search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனவேதனை"

    வில்லியனூரில் நர்சிங் கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் கூடப்பாக்கம் புதுநகரை சேர்ந்தவர் கலியவரதன் (வயது 52). கூலித்தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி. இவர்களது மகள் பச்சையம்மாள் (வயது 19). பி.எஸ்.சி. நர்சிங் படித்து வருகிறார்.

    கலியவரதனுக்கும், லட்சுமிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்து வந்தது. அதேபோல் கடந்த 20-ந்தேதியும் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

    இதனை கண்ட பச்சையம்மாள் மனவேதனை அடைந்து வீட்டு மாடிக்கு சென்று ஆஸ்பெட்டாஸ் சீட் பைப்பில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தொங்கினார்.

    இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த கலியவரதனும், லட்சுமியும் பச்சையம்மாளை மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பச்சையம்மாள் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வில்லியனூர் போலீஸ் ஏட்டு கிருபாகரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கடவூர் அருகே உடல்நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த பெண் மனமுடைந்த தற்கொலை செய்து கொண்டார்.
    முசிறி:

    கடவூர் நல்லுரான் பட்டியை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி லட்சுமி (வயது 48). இவர் கடந்த பல வருடங்களாக உடல்நலம் சரியில்லாமல் அவதிபட்டு வந்தார். 

    இதனால் மனவேதனை அடைந்த லட்சுமி வீட்டில் யாரும் இல்லாத போது பூச்சி மருந்தை எடுத்து  குடித்தார். உடனே அவரை சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி இறந்தார். 

    இது குறித்து பாலவிடுதி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    கணவர் இறந்த துக்கத்தில் மிகுந்த மனவேதனை அடைந்த பெண் வங்கி ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் முத்து நகரை சேர்ந்தவர் சிவசாமி. இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 35). இவர் அந்த பகுதியில் உள்ள நகர வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 3 வருடங்களுக்கு முன்பு சிவசாமி உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். கணவர் இறந்ததால் விஜயலட்சுமி மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து கோட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட விஜயலட்சுமியின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வடவள்ளி அருகே 2-வதும் பெண் குழந்தை பிறந்ததால் மனவேதனை அடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை:

    கோவை வடவள்ளி அருகே உள்ள சுல்தானியாபுரத்தை சேர்ந்தவர் கார்த்திக். ஓர்க்ஷாப் தொழிலாளி. இவரது மனைவி வனிதா (வயது 23). இவர்கள் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 3½ வயதில் பெண் குழந்தை உள்ளது.

    இந்தநிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த வனிதாவுக்கு கடந்த 45 நாட்களுக்கு முன்பு 2-வதும் பெண் குழந்தை பிறந்தது. ஆண் குழந்தை பிறக்கும் என நினைத்து இருந்த நிலையில் பெண் குழந்தை பிறந்ததால் வனிதா மிகுந்த மனவேதனை அடைந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர். இது குறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட வனிதாவின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 5 வருடத்தில் வனிதா தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.

    ×