search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைதிகள்"

    மதுரை மத்திய சிறையில் கைதிகளுக்கும் காவலர்களுக்கும் இடையே மோதல் உருவானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #MaduraiCentralPrison
    மதுரை:

    மதுரை மத்திய சிறையில் காவல் துறையினர் தங்களை துன்புறுத்துவதாக கூறி சிறையில் உள்ள கைதிகள் இன்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்கள்  சட்டைகளை அவிழ்த்து சிறையில் கட்டிடத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். காவலர்கள் மீது கைதிகள் கற்களை வீசினர். சிறை அருகே உள்ள சாலைகளில் கற்களை வீசியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #MaduraiCentralPrison
    தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் கூலியில் 50 சதவீதம் உணவு, உடைகளுக்காக பிடித்தம் செய்யப்படுவதற்கு சென்னை ஐகோர்ட் மதுரை கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது. #section481 #TNprison #TNprisonrulesunconstitutional
    மதுரை:

    தமிழகத்திலுள்ள 9 மத்தியச்சிறைகள் மற்றும் கிளைச்சிறைகளில் சுமார் 5 ஆயிரம் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். 

    தொழில் திறனுக்கேற்ப 3 வகையாக கைதிகள் பிரிக்கப்பட்டு சிறையினுள் பல்வேறு விதமான வேலைகள் வழங்கப்படுகிறது. அவர்களின் பணித்திறனுக்கேற்ப 60 ரூபாய், 80 ரூபாய் மற்றும்100 ரூபாய் தினசரி கூலியாக வழங்கப்படுகிறது.

    இந்த கூலி தொகையில் 50 சதவீதம் சிறையில் கைதிகளுக்கான பராமரிப்பிற்காகவும், 20 சதவீதம் குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு வழங்கவும் சிறைத்துறை நிவாரண நிதி என்ற பெயரில் பிடித்தம் செய்யப்படுகிறது.

    தண்டனைக்கு பின்னர் விடுதலையாகும் கைதிக்கு அவர் சிறையில் உழைத்து சம்பாதித்த பணத்தில் வெறும் 30 சதவீதம் மட்டுமே கிடைக்கிறது.

    இப்படி தமிழ்நாடு அரசின் சிறைத்துறை சட்ட விதி எண்: 481-ல் மாற்றம் செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் கே.கே.ராஜன் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

    இவ்வழக்கு இன்று நீதிபதிகள் கே.கே. சசிதரன், ஜி.ஆர். சுவாமிநாதன் ஆகியோரை கொண்ட அமர்வின் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது.

    கைதிகளின் கூலியில் இருந்து மிகப்பெரிய தொகை சிறை நிர்வாகத்தால் பிடித்தம் செய்யப்படுவதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் குறைந்தபட்ச கூலி நிர்ணய சட்டத்துக்கு குறைவான ஊதியம் பெறும் கைதிகளிடம் இருந்து அவர்களின் பராமரிப்புக்காக 50 சதவீதம் தொகையை பிடித்தம் செய்வது அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது, முறையற்றதும் கூட என கண்டம் தெரிவித்தனர்.

    இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், சிறைகளில் கைதிகளின் உணவு, உடைகள் ஆகியவற்றுக்காக நாளொன்றுக்கு 153 ரூபாய் செலவாகிறது என குறிப்பிட்டார்.

    இருப்பினும் 100, 80 மற்றும் 60 ரூபாய் தினக்கூலி வாங்கும் கைதிகளின் ஊதியத்தில் இருந்து 50 சதவீதம் தொகையை பிடித்தம் செய்யும் தமிழ்நாடு அரசின் சிறைத்துறை சட்ட விதி எண்: 481 அரசியலமைப்பு சட்டமீறலாகும். 

    கட்டாய வேலையில் கைதிகளை ஈடுபடுத்துவதற்கு ஒப்பானதாகும். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கும் எதிரானதாகும் என கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ஏற்கத்தகுந்த சில காரணங்களுக்காக அவர்களின் கூலியில் ஒரு சிறிய தொகையை வேண்டுமானால் அரசு பிடித்தம் செய்யலாம் என அறிவுறுத்தினர்.

    அதேவேளையில், குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு வழங்க சிறைத்துறை நிவாரண நிதி என்ற பெயரில் 20 சதவீதம் பிடித்தம் செய்யப்படுவதற்கும் தடை விதிக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். #section481 #TNprison #TNprisonrulesunconstitutional
    இரண்டு கைதிகளை ஜாமீனில் விடுவித்த விவகாரத்தில் எழும்பூர் மாஜிஸ்திரேட்டுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. #ChennaiHighCourt
    வழக்கறிஞர் சுனந்தா என்பவர் கடந்த அக்டோபர் மாதம் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கார் மோதி உயிரிழந்தார். இந்த விபத்து வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இருவரும் ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

    அப்போது இருவருக்கும் கோர்ட் ஜாமீன் வழங்கியது. இதை எதிர்த்து சுனந்தா கணவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை அவசர வழக்காக ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் ஜாமீனுக்கு இடைக்கால தடைவிதித்தது. இதற்கிடையே இருவரும் ஜாமீனில் வெளிவந்தனர்.

