search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 108818"

    • திருச்சி 23-வது வார்டில் விடுபட்ட பகுதிகளில் குடிநீர், பாதாள சாக்கடை பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி கமிஷனரிடம் கோரிக்கை மனு அளித்தனர்
    • 12 பகுதிகளில் புதை வடிகால் பணிகளும் விரைந்து செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது

    திருச்சி:

    திருச்சி மாநகராட்சி 23-வது வார்டு சி.பி.ஐ. மாமன்ற உறுப்பினர் சுரேஷ் குமார் மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதனை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியி–ருப்பதாவது:- திருச்சி மாநகராட்சி 23-வது வார்டு காந்திபுரம் பகுதியில் மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்ற–னர். இங்கு சுமார் 500 குடியிருப்புகள் உள்ளன. மேலும் ஏழை, எளிய மக்கள் வசிக்கும் புதுத்தெரு பகுதியும் உள்ளது. இந்த பகுதிக்கு பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் குழாய் பகு–திக்கும் திட்டம் ஆகியவை விடுபட்டுள்ளது.

    அதுமட்டுமின்றி 7 குறுக்கு தெருக்களிலும் கான்கிரீட் சாலைகளும், மழை நீர் வடிகால்களும் மிக மோசமாக உள்ளது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆகவே குடிநீர் குழாய், பாதாள சாக்கடை பணி–களை மேற்கொண்டு, மழை–நீர் வடிகால்கள் கட்டி, புதிய கான்கிரீட் சாலைகள் அமைத்திட உரிய நிதி ஒதுக்கீடு செய்து விரைவில் பணிகளை செய்து தர வேண்டும். மேலும் 23-வது வார்டில் விடுபட்ட 17 பகுதிகளில் குடிநீர் திட்ட பிரதான புதிய குழாய்கள் அமைத்தும், 12 பகுதிகளில் புதை வடிகால் பணிகளும் விரைந்து செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.


    • பா.ம.க.வினர் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் மனு
    • நடவடிக்கை இல்லையென்றால் முற்றுகை போராட்டம் அறிவிப்பு

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வாரியங்காவல் கூவாகம் செல்லும் சாலையில் உள்ள திடீர்குப்பம் கிராமத்தில் அரசு மதுபான கடை திறப்பதற்கு டாஸ்மார்க் ஊழியர்கள் இடம் தேர்வு செய்து கடை திறப்பதற்கு ஏற்பாடு செய்து வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் உடையார்பாளையம் கோட்டாட்சியர் பரிமளம், வட்டாட்சியர் துரை, ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாத் உள்ளிட்ட அரசு அதிகாரியிடம் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக ஜெயங்கொண்டம் நகர செயலாளர் பரசுராமன் முன்னிலையில், ஆண்டிமடம் மேற்கு ஒன்றிய செயலாளர் தினகரன் தலைமையில், சந்திரகாசன், வழக்கறிஞர் கதிரவன், ராமநாதன் ஆகியோர் முன்னிலையில் வாரியங்காவல், குவாகம், திடீர் குப்பம் உள்ளிட்ட கிராம பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர். மேலும் இப்பகுதியில் கடை திறந்தால் ஏராளமான விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாகவும், இரண்டு தனியார் பள்ளிகள் உள்ளதாகவும், இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிககளுக்கு பாதிப்பு மற்றும் இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அதை சுற்றிலும் முந்திரி கார்டு உள்ளதால் கொலை உள்ளிட்ட சம்பவங்கள் அதிகம் நடக்க வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். எனவே அந்த பகுதியில் கடை திறக்கக் கூடாது என தெரிவிக்கின்றனர். மேலும் கடை திறப்பது உறுதி செய்தால் முற்றுகைப் போராட்டம் சாலை மறியலிலும் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.

    • கேசி ரோடு சாலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்புவரை நகர பஸ் இயக்கப்பட்டு வந்தது.
    • பஸ் வசதி இல்லாமல் மாணவ, மாணவிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா்.

