search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தவான்"

    பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வீழ்த்தி ‘பிளே-ஆப்ஸ்’ சுற்றுக்கு முன்னேறியது டெல்லி கேப்பிட்டல்ஸ் #IPL2019 #DCvRCB
    ஐபிஎல் தொடரின் 46-வது லீக் ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கேப்பிட்டல்ஸ் தவான் (50), ஷ்ரேயாஸ் அய்யர் (52), ரூதர்போர்டு (13 பந்தில் 28 ரன்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது.

    பின்னர் 188 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் களம் இறங்கியது. விராட் கோலி நிதானமாக விளையாட பார்தீவ் பட்டேல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

    அணியின் ஸ்கோர் 5.5 ஓவரில் 63 ரன்னாக இருக்கும்போது பார்தீவ் பட்டேல் 20 பந்தில் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் விராட் கோலி 23 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அடுத்து வந்த ஏபி டி வில்லியர்ஸ் 17 ரனனில் ஆட்டமிழந்தார்.



    ஏபி டி வில்லியர்ஸ் ஆட்டமிழந்ததும் ஆர்சிபி-யின் தோல்வி ஏறக்குறைய உறுதியானது. அதன்பின் வந்த டுபே 16 பந்தில் 24 ரன்கள் அடித்தார். இவரையும், கிளாசனையும் அமித் மிஸ்ரா ஒரே ஓவரில் வீழ்த்தினார். அத்துடன் ஆர்சிபி தோல்வி உறுதியானது.

    கடைசி 7 ஓவரில் 77 ரன்கள் வேண்டும் நிலையில் குர்கீரத் சிங் மான், மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஜோடி சேர்ந்தனர். இருவரும் அணியின் வெற்றிக்காக போரடினார்கள். இசாந்த சர்மா வீசிய 17-வது ஓவரில் 16 ரன்கள் அடித்தனர். இதனால் சற்று நம்பிக்கை இருந்தது. ஆனால் ரபாடா 18-வது ஓவரில் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் கடைசி இரண்டு ஓவரில் 30 ரன்கள் தேவைப்பட்டது.



    இசாந்த் சர்மா வீசிய 19-வது ஓவரில் குர்கீரத் மான் சிங் 19 பந்தில் 27 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் இசாந்த் நான்கு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

    ரபாடா வீசிய கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்டது. ரபாடா 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்த ஆர்சிபி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களே எடுத்தது. இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் 8 வெற்றிகளுடன் ‘பிளே-ஆப்ஸ்’ சுற்றுக்கு முன்னேறியது.
    பஞ்சாப் அணிக்கெதிரான அரைசதம் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மாவை முந்தினார் தவான். #IPL2019
    ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு பதிலடி கொடுத்து டெல்லி அணி 6-வது வெற்றியை பதிவு செய்தது. பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன் எடுத்தது.

    கிறிஸ் கெய்ல் 37 பந்தில் 69 ரன்னும் (6 பவுண்டரி, 5 சிக்சர்), மன்தீப் சிங் 27 பந்தில் 30 ரன்னும் (1 பவுண்டரி 1 சிக்சர்) எடுத்தனர். நேபாள நாட்டைச் சேர்ந்த சந்தீப் லமிச்சானே 3 விக்கெட்டும் ரபாடா, அக்‌சார் பட்டேல் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 49 பந்தில் 58 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்), தவான் 41 பந்தில் 56 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். வில்ஜோன் 2 விக்கெட்டும், முகமது‌ ஷமி 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    டெல்லி அணி பெற்ற 6-வது வெற்றியாகும். பஞ்சாப் அணியிடம் மொகாலியில் ஏற்பட்ட தோல்விக்கு பழி தீர்த்துக்கொண்டது. இந்த ஆட்டத்தில் அரை சதம் அடித்ததன் மூலம் ரோகித் சர்மாவை தவான் முந்தினார். அவர் 152 இன்னிங்சில் 35 அரை சதம் அடித்துள்ளார். ரோகித் சர்மா 177இன்னிசில் 34 அரை சதம் அடித்துள்ளார்.