    இதனால் சுனந்தா கணவர் உயர்நீதிமன்றத்தின் உத்தரவு பின்பற்றப்படவில்லை என அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ‘‘எழும்பூர் மாஜிஸ்திரேட் மற்றும் சைதாப்பேட்டை கிளைச்சிறை கண்காணிப்பாளர் ஆகியோர் நாளை 2.15 மணிக்கு கோர்ட்டில் ஆஜராக வேண்டும்’’ என்று சம்மன் அனுப்பியுள்ளது.
    தமிழக ஜெயில்களில் உள்ள அனைத்து கைதிகளும் இன்னும் 20 நாளில் இன்சூரன்ஸ் திட்டத்தில் சேர்க்கப்படுகிறார்கள். இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. #TNPrisoners #Insurance
    சென்னை:

    தமிழகத்தில் உள்ள ஜெயில்களில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு இன்சூரன்ஸ் திட்டத்தை செயல்படுத்த சிறைத் துறை நடவடிக்கை எடுத்தது.

    அதன்படி இன்னும் 20 நாளில் தமிழக ஜெயில்களில் உள்ள அனைத்து கைதிகளும் இன்சூரன்ஸ் திட்டத்தில் சேர்க்கப்படுகிறார்கள். இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    13 மத்திய சிறைச்சாலைகளில் உள்ள 3600 தண்டனை கைதிகள், ஆயுள் தண்டனை கைதிகள் மற்றும் 13 ஆண்டுக்கு குறைவாக தண்டனை பெற்ற கைதிகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற உள்ளனர்.

    மத்திய அரசால் 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி சுரக்‌ஷா பிமா யோஜனா மற்றும் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பிமா யோஜனா ஆகிய 2 இன்சூரன்ஸ் திட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது.

    இதுகுறித்து சிறைத்துறை கூடுதல் இயக்குனர் அசு தோஸ் சுக்லா கூறியதாவது:-

    ஜெயில் கைதிகளுக்கு இன்சூரன்ஸ் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மத்திய அரசின் 2 இன்சூரன்ஸ் திட்டத்தில் குறைந்தபட்ச தொகையில் இன்சூரன்ஸ் செய்யப்படுகிறது.


    புழல் மத்திய சிறையில் உள்ள 450 கைதிகள், வேலூர் ஜெயிலில் உள்ள 260 கைதிகள், பாளையங்கோட்டை ஜெயிலில் உள்ள 168 கைதிகள் மற்றும் புழல், திருச்சி சிறையில் உள்ள 32 பெண் கைதிகள் சேர்க்கப்படுகிறார்கள்.

    இப்பணிகளை 2 வாரத்துக்கு முன்பு தொடங்கினோம். தற்போது வரை 50 சதவீத பணிகள் முடிந்துள்ளன. தகுதி வாய்ந்த அனைத்து கைதிகளும் இன்சூரன்ஸ் திட்டத்தில் இன்னும் 2 வார காலத்தில் சேர்க்கப்படுவார்கள்.

    மேலும் இன்சூரன்ஸ் திட்டத்தை சிறைத்துறை ஊழியர்களுக்கும் விரிவுபடுத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.

    கைதிகளுக்கு வழங்கப்படும் இன்சூரன்ஸ் திட்டத்தில் மரணம், விபத்து மற்றும் உறுப்புகள் இழப்பு ஆகியவைகளுக்கு இழப்பீடு வழங்கவும் வழிவகை உள்ளது. அதன்படி விபத்து காப்பீடு திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.330 செலுத்த வேண்டும். கைதி விபத்தில் இறந்தால் அவரது வாரிசுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.

    ஜெயிலில் கைதிகள் செய்யும் வேலைகளுக்கு சம்பளமாக வழங்கப்படும் தொகை அவர்களது கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. அந்த தொகையை வைத்து இன்சூரன்ஸ் பிரீமியம் கட்டப்படுகிறது. #TNPrisoners #Insurance
    வேலூர் ஜெயிலில் கைதிகளுக்கு செல்போன், கஞ்சா சப்ளை செய்த தலைமை சிறைக்காவலர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
    வேலூர்:

    வேலூர் ஜெயிலில் கைதிகள் செல்போன், கஞ்சா பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த கைதி மண்ணில் புதைத்து வைத்திருந்த 3 செல்போன், ஒரு சிம்கார்டு சிக்கியது.

