search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 108818"

    • இரும்பு உருக்காலை கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது
    • 10 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்காலை கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இம்மாத கடைசியில் அதன் உரிமம் முடிவடைவதாகவும், அதனை புதுப்பிக்க கூடாது என வலியுறுத்தி அனுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த17-ந் தேதி முதல் கடந்த 10 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு ள்ளனர்.

    இதற்கிடையே நேற்று இரும்பு உருக்கா லைக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று வலியுறுத்தி, மாசுக்கட்டு ப்பாட்டு வாரிய அலு வலகம், பல்லடம் ஊராட்சிஒன்றிய அலுவலகம்ஆகிய இடங்களில் பொதுமக்கள் மனு அளித்தனர்.

    • மாற்றுத்திறனாளி உதவித்தொகை வழங்க வலியுறுத்தி கலெக்டரிடம் மனு
    • நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் நிறுத்தப்பட்ட மாற்றுத்திறனாளி உதவிதொகையை மீண்டும் வழங்க கோரி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வி.களத்தூர் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்ற மாற்றுதிறனாளி கலெக்டர் கற்பகத்திடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில், நான் மாற்றுத்திறனாளி . எனக்கு மருத்துவர் சான்றிதழ் வழங்கிய அடிப்படையில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி உதவித்தொகை ரூ.ஆயிரத்து 500 பெற்று வந்தேன்.தற்போது எந்தவித விசாரணையின்றி மாற்றுத்திறனாளி உதவித்தொகை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே மாற்றுத்திறனாளி சட்டத்திற்கு முரணாக உதவி தொகை நிறுத்தம் செய்த தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் அளிக்கப்பட்ட உதவி தொகை மீண்டும் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தார். மனுவினை பெற்றுக்கொண்ட கலெக்டர் கற்பகம் மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    • அனுமதி மறுப்பதாக புகார்
    • 18 கிராம மக்கள் உண்ணாவிரதம்

    திருச்சி, 

    திருச்சி மாவட்டம் தொட்டியம் ஸ்ரீ மதுரை காளியம்மன் கோவில் திருவிழாவில் தேர் தூக்கும் உரிமையை அதன் சுற்றுவட்டார பகுதியான எம் புத்தூர், சத்திரம், மேலக்கரை காடு, இலந்தை மடை புதூர், தொட்டியபட்டி, நத்தம் காடுவெட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த ஒரு சமூகத்தினர் பெற்று வந்தனர். இந்த நிலையில் இன்னொரு சமூகத்திற்கு அந்த தேர் தூக்கும் உரிமையை ஒப்படைத்துள்ளதாக தெரிகிறது.இதனைக் கண்டித்து பாதிக்கப்பட்ட 18 பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரு சமூகத்தினர் கடந்த 24ம் தேதி அதிகாரிகளை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். மேலும் தொடர்ச்சியாக இன்று அரை நிர்வாண கோலத்தில் மதுரை காளியம்மன் கோவிலில் இருந்து ஸ்ரீநிவாசநல்லூர், மணமேடு, முசிறி, குளித்தலை, பெட்டவாய்த்தலை, பெருகமணி, சத்திரப்படியாக திருச்சி கலெக்டரை சந்தித்து மனு அளிக்கும் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இதற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டது. அதை தொடர்ந்து போராட்டக்காரர்கள் வக்கீல் கார்த்திக் தலைமையில் கலெக்டரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.