    ஐபிஎல்-லில் அதிக அரைசதம் அடித்த இந்திய வீரர்களில் ரெய்னா, காம்பிர், விராட் கோலி (36) ஆகியோருக்கு அடுத்தப்படியாக தவான் உள்ளார். ஒட்டு மொத்த அளவில் வார்னே 41 அரை சதத்துடன் முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தப்படி கோலி, ரெய்னா, காம்பிர் உள்ளனர்.
    உலகின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவராக தவான் திகழ்கிறார் என்று இந்திய முன்னாள் கேப்டனும், டெல்லி அணியின் ஆலோசகருமான கங்குலி கூறியுள்ளார். #IPL2019 #Ganguly #ShikharDhawan
    கொல்கத்தா:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை தோற்கடித்தது. இதில் கொல்கத்தா நிர்ணயித்த 179 ரன்கள் இலக்கை டெல்லி அணி 18.5 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. டெல்லி தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 97 ரன்களுடன் (63 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

    தவானுக்கு சதம் அடிக்க நல்ல வாய்ப்பு இருந்தது. வெற்றிக்கு 5 ரன் தேவைப்பட்ட போது, அவர் மூன்று இலக்கத்தை தொட 3 ரன் தேவையாக இருந்தது. அப்போது காலின் இங்ராம் (14 ரன்) சிக்சர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்து விட்டார்.

    20 ஓவர் வடிவிலான கிரிக்கெட்டில் தவானின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஆட்டநாயகன் விருது பெற்ற 33 வயதான தவான் கூறுகையில், ‘சதம் அடிப்பது எனக்கு விருப்பமான ஒன்று தான். 100 ரன் எடுத்திருந்தால் அது 20 ஓவர் கிரிக்கெட்டில் எனது முதல் சதமாக இருக்கும் என்பதையும் அறிவேன். ஆனால் தனிப்பட்ட சாதனையே விட அணியின் லட்சியமே முக்கியம். அதனால் தான் முந்தைய பந்தில் ‘ரிஸ்க்’ எடுக்காமல் ஓடி ஒரு ரன் எடுத்தேன். 97 ரன்கள் எடுத்ததே எனக்கு சதம் மாதிரி தான்’ என்று குறிப்பிட்டார்.

    வெற்றிக்கு பிறகு டெல்லி அணியின் ஆலோசகர் சவுரவ் கங்குலி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தொடர்ச்சியாக 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றது மிகவும் திருப்தி அளிக்கிறது. கொல்கத்தா ஈடன்கார்டனில் எல்லாமே சிறப்பு வாய்ந்தது தான். நாட்டின் மிகச்சிறந்த மைதானம் இது. அபாரமாக பந்து வீசி அவர்களை 178 ரன்களில் கட்டுப்படுத்தி இருக்கிறோம். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இது 200 ரன்கள் எடுக்கக்கூடிய ஆடுகளம். அதனால் தான் எளிதாக சேசிங் செய்து விட்டோம்.

    இன்றைய ஆட்டத்தில் ஷிகர் தவான், தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் மிகச்சிறந்த வீரர்கள் என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். இந்த வரிசையில் 4-வதாக டோனியையும் சேர்த்துக் கொள்ளலாம்.

    உலகின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவராக தவான் திகழ்கிறார். நிலைத்து நின்று அதிரடியாக ஆடத் தொடங்கி விட்டால், அவரை எதிரணி பவுலர்கள் கட்டுப்படுத்துவது கடினம். குறுகிய வடிவிலான போட்டியில் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய ஒரு தரமான ஆட்டக்காரர் தவான்.

    உலக கோப்பை கிரிக்கெட் வேறு வடிவிலான (50 ஓவர்) போட்டி. தவான் ஏற்கனவே இங்கிலாந்து மண்ணில் நன்றாக ஆடி இருக்கிறார். உலக கோப்பையிலும் அவர் அசத்துவார்.

    இவ்வாறு கங்குலி கூறினார்.

    ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின் போது, ‘நோ-பால்’ மறுக்கப்பட்டதால் சென்னை கேப்டன் டோனி மைதானத்திற்குள் நுழைந்து நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சர்ச்சையை கிளப்பியது. இந்த விவகாரம் குறித்து கங்குலியிடம் கேட்டபோது, ‘எல்லோரும் மனிதர்கள் தானே. இங்கு நான் அவரது போட்டி மனப்பான்மையை தான் பார்க்கிறேன். அது வியப்புக்குரியது’ என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.  #IPL2019 #Ganguly #ShikharDhawan
    எம்எஸ் டோனியுடன் ரிஷப் பந்த்-ஐ ஒப்பிடுவது சரியாகாது என்று 143 ரன்கள் குவித்த இந்தியாவின் தொடக்க வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். #INSvAUS #RishabhPant
    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று மொகாலியில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா, தவானின் அதிரடியால் (115 பந்தில் 143 ரன்கள்) 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் குவித்தது.

