search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்திப்பு"

    • வலங்கொண்டான் விடுதி, வெள்ளாள விடுதியில் எம்எல்ஏ டாக்டர்.முத்துராஜா பொதுமக்களை சந்தித்து மனு பெற்றுக்கொண்டார்
    • அதிகாரிகளை உடன் அழைத்து சென்று மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட உட்பட்ட வலங்கொண்டான் விடுதி ஊராட்சி மற்றும் வெள்ளாள விடுதி ஊராட்சியில் உள்ள அனைத்து கிளைகளிலும் புதுக்கோட்டை தொகுதி எம்எல்ஏ டாக்டர்.முத்துராஜா அனைத்து துறை அரசு அதிகாரிகளுடன் சென்று பொதுமக்களை சந்தித்து அப்பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கேட்டறிந்தார். பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை எம்எல்ஏவிடம் கோரிக்கை மனுவாக அளித்தனர். கோரிக்கையை ஏற்று உடன் வருகை புரிந்த துறை சார்ந்த அதிகாரிகளிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்க எம்எல்ஏ வலியுறுத்தினார்.நிகழ்ச்சியில் கறம்பக்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் தவபாஞ்சாலன் ஊராட்சி மன்ற தலைவர்கள் பொன்மணி, சிவகாமி, ரெங்கசாமி, பழனிதுரை, சந்திரசேகர், பவுல்ராஜ், மதியழகன், சீனிவாசன், வெள்ளாள விடுதி செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்புனவாசல் அரசு உதவி பெறும் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
    • கல்வி போதித்த ஆசிரியருக்கு தங்க மோதிரம் பரிசு

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா திருப்புனவாசல் கிராமத்தில் அரசு உதவி பெறும் ஸ்ரீ ராமகிருஷ்ணா விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 900க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.இந்நிலையில் இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவ மாணவியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி,ஆசிரியர்களை பாராட்டுதல் உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது.படிக்கும் போது நடந்த சுவாரசியமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர்.மேலும் அவர்களுடைய முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர் பெருமக்களை அழைத்து சிறப்பு செய்தனர்.அதனை தொடர்ந்து சுப்பிரமணியன் ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடத்தி அவருக்கு தங்க மோதிரம் பரிசாக அளித்தனர்.அதனை தொடர்ந்து அனைவரும் ஒன்று கூடி செல்பி எடுத்துக் கொண்டனர். அதோடு மட்டுமல்லாது முன்னாள் மாணவர்கள் ஒருவருக்கொருவர் உணவு வூட்டி தங்கள் பாசத்தை வெளிப்படுத்தி கொண்டனர். முன்னாள் மாணவர்கள் நடத்திய நிகழ்வானது காண்போர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வி.சி.க. வடக்கு மாவட்ட வி.சி.க. நிர்வாகிகளுடன் புதிய மாவட்ட செயலாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • நகர நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வி.சி.க. வடக்கு மாவட்ட செயலாளராக இளைய கவுதமன், தெற்கு மாவட்ட செயலாளராக பாலையா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இளைய கௌதமன் அக்கட்சியின் நிர்வாகிகளை சந்தித்தார். மூத்த உறுப்பினரான மண்டேலா மாதவனை சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

    புதிய மாவட்ட செயலாளருக்கு ஒன்றிய, நகர நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் நகர செயலாளர் ராஜேஷ் கண்ணா, ஒன்றிய செயலாளர் சின்னத்துரை, சுண்ணாம்பிருப்பு ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி, மாவட்ட நிர்வாகி மண்மேல் சந்திரன், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் ரவி, காட்டாம்பூர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். சிங்கம்புணரி, எஸ்.புதூர் பகுதிகளிலும் கட்சி நிர்வாகிகளை இளைய கவுதமன் சந்தித்து வருகிறார்.

    • குடியரசு தலைவருடன் கலாம் குடும்பத்தினர் சந்தித்தனர்.
    • அப்துல்கலாம் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்து குடியரசு தலைவர் நலம் விசாரித்தார்.