    செங்கோட்டை:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக செங்கோட்டை கிளை மேலாளாரிடம் செங்கோட்டை மேலூர் அரசு உயர்நிலை பள்ளியின் சார்பில் கோரிக்கை மனுவினை பள்ளி தலைமை ஆசிரியர் ராஜன் அளித்து உள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    செங்கோட்டை நகராட்சிக்குட்பட்ட மேலச் செங்கோட்டை பகுதியில் அமைந்துள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களான பிரானுார், பார்டர், சிலுவைமுக்கு, கதிரவன் காலனி, மூன்றுவாய்க்கால், ரெட்டைக்குளம், காடுவெட்டி, மோட்டை, கண்ணுப்புள்ளிமெட்டு, விசுவநாதபுரம், பெரிய பிள்ளைவலசை, மாவடிக் கால்தோப்பு, தேன் பொத்தை, ராஜபுரம்காலனி, மீனாட்சிபுரம், பண்பொழி, வடகரை, வாவாநகரம், அச்சன்புதுார், இலத்துார் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் உள்ள பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள மாணவ-மாணவிகள் ஏராளமானோர் கல்வி பயின்று வருகின்றனா்.

    மேலும் மேற்குதொடா்ச்சி மலை அடிவார பகுதிகளில் உள்ள மாணவ-மாணவிகளும் பயின்று வருகின்றனா். இப்பள்ளியானது செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு மேற்கே செல்லுகின்ற கேசி ரோடு சாலையில் சுமார் 1கிலோ மீட்டா் தொலைவில் உள்ளது.

    இந்த சாலையில் மேலச்செங்கோட்டை அரசு தொடக்கப்பள்ளி, மூன்று வாய்க்கால், கண்ணுப்புள்ளி மெட்டு ஆகிய பகுதிகளில் அரசு உதவி பெறும் பள்ளி கள் அமைந்துள்ளது.

    இந்த கேசி ரோடு சாலை யில் சுற்றுலா முக்கி யத்துவம் வாய்ந்த குண்டாறு நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. அந்த பகுதிகளில் உள்ள தனியார் எஸ்டேட்களுக்கு இங்கிருந்து கூலித் தொழிலாளா்கள் ஏராளமானோர் சென்று வருகின்றனா்.

    இந்த கேசி ரோடு சாலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்புவரை நகர பஸ் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது பஸ்கள் இயக்கப்படவில்லை. மேற்கு தொடா்ச்சிமலை அடிவார பகுதியிலிருந்து வருகை தரும் மாணவ, மாணவிகள் பஸ் வசதி இல்லாமல் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா்.

    எனவே கேசி.ரோடு சாலை வழியாக மேலச் செங்கோட்டை வழியாக காலை 8 மணிக்கு கண்ணுப் புள்ளிமெட்டுக்கு செல்லும் வகையிலும், 8.30மணிக்கு திரும்பி வரும் வகையிலும், அதேபோல் மாலை 4.15 மணிக்கு கண்ணுப்புள்ளி மெட்டுக்கு சென்று 4.45 மணிக்கு திரும்பி வரும் வகையிலும் பஸ் வசதி செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இதன்மூலம் மேற்கண்ட வாறு மாணாக்கர்களுக்கு வசதிகள் கிடைப்பதோடு கூடுதலாக மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கும் வாய்ப்புகள் ஏற்படும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தது.

    • உதவி கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்றை வழங்கினர்.
    • ஓசூர் பகுதியில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    ஓசூர் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் மாவட்ட செயலாளர் பிரவீன்குமார் தலைமையில்உதவி கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்றை வழங்கினர்.

    அவருடன் துணைத்தலைவர் முருகன், பொருளாளர் சீனிவாசன், கிழக்கு பகுதி தலைவர் மணிகண்டன், ஆலய மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் ஓம் மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர்.

    அந்த மனுவில் ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் தேரோட்டம் வருகிற 7-ந்தேதி நடைபெறுகிறது. அன்று, ஒரு நாள் உள்ளூர் விடுமுறை வழங்க வேண்டும்.

    மேலும் தேரோட்டம் அன்றும், மறுநாள் (8-ந்தேதி) நடைபெறும் பல்லக்கு உற்சவம் மற்றும் அடுத்த நாள் (9-ந் தேதி) தெப்ப உற்சவம் நடக்கிறது.