    பின்னர் 359 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. ஆஷ்டோன் டர்னர் 43  பந்தில் 84  ரன்களும், ஹேணட்ஸ்காம்ப் 105 பந்தில் 117 ரன்களும், கவாஜா 99 பந்தில் 91 ரன்களும் எடுக்க, ஆஸ்திரேலியா 47.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் குவித்து இந்தியாவை வீழ்த்தியது.

    இந்தியாவின் பீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது. குறிப்பாக விக்கெட் கீப்பர் பணியில் ரிஷப் பந்த் அதிக அளவில் திணறினார். ஆட்டத்தின் பரபரப்பான நிலையில் டர்னரை ஸ்டம்பிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. இதை ரிஷப் பந்த் தவறவிட்டார். மேலும் சில ரன்அவுட் வாய்ப்பை வீணடித்தார்.



    இதனால் ரசிகர்கள் மைதானத்தில் எம்எஸ் டோனி, எம்எஸ் டோனி என சத்தம் போட்டு ரிஷப் பந்தை கிண்டல் செய்தனர்.

    இந்நிலையில் சதம் அடித்த ஷிகர் தவான் போட்டிக்குப் பின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ‘‘ரிஷப் பந்த்-ஐ எம்எஸ் டோனியுடன் ஒப்பிடுவது சரியானது அல்ல’’ என்று தெரிவித்துள்ளார்.
    2-வது டி20 போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது. ரோகித் சர்மா, மார்கண்டே, உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு தவான், சித்தார்த் கவுல், விஜய் சங்கர் சேர்க்கப்பட்டுள்ளனர். #INDvAUS
    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் இன்றிரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பிஞ்ச் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார்.

    இந்திய அணியில் ரோகித் சர்மா, மார்கண்டே, உமேஷ் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டு தவான், விஜய் சங்கர், சித்தார்த் கவுல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படவில்லை. பும்ரா அணியில் இணைந்துள்ளார். #INDvAUS
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு டி20, ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் முதலில் நடக்கிறது. முதல் போட்டி விசாகப்பட்டினத்தில் வருகிற 24-ந்தேதியும், 2-வது போட்டி 27-ந்தேதி பெங்களூருவிலும் நடக்கிறது.

    இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா, தவான் போன்ற முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாருக்கும் ஓய்வு கொடுக்கப்படவில்லை. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்ட பும்ரா, மீண்டும் அணியில் இணைந்துள்ளார். சுழற்பந்து வீச்சாளரான மயாங்க் மார்கண்டே முதன்முறையாக இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.



    புவனேஸ்வர் குமார் நீக்கப்பட்டு உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இளம் வீரர் ஷுப்மான் கில்லும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. விராட் கோலி (கேப்டன்), 2. ரோகித் சர்மா (துணைக் கேப்டன்), 3. கேஎல் ராகுல், 4. ரிஷப் பந்த், 5. தினேஷ் கார்த்திக், 6. எம்எஸ் டோனி (விக்கெட் கீப்பர்), 7. ஹர்திக் பாண்டியா, 8. குருணால் பாண்டியா, 9. விஜய் சங்கர், 10. சாஹல், 11. பும்ரா, 12. உமேஷ் யாதவ், 13. சித்தார்த் கவுல், 14. மயாங்க் மார்கண்டே, 15. ஷிகர் தவான்.
    வேலைப்பளுவை மனதில் கொண்டு ஆஸ்திரேலியா தொடரின்போது ரோகித் சர்மா மற்றும் தவானுக்கு ஓய்வு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. #AUSvIND
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு 20 ஓவர் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. வருகிற 24-ந்தேதி முதல் 20 ஓவர் போட்டி விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. 2-வது ஆட்டம் பெங்களூரில் 27-ந்தேதி நடைபெறுகிறது.

    ஒருநாள் போட்டிகள் மார்ச் 2, 5, 8, 10 மற்றும் 13-ந்தேதி ஆகிய தேதிகளில் முறையே ஐதராபாத், நாக்பூர், ராஞ்சி, மொகாலி, டெல்லியில் நடக்கிறது.

    இந்த போட்டிக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படுகிறது. உலகக்கோப்பை போட்டிக்கு முன்பு நடைபெறும் கடைசி ஒருநாள் தொடர் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. தொடர்ந்து விளையாடி வருவதால் ரோகித் சர்மா, தவான் ஆகியோருக்கு சில ஆட்டங்களில் ஓய்வு கொடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.

