search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 108777"

    • ஈரோடு வ.உ.சி. பூங்காவில் பெரிய காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.
    • கோவில் திருவிழாவை யொட்டி வியாபாரிகள் அனைவரும் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலம் சென்றனர்.

    ஈரோடு,

    ஈரோடு மாநகரில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் வகையறா கோவில்களின் குண்டம் தேர் திருவிழா கடந்த மாதம் 21 ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. தொடர்ந்து 3 கோவில்களிலும் கம்பம் நடப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து கோவில்களின் கம்பத்திற்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று புனித நீர் ஊற்றி அம்மனை வழிபட்டு வருகின்றனர். பெண்கள் முளைப்பாரி எடுத்தும், தீர்த்த குடங்கள் எடுத்தும் வருகின்றனர்.

    பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி ஏந்தியும் வருகின்றனர். இதனால் ஈரோடு மாநகரமே களைக்கட்டி உள்ளது.

    ஈரோடு வ.உ.சி. பூங்காவில் பெரிய காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

    இங்கு 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் உள்ளன. இங்கு சில்லரை வியாபாரம், மொத்த வியாபாரம் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் ஈரோடு பெரிய மார்க்கெட் வியா பாரிகள் சார்பில் பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவை யொட்டி வியாபாரிகள் அனைவரும் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலம் சென்றனர்.

    இதையொட்டி மார்க்கெ ட்டுக்கு இன்று விடுமுறை விடப்பட்டு உள்ள்து. இதனால் இன்று காலை வ.உ.சி. காய்கறி மார்க்கெட் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்ப ட்டது.

    • மருத்துவமனையில் பணியாற்றும் நர்சுகள், டாக்டர்கள் இன்று முககவசம் அணிந்து பணிக்கு வந்தனர்.
    • முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது.

    ஈரோடு:

    இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே கட்டுக்குள் இருந்த கொரோனா தாக்கம் மீண்டும் மார்ச் மாதம் வேகமாக பரவத் தொடங்கியது.

    இதன் எதிரொலியாக தமிழகத்தில் கடந்த 2 வாரத்திற்கும் மேலாக தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    கடந்த சில நாட்களாகவே 2 இலக்கில் பதிவாகி வந்த கொரோனோ பாதிப்பு தற்போது 3 இலக்கில் பதிவாகி வருகிறது.

    தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்து றையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    முன்புபோல் முககவசம் அணிய வேண்டும். கை, கால்களை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும்.

    பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றன.

    ஈரோடு மாவட்டத்திலும் கடந்த 2 வாரத்திற்கும் மேலாக தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.

    இதனையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுகாதார துறையினர் இன்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் நர்சுகள், டாக்டர்கள், நோயாளிகள், நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

    இந்த நடைமுறை இன்று தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்தது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் இந்த புதிய நடைமுறை இன்று அமலுக்கு வந்தது.

    ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் நர்சுகள், டாக்டர்கள் இன்று முககவசம் அணிந்து பணிக்கு வந்தனர்.

    இதேபோல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த நோயாளிகள், அவர்கள் உடன் இருப்ப வர்கள், உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருபவ ர்கள் முககவசம் அணிந்தி ருந்த னர்.

    இதேபோல் கோபிசெட்டிபாளையம், அந்தியூர், சத்தியமங்கலம், கொடுமுடி, பெருந்துறை, பவானி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் ஊழியர்கள், நர்சுகள், டாக்டர்கள், நோயாளிகள் முககவசம் அணிந்திருந்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் டாக்டர்கள், நர்சுகள், நோயாளிகள் முககவசம் அணிந்திருந்தனர். முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது. 

    • இன்று இரவு கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    • தொடர்ந்து பொதுமக்கள் தினமும் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபடுவர்.

    ஈரோடு:

    ஈரோடு நகரின் பிரசித்தி பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களின் பொங்கல் விழா ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 21-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.முன்னதாக முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்து முடிந்தது.