    இந்த 3 நாட்களிலும், ஓசூர் பகுதியில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடலூர் மாநகர பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைப்பாளர்கள் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்..
    • எரிவாயு தகன மேடை பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் மாநகர பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைப்பாளர் ரவி, சட்ட ஆலோசகர் திருமார்பன், இணை ஒருங்கிணைப்பாளர்கள் குரு ராமலிங்கம், சுப்புராயன், மன்சூர், சிவாஜி கணேசன் மற்றும் நிர்வாகிகள் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:கடலூர் மாநகராட்சியில் மஞ்சக்குப்பம் மற்றும் கம்மியம்பேட்டையில் எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த எரிவாயு தகன மேடை சரியான முறையில் இயங்காமல் உள்ளது. இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக கடலூர் மாநகர மக்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர்.

    கடலூர் மாநகராட்சியாக உள்ளதால் நவீன எரிவாயு மின் தகன மேடை 4 திசைகளிலும், நகரின் மையப் பகுதிகளிலும் அமைக்கப்பட வேண்டும். இது அனைத்து தர மக்களுக்கும் பொதுப் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.இதிலும் தற்போது உள்ள எரிவாயு தகன மேடை பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தாமதம் ஏற்பட்டால் மார்ச் 7-ந்தேதி எரிவாயு தகன மேடையில் பாடை கட்டி ஒப்பாரி போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

    • கடை வரம்பு பகுதிக்கு முறையாக தண்ணீர் செல்ல வில்லை. தற்பொழுது அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது
    • கோதையாறு வடிகால் கோட்டத்தில் உள்ள கால்வாய்களை தூர்வார ரூ. 53 கோடியில் திட்ட மதிப்பு தயார்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராஜேஷ் குமார் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு-1 சிற்றாறு-2 அணைகளில் இருந்து விவசாயத்திற்கு ஆண்டு தோறும் ஜூன் 1-ந்தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டு பிப்ரவரி 28-ந் தேதி அணைகள் மூடப்படும். இந்த ஆண்டும் ஜூன் 1-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    ஆனால் மாவட்டத்தில் உள்ள சேனல்களில் தண்ணீர் கடைமடை பகுதிகளை இன்று வரை போய் சேரவில்லை. குறிப்பாக கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட கடை வரம்பு பகுதி வரை தண்ணீர் சென்று சேராமல் உள்ளது. பல இடங்களில் சானல்கள் சரிவர தூர்வாரப்படாத தால் மண் நிரம்பி காணப்ப டுகிறது. இதனால் கடை வரம்பு பகுதிக்கு முறையாக தண்ணீர் செல்ல வில்லை. தற்பொழுது அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. கடை வரம்பு பகுதிகளுக்கு தண்ணீர் வராததால் வாழை, தென்னை, மிளகு, கத்தரி பயிர் போன்ற பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் விவசா யிகள் பாதிக்கப்பட்டு உள்ள னர்.

    100-க்கும் மேற்பட்ட குளங்களும் தண்ணீர் இல்லா மல் உள்ளது. இதனால் பல கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் வறண்டு காணப்படுகிறது. நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து உள்ளது.

    எனவே விவசாயிகள் நலன் கருதி வருகிற மார்ச் மாதம் 30-ந்தேதி வரை பேச்சிபாறை, பெருஞ் சாணி, சிற்றாறு-1, சிற்றாறு-2 அணைகளில் இருந்து விவசாயத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். கோதையாறு வடிகால் கோட்டத்தில் உள்ள கால்வாய்களை தூர்வார ரூ. 53 கோடியில் திட்ட மதிப்பு தயார் செய்யப்பட்டு ஆய்வுக்கு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.

