கள் நண்டை வேக விடவும்.

    நண்டு நன்றாக வெந்ததும் தயார் செய்து வைத்துள்ள சாதத்துடன் மசாலா கலவையை சேர்த்து கிளறி 15 நிமிடங்கள் தம் கட்டி இறக்கினால் சுவையான நண்டு பிரியாணி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.


    அசைவ உணவுகளில் இறால் மிகவும் சுவையானது. இன்று உங்களுக்காக எளிய முறையில் இறால் சேமியா பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சேமியா - 2 கப்
    இறால் - 1 கப்
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    பூண்டு பேஸ்ட் - 2 தேக்கரண்டி
    பச்சை மிளகாய் - 2
    மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி
    கொத்தமல்லி புதினா - தேவையான அளவு
    பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, பட்டை - 1
    தயிர் - 1 கப்
    எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
    நெய் - 1 மேசைக்கரண்டி
    எலுமிச்சம்பழம் - 1

    செய்முறை :

    இறாலை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    நன்றாக கழுவிய இறாலை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கரம் மசாலா பவுடர், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள, தயிர் சேர்த்து பிசைந்து அரை மணிநேரம் அப்படியே வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சேமியாவை போட்டு முக்கால் பாகம் வேக வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் அதில் பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, பட்டை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் பூண்டு இஞ்சி பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

    பூண்டு இஞ்சி பேஸ்ட் பச்சை வாசனை போனவுடன் அதில் தக்காளிவை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து புதினா, கொத்தமல்லி மற்றும் சீரக பவுடர் சேர்த்து வதக்கவும்.

    பின்னர் ஊறவைத்த இறாலை சேர்த்து வதக்கி, இறாலில் உள்ள தண்ணீர் வற்றி வேகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் முக்கால் பாகம் வேகவைத்த சேமியாவை இறாலுடன் சேர்த்து கிளறவும்.

    நன்கு உதிரியாக வரும் பருவத்தில் இறக்கி பரிமாறவும்.

    சுவையான சேமியா இறால் பிரியாணி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பல்வேறு வகையான வெஜிடபிள் பிரியாணி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கத்தரிக்காயை வைத்து சூப்பரான காரசாரமான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - ஒரு கப்
    பிஞ்சுக் கத்திரிக்காய் - கால் கிலோ
    சின்ன வெங்காயம் - ஒரு கப்
    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
    புளித்தண்ணீர் - 2 கப்
    கடுகு - ஒரு டீஸ்பூன்,
    தக்காளிச் சாறு - கால் கப்
    கொத்தமல்லித்தழை, புதினா - சிறிதளவு
    நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    அரைக்க :

    காய்ந்த மிளகாய் - 5
    தனியா - ஒரு டீஸ்பூன்
    வெந்தயம் - அரை டீஸ்பூன்
    கடலைப்பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
    சீரகம் - அரை டீஸ்பூன்



    செய்முறை :

    சின்னவெங்காயம், புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கத்தரிக்காயை காம்பு நீக்காமல் நான்கு பாகமாக வரும் படி வெட்டிகொள்ளவும். பார்க்க பூப்போல இருக்கும்.

    பாசுமதி அரிசியை நீரில் 15 நிமிடம் ஊறவிட்டு, நீரை வடிக்கவும்.

    வாணலியில் நெய்விட்டுச் சூடாக்கி அரிசியை சில நிமிடங்கள் வறுத்துக்கொள்ளவும்.

    வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடாக்கி, அரைக்க கொடுத்துள்ளவற்றை போட்டு வறுத்து, ஆறியதும் சிறிதளவு உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு பொடி செய்துகொள்ளவும்.

    குக்கரில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளிச் சாறு சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் வறுத்து அரைத்த பொடி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறவும்.

    அடுத்து அதில் நறுக்கிய கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும்.