    இதனையடுத்து தற்போது கோவில் முன்பு பந்தல் அமைக்கும் பணியும், கடைகள் அமைக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

    தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) இரவு 8.30 மணிக்கு பட்டாளம்மன் அபிஷேகம், 10 மணிக்கு கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    29-ந் தேதி இரவு 7.30 மணிக்கு அன்ன வாகன ஊர்வலம், இரவு 10.30 மணிக்கு கிராம சாந்தி நிகழ்ச்சியும் நடைபெறுவது.

    தொடர்ந்து பொதுமக்கள் தினமும் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபடுவர். அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிசேகம், பூஜைகள் நடைபெறும்.

    இதையடுத்து வரும் ஏப்ரல் மாதம் 4-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். இரவு 8 மணிக்கு மாவிளக்கு, கரகம் எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    தொடர்ந்து 5-ந் தேதி காலை 9.30 மணிக்கு திருவிழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், சின்னமாரியம்மன் கோவிலில் தேரோட்டமும் நடைபெறும்.

    தொடர்ந்து 6-ந் தேதி இரவு 8 மணிக்கு பெரிய மாரியம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். 7-ந் தேதி மாலை 4 மணிக்கு தேர் நிலை சேரும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

    இரவு 8 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன் திருவீதி உலா, 9.30 மணிக்கு சின்ன மாரியம்மன் திருவீதி உலா நடைபெறவுள்ளது.

    இதையடுத்து 8-ந் தேதி மாலை 3 மணிக்கு கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறும்.

    இதில் பெரிய மாரியம்மன் வகையறா திருக்கோவில்களை சேர்ந்த பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில்களின் கம்பங்கள் எடுத்து வரப்பட்டு, நகரின் முக்கிய வீதிகள் எடுத்து செல்லப்பட்ட காவிரி ஆற்றில் விடப்படும்.

    அன்று உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்படுகிறது. தொடர்ந்து இறுதி நிகழ்ச்சியாக 9-ந் தேதி காலை 10.30 மணிக்கு மறு பூஜையுடன் விழா நிறைவுபெறுகிறது.

    • கிறிஸ்மஸ், புத்தாண்டு, பொங்கல் என தொடர்ந்து பண்டிகைகள் வருவதால் இன்று ஜவுளி சந்தை களை கட்டியது.
    • சில்லரை வியாபாரம் மட்டும் இன்று 40 சதவீதம் நடைபெற்றது.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான ஜவுளி சந்தை வாரம் தோறும் செவ்வாய்கிழமை நடைபெறுவது வழக்கம்.

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் வியாபாரம் தொடங்கப்பட்டது.

    ஆனால் தொடர் மழை, வெளிமாநில மொத்த வியாபாரிகள் வருகை குறைவு உள்ளிட்ட காரணங்களால் ஜவுளி சந்தையில் வியாபாரம் மந்தமாக நடைபெற்றது.

    ஆனாலும் சில்லரை வியாபாரம் ஓரளவு நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் இன்று நடைபெற்ற ஜவுளி சந்தையில் வியாபாரம் அமோகமாக நடை பெற்றதாக வியாபாரிகள் கூறினர். கிறிஸ்மஸ், புத்தாண்டு, பொங்கல் என தொடர்ந்து பண்டிகைகள் வருவதால் இன்று ஜவுளி சந்தை களை கட்டியது.

    மேலும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து வெளி மாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர்.

    இதேபோல் தமிழகத்தில் பிற மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் மொத்த வியாபாரிகள் ஜவுளிகளை கொள்முதல் செய்ததாகவும், வழக்கம் போல சில்லரை விற்பனை எதிர்பார்த்த அளவில் நடைபெற்றதாக ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறினர்.

    சில்லரை வியாபாரம் மட்டும் இன்று 40 சதவீதம் நடைபெற்றது. இனி வரக்கூடிய நாட்களில் விற்பனை மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    • மாநகர் பகுதி முழுவதும் பெரும்பாலான இடங்களில் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
    • இதற்கு முக்கிய காரணம் நாய்களுக்கு கருத்தடை செய்யாமல் இருப்பது தான்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. சமீப காலமாக மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகின்றன. தெரு வோரங்களில் கூட்டமாக கூடியிருந்து தெருவில் வரும் வாகன ஓட்டிகளை துரத்தி வருகின்றன.

