search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூடல்"

    இலங்கையில் கத்தோலிக்க சபையின் கீழ் செயல்படும் அனைத்து தேவாலயங்களும் தற்காலிகமாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #SriLankaAttacks #SriLankaBlast
    கொழும்பு:

    இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள், மற்றும் ஓட்டல்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 359 பேர் பலியானார்கள். இன்னும் இலங்கையில் பல்வேறு இடங்களில் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் இலங்கையில் கத்தோலிக்க சபையின் கீழ் செயல்படும் அனைத்து தேவாலயங்களும் தற்காலிகமாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #SriLankaAttacks #SriLankaBlast
    வங்காளதேசத்தில் வரும் 30-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் அங்கு ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள பக்கங்களை கொண்டு இயங்கும் பல போலி செய்தி தளங்கள் மூடப்பட்டுள்ளன. #Bangladesh #NationalElection #Facebook #FackNewsSite
    டாக்கா:

    வங்காளதேசத்தில் வரும் 30-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது.இந்தநிலையில் அங்கு ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள பக்கங்களை கொண்டு பல போலி செய்தி தளங்கள் உருவாக்கப்பட்டு, எதிர்க்கட்சிகளை பற்றிய தவறான தகவல்களை பரப்புவதாக புகார் எழுந்தது.அதைத் தொடர்ந்து சட்டப்பூர்வமான செய்தி ஊடகங்களைப் போன்றே வடிவமைக்கப்பட்ட 9 ‘பேஸ்புக்’ பக்கங்களும், எதிர்க்கட்சிகள் பற்றிய தவறான தகவல்களை பரப்புகிற 6 போலி தனிநபர் கணக்குகளும் மூடப்பட்டுள்ளன.

    இவை வங்காளதேச அரசுடன் தொடர்புடையவர்களால் உருவாக்கப்பட்டவை என்று ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள நிறுவனத்தின் கம்ப்யூட்டர் குற்ற தடுப்பு பிரிவின் தலைவர் நத்தானியேல் கிளெய்ச்சர் தெரிவித்தார். இதே போன்று டுவிட்டரும் 15 கணக்குகளை தற்காலிகமாக மூடி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. #Bangladesh #NationalElection #Facebook #FackNewsSite 
    பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள சென்னை விமான நிலைய ஓடுபாதை பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை சுமார் 6 மணி நேரம் மூடி வைக்க முடிவு செய்யப்பட்டது. #ChennaiAirport #Runway
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமானங்கள் வந்து செல்ல 2 ஓடுபாதைகள் உள்ளன. முதல் பிரதான ஓடுபாதை 3,658 மீட்டர் நீளமும், 2-வது துணை ஓடுபாதை 2,890 மீட்டர் நீளமும் கொண்டது. இந்த ஓடுபாதையில் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்களுக்கு தினமும் 426 விமானங்கள் வந்து செல்லும்.

    முதல் பிரதான ஓடுபாதையை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று முதல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை சுமார் 6 மணி நேரம் பிரதான ஓடுபாதையை மூடி வைக்க முடிவு செய்யப்பட்டது.

    பராமரிப்புக்காக 6 மணி நேரம் ஓடுபாதை மூடினாலும் எந்தவித பாதிப்பின்றி விமான போக்குவரத்து சேவை 2-வது ஓடுபாதையில் செயல்படும். பெரிய ரக விமானங்கள் பயன்பாட்டுக்கு மட்டும் முதல் பிரதான ஓடுபாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு விமான சேவைக்கு அனுமதிக்கப்படும்.

    இந்த ஓடுபாதை பராமரிப்பு பணிகள் அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரை மேற்கொள்ளப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்
    தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததை தொடர்ந்து ஊட்டி படகு இல்லம் மூடப்பட்டது. பல்வேறு சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.
    ஊட்டி:

    தி.மு.க. தலைவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி மறைவை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் இயங்கி வரும் ஊட்டி படகு இல்லத்தின் நுழைவு வாயில்கள் நேற்று மூடப்பட்டு பூட்டு போடப்பட்டு இருந்தது. அதில் ஒரு நுழைவுவாயிலில் கருணாநிதி உருவப்படம் வைக்கப்பட்டு கருப்பு கொடி கட்டப்பட்டு இருந்தது.