     ராமேசுவரம்

    பாண்டிச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வந்தார். அவரை முன்னாள் குடியரசு தலைவர் மறைந்த அப்துல் கலாம் குடும்பத்தினர் சந்தித்தனர். அப்போது கலாம் கலாமின் 92-வது பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்ட கலாமின் நினைவுகள் அழிவதில்லை என்ற புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பை அவரிடம் வழங்கினர்.

    அப்துல்கலாம் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்து குடியரசு தலைவர் நலம் விசாரித்தார். அப்போது கலாமின் அண்ணன் மகள் நஜீமா மரைக்காயர், அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளையின் தலைவரும், கலாமின் அண்ணன் மகன் ஜெயினுலாப்தீன், பேரன்கள் ஷேக் தாவூத், ஷேக் சலீம், ஆங்கில மொழி பெயர்ப்பாளர்கள் ஸ்ரீமதி, ஸ்ரீபிரியா சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டு அறிந்த எம்.எல்.ஏ இளங்கோ
    • பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களை பெற்றுக்கொண்டார்

    கரூர்,

    கரூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் விண்ணப்பம் வழங்கும் நியாயவிலைக்கடையில் நடைபெற்ற திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் வையாபுரிநகர் கிளை வங்கி சேமிப்பு கணக்கு சிறப்பு முகாமில் குப்புச்சிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் விற்பனையாளர் கௌசல்யா என்பவர் அதிக அளவிலான புதிய சேமிப்பு கணக்கு துவங்கியதைத் தொடர்ந்து பதிவாளர் அவர்களின் அறிவுரைப்படி ஒரு விண்ணப்பத்திற்கு ரூ.5 வீதம் 207 விண்ணப்பத்திற்கு ரூ.1035 ஊக்கத்தொகை மண்டல இணைப்பதிவாளர் கந்தராஜா வழங்கினார்.மேலும், இந்த முகாமில் மகளிருக்கு உடனுக்குடன் சேமிப்பு கணக்கு துவக்கிட விண்ணப்பம் அளித்து உடன் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் பெறப்பட்டது.இந்நிகழ்வில் துணைப்பதிவாளர் அபிராமி , வங்கி துணை பொது மேலாளர் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

    • தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் மாவட்ட கருவூல அலுவலருடன் சந்தித்து பேசினர்.
    • ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் சம்மந்தமாக மாவட்ட கருவூல அலுவலரை சந்தித்து பேசினோம்.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள் மாவட்டத்தலைவர் முருகேசன் தலைமையில் மாவட்ட கருவூல தலைமை அலுவலரை சந்தித்து பேசினர்.இந்த சந்திப்பு குறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணை பாளருமான முருகேசன் கூறியதாவது:-

    ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் சம்மந்தமாக மாவட்ட கருவூல அலுவலரை சந்தித்து பேசினோம். மாவட்ட கருவூல அலுவலரிடம் ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய பணப்பலனை தாமதப்படுத்தாமல் விரைவில் வழங்க கிளை கருவூல அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டு கொண்டோம். மேலும் கருவூலத்திற்கு அனுப்பப்படும் பில் களை தாமதப்படுத்தாமல் விரைவாக நடவடிக்கை மேற் கொள்ள கிளை கருவூல அலுவலர்களுக்கு அறிவு றுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டோம். எங்களின் கோரிக் கைளை கேட்டறிந்த மாவட்ட கருவூல அலுவலர் இது சம்மந்த மாக அனைத்து கிளை கருவூல அலுவலர்களுக்கும் சுற்றறிக் கை அனுப்புவதாக உரிதி அளித்தார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்வில் மாவட்டச்செயலாளர் லிங்கதுரை, மாவட்ட பொருளாளர் கனகராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், மாவட்ட சட்ட ஆலோசகர் நவீன் அ.மாரி, செய்தி தொடர்பாளர் காளிதாஸ், தலைமை நிலைய செயலாளர் வழிவிட்ட அய்யனார், துணைத்தலைவர்கள் பூமிநாதன், ராஜ்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் காளிதாஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் கார்த்திக், கடலாடி வட்டாரத் தலைவர் அருட் செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஆம்புலன்ஸ்-சரக்கு வாகனம் மோதியதில் போக்குவரத்து கடும் பாதிப்பு
    • காரை பெண் ஒருவர் ஓட்டி வந்தார்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் பறக்கை சந்திப்பு சாலையில் கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த காரை பெண் ஒருவர் ஓட்டி வந்தார். அந்த கார் திடீரென அவரது கட்டுப்பாட்டை இழந்து திடீரென ரோட்டில் தாறுமாறாக ஓடியது.