    விரைவாக ஆய்வு பணிகளை முடித்து அரசுக்கு அறிக்கை வழங்கி போர்க்கால அடிப்படையில் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

    • கருவேலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக்குழுவினர் கள்ளக்குறிச்சி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
    • உடனடியாக தார் சாலை அமைத்து தரவும், சாலையோர பணிகள் நடைபெறும் போது வனத்துறையினர் தொந்தரவு செய்யாமல் இருப்பதற்காகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    கருவேலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக்குழுவினர் கள்ளக்குறிச்சி கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அருகே கருவேலம்பாடி கிராமம் உள்ளது. இங்கு குண்டியாநத்தம் ஊராட்சியில் இருந்து கருவேலம்பாடி கிராமம் வரை 2.5 கிலோ மீட்டர் சாலை உள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட இந்த சாலையில் கர்ப்பிணி பெண்கள், ஊனமுற்றோர், பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வர இயலாத நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது.  இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த சாலையில் ஜல்லி மண் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு மண் சாலை அமைத்தால் மழைக்காலங்களில் மீண்டும் பொதுமக்கள அவதியுறும் நிலை ஏற்படும். எனவே இந்த சாலையை தார் சாலையாக அமைத்து தர வேண்டும். கொடுந்துறையில் இருந்து கருவேலம்பாடி வரை சுமார் 7 கிலோமீட்டர் தூரம் உள்ளது. இந்தப் பகுதியில் சாலைப் பணிகள் நடைபெற்றாலோ அல்லது தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்றாலோ வனத்துறையினர் தொந்தரவு செய்து வருகின்றனர்  எனவே மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்து உடனடியாக தார் சாலை அமைத்து தரவும், அந்தப் பகுதியில் சாலையோர பணிகள் நடைபெறும் போது வனத்துறையினர் தொந்தரவு செய்யாமல் இருப்பதற்காகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சாலை மறியல் செய்யக்கூடிய சூழ்நிலை உருவாகும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • மனுவை பெற்று கொண்ட சசிகலா புஷ்பா, கடம்பூர் ரெயில் நிலையத்திற்கு சென்று பார்வையிட்டார்.
    • அனைத்து ரெயில்களும் கடம்பூரில் நின்று செல்ல வழி செய்வேன் என்று சசிகலா புஷ்பா தெரிவித்தார்.

    கயத்தாறு:

    அகில இந்திய நாடார் சக்தியின் மகளிர் அணி தலைவி விஜயாசந்திரன், சென்னை வாழ் நாடார் உறவின் முறையின் தலைவர் சவுந்திர பாண்டியன், பொதுச் செயலாளர் சக்கரவர்த்தி, செயலாளர் சேகர் ஆகியோர் தலைமையில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், கடம்பூரில் அனைத்து ரெயில்களும் நின்று செல்லக்கோரி பாரதீய ஜனதா கட்சியின் மாநில மகளிர் அணி தலைவி சசிகலா புஷ்பாவிடம் மனு கொடுத்தனர்.

    சசிகலா புஷ்பா

    அதனை பெற்று கொண்ட சசிகலா புஷ்பா, கடம்பூர் ரெயில் நிலையத்திற்கு சென்று பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    பா.ஜ. க. தமிழக தலைவர் அண்ணாமலையின் உதவியோடு, ரெயில்வே துறை அமைச்சர், மதுரை மண்டல மேலாளர் ஆகியோரை சந்தித்து மார்ச் 30-ந்தேதிக்குள் கடம்பூரில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வழி செய்வேன்.

    கடம்பூரில் இருவழி பாதை அமைக்கப்பட்டு அங்கு பயணிகள் நடந்து செல்ல வழி அமைக்காததால் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. அதனை உடனே சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வியாபாரிகள் சங்ககூட்டம்

    அப்போது கடம்பூர் வியாபாரிகள் சங்கத் தலைவர் தனசேகரன், பொதுச் செயலாளர் சந்திரசேகரன், வியாபாரி சங்கத் துணைத் தலைவர்கள் புஷ்ப கணேஷ், மகளிர் அணி நிர்வாகிகள் சித்ராதேவி, கலாராணி, செல்வ காயத்ரி, கடம்பூர் பா.ஜ.க. நகரச் செயலாளர் ராஜகோபால், துணைச் செயலாளர் கருப்பசாமி ஆகியோர் உடனிருநதனர்.