    ஊட்டி படகு இல்லத்தில் வார விடுமுறை இல்லாத நாட்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்படும். ஆனால், நேற்று படகு இல்லத்தின் உள்பகுதியில் மிதி படகுகள், மோட்டார் படகுகள், துடுப்பு படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. வளாகத்தில் உள்ள பல்வேறு கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஊட்டி படகு இல்ல சாலையில் குதிரை சவாரி ரத்து செய்யப்பட்டது. ஊட்டி படகு இல்லம் மூடப்பட்டதால், அங்கு கார்களில் வந்த சில சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    தோட்டக்கலைத்துறை மூலம் செயல்பட்டு வரும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா ஆகிய சுற்றுலா தலங்கள் திறந்து இருந்தன. ஆனால் சுற்றுலா பயணிகள் கூட்டமின்றி வெறிச்சோடி இருந்ததை காண முடிந்தது. சில சுற்றுலா பயணிகள் மட்டும் கொட்டும் மழையில் குடைகளை பிடித்தபடி பூங்காவில் வலம் வந்தனர்.

    சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா நகரமான ஊட்டிக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் சீதோஷ்ண நிலையை அனுபவிக்க வருகை தருவார்கள். இதனால் ஊட்டியில் முக்கிய சந்திப்பு பகுதியான சேரிங்கிராஸ் பகுதியில் எப்போதும் வாகனங்கள் சென்று கொண்டு இருக்கும். ஆனால், நேற்று வாகன போக்குவரத்து இன்றி சேரிங்கிராஸ் பகுதி வெறிச்சோடியது.

    அதேபோல் ஊட்டி-கோத்தகிரி சாலை, ஊட்டி-குன்னூர் சாலையில் குறைந்த எண்ணிக்கையிலேயே வாகனங்கள் சென்றன. கமர்சியல் சாலை, மாரியம்மன் கோவில் சந்திப்பு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் மிகவும் குறைந்து காணப்பட்டது. 
    திருப்பதியில் உள்ள ஸ்ரீவாரி தெப்பக்குளம் ஒரு மாதத்துக்கு மூடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. #TirupatiTemple #Tirupati
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகில் உள்ள ஸ்ரீவாரி தெப்பக் குளத்தில் ஆண்டுதோறும் வருடாந்திர பிரம்மோற்சவத்திற்கு முன் பழைய நீர் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு புதிய நீர் நிரப்பப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மகா சம்ப்ரோ‌ஷணம, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 2 பிரம்மோற்சவங்கள் அடுத்தடுத்து நடைபெற உள்ளன.

    எனவே இம்மாதம் தெப்பக்குளத்தை சுத்தம் செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதன்படி ஸ்ரீவாரி தெப்பக்குளம் வரும் 10-ந்தேதி மூடப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து 10 நாட்களுக்கு அதிலுள்ள பழைய நீர் அகற்றப்படும்.

    தொடர்ந்து படிகளை கழுவி குழாய்களை சுத்தம் செய்து செப்பனிடும் பணிகள் நடைபெறும். நீர் சுத்திகரிக்கும் மையம் சுத்தம் செய்யப்பட்டு, அதன் பின் குளத்தில் புதிய நீர் நிரப்பி ஆகஸ்ட் 9-ந்தேதி தெப்பக்குளம் பக்தர்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளது.