    அவர்களுக்கு பதிலாக தொடக்க வீரர் வரிசையில் ரகானே, கே.எல்.ராகுல் ஆகியோர் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நியூசிலாந்து தொடரில் பாதியில் ஓய்வு கொடுக்கப்பட்ட கேப்டன் வீராட்கோலி அணிக்கு மீண்டும் திரும்புகிறார். இதேபோல வேகப்பந்து வீரர் பும்ராவும் அணிக்கு மீண்டும் திரும்புவார். அவர் காயம் காரணமாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தொடரில் விளையாடவில்லை.



    வேகப்பந்து வீரர்களும், சுழற்பந்து வீரர்களும் சுழற்சி முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். மிடில் ஆர்டர் வரிசையிலும் அணி மாற்றம் இருக்கலாம். இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து பயணத்தில் சிறப்பாக விளையாடி தொடரை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

    இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டால் ரகானே, லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கி விளையாட வாய்ப்புள்ளது.
    வெலிங்டனில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா 139-ல் சுருண்டு 80 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. #NZvIND
    நியூசிலாந்து - இந்தியா இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்தது.

    பின்னர் 220 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரோகித் சர்மா 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

    அடுத்து தவான் உடன் விஜய் சங்கர் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்தியா 5.2 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது. அணியின் ஸ்கோர் 51 ரன்னாக இருக்கும்போது தவான் 28 பந்தில் 29 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    விஜய் சங்கர் 18 பந்தில் 27 ரன்கள் சேர்த்து வெளியேறினார். அதன்பின் இந்தியாவின் விக்கெட்டுக்கள் சரிய ஆரம்பித்தது. ரிஷப் பந்த் 4 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 5 ரன்னிலும், ஹர்திக் பாண்டியா 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியாவின் தோல்வி உறுதியானது.

    டோனி 31 பந்தில் 39 ரன்களும், குருணால் பாண்டியா 18 பந்தில் 20 ரன்களும் அடிக்க இந்தியா 19.2 ஓவரில் 139 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    நியூசிலாந்து அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி 17 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும் பெர்குசன், சான்ட்னெர், சோதி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் 8-ந்தேதி நடக்கிறது.
    வெலிங்டனில் நாளை தொடங்கும் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #NZvIND
    இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனைப் படைத்தது.

    இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரின் முதல் ஆட்டம் வெலிங்டனில் நாளை (6-ந்தேதி) நடக்கிறது.

    ஒருநாள் தொடரை போலவே 20 ஓவர் தொடரிலும் இந்திய அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோலி ஒருநாள் தொடரை வென்றது போல் ரோகித் சர்மா 20 ஓவர் தொடரை வெல்லும் ஆர்வத்துடன் இருக்கிறார்.



    பேட்டிங்கில் தவான், தற்காலிக கேப்டன் ரோகித் சர்மா, டோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த் ஆகியோரும், பந்து வீச்சில் சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    ஒருநாள் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்ட இளம் வீரர் ரிஷப் பந்த் 20 ஓவர் தொடரில் விளையாடுகிறார். அவரது அதிரடி ஆட்டம் அணிக்கு பலம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆல்-ரவுண்டர் வரிசையில் இருக்கும் ஹர்த்திக் பாண்டியா மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.



    நியூசிலாந்து மண்ணில் இதுவரை இந்திய அணி 20 ஓவர் போட்டியில் வெற்றி பெற்றது இல்லை. முதல் முறையாக வெற்றியை பெறுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

    வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை இழந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 20 ஓவர் தொடரை வெல்லும் ஆர்வத்துடன் உள்ளது.

    வில்லியம்சன், கொலின் முன்ரோ, ராஸ் டெய்லர், பிரேஸ்வெல் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.



    நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அணி வீரர்கள் விவரம்:-

    இந்தியா : - ரோகித் சர்மா (கேப்டன்), தவான், ஷுப்மான் கில், டோனி, கேதர் ஜாதவ், ரிஷப் பந்த், விஜய் சங்கர், ஹர்த்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், சாஹல், குல்தீப் யாதவ், கலீல் அகமது, குருணால் பாண்டியா.