    அது ரோட்டோரம் நிறுத் தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது கார் மோதியது. இதில் அந்த பகுதியில் நிறுத்தப்பட்ட நான்கு மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தது. கார் தாறுமாறாக ஓடி ரோட்டோரம் நின்ற மோட்டார்சைக்கிள்கள் மீது மோதியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

    நாகர்கோவிலில் இருந்து மதுரைக்கு தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. ஒழுகினசேரி பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த சரக்கு வாகனம் மீது மோதியது. இதில் சரக்கு வாகனத்தின் டயரும் ஆம்புலன்சின் டயரும் பலத்த சத்தத்துடன் வெடித்தது. விபத்தில் சிக்கிய இருவாகனங்களும் நடுரோட்டில் நின்றது. இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    இது பற்றி தகவல் அறிந்ததும் போக்கு வரத்து இன்ஸ்பெக்டர் அருண் தலை மையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள். அதன் பிறகு போக்குவரத்து சீரானது.

    • புதிய நிர்வாகிகள், ஊட்டி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் முபாரக்கை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
    • ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட திமுக., இளைஞர் அணி புதிய அமைப்பாளர், துணை அமைப்பாளர்களை மாநில இளைஞர் அணி செயலா ளரும், தமிழக விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அறிவித்து உள்ளார். அதன்படி மாவட்ட அமைப்பாளராக இமயம் சசிகுமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.

    துணை அமைப்பாளர்களாக பாபு,நௌபுல், நாகராஜ், முரளிதரன், பத்மநாபன், வினோத்குமார் ஆகியோர் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

    இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்ட தி.மு.க இளைஞரணி புதிய நிர்வாகிகள், ஊட்டி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் முபாரக்கை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் காசிலிங்கம், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் பொன்தோஸ், ஊட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவன், பந்தலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தராஜா, பந்தலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சுஜேஷ், நெல்லியாளம் நகர செயலாளர் சேகரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், பில்லன், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

    • விருதுநகரில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • 2003-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் செய்திருந்தனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிச் செயலர் என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமையில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது. இதில் பள்ளி செயலரின் வகுப்புத் தோழர் சந்திரசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னாள் மாணவி லட்சுமி வரவேற்றார். தலைமை ஆசிரியர் ரமேஷ் உள்ளிட்ட, ஓய்வு பெற்ற முன்னாள் ஆசிரியர்களும், இந்நாள் ஆசிரியர்களும் பங்கேற்று பேசினர்.

    முன்னாள் மாணவர்களும் அவர்களுடைய குடும்பத்தினருடன் வருகை புரிந்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். கலைநிகழ்ச்சிகளும், விளையாட்டுப் போட்டிகளும் நடந்தன.முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளிக்கு கணிப்பொறி வழங்கப்பட்டது. முன்னாள் மாணவர் மணிகண்டன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை உதவி தலைமை ஆசிரியர் இளையபெருமாள் மற்றும் 2003-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் செய்திருந்தனர்.

    • திருச்சி தனியார் மேல்நிலைப்பள்ளியில் நெகிழ்ச்சி சந்திப்பு
    • இனிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்