    புளித்தண்ணீர் ஊற்றி, ஒரு கொதி வந்ததும் அரிசியைப் போட்டுக் கிளறி, அடுப்பை மிதமான தீயில் வைத்து வேகவிட்டு, வெந்ததும் புதினா, கொத்தமல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான கத்தரிக்காய் பிரியாணி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வெரைட்டி சாதம் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று மீல்மேக்கர் சேர்த்து பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :
     
    பாஸ்மதி அரிசி - 1 கப்,
    மீல்மேக்கர் - 1 கப்,
    உப்பு - தேவைக்கு,
    வெங்காயம் - 1,
    தக்காளி - 1
    பச்சை மிளகாய் - 2,
    மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்,
    சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன்,
    இஞ்சி-பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்,
    பட்டை தூள், கிராம்புத் தூள், சோம்பு தூள் - தலா 1/4 டீஸ்பூன்,
    பிரிஞ்சி இலை - சிறிது,
    புதினா, கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி,
    நெய் + எண்ணெய் - 2 டேபிஸ்பூன்.



    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
     
    பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி ஊறவைக்கவும்.

    கொதிக்கும் தண்ணீரில் மீல்மேக்கர், உப்பு சேர்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் வெறும் தண்ணீரில் போட்டு பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் + நெய் ஊற்றி சூடானது பட்டை தூள் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் உப்பு, மீல்மேக்கர், அரிசியையும் சேர்த்து கொதித்தவுடன் குக்கரை மூடி 1 விசில் அல்லது 3 நிமிடத்தில் நிறுத்தவும். விசில் அடங்கியதும் குக்கர் மூடியை திறந்து கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

    சூப்பரான மீல்மேக்கர் பிரியாணி ரெடி.

    வெங்காய தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பல்வேறு வகையான பிரியாணி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று தக்காளி சேர்த்து பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - 2 கப்,
    தக்காளி - 4
    பச்சை மிளகாய் -2,  
    மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப),
    பெரிய வெங்காயம் - ஒன்று,
    பிரெட் ஸ்லைஸ் - 2,
    முந்திரித் துண்டுகள் - 6,
    சீரகம் - ஒரு டீஸ்பூன்,
    கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி,
    நெய் - 2 டேபிள்ஸ்பூன்,
    எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,
    உப்பு - தேவைக்கேற்ப.



    செய்முறை :

    2 தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரிசியை நன்றாக கழுவி அரை மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.

    வாணலியில் நெய் விட்டு முந்திரியை சேர்த்து வறுக்கவும்.

    பிரெட்டை துண்டுகளாக வெட்டு வறுத்து கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெந்நீரில் 2 தக்காளிப்பழத்தைப் போட்டு 5 நிமிடம் வைத்திருந்து, தோலை உரித்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்து கொள்ளவும்.

    குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் போட்டு தாளித்த பின்னர் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய தக்காளிக்காயையும் சேர்த்து வதக்கவும்.

    தக்காளி சற்று வதங்கியதும் இதனுடன் மிளகாய்த்தூளையும் சேர்த்து வதக்கி, 3 கப் நீர் விட்டு, அரிசியைக் களைந்து சேர்த்து தக்காளி விழுது, உப்பு சேர்த்து குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.

    குக்கரில் ஆவி வெளியேறியதும், சாதத்துடன் வறுத்த முந்திரி, பிரெட் துண்டுகள் சேர்க்கவும்.

    கொத்தமல்லித்தழையால் அலங்கரித்து பரிமாறவும்.

    இதற்குத் தொட்டுக்கொள்ள வெங்காய தயிர்ப்பச்சடி ஏற்றது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மட்டன் பிரியாணி செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மட்டன் மண்டி பிரியாணியை எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பெரிதாக வெட்டிய மட்டன் - அரை கிலோ,
    வெங்காயம் - 4
    கரம் மசாலா - 2 டீஸ்பூன்,
    பச்சைமிளகாய் - 7,
    இஞ்சி பூண்டு விழுது - 3 டீஸ்பூன்,
    வெண்ணெய் எண்ணெய் - தேவையான அளவு,
    சீரக சம்பா அரிசி - அரை கிலோ,
    கொத்தமல்லி, புதினா, உப்பு - சிறிதளவு.



    செய்முறை :

    மட்டனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

    வெங்காயம், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சுத்தம் செய்த மட்டன் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கரம் மசாலா சிறிதளவு, பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது சிறிது, வெண்ணெய், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு மட்டன் முக்கால் பாகம் வெந்தவுடன் தனியாக எடுத்து எண்ணெயில் போட்டு வறுத்து கொள்ளவும்.