    நியூசிலாந்து:- வில்லியம்சன் (கேப்டன்), கொலின் முன்ரோ, ராஸ் டெய்லர், ஜேம்ஸ் நீசம், டிம் செய்பெர்ட், சான்ட்னெர், சவுத்தி, கிராண்ட்ஹோம், சோதி, டிக்னெர், மிச்செல், ஸ்காட், பெர்குசன், பிரேஸ்வெல்.
    நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்தியா அணி வெற்றி பெற 244 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. #NZvIND #TeamIndia
    மவுன்ட்மவுக்னி:

    இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது ஒரு நாள் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 7.30 மணிக்கு தொடங்கியது.

    இந்திய அணியில் 2 மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. காயம் காரணமாக டோனி ஆடவில்லை. அவருக்கு பதிலாக தினேஷ்கார்த்திக் இடம் பெற்றார். இதேபோல விஜய்சங்கர் இடத்தில் ஹர்த்திக் பாண்ட்யாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. பெண்கள் குறித்து சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்ததால் அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இந்த சஸ்பெண்டு நீக்கப்பட்டதால் ஹர்த்திக் பாண்ட்யாவுக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது.

    இதேபோல நியூசிலாந்து அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. கிராண்ட் ஹோமுக்கு பதிலாக சான்ட்னெர் இடம் பெற்றார்.

    நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் ‘டாஸ்’ வென்று தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். இந்திய வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் நியூசிலாந்து அணி திணறியது.



    59 ரன் எடுப்பதற்குள் அந்த அணி 3 விக்கெட்டை இழந்தது. தொடக்க வீரர் முன்ரோ 7 ரன்னில் முகமது ‌ஷமி பந்திலும், மற்றொரு தொடக்க வீரர் குப்தில் 13 ரன்னில் புவனேஷ்குமார் பந்திலும் ஆட்டம் இழந்தனர். நியூசிலாந்து கேப்டனும், உலகின் முன்னணி பேட்ஸ் மேன்களில் ஒருவருமான வில்லியம்சன் 28 ரன்னில் யசுவேந்திரசாஹல் பந்தில்‘அவுட்’ ஆனார்.

    4-வது விக்கெட்டான டெய்லர்- டாம்லாதம் ஜோடி விக்கெட் சரிவை தடுத்து பொறுமையுடன் விளையாடியது. அந்த அணி 25.5 ஓவரில் 100 ரன்னை தொட்டது.

    இருவரும் சிறப்பாக விளையாடி அரை சதத்தை எடுத்தனர். டெய்லர் 71 பந்தில் 4 பவுண்டரியுடன் 50 ரன்னும், லாதம் 68 பந்தில் 1 பவுண்டரி, 1 சிக்சருடன் 50 ரன்னும் எடுத்தனர்.

    இந்த ஜோடியை சாஹல் பிரித்தார். டாம் லாதம் 51 ரன்னில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 178 ஆக இருந்தது. 4-வது விக்கெட் ஜோடி 118 ரன் எடுத்தது. அடுத்து வந்த நிக்கோலசை 6 ரன்னில் பாண்ட்யா வெளியேற்றினார். அடுத்து வந்த சான்ட்னெர் 3 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

    ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் இருந்த ரோஸ் டெய்லர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    அபாரமாக விளையாடி வந்த டெய்லர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 93 ரன்னில் முகமது‌ஷமி பந்தில் 7-வது விக்கெட்டாக ஆட்டம் இழந்தார். 106 பந்தில் 9 பவுண்டரியுடன் அவர் இந்த ரன்னை எடுத்தார். அப்போது ஸ்கோர் 222 ஆக (45.1 ஓவர்) இருந்தது.

    நியூசிலாந்து அணியின் எஞ்சிய 3 விக்கெட்டுகளும் எளிதில் விழுந்தன. அந்த அணி 49 ஓவர்களில் 243 ரன்னில் ‘ஆல் அவுட்’ ஆனது. இதனால் இந்தியாவுக்கு 244 ரன் இலக்காக இருந்தது. முகமது ‌ஷமி 3 விக்கெட்டும், புவனேஷ்வர்குமார், யசுவேந்திர சாஹல், ஹர்த்திக் பாண்ட்யா தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    244 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்தியா விளையாடியது. ரோகித்சர்மா, தவானின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. தவான் அதிரடியான ஆட்டத்தில் ஈடுபட்டார்.

    அவர் 27 பந்தில் 28 ரன்னுடன் (6 பவுண்டரி) ஆட்டம் இழந்தார். அவரது விக்கெட்டை போல்ட் கைப்பற்றினார். அப்போது ஸ்கோர் 39 ரன்னாக (8.2 ஓவர்) இருந்தது.