    கடந்த 2 மாதங்களில் 11 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    இது தொடர்பாக பாகாயம் போலீசார் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    இதில் ஜெயிலில் பணியாற்றும் முதன்மை தலைமை சிறைக்காவலர் செல்வின் தேவதாஸ் கைதிகளுக்கு செல்போன், கஞ்சா சப்ளை செய்தது தெரியவந்துள்ளது.

    இதனையடுத்து வேலூர் ஜெயில் சூப்பிரண்டு ஆண்டாள், ஏட்டு செல்வின் தேவதாசை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    புழல் சிறையில் நடத்தப்பட்ட சோதனைக்கு பின்னர் உறவினர்கள் கைதிகளுக்கு கொண்டுவரும் பொருட்களின் விலை பல மடங்காக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. #PuzhalJail
    சென்னை:

    புழல் சிறையில் கைதிகளுக்கு சொகுசு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பரபரப்பு தகவல்கள் வெளியானது. இது தொடர்பான போட்டோ ஆதாரங்களும் வெளியானது.

    இதனை தொடர்ந்து சிறையில் சோதனை நடத்தி தொலைக்காட்சி பெட்டிகள், சமையல் பாத்திரங்கள், அழகு சாதன பொருட்கள், திரைச் சீலைகள், செல்போன்கள் மெத்தைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து சிறை துறையில் நடக்கும் இந்த முறைகேடுகள் தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    சிறையில் கைதிகளை பார்க்க வரும் உறவினர்கள் அவர்களுக்கு கொண்டு வரும் பொருட்களை விதிமுறைகளை மீறி சிறை துறை ஊழியர்களே வாங்கி கொடுத்துள்ளனர்.

    இதற்கு லஞ்சமாக பணம் பெற்று வந்தனர். சிறையில் நடத்தப்பட்ட சோதனைக்கு பின்னர் அது பல மடங்காக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    சோதனைக்கு முன்பு ரூ.250-க்கு விற்கப்பட்ட பீடி கட்டு, சோதனைக்கு பின்பு ரூ.500 ஆகியுள்ளது. ரூ.600-க்கு விற்ற சிகரெட் பெட்டி, சோதனைக்கு பின்பு ரூ.1,200 ஆகவும், 20 கிராம் பாக்கெட் கஞ்சா சோதனைக்கு பின்பு ரூ.10,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



    சோதனைக்கு முன்பு ரூ.350 ஆக இருந்த சிக்கன் பிரியாணி, சோதனைக்கு பின்பு ரூ.700 ஆகவும், மட்டன் குழம்பு சோதனைக்கு முன்பு ரூ.700, சோதனைக்கு பின்பு ரூ.1,500 ஆகவும், மட்டன் சுக்கா சோதனைக்கு முன்பு ரூ.600, சோதனைக்கு பின்பு ரூ.1,200 ஆகவும் உள்ளது.

    சிக்கன் 65 ரூ.1000 ஆகவும், ஆம்லேட் ரூ.100 ஆகவும், அவித்த முட்டை ரூ.40 ஆகவும் உள்ளது.

    சிறைகளில் ஒன்று அல்லது இரண்டு கைதிகள் மட்டுமே தங்கக்கூடிய அறைகளைப் பிடிப்பதற்கு கடும் போட்டி நிலவுகிறது. இந்த அறைகளை ஒதுக்குவதற்கு சிறைத்துறையில் பல்வேறு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. ஆனால் அந்த விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டு இப்போதும் எழுந்துள்ளது.

    புழலில் செல்வாக்குமிக்க ஒரு கைதிக்கு அறை ஒதுக்க ரூ.2 லட்சம் முன் பணம் பெறப்படுவதாகவும், பின்னர் மாதம் தோறும் ரூ.40 ஆயிரம் வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

    இதற் கிடையே புழல் சிறையில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் சுப்பையாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. புழல் சிறையில் உள்ள ஒரு கைதி மதுரை கூலிப்படையிடம் இது தொடர்பாகப் பேசியிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இது தொடர்பாக புழல் கைதிகள் 2 பேர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சுப்பையா உள்ளிட்ட அதிகாரிகள் சிலருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. #PuzhalJail

    பிரேசிலில் சிறை மீது வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியதற்கு பின்னர் சிறைக்குள் புகுந்த கும்பல் போலீஸ்காரரை சுட்டுக்கொன்று 92 கைதிகளை தப்பிக்க வைத்தனர். #BrazilPrison
    சர்வ பாலோ:

    பிரேசில் நாட்டின் வடமேற்கு பகுதியில் ரொமேயூ கான்கேல்வ்ஸ் அப்ரான்டெஸ் நகரில் மிகப்பெரிய சிறைச்சாலை உள்ளது. இங்கு பல தரப்பட்ட குற்றங்கள் புரிந்த கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன. இருந்தும் அவற்றை மீறி ஒரு கும்பல் புகுந்து தாக்குதல் நடத்தியது. பின்னர் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த 92 கைதிகளை தப்பிக்க வைத்தனர்.