    ஒரு பெரிய அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெண்ணெய், எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், கரம் மசாலா, இஞ்சி, பூண்டு விழுது போட்டு நன்றாக வதக்கிய பின்னர் சீரக சம்பா அரிசி, கொத்தமல்லி, புதினா, பச்சைமிளகாய் மற்றும் மட்டன் வேக வைத்த தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.

    சாதம் முக்கால் பாகம் வெந்தவுடன்  அதில் வறுத்த மட்டன் துண்டுகளை சேர்த்து மூடி போட்டு மேலும் சிறிது நேரம் வேக விட்டு பின்பு பரிமாறவும்.

    சூப்பரான மட்டன் மண்டி பிரியாணி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    செங்கம் அருகே பிரியாணி சாப்பிட்ட வாம் தொண்டு நிறுவன விடுதியில் தங்கியிருந்த 77 மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    செங்கம்:

    செங்கம் அருகே உள்ள பொறையாறு, அரட்டவாடி ஆகிய இடங்களில் வாம் தொண்டு நிறுவனத்துக்கு சொந்தமாக மாணவர் விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இதில் 77 பள்ளி மாணவர்கள் தங்கியிருந்து படித்து வருகின்றனர்.

    இந்த மாணவர்கள் நேற்று திருவண்ணாமலை தொண்டு நிறுவனத்தில் நடந்த புத்தாக்க பயிற்சியில் பங்கேற்றனர். அங்கு வழங்கப்பட்ட பிரியாணி சாப்பிட்டு விட்டு விடுதிக்கு திரும்பினர்.

    இரவு அனைத்து மாணவர்கள் உடலில் அரிப்பு ஏற்பட்டு கொப்பளங்கள் உருவானது. இதையடுத்து அனைத்து மாணவர்களும் செங்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. உணவு ஒவ்வாமை காரணமாக மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    பொன்னேரி அருகே ஓசியில் பிரியாணி கேட்டு ஊழியர்களை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி, புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள பிரியாணி கடையில் ஊழியர்களாக வேலை பார்த்து வருபவர்கள் வசிம், லிசன். இரவில் கடைக்கு வந்த 3 வாலிபர்கள் பணம் கொடுக்காமல் பிரியாணி, காடை வருவல் கேட்டனர். இதனை கடையில் இருந்த ஊழியர்கள் கண்டித்தனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த 3 வாலிபர்கள் வசிம், லிசனை சரமாரியாக தாக்கி தப்பி சென்று விட்டனர்.

    இது குறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆலாடு பகுதியை சேர்ந்த சூர்ய பிரகாஷ், கும்மங்குளம் பாலாஜி ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் பரிக்கபட்டை சேர்ந்த பிரகாசை தேடி வருகிறார்கள்.

    குழந்தைகளுக்கு பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - அரை கிலோ
    சீரக சம்பா அரிசி - அரை கிலோ
    பச்சை மிளகாய் - 8
    வெங்காயம் - 2
    தக்காளி - 2
    இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
    புதினா - ஒரு கட்டு
    கொத்தமல்லித்தழை - ஒரு கட்டு
    பால் - கால் லிட்டர்
    தயிர் - 100 மில்லி
    எண்ணெய் - 50 மில்லி
    நெய் - 2 டீஸ்பூன்
    பட்டை, கிராம்பு, ஏலக்காய்  - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    பாலை நன்றாக காய்ச்சி வைக்கவும்.

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    அரிசியை நன்றாக கழுவி அரை மணி நேரம் ஊறவிடவும்.

    பாத்திரத்தில் எண்ணெய்விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி - பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் சிக்கன், கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தயிர், உப்பு, பால், அரை லிட்டர் தண்ணீர் நன்கு கொதிக்கவிடவும்.

    நன்றாக கொதி வந்தவுடன் அரிசியைச் சேர்த்து வேகவிடவும்.

    அரிசி பாதியளவு வெந்த பிறகு தம் போட்டு இறக்கவும்.

    கொத்தமல்லித்தழை, புதினா, நெய் சேர்த்து 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.

    பிறகு ராய்த்தாவுடன் பரிமாறவும்.

    சூப்பரான ஆந்திரா ஸ்டைல் பிரியாணி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×