    இதனைத் தொடர்ந்து நாடார் உறவின்முறை திருமண மண்டபத்தில் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சசிகலா புஷ்பாவிடம், வியாபாரிகள் மனுக்கள் கொடுத்தனர்.

    அதனை பெற்றுக் கொண்டு அதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், பட்டியல் இன மக்களும் இடையே தகராறு ஏற்பட்டது.
    • தற்போது நடைமுறையில் உள்ள 144 தடை உத்தரவை நீக்கி தரும்படி கோரிக்கை வைத்தனர்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பாண்டியன்குப்பம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானதாக உள்ள சோலையம்மன் கோவிலில் திருவிழா நடத்துவது தொடர்பாக கடந்த 2012 ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், பட்டியல் இன மக்களும் இடையே தகராறு ஏற்பட்டது.பட்டியலின மக்கள் சோலையம்மன் கோவிலில் வழிபாடு செய்ய கூடாது என பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் கூறினர். இதைய டுத்து நாங்களும் சாமி கும்பிடு வோம் என பட்டியல் இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடினர். இதனால் பாண்டியன்குப்பம் கிராமத்தில் இருவேறு சமூகத்தினர் இடையே தகராறு ஏற்பட்டது.ஜாதி கலவரம் ஏற்படா மல் இருப்பதற்காக விழுப்புரம் மாவட்ட ஆட்சி நிர்வாகமும், காவல் துறையும், வருவாய்த் துறையும் பிரச்சனைக்குரிய பாண்டியன்குப்பம் கிரா மத்தில் 144 தடை உத்தரவை பிரப்பித்தனர். கடந்த 2012- ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு தற்போது வரை நீடிக்கிறது.

    இந்த நிலையில், பாண்டி யன்குப்பம் கிராமத்தில் பொதுமக்கள் ஒன்று கூட தடையும், கிராம சபை கூட்டம் நடத்த தடை, அரசு நலத்திட்ட உதவிகள் அளிக்கும் நிகழ்ச்சிக்கு தடை உள்ளிட்ட பல்வேறு தடைகளை பாண்டியன் குப்பம் கிராம மக்கள் சந்தித்து வருகிறார்கள். தங்கள் கிராமத்தில் ஏற்பட்டுள்ள சூழலை கருத்தில் கொண்டு மன வேதனையில் உள்ளனர். இதனை யொட்டி தற்போது பாண்டியன்குப்பம் கிராமத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் இன சமூகத்தினர் தங்கள் கிராமத்தில் ஏற்பட்டுள்ள 144 தடை உத்தரவை நீக்க முடி வெடுத்தனர்பிரச்சனைகளை ஏற்படுத்தி வந்த இரு வேறு சமூகத்தி னரும் தங்களுக்குள் சமாதானம் அடைந்து கடந்த 2 தினங்க ளுக்கு முன்னர் பிப்ரவரி 22-ஆம் தேதி கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகம் சென்று கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் செல்வி பவித்ரா, சின்னசேலம் வட்டாட்சியர் இந்திரா, மற்றும் வருவாய்த்துறை யினருடன் பேசி பாண்டி யன்குப்பம் கிராமத்தில் இருதரப்பு சமூக மக்களும் இனி பிரச்சினைகள் இன்றி சமத்துவமாக, சகோதரத்துவமாக தங்கள் கிராமத்தில் உள்ள சோலை யம்மன் கோவிலில் தேர் திருவிழாவை நடத்திக் கொள்கி றோம் என ஒப்புதல் அளித்து, பாண்டியன் குப்பம் கிராமத்தில் தற்போது நடைமுறையில் உள்ள 144 தடை உத்தரவை நீக்கி தரும்படி கோரிக்கை வைத்தனர்.பாண்டியன்குப்பம் கிரா மத்தில் கடந்த 12 ஆண்டு களாக பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் இன சமூக மக்கள் சோலையம்மன் கோவில் பிரச்சினை காரணமாக வேறு பட்டு கிடந்த நிலையில் தற்போது ஊர் நலனுக்காக தங்களுக்குள் சமரசத்தை ஏற்படுத்திக் கொண்டு 144 தடை உத்தரவை நீக்க கோரி அதிகாரிகளிடம் முறையிட்டு வருகின்றனர்.