    • கடலூரில் கலெக்டர் அலுவலகம் முன் மகனுடன் தாய் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டார்.
    • மனு அளித்து தீர்வு காண வேண்டும் என கூறி எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மகனுடன் தாய் சாலையில் அமர்ந்து திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர் பண்ருட்டி திடீர் குப்பத்தை சேர்ந்த சக்தி (வயது 42). என்இபது தெரிய வந்தது இவரது பாட்டனாருக்கு சொந்தமான நிலம் அதே பகுதியில் இருந்து வந்தது . இதனை எனது தந்தை பராமரித்து வந்த நிலையில் அவர் இறந்த பிறகு அதே பகுதியை சேர்ந்த 5பேர் நிலத்தை அபகரித்து போலி பத்திரம் தயாரித்து அவர்கள் பெயரில் மாற்றிக்கொண்டு பறித்து கொண்டனர். இது குறித்து பலமுறை புகார் அளித்தும் நாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு நடவடிக்கை எடுக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என சக்தி தெரிவித்தனர். அப்போது அங்கு இருந்த போலீசார் உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து தீர்வு காண வேண்டும் என கூறி எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • அமைச்சர் கீதாஜீவனிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.
    • கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றி தருவேன் என்று அமைச்சர் கீதாஜீவன் உறுதியளித்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சரு மான கீதாஜீவன் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் குறைகளை தெரிவிப்பதற்கு ஏற்கனவே வாட்ச்அப் எண் கொடுக்கப்பட்டு அதன் மூலம் பொதுமக்கள் பலர் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் உள்ளிட்ட அலுவலர்கள் அதன் குறைபாடுகளை சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்கும் உடனுக்குடன் தெரிவித்து தீர்த்து வைக்கின்றனர்.

    இந்நிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பல மாவட்டங் களை உள்ளடக்கிய ஆய்வு கூட்டம் நடத்தி மக்களின் கோரிக்கை மனுக்களை காகிதமாக எண்ணாமல் அவர்களின் வாழ்வா தாரத்தை முன்னேற்றும் ஆவணமாக கருதி அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    இந்நிலையில் மாநகராட்சி 38-வது வார்டுக்குட்பட்ட மீகா தெரு, ஜெயலானிதெரு, கோழி முடுக்கு சந்து, மற்றும் வார்டுக்குட்பட்ட பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் குறைகளை கேட்டார்.

    அப்போது அவரிடம், வேலைவாய்ப்பு, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, கால்வாய் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.

    அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஜெயலானி தெருவில் புதிய சாலை அமைக்க வேண்டும். கோழி முடுக்கு சந்து பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைத்து கொடுத்து கழிநீர் செல்வதற்கு கால்வாய் வசதிகள் முறையாக செய்து கொடுக்க வேண்டும். புதிய தார்சாலை மற்றும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் போது பழைய சாலையை தூர்வாரி, பழைய சாலை அளவுபடியே அமைக்க வேண்டும். என்று கோரிக்கை வைத்தனர். முழுமையாக ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் உங்களது கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றி தருவேன் என்று உறுதியளித்தார்.

    நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டல தலைவர் கலைச்செல்வி, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநகர மருத்துவ அணி அமைப் பாளர் அருண்குமார், கவுன்சிலர் மும்தாஜ், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் அருண்சுந்தர், பகுதி செயலாளர் சுரேஷ்குமார், வட்ட செயலாளர்கள் கங்கா ராஜேஷ், சுரேஷ், மாவட்ட பிரதிநிதிகள் செந்தில்குமார், நாராயணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் நாகராஜன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் வக்கீல் சீனிவாசன், வட்ட பிரதிநிதி பாஸ்கர், இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் மாவட்ட தலைவர் மீராசா, ஜெயராமன், கணேசன், திலகர், வைரமுத்து, மாரியப்பன், மற்றும் மணி, அரபி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டரிடம், கவுன்சிலர் புகார் மனு
    • 15க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து உள்ளதாக புகார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களுர் ஊராட்சி மன்ற உறுப்பினர் நாகராணிசின்னையா கடந்த 6ம் தேதி நடைப்பெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு ஒன்றை அளித்தார். அதில் தங்கள் பகுதியில் வெறி நாய் தொல்லையால் பொது மக்கள் அவதிக்குள்ளாகி வருவதாகவும், வெறி நாய் கடித்து 15க்கும் மேற்ப ட்டோர் காயமடைந்து உள்ள தாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் வெறிநாயை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மீண்டும் அவர் மனு அளித்துள்ளார். அதில் வெறிநாயோடு தற்போது குரங்கு தொல்லையும் அதிகரித்துள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். 