    திருச்சி,

    திருச்சி டவுன் ரெயில் நிலையம்அருகே யு.டி.வி. மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. கடந்த 1996-98ம் ஆண்டில் முதல் முதலாக, 11 மற்றும் 12-ம் வகுப்பில் இருபாலர் பயிலும் பள்ளியாக மாற்றப்பட்டது. அப்போது படித்த மாணவ, மாணவிகள் 25 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றாக கூடுகின்ற அபூர்வ நிகழ்வு நடைபெற்றது.இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்களது குடும்பத்தினருடன் விழாவில் பங்கேற்றனர். இவ்விழாவில், தலைமை ஆசிரியர்கள் ராமர், பிச்சை, சேவியர், சந்தானம், தமிழாசிரியர் மு.வைத்தியநாதன், ஆசிரியர்கள் திருஞானசம்பந்தம், ராஜேந்திரன், கிருஷ்ணன், பிரகாசம், அசோக் குமார், சந்திர ரவி, வெங்கடேசன், தமிழ்வாணன் ஆகியோர் கெளரவிக்கப்பட்டனர்.பள்ளி மாணவர்களாக மாறிய பெரியவர்கள், தங்களது வகுப்பு ஆசிரியர்கள் குறித்தும், பள்ளியில் படித்த இனிய அனுபவங்கள் குறித்தும் மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டனர். விழாவின் ஆரம்பம், ஆசிரியர்களை போற்றுவதாகவும், அவர்களது அறிவுரைகளை ஏற்பதாகவும் அமைந்திருந்தது. அதனைத்தொடர்ந்:து முன்னாள் மாணவர்கள் தங்களது பள்ளி அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக முன்னாள் மாணவ, மாணவிகள், அவர்களின் குழந்தைகளின் உற்சாக நடன நிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை முன்னாள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் சதுருதீன், டோமினிக், கிருஷ்ணமூர்த்தி, சந்திரமோகன், ஜான்சன், சரவண முரளி உள்ளிட்டோர் செய்திருந்தனர். இப்பள்ளி தொடங்கிய நாளில் இருந்து, முன்னாள் மாணவர் சந்திப்பு என்ற நிகழ்வு நடைபெறுவது என்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    • கரூர்அரசு கலைக்கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது
    • 25 ஆண்டுகளுக்கு பின்னர் சந்தித்து கொண்டனர்

    கரூர்,

    கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலையில் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 1999-2002ம் கல்வியாண்டில் வரலாற்று துறையில் பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் முன்னாள் பேராசிரியர்கள் சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது. 25 ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் அனைவரும் ஒன்றாக சந்தித்து உரை யாடியதோடு, பேராசிரியர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி மரியாதை செய்தனர். இந்த நிகழ்வில், கரூர், திருச்சி, கோவை, சென்னை என தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களில் இருந்தும் அரசுத் துறைகளில் தாசில்தார், வழக்கறிஞர் போன்ற பதவிகளில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து சந்தித்த நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மேலும், முன்னாள் மாணவர்கள் அனைவரும் தாங்கள் பயின்ற வகுப்பறையில் அமர்ந்து பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தனர்.

    • நிகழ்ச்சியில் குழந்தைகள் மற்றும் பேர குழந்தைகளுடன் பழைய மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
    • கல்வியை போதித்த ஆசிரியர்களுக்கு சந்தன மாலைகளை சூட்டினர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள பூலாங்குளத்தில் மாதாபட்டணம் எஸ்.எஸ்.வி. மேல்நிலைப்பள்ளியின் 1981-ம் ஆண்டு முதல் 1983-ம் ஆண்டு வரை பயின்ற பள்ளி மாணவர்கள் சுமார் 75 பேர் 40 ஆண்டுகளுக்கு பின்பு சந்திக்கும் நிகழ்ச்சியை நடத்தினர்.

    பூலாங்குளத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த நிகழ்வில் 75 பழைய மாணவர்களும் தங்களின் குழந்தைகள் மற்றும் பேர குழந்தைகளுடன் உற்சாகமாக கலந்து கொண்டு கலந்துரையாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் வண்ணம் அமைந்தது.

    இதில் தங்களுக்கு பள்ளியில் கல்வியை போதித்த குருவாக செயல்பட்ட ஆசிரியர்களுக்கு சந்தன மாலைகளை சூட்டி கவுரவித்து அவர்களுடன் சேர்ந்து குழுபுகைப் படத்தை ஆர்வமுடன் எடுத்துக் கொண்டனர்.

    நிகழ்ச்சியின் முடிவில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் பொழுது தங்களின் பள்ளி படிப்பு காலத்தில் நண்பர்கள் உணவருந்தியதை நினைவு கூறும் வகையில் உணவினை ஒருவருக்கொருவர் பரிமாறிய நிகழ்ச்சி அங்கிருந்தவர்களை ஆச்சரியப் படுத்தியது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாதாபட்டணம் எஸ்.எஸ்.வி. மேல்நிலைப்பள்ளியின் பழைய மாணவர்கள் குழு செய்திருந்தனர்.

    ×