    பகல் நேரங்களில் சில சமயம் தெருவில் நடமாடும் பெண்கள், குழந்தைகளையும் துரத்துகின்றன. இதனால் குழந்தைகள், பெண்கள் தெருவில் நடமாட அச்சப்படுகின்றனர்.

    முன்பு கறிக்கடை முன்பு நாய்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். தற்போது மாநகர் பகுதி முழுவதும் பெரும்பாலான இடங்களில் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

    இதற்கு முக்கிய காரணம் நாய்களுக்கு கருத்தடை செய்யாமல் இருப்பது தான். முன்பு மாநகராட்சி சார்பில் தெருவில் சுற்றி திரியும் நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது.

    தற்போது அது செய்யப்ப டாமல் உள்ளதால் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் நாய்களின் தொல்லையும் அதிகரித்துள்ளதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

    மாநகர் பகுதியில் தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாய்கள் தெருக்களில் சுற்றி திரிகின்றன. நாய் கடிக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

    எனவே முன்பு போல் தெருவில் சுற்றி தெரியும் நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஈரோடு மத்திய பஸ் நிலையம் ரூ.44 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது.
    • மார்ச் மாதம் இறுதிக்குள் விரிவாக்க பணிகள் முழுவதும் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகர் மையப்பகுதியில் 12 ஏக்கர் பரப்பளவில் பஸ் நிலையம் 1973-ம் ஆண்டு கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

    இந்த பஸ் நிலையத்தில் மினி பஸ்சுக்கு என்று தனி ரேக், ஒவ்வொரு ஊரு வாரியாக தனி ரேக் அமைக்கப்பட்டு இருந்தது. நாச்சியப்பா வீதி, சக்திரோடு, மேட்டூர் ரோடு, அகில் மேடு வீதி என 4 வழிகள் இருந்தன.

    மேலும் கட்டண கழிப்பிடம், கடைகள், வடக்கு போக்குவரத்து போலீஸ் நிலையம், சிந்தாமணி கூட்டுறவு அங்காடி போன்றவை இருந்தன.

    இந்நிலையில் ஈரோடு பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரூ.44 கோடி மதிப்பில் பஸ் நிலையம் விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது.

    இதற்காக 100-க்கும் மேற்பட்ட பழைய கடைகள் இடித்து அகற்றப்பட்டன. விரிவாக்க பணிகளில் நவீன கழிப்பிடங்கள், நவீன ஓய்வறைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் விறு விறுப்பாக நடந்து வருகிறது.

    நாமக்கல் , சேலம் ரேக் இடிக்கப்பட்டு அங்கு புதிதாக கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. தற்போது பணிகள் 70 சதவீதம் வரை நிறைவடைந்துள்ளது.

    மார்ச் மாதம் இறுதிக்குள் விரிவாக்க பணிகள் முழுவதும் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று ஒரு போன் அழைப்பு வந்தது.
    • ஈரோடு பஸ் நிலையம், மணிக்கூண்டு, ரெயில் நிலையம் ஆகிய 3 இடங்களில் குண்டு வெடிக்கும் என்று கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

    ஈரோடு:

    சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று ஒரு போன் அழைப்பு வந்தது.

    அதில் பேசிய நபர் ஈரோடு பஸ் நிலையம், மணிக்கூண்டு, ரெயில் நிலையம் ஆகிய 3 இடங்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், இந்த 3 இடங்களிலும் இன்னும் சில நேரத்தில் குண்டு வெடிக்கும் என்று கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

    இது குறித்து சென்னை போலீசார் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு போலீசாரை உஷார்படுத்தினர்.

    இதைத்தொடர்ந்து போலீசார் ஈரோடு பஸ் நிலையம், மணிக்கூண்டு ஆகிய பகுதிகளில் மோப்பநாய் உதவியுடன் ஒவ்வொரு இடமாக அங்குலம் அங்குலமாக சோதனையில் ஈடுபட்டனர். நேற்று இரவு 8 மணி அளவில் ஈரோடு பஸ் நிலையத்திற்குள் 30-க்கும் மேற்பட்ட போலீசார் மோப்ப நாயுடன் ஒவ்வொரு இடமாக சோதனையில் ஈடுபட்டனர்.