    குளத்தில் எப்போதும் பி.எச்.வேல்யூ 7 என்ற தரத்தில் தண்ணீர் இருக்குமாறு ஊழியர்கள் அடிக்கடி சோதனை செய்து வருவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். #TirupatiTemple #Tirupati
    ஊட்டி அருகே பைன்பாரஸ்ட் சுற்றுலா தலம் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது. அங்கு பூங்கா மற்றும் காட்சி முனை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
    ஊட்டி:

    மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டி சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழ்கிறது. மலைப்பிரதேசமாக உள்ளதால், ஊட்டி நகரை சுற்றிலும் வனப்பகுதிகள் உள்ளன. ஊட்டியை சுற்றி பல இடங்கள் மரங்கள் இல்லாமல் வெட்ட வெளியாக காட்சி அளித்தது. அந்த இடங்களை அழகுப்படுத்துவதற்காக வனத்துறை சார்பில், வெளிநாட்டில் இருந்து பைன் மரக்கன்றுகள் இறக்குமதி செய்யப்பட்டது. ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தலைகுந்தா பகுதி மற்றும் சோலூர் செல்லும் சாலையின் இருபுறங்களிலும் பைன் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

    ஊட்டி தலைகுந்தா அருகே பைன்பாரஸ்ட் (பைன் மரக்காடுகள்) சுற்றுலா தலம் உள்ளது. இங்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட சினிமா படப்பிடிப்புகள் நடைபெறுவது வழக்கம். இங்கு ஒரு நபருக்கு ரூ.5 நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பைன் மரக்காடுகளுக்கு வரும் சுற்றுலா பயணிகள் சரிவுகளில் உயரமாக வளர்ந்து உள்ள பைன் மரங்களை கண்டு ரசிப்பதுடன், செல்பி எடுத்து மகிழ்கிறார்கள். அங்கு கீழே விழுந்த மரங்கள் இருக்கைகளாக மாற்றப்பட்டு உள்ளது. அந்த இருக்கைகளில் சுற்றுலா பயணிகள் அமர்ந்து கண்டு களிக்கின்றனர். மேலும் பைன் மரக்காடுகளின் கீழ்பகுதியில் காமராஜ் சாகர் அணையில் எழில்மிகு தோற்றம், இயற்கை அழகை காணலாம்.

    ஊட்டியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வந்தது. அப்போது பைன் மரக்காடுகளில் கீழே நடந்து செல்லும் சுற்றுலா பயணிகள் வழுக்கி விழும் அபாயம் இருந்தது. சிலர் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்தனர். மேலும் மழையின் போது சுற்றுலா பயணிகள் ஒதுங்கி நிற்க போதுமான வசதிகள் இல்லை. இதனை கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்ட வனத்துறை சார்பில், பைன் மரக்காடுகளில் சுற்றுலா பயணிகளுக்காக மேம்பாட்டு பணிகளை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து பைன்பாரஸ்ட் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் பைன்பாரஸ்ட் மூடப்பட்டு இருப்பதை பார்த்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து விட்டு, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் பைன் மரக்காடுகளுக்கு வருகின்றனர். வார விடுமுறை, சீசன் காலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும். சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி நடைபாதையுடன் கூடிய படிக்கட்டுகள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஊட்டி-கூடலூர் சாலையில் பைன்பாரஸ்ட் முன்பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட உள்ளது. கீழ்பகுதியில் பல்வேறு மலர் செடிகளை கொண்டு பூங்கா அமைத்து, சுற்றுலா பயணிகள் இயற்கை காட்சிகளை ரசிக்கும் வகையில் காட்சி முனை அமைக்கப்பட உள்ளது. அந்த பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் கடந்த ஜூன் மாதம் 25-ந் தேதி முதல் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது. மேம்பாட்டு பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பைன் பாரஸ்ட் மீண்டும் திறக்கப் படும். இவ்வாறு அவர் கூறினார். 
    திருவண்ணாமலையில் பெண்கள் எதிர்ப்பால் மீண்டும் திறக்கப்பட இருந்த டாஸ்மாக் கடையை அதிகாரிகள் மூடினர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தேனிமலையில் அரசு பஸ் டெப்போ அருகே டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வந்தது.