    • ராமசாமி மகன் சசி (வயது 23), .நரசிம்மமூர்த்தி மகள் பிரகத்தி (22) என்பவக்கும் காதல் ஏற்பட்டது. இவரது காதலுக்கு பிரகத்தியின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தாக
    • கடந்த 7-ந் தேதி குஞ்சரம் கிராமத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் சசி (வயது 23), இவர் கடந்த 10 ஆண்டுகளாக கர்நாடக மாநிலத்தில் கட்டிட வேலை செய்து வந்தார். இந்நிலையில் சசிக்கும் கர்நாடக மாநிலம் கெங்கேரி மாவட்டம் கன்சந்த்ராவை சேர்ந்த நரசிம்மமூர்த்தி மகள் பிரகத்தி (22) என்பவக்கும் காதல் ஏற்பட்டது. இவரது காதலுக்கு பிரகத்தியின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது. இதையடுத்து காதலர்கள் இருவரும் கடந்த 4- ந் தேதி சசியின் சொந்த ஊரான பூண்டி கிராமத்திற்கு வந்தனர். தொடர்ந்து கடந்த 7-ந் தேதி குஞ்சரம் கிராமத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

    இந்நிலையில் பாதுகாப்பு கேட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பிரகத்தி மனு அளித்தார். மனுவில் கடந்த 6- ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாகவும், தனது வீட்டில் என்னை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்ததால் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 7-ந் தேதி நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். இந்நிலையில் எனது பெற்றோரும் உறவினர்களும் எங்களுக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர். எனவே எனக்கும், கணவருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. காதல் ஜோடிகள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 200 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் தலித் பூர்வ குடி மக்களுக்கு கடந்த 2007-ம் ஆண்டு பட்டா வழங்கபட்டது
    • மக்களின் பிரச்சினை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டார்.

    ஊட்டி,

    ஊட்டியில் காந்தல் கஸ்துரி பாய் காலனி பகுதியில் 200 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் தலித் பூர்வ குடி மக்களுக்கு கடந்த 2007-ம் ஆண்டு பட்டா வழங்கபட்டது. தற்போது வீடு கட்ட நிலம் இல்லாமல் அரசு நிலத்தில் குடியிருப்ப வர்களின் வீடுகளை ஊட்டி நகராட்சி நிர்வாகம் ஜேசிபி பொக்லைன் கொண்டு இடித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கோரி விடுதலைச் சிறுத்தை கட்சியின் மாவட்டச் செயலாளர் சகாதேவன் தலைமையில் சட்டமன்ற தொகுதி செயலாளர் கட்டாரி, நகரச் செயலாளர் தம்பி இஸ்மாயில் ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களுடன் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் அம்ரித் ஊட்டி வட்டாட்சியர் காந்தல் கஸ்தூரிபாய் காலனி மக்களின் பிரச்சினை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டார்.

    • வையாபுரி நகர் அம்மா உணவகம் அருகே கழிவு நீர் ஓடைகள் மோசமான நிலையில் உள்ளது என மனுவில் கூறப்பட்டுள்ளது.
    • தி.மு.க. வட்ட செயலாளர் சடாமுனி தலைமையில் பொதுமக்கள் திரண்டு வந்து மனு அளித்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் வாராந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மேயர் சரவணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்.

    இதில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ, செயற் பொறியாளர் வாசுதேவன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது 28-வது வார்டு கவுன்சிலர் சந்திர சேகர் பொதுமக்களுடன் வந்து ஒரு மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    28-வது வார்டுக்குட்பட்ட பாரதியார் தெருவில் உள்ள ரேஷன் கடையின் மேல் பகுதியில் காசிபிள்ளை நூலகம் செயல்பட்டு வருகிறது. இதன் மேற்கூரை பெயர்ந்து காணப்படு வதுடன், மாடிக்கு செல்லும் படிகள் மோசமாக உள்ளது.எனவே அதனை உடனடி யாக சீரமைக்க வேண்டும்.