    இதனால் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் பதட்டம் அடைந்தனர். பஸ் நிலையத்தில் உள்ள ஒவ்வொரு ரேக்காக சென்று போலீசார் அங்குலம் அங்குலமாக சோதனையிட்டனர்.

    பஸ் நிலையத்தில் உள்ள கழிவறைகளிலும் சோதனையிட்டனர். சுமார் 2 மணி நேரமாக பஸ் நிலை யத்தில் சோதனையிட்டனர்.

    இதேப்போல் மணிக்கூண்டு பகுதிக்கும் நேற்று இரவு மற்றொரு போலீஸ் பிரிவினர் சென்று சோதனையில் ஈடுபட்டனர். பன்னீர்செல்வம் பார்க் முதல் மணிக்கூண்டு பகுதி வரை சாலையின் இருபுற மும் போலீசார் ஒவ்வொரு இடமாக மெட்டல் டிடெக்டர் கருவிகள் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.

    இதேபோல் டவுன் டி.எஸ்பி. ஆனந்தகுமார் தலைமையான போலீசார் ரெயில் நிலையத்திற்கு சென்று அதிரடி சோதனை ஈடுபட்டனர். இரவு 8 மணிக்கு ரெயில் நிலையத்திற்குள் சென்று சோதனையில் ஈடுபட தொடங்கினார்.

    ரெயில் நிலைய நுழை வாயில் பகுதி, பயணிகள் உடமைகள் தீவிரமாக சோதனை செய்யப்பட்டது. ரெயில் நிலையத்தில் உள்ள அனைத்து நடைமேடை பகுதிகளிலும் போலீசார் தீவிர சோதனையிட்டனர். மெட்டல் டிடெக்டர் கருவிகள் கொண்டு பணிகள் உடமைகள் சோதனை செய்யப்பட்டன.

    மேலும் ஈரோடு வழியாக சென்ற அனைத்து ெரயில்களிலும் ஒவ்வொரு பெட்டியாக சென்று போலீசார் பயணிகள் உடைமைகளை சோதனை யிட்டனர். இரவு 11 மணி வரை கிட்டத்தட்ட 3 மணி நேரமாக ரெயில் நிலையம் முழுவதும் போலீசார் சோதனை செய்ததில் வெடி குண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது.

    இதனையடுத்தே போலீசார் நிம்மதி அடைந்தனர். இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த நபர் பேசிய செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை மே ற்கொண்டு வருகின்றனர்.

    ஏற்கனவே இதே போல் 2 முறை ஈரோடு பஸ் நிலையம், மணிக்கூண்டு, ெரயில் நிலையம் பகுதிக்கு வெடிகுண்டல் மிரட்டல் விடுத்த சம்பவம் நடந்து ள்ளது. மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஒரு வாலிபர் சிறையில் 3 வேளையும் சாப்பாடு நல்லா கிடைக்கும் என்பதால் இது போன்ற மிரட்டல் விடு த்தேன் என்று கூறியிருந்தார்.

    அந்த நபர்தான் இந்த முறையும் மிரட்டல் விடுத்திருக்க கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரபடுத்தி உள்ளனர்.

    • குமாரபாளையம் பகுதியில் ஊருக்குள் புகுந்த காட்டெருமையை தீயணைப்பு துறையினர் பிடித்தனர்.
    • காட்டெருமை நேற்று மாலை 6 மணியளவில் சமயசங்கிலி தடுப்பணை பகுதியில் உள்ளதாக தகவல் கிடைத்தது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் கத்தேரி பிரிவு அருகே காட்டெருமை மேய்ந்துள்ளது. இதை கண்ட பொதுமக்கள் சிலர் அச்சத்தில் அங்கிருந்து விலகி சென்றனர். இது குறித்து தீயணைப்பு படை யினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தரப்பட்டது.

    டீச்சர்ஸ் காலனி, சிவசக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் எருமையை பார்த்ததாக பலர் கூறியதால் இந்த பகுதிகளில் சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்ட வனத்துறை அலுவலர்கள், ஊழியர்கள் ஈரோடு மாவட்ட வன அலுவலர் கவுதம் தலைமையில் 40-க்கும் மேற்பட்டோர் தேடி வருகின்றனர்.