    2-வது விக்கெட்டுக்கு ரோகித்சர்மாவுடன் கேப்டன் வீராட்கோலி ஜோடி சேர்ந்தார். #NZvIND #TeamIndia
    நேப்பியரில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முகமது ஷமி மற்றும் தவான் ஆட்டத்தால் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #NZvIND
    நியூசிலாந்து - இந்தியா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேப்பியரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து இந்தியாவின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 157 ரன்னில் சுருண்டது. முகமது ஷமி 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், சாஹல் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. 10 ஓவர் முடிந்த நிலையில் சூரிய ஒளியால் ஆட்டம் அரைமணி நேரம் நிறுத்தப்பட்டது. இதனால் இந்தியாவிற்கு 49 ஓவரில் 156 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.



    ரோகித் சர்மா 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து தவான் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தவான் அரைசதம் அடிக்க, இந்தியாவின் ஸ்கோர் 132 ரன்னாக இருக்கும்போது விராட் கோலி 45 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.



    3-வது விக்கெட்டுக்கு தவான் உடன் அம்பதி ராயுடு ஜோடி சேர்ந்தார். இந்தியா 34.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தவான் 75 ரன்களுடனும், அம்பதி ராயுடு 13 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.



    6 ஓவர்கள் வீசி 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்திய முகமது ஷமி ஆட்டநாயகன் விருது பெற்றார். இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி மவுண்ட் மவுங்கானுயில் வருகிற 26-ந்தேதி பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது.
    நேப்பியரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா பேட்டிங் செய்யும்போது சூரிய ஒளியால் பந்தை பார்க்க முடியவில்லை என தவான் கூறியதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. #NZvIND
    நியூசிலாந்து - இந்தியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேப்பியரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. குல்தீப் யாதவ் (4), முகமது ஷமி (3), சாஹல் (2) ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சால் நியூசிலாந்து 157 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் 81 பந்தில் 64 ரன்கள் சேர்த்தார்.

    நியூசிலாந்து அணி 38 ஓவர்கள் மட்டுமே விளையாடியதால் ‘இன்னிங்ஸ் பிரேக்’ விடாமல் இந்தியா தொடர்ந்து பேட்டிங் செய்தது. இந்தியா 9 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 41 ரன்கள் எடுத்திருக்கும்போது ‘இன்னிங்ஸ் பிரேக்’ விடப்பட்டது.

    ‘இன்னிங்ஸ்’ பிரேக் முடிந்து ஆட்டம் தொடங்கியதும் ரோகித் சர்மா 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து தவான் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். 11-வது ஓவரை பெர்குசன் வீசினார். முதல் பந்தை தவான் சந்தித்தார். லெக் சைடு வைடாக வீசிய அந்த பந்தை தவானால் எதிர்கொள்ள முடியவில்லை.

    அந்த நேரத்தில் சூரியன் மறையக்கூடிய மாலை நேரம். சூரிய ஒளி கிழக்கு திசையில் பேட்டிங் செய்து கொண்டிருந்த தவானின் கண்ணை மறைத்தது. இதனால் மைதான நடுவரிடம் சென்ற அவர், சூரிய ஒளி கண்ணை கூச வைப்பதாகவும் தன்னால் பந்தை பார்க்க முடியவில்லை என்றும் தெரிவித்தார். ஆகவே, நடுவர்கள் சூரியன் மறையும் வரை சுமார் அரைமணி நேரம் ஆட்டத்தை நிறுத்தினர்.



    இதனால் ரசிகர்கள் வியப்பில் ஆழந்தனர். ரசிகர்கள் மட்டுமல்ல, நடுவரும் நான் இதுவரை சூரிய ஒளியால் ஆட்டம் நிறுத்தப்பட்டதை கேள்விப்பட்டதில்லை என்றார்.

    பொதுவாக மைதானத்தில் ஆடுகளம் வடக்கு தெற்காகத்தான் அமைக்கப்படும். அப்போதுதான் சூரிய ஒளி தாக்காது. ஆனால் நேப்பியரில் ஆடுகளம் கிழக்கு மேற்கு திசையில் அமைக்கப்பட்டுள்ளதால் ஆட்டத்தை நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

    அரைமணி நேரம் கழித்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. இந்தியாவிற்கு 49 ஓவரில் 156 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
    ×