    இதனால் அந்த பகுதிகளில் பொதுமக்களுக்கு கடும் இடையூறு ஏற்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம் செய்தனர்.

    பொதுமக்கள் போராட்டத்தையடுத்து அந்த டாஸ்மாக் மதுக்கடை மூடப்பட்டது.

    இந்த நிலையில் மீண்டும் அந்த டாஸ்மாக் கடையை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக டாஸ்மாக் நேற்று அதிகாரிகள் வந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதிபெண்கள் 50-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். அவர்கள் டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு கோ‌ஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்ய முயன்றும் முடியவில்லை. டாஸ்மாக் கடை திறக்க கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர்.

    பெண்களின் கடும் எதிர்ப்பை சமாளிக்க முடியாத அதிகாரிகள் அங்கிருந்து திரும்பிச்சென்றனர். இதனையடுத்து புதியதாக திறக்கப்பட இருந்த டாஸ்மாக் மதுக்கடை மூடப்பட்டது.




    10-க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 890 அரசு பள்ளிகளை இயங்காமல் நிறுத்தி வைப்பது குறித்து தமிழக அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. #GovernmentSchool
    சென்னை:

    தமிழக அரசு சார்பில் தொடக்கப்பள்ளிகள், நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் இயங்கி வருகின்றன.

    தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ளது. குழந்தைகளின் தொடக்கக்கல்வியை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக மதிய உணவு திட்டம், விலையில்லா சீருடைகள், புத்தகங்கள், காலணி போன்ற திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

    எனினும் அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் மிகவும் குறைவாக இருப்பதாக தமிழ்நாடு அனைவருக்கும் கல்வி இயக்கம், தொடக்கக்கல்வி இயக்கம் ஆகியவை ஆய்வு நடத்தி கடந்த ஆண்டு அறிக்கை வெளியிட்டது.

    இதையடுத்து அரசு தொடக்கப்பள்ளிகளில் எத்தனை குழந்தைகள் படிக்கிறார்கள்? எத்தனை ஆசிரியர்கள் பணி புரிகிறார்கள்? எத்தனை சத்துணவு ஆயாக்கள் இருக்கிறார்கள்? போன்ற விகிதாச்சார விவரங்களை தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை கணக்கில் எடுத்தது.

    அரசு நடத்திய ஆய்வில் 890 தொடக்கப்பள்ளிகளில் மாணவ-மாணவிகள் எண்ணிக்கை 10-க்கும் குறைவாக இருப்பது தெரிய வந்தது. 29 பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி, 4 நகராட்சி தொடக்கப்பள்ளி என 33 தொடக்கப்பள்ளிகளில் ஒரு மாணவ-மாணவி கூட படிக்கவில்லை என்பதும், அங்கு ஆயாக்கள் மட்டுமே தினமும் வந்து செல்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவலும் கிடைத்தது.

    பெரும்பாலான பள்ளிகளில் ஒற்றை இலக்கில் மாணவ-மாணவிகள் எண்ணிக்கை இருந்தது தெரிய வந்தது. இதனால் அரசுக்கு தேவையற்ற செலவு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளை வேறு பள்ளிகளில் சேர்த்துவிட அரசு முடிவு செய்துள்ளது.

    அப்படியே அந்த மாணவர்கள் அருகில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு சென்று விட்டாலும், இயங்காமல் இருக்கும் இந்த பள்ளிக்கூடங்களை, மாணவர்கள் அங்கு வந்து படிப்பதற்கு நன்கு வசதி உள்ள இடங்களாக மாற்றுவதற்கு அரசு உத்தேசித்துள்ளது.

    சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் 32 மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் 10-க்கும் குறைவான மாணவ-மாணவிகள் படிக்கும் 890 தொடக்கப்பள்ளிகளில் மாற்றுத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    எனவே 890 தொடக்கப்பள்ளிகள் தொடர்பாக தமிழக அரசு சார்பில் விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
    ×