    இது குறித்து நாமக்கல் மாவட்ட வன சரக அலுவலர் பெருமாள் கூறுகையில், இந்த காட்டெருமை ஏற்காடு பகுதியில் இருந்து மெல்ல மெல்ல இந்த பகுதிக்கு வந்துள்ளது.

    ட்ரோன் கேமரா மூலமும் தேடி வருகிறோம். இப்பகுதியில் கரும்பு தோட்டங்கள் அதிகம் உள்ளதால் அதற்குள் புகுந்துள்ளது. விரைவில் பிடித்து விடுவோம் என்றார்.

    இதனிடையே காட்டெருமை நேற்று மாலை 6 மணியளவில் சமயசங்கிலி தடுப்பணை பகுதியில் உள்ளதாக தகவல் கிடைத்தது. வனத்துறையினர் அங்கு சென்று காட்டெருமையை மடக்கிப் பிடித்தனர். பின்னர் காட்டெருமை சக்திய மங்கலம் காட்டுப்பகுதியில் விடப்பட்டது.

    • ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஈரோடு காமராஜர் அரசு மேல் நிலைப்பள்ளியில் காலை உணவுத்திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள மைய சமையல் கூடத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • அனைத்து பள்ளிகளிலும் 100 மாணவ, மாணவிகளுக்குஒரு நபர் என்ற வீதத்தில் பணி யாளர்கள் நியமிக்கப்பட்டு உணவு பரிமாறப்பட உள்ளது.

    ஈரோடு:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 15-ந் தேதி (வியாழக்ழமை) முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை தொடங்கி வைக்கிறார்.

    இதையொட்டி ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஈரோடு காமராஜர் அரசு மேல் நிலைப்பள்ளியில் காலை உணவுத்திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள மைய சமையல் கூடத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் அலுவலர்களுக்கு ஆலோ சனைகள் வழங்கினார்.

    முதல்-அமைச்சர் வரும் 15-ந் தேதி காலை உணவுத் திட்டத்தினைதொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் கீழ் ஈரோடு மாநக ராட்சிக்குட்பட்ட பகுதி களில் அமைந்துள்ள 26 தொடக்கப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 2649 மாணவ, மாணவிகளுக்கு அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலை உணவு வழங்கப்பட உள்ளது.

    மேலும் இத்திட்டத்தின் கீழ் அரசின் வழி காட்டு நெறிமுறைகளின் படி ஈரோடு மாநகராட்சி காமராஜ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மைய சமையல் கூடத்தில் காலை உணவு சமைக்கப்பட்டு பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது. மேலும் அனைத்து பள்ளிகளிலும் 100 மாணவ, மாணவிகளுக்குஒரு நபர் என்ற வீதத்தில் பணி யாளர்கள் நியமிக்கப்பட்டு உணவு பரிமாறப்பட உள்ளது.

    இத்திட்டம் வரும் 16-ந் தேதி முதல் ஈரோடு மாநகராட்சிக் குட்பட்ட 26 தொடக்கப்பள்ளிகளில் தொடங்கப்பட உள்ளது என கலெக்டர் கூறினார். மேலும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு அறி வுரை வழங்கினார்.

    ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், கலெக்டரின் நேர்மு கஉதவியாளர் (சத்துணவு) மணிவண்ணன், ஈரோடு மா வட்ட கல்வி அலுவலர் ஜோதிசந்திரா உள்பட பலர் உடனிருந்தனர்.

    • இன்று கூடிய ஜவுளி சந்தையில் வெளி மாநில வியாபாரிகள் வராததால் மொத்த வியாபாரம் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
    • கடந்த வாரம் 40 சதவீதத்திற்கு நடந்த மொத்த வியாபாரம் இந்த வாரம் 10 சதவீதம் கூட நடைபெறவில்லை என வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு ஜவுளி சந்தை யானது கனி மார்கெட், பன்னீர்செல்வம் பார்க், திருவேங்கடசாமி வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் வாரந்தோறும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் ஜவுளி சந்தை நடைபெற்று வருகிறது.