    டவுன் வையாபுரி நகர் அம்மா உணவகம் அருகே 4 பகுதிகளிலும் உள்ள கழிவு நீர் ஓடைகள் மோசமான நிலையில் உள்ளது. பூதத்தார் சன்னதி தெருவில் உள்ள கழிவுநீர் ஓடைகள் பழு தடைந்து சாலைகளில் கழிவு நீர் செல்கிறது. இதனால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக அதனை சீரமைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தச்சை மண்டலம் 2-வது வார்டு தி.மு.க. வட்ட செயலாளர் சடாமுனி தலைமையில் சுந்தரா புரம் ஆர்.எஸ்.ஏ. நகர், வடக்கு கரையிருப்பு உள் ளிட்ட பகுதிகளை சேர்ந்த செல்லத் துரை, அந்தோணி, பண்டாரம் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் ஊரில் இருந்து மதுரை மெயின் ரோட்டுக்கு செல்வதற்கு பாதை வசதி இல்லை. எனவே உடனடியாக அங்கு பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். கொம்பாபிஸ் நிழற்குடை பாதி கட்டிய நிலையில் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. அதனை உடனடி யாக கட்டி முடிக்க வேண்டும். சிவகுமார் பஸ் நிறுத்தத்திற்கு செல்ல ரெயில்வே சுரங்கப்பாதை வழியாக செல்ல வேண்டிய உள்ளது. ஆனால் அங்கு முட்புதர்கள் சூழ்ந்து காணப் படுகிறது. இதனால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ள னர். இதனால் உடனடியாக அதனை அகற்றி தூய்மை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு
    • காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலம்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் குளத்தூர் தாலுகா மண்டையூர் கீழமேடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் அளித்த மனுவில், காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தில் எங்கள் பகுதியில் விவசாய நிலம் கையகப்படுத்துவதற்கு வழங்கப்படும் மதிப்பு தொகையினை உயர்த்தி வழங்க வேண்டும். அல்லது எடுக்கப்பட்ட இடத்திற்கு ஏற்ப மாற்று இடம் வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். நரிமேடு பகுதி அடுக்குமாடி குடியிருப்பை சோ்ந்த குடியிருப்புவாசிகள் அளித்த மனுவில், குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு தண்ணீர் ஏற்றுவதை தனிநபர்கள் மூலம் நிறுத்தப்படுகிறது. இதனால் தண்ணீர் இல்லாமல் அவதி அடைகிறோம். தண்ணீர் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். சத்தியமங்கலம் ஊாராட்சி சனையப்பட்டி கிராமத்தில் உள்ள குளத்தில் குழுமிமடை தூர்த்து போய் உள்ளது. இதனை பருவமழைக்கு முன்னதாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சார்லஸ் மனு அளித்தார்.


    • 25 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் சப்ளை இல்லை என்று குற்றச்சாட்டு
    • மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மனு

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் கரிமேடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் லெட்சுமி என்பவர் மனு அளிக்க வந்தார். இரண்டு மகள்களுடன் லெட்சுமி அளித்த மனுவில், குடியிருப்பு நலச்சங்கத்தினர் ஒருதலை பட்சமாக செயல்படுவதாகவும், 25 நாட்களாக வீட்டிற்கு தண்ணீர் சப்ளை செய்ய மறுப்பதாகவும் அவர் தெரித்திருந்தார்.


    • முடி திருத்துவோர் நல சங்கம் மாவட்ட தலைவர் கிரு ஷ்ணமூர்த்தி தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
    • கோவில் முடி எடுக்கும் தொழிலாளர்களையும் தவில் இசை கலைஞ ர்களையும் அரசு ஊழியர்களாக நியமிக்க வலியுறுத்தல்

    ஆலங்குடி,

    ஆலங்குடியில் மருத்துவர் சமூக நல சங்கத்தினர் மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாத னிட ம் மனு அளித்தனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினரும் அமைச் சருமான சிவ.வீ.மெய்யநாதனிடம் தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் மற்றும் முடி திருத்துவோர் நல சங்கம் மாவட்ட தலைவர் கிரு ஷ்ணமூர்த்தி தலைமையில் மனு அளிக்கப்பட்டது.

    கோரிக்கைகளான....எங்கள்சமூகத்தை தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வகுப்பி ல் சேர்க்க வேண்டும். ஆந்திர பிரதேச அரசு வழங்கி உள்ளது போல் நமது அரசும் பிசிஆர் ஆக்ட் வழங்க வேண்டும்.

    கோவில் முடி எடுக்கும் தொழிலாளர்களையும் தவில் இசை கலைஞ ர்களையும் அரசு ஊழியர்களாக நியமிக்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    அப்போது மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் ஆலங்குடி நகர நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் இணைந்து மனு அளித்தனர்.

    ×