    • மாற்றுத்திறனாளிகள் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.
    • போராட்டத்திற்கு ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார்.

    முதுகுளத்தூர்

    அனைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் நலச்சங்கம் சார்பில் மத்திய பட்ஜெட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட நிதியை பாதியாக குறைத்ததை கண்டித்து ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.

    யூனியன் ஆணையாளர் ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர் தேவ பிரியதர்ஷினி ஆகிேயார் நேரில் வந்து, நீங்கள் அளித்த கோரிக்கை சரியானது. இதை விரைவில் சரி செய்து தருவதாக உறுதி அளித்ததின் பெயரில் இந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. போராட்டத்திற்கு ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார்.

    தாலுகா தலைவர் முனியசாமி, துணைத் தலைவர் முத்து கண்ணன், இணை செயலாளர் மயில்சாமி, உறுப்பினர்கள் வில்வதுரை, ராமர் விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகி முருகன், அங்குதன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

    • மக்கள் குறைதீர் நாள் கூட்டம்
    • வெளிநாட்டில் இறந்த மகனின் உடலை கொண்டு வர கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மனு அளித்தனர்.அதன்படி பெரம்பலூர் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் ராசாத்தி (வயது 60). இவர் அளித்துள்ள கோரிக்கை மனுவில், எனது மகன் சங்கர் (38). 14 ஆண்டுகளாக அபுதாபி ஹைலேண்ட் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். கடந்த 19ம்தேதி சொந்த ஊருக்கு வருவதாக கூறினார். இந்நிலையில் கடந்த 20ம்தேதி சங்கர் இறந்துவிட்டதாக கம்பெனியிலிருந்து தகவல் வந்தது. எனது மகன் சாவில் சந்தேகம் உள்ளது. இறந்த எனது மகனின் உடலை இந்தியாவிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் கூறியுள்ளார்.வடக்கு மாதவி, ஏரிக்கரை பகுதி மக்கள் சார்பாக 8 வது வார்டு உறுப்பினர் சந்தோசம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் தங்களுக்கு நிரந்தர பாதை அமைத்து தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.இதே போல் பெரம்பலூர் எளம்பலூர் தண்ணீர் பந்தல் எம்ஜிஆர் நகர் பகுதி மக்கள் சார்பில் வெண்ணிலா அளித்தள்ள கோரிக்கை மனுவில், சுமார் 50 ஆண்டுகளாக இந்த பகுதியில் நிரந்திர இடம் இல்லாமல் இருப்பதாகவும், அரசு மூலம் இலவச வீட்டுமனை மற்றும் பட்டா வழங்கவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    • கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
    • எங்கள் வீட்டிற்கு வந்து எங்களை தாக்கினர். இதில், என் தந்தையின் கை உடைந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சாப்பரம் பஞ்சாயத்திற்குட்பட்ட புங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாது(வயது 48). சாலை பணியாளர்.

    இவருக்கு சதீஷ்(28), கார்த்திகேயன்(25) என்ற இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் ராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றனர். ராணுவ வீரர் சதீஷ், குடும்பத்தினருடன் நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

    அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- ராணுவ வீரரான நான் விடுமுறைக்கு ஊருக்கு வந்துள்ளேன். எங்கள் வீட்டருகே வசிப்பவர் முருகேசன். அவர் எங்கள் தந்தையிடம் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.25 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். கடனை திருப்பித் தரவில்லை.

    இது குறித்து கேட்டபோது முருகேசன், அவர் மனைவி சீதா, அவர் தம்பி விஜி உள்ளிட்ட ஏழு பேர் கும்பல் கடந்த 3-ந் தேதி இரவு எங்கள் வீட்டிற்கு வந்து எங்களை தாக்கினர். இதில், என் தந்தையின் கை உடைந்தது.

    இது குறித்து காவேரிப்பட்டினம் போலீசில் புகார் அளித்தோம். வழக்கு பதியப்பட்ட நிலையில், முருகேசன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. தொடர்ந்து எங்கள் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுக்கும் முருகேசன் மீது நடவடிக்கை எடுத்து, எங்கள் உயிர்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

    ×