    முன்னதாக 20 பேர் கொண்ட கும்பல் 4 வாகனங்களில் வந்து சிறை வாசலில் இறங்கினர். துப்பாக்கி மற்றும் வெடி குண்டுகளை வைத்திருந்தனர். அதன் மூலம் சிறையின் முன்பக்க ‘கேட்’ உடைந்து நொறுங்கியது.

    பின்னர் உள்ளே புகுந்த கும்பலுக்கும் அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசாருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. அதில் காயம் அடைந்த போலீசாரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஒரு போலீஸ்காரர் உயிரிழந்தார்.

    இதற்கிடையே கும்பல் விடுவித்ததால் தப்பி ஓடிய கைதிகளை தேடும் பணியில் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் 41 பேரை போலீசார் கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.

    சர்வதேச அளவில் சிறை கைதிகள் அதிகம் உள்ள நாடுகளில் பிரேசில் 3-வது இடத்தில் உள்ளது. அங்கு 7 லட்சத்து 26 ஆயிரத்து 712 கைதிகள் சிறை கைதிகளாக உள்ளனர். #BrazilPrison
    உத்தரபிரதேசத்தில் உள்ள ஜெயில்களில் கைதிகள் டி.வி. பார்க்க வசதியாக எல்.இ.டி. டி.வி.க்கள் வாங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கு ரூ.3½ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. #UPJails
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலத்தில் மத்திய ஜெயில்கள், மாவட்ட ஜெயில்கள் என மொத்தம் 70 ஜெயில்கள் உள்ளன. இவற்றில் 1 லட்சத்து 2 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

    இவர்களுக்கு பொழுது போக்கு வசதிகள் இல்லாததால் கைதிகள் சோர்வுடன் காணப்பட்டனர். இதனால் ஜெயிலில் பல்வேறு மறுசீரமைப்புகளை செய்ய ஜெயில் துறை முடிவு செய்துள்ளது.

    அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு ஜெயிலிலும் கைதிகள் டி.வி. பார்க்க வசதியாக எல்.இ.டி. டி.வி.க்கள் வாங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. ஜெயிலில் ஒவ்வொரு வார்டிலும் தனித்தனியாக டி.வி. அமைக்கப்படுகிறது.


    இதற்காக மொத்தம் 900 டி.வி. வாங்குகிறார்கள். இதற்கு ரூ.3½ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில வாரங்களில் அனைத்து ஜெயில்களிலும் எல்.இ.டி. டி.வி.க்கள் பொருத்தப்படும் என்று சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. சந்திரபிரகாஷ் தெரிவித்தார்.

    இந்த டி.வி.க்களில் தகவல் தொடர்பான நிகழ்ச்சிகள் மற்றும் பயனுள்ள நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார். உ.பி. ஜெயில்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கைதிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது

    அதே நேரத்தில் ஜெயில் காவலர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. அங்கு 9 ஆயிரம் ஜெயில் காவலர்கள் இருக்க வேண்டும். ஆனால் 4 ஆயிரம் ஜெயில் காவலர்கள் மட்டுமே பணியில் இருக்கிறார்கள். மீதி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.  #UPJails
    மகாராஷ்டிராவில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்கள் போலீஸ் ஸ்டேசனில் இருந்து தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #AccusedEscaped #PoliceCustody
    கோலாப்பூர்:

    மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர் மாவட்டம் ஷாஹூவாடி காவல் சரகத்திற்குட்பட்ட பகுதியில் நடந்த கொள்ளை மற்றும் வீட்டை உடைத்து திருடியது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர். 

    கைது செய்யப்பட்ட 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்களை மே 20-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்படி, 4 பேரையும் காவலில் எடுத்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். 

    இந்நிலையில், இன்று அதிகாலையில் போலீசார் சற்று கண் அயர்ந்த வேளையில், காவல் நிலைய லாக்கப்பில் இருந்து 4 பேரும் தப்பிச் சென்றுவிட்டனர். லாக்கப் கதவின் கிரில் கம்பிகளை வளைத்து அதன் வழியாக வெளியேறி உள்ளனர். இதையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். மாவட்ட எல்லைகள் உடனடியாக மூடப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது. தப்பி ஓடிய கைதிகளை பிடிக்க பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டையும் நடைபெற்று வருகிறது.  #AccusedEscaped #PoliceCustody
    ×