    வாரந்தோறும் நடைபெறும் இந்த ஜவுளி சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்றும் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் நேரடியாக வந்து ஜவுளிகளை மொத்த விலையில் வாங்கி செல்வார்கள்.

    இந்நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த வாரம் ஜவுளி சந்தையில் வியாபாரம் சுமாராக நடந்தது. இந்நிலையில் இன்று கூடிய ஜவுளி சந்தையில் வெளி மாநில வியாபாரிகள் வராததால் மொத்த வியாபாரம் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

    நாளை மறுநாள் ஓணம் பண்டிகை என்பதால் இன்று கூடிய ஜவுளி சந்தையில் கேரளா வியாபாரிகள் வரவில்லை. இதேபோல் கர்நாடகா, ஆந்திராவில் தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் அங்கிருந்தும் வெளி மாநில வியாபாரிகள் வரவில்லை.

    கடந்த வாரம் 40 சதவீதத்திற்கு நடந்த மொத்த வியாபாரம் இந்த வாரம் 10 சதவீதம் கூட நடைபெறவில்லை என வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.

    இதேப்போல் உள்ளூர் வியாபாரிகளும் அதிக அளவில் வராததால் ஜவுளி சந்தை வெறிச்சோடியது. இன்று நடந்த ஜவுளி சந்தையில் சில்லரை விற்பனை 30 சதவீதம் நடைபெற்றதாக வியா பாரிகள் தெரிவித்தனர்.

    • கருப்புசாமி என்பவர் தேவராஜின் மளிகை கடைக்கு சென்று பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
    • தேவராஜ் தனது மளிகை கடைக்கு சென்று பார்த்த போது கடையில் இருந்த ரூ. 3,200 திருட்டு போயிருந்தது.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஆர்.எஸ். அருகே உள்ள சாணார்பாளையம், ரோஜா நகரை சேர்ந்தவர் தேவராஜ் (52). இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார்.

    சம்பவத்தன்று இரவு தேவராஜ் வழக்கம்போல கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

    அன்று நள்ளிரவு தேவராஜின் மளிகை கடையில் இருந்த பூட்டை யாரோ உடைத்துள்ளனர். அதைக் கண்ட அப்பகுதியில் வசிக்கும் கருப்புசாமி என்பவர் தேவராஜின் மளிகை கடைக்கு சென்று பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கருப்புசாமி உடனடியாக தேவராஜுக்கு தகவல் கொடுதார்.

    அதன்பேரில், தேவராஜ் தனது மளிகை கடைக்கு சென்று பார்த்த போது கடையில் இருந்த ரூ. 3,200 திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

    அப்போது அங்கு பொருள்கள் வைத்திருக்கும் பகுதியில் படுத்திருந்த ஒருவரை பிடித்து விசாரித்தபோது, அவர் ஈரோட்டை சேர்ந்த தரணிதரன் என்பதும், அவருடன் மேலும் 2 பேர் வந்து மளிகை கடையின் பூட்டை உடைத்ததும் தெரியவந்தது.

    தரணிதரனுடன் வந்த இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.

    இதுகுறித்து, தேவராஜ் அளித்த புகாரின் பேரில், சென்னிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட தரணிதரனை கைது செய்தனர்.

    மேலும், தப்பி ஓடிய இருவர் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

    • ஆசிப் முசாப்தீனை போலீசார் பலத்த பாதுகாப்புடன் ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
    • காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கும்படி போலீஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாணிக்கம்பாளையம் முனியப்பன் கோவில் பகுதியைச் சேர்ந்த ஆசிப் முசாப்தீனை கடந்த மாதம் 16ம் தேதி மத்திய குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் உறுப்பினராக இருப்பது தெரியவந்தது.

    இந்நிலையில், ஆசிப் முசாப்தீனை போலீசார் பலத்த பாதுகாப்புடன் இன்று ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கும்படி போலீஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. போலீசாரின் கோரிக்கையை ஏற்று 10ம் தேதி வரை இரண்டு நாட்கள் ஆசிப் முசாப்தீனை காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் ரகசிய இடத்திற்கு ஆசிப் முசாப்தீனை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×