search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்எல்ஏ"

    வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் எப்படி செய்வது என்பது குறித்து சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ தொடர்பாக வாணியம்பாடி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #ADMK
    வாணியம்பாடி:

    தமிழகம் முழுவதும் கடந்த 18-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. காட்பாடியில் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் பதுக்கி வைத்திருந்ததாக ரூ.11.48 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

    இது தொடர்பாக வருமான வரித்துறை அளித்த அறிக்கையின்படி வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் மட்டும் ரத்து செய்யப்பட்டது.

    இந்த நிலையில் வாணியம்பாடி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கோவி.சம்பத்குமார் வேலூர் தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு எப்படி பணம் சப்ளை செய்ய வேண்டும் என்பது தொடர்பாக கூட்டணி கட்சியினருடன் பேசிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியது.

    தேர்தல் ரத்து அறிவிப்புக்கு முன்னர் பண விநியோகம் குறித்து பேசியுள்ளனர்.

    வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டாலும் இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதற்கு முன்னாள் எம்.எல்.ஏ கோவி. சம்பத்குமார் மறுப்பு தெரிவித்திருந்தார். தனது பேச்சை மிமிக்ரி செய்து போட்டுள்ளனர். அ.தி.மு.க. சாதனைக்கு ஓட்டு கிடைக்கும். பணம் கொடுத்து ஓட்டு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என கூறியிருந்தார்.

    இந்த நிலையில் வாணியம்பாடி தாசில்தாரும் தேர்தல் அலுவலருமான முருகன் வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலையத்தில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் குறித்து பேசியதாக முன்னாள் எம்.எல்.ஏ. கோவி.சம்பத்குமார் மீது புகார் கொடுத்தார்.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #ADMK
    காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று விலகிய ஒடிசா எம்.எல்.ஏ. பிரகாஷ் சந்திரா பெஹேரா மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தார். #OdishaMLA #PrakashChandraBehera #MLAjoinsBJP
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஒடிசா உள்ளிட்ட சில மாநில சட்டசபைகளுக்கான தேதி நெருங்கிவரும் நிலையில் உள்கட்சியில் சீட் கிடைக்காத தற்போதைய எம்.பி., எம்.எல்.ஏ.க்களில் சிலர் மாற்றுக்கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.

    அவ்வகையில், ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டக் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வான பிரகாஷ் சந்திரா பெஹேரா நேற்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். டெல்லியில் இன்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார்.



    ’சுமார் 20 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்காக நான் பணியாற்றி வந்துள்ளேன். ஆனால், அக்கட்சியின் மாநில தலைமை எனக்குரிய முக்கியத்துவத்தை தரவில்லை.

    சமீபத்தில் பாகிஸ்தானுக்குள் புகுந்து நமது விமானப்படை நடத்திய தாக்குதலுக்கு பிறகு எனது தொகுதிக்குட்பட்ட இளைஞர்கள் மத்தியில் புதிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. அதேபோல், பிரதமர் மோடியின் தலைமையின் மீது எனக்கும் நம்பிக்கை வந்துள்ளது. அதனால் நான் பாஜகவில் இணைந்து விட்டேன்’ என இன்று செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்த பிரகாஷ் சந்திரா பெஹேரா தெரிவித்தார். #OdishaMLA #PrakashChandraBehera #MLAjoinsBJP
    எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் என்.கே.கர்ணன் தலைமையில் நடைபெற்றது.
    குன்னம்:

    பெரம்பலூர் தொகுதி அ.தி.மு.க. சார்பில் ஆலத்தூர் ஒன்றியம் அடைக்கம்பட்டி எம்.ஜி.ஆர் திடலில் மறைந்த அ.தி.மு.க. நிறுவனரும், தமிழக முதல்வரும்மான எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஆலத்தூர் ஒன்றிய செய லாளர் என்.கே.கர்ணன் தலைமையில் நடைபெற்றது.

    அனைவரையும் வேப்பந் தட்டை ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம் வரவேற்றார். மாவட்ட அவை தலைவர் துரை, மாவட்ட இணைசெயலாளர் ராணி, துணை செயலாளர் லட்சுமி, முன்னாள் தொகுதி செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும் குன்னம் சட்டமன்ற உறுப்பினரும்மான ஆர்.டி.ராமச்சந்திரன், மாவட்ட துணை செயலாளரும் சிதம்பரம் எம்.பி.யும்.மான சந்திரகாசி, பெரம்பலூர் ஒன்றிய கழக செயலாரும் எம்.பி.யும்மான மருதராஜா, பெரம்பலூர் எம்.எல்.ஏ. தமிழ்செல்வன், தலைமை கழக பேச்சாளர்கள் சிவகாசி சின்னதம்பி,திட்டை மணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

    விழாவில் அடைக்கம்பட்டி குருசாமி, ரமேஷ், ராஜ், மாரிமுத்து,மாவட்ட எம்.ஜி.ஆர்மன்ற செயலாளர் ராஜராம், ஜெ.பேரவை செயலாளர் உதயம் ரமேஷ், ராமலிங்கம், முத்தமிழ், ராஜேஸ்வரி, வீரபாண்டியன், முத்துசாமி, லேட்டஸ்ட் செல்வராஜ், மதுபாலன், செட்டிகுளம் தங்கராசு, மார்கண்டன், திருநாவுகரசு, தங்கவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் பெரம்பலூர் நகர செயலாளர் ராஜ பூபதி நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் என்.கே.கர்ணன் செய்திருந்தார். #ADMK
    கூட்டணி ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு செல்ல மாட்டார்கள் என்றும் முன்னாள் முதல்-மந்திரி சித்த ராமையா தெரிவித்துள்ளார். #Congress #Siddaramaiah
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க ஆபரேஷன் தாமரை மூலம் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா தீவிரம் காட்டி வருகிறது. காங்கிரஸ் எம்.எல்.எ.க்கள் 3 பேர் மும்பையிலும், மேலும் சிலர் டெல்லியில் முகாமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதற்கிடையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு செல்வதை தடுக்கவும், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் பெங்களூருவில் உள்ள ஓட்டலில் மந்திரிகளுக்கு விருந்து அளிக்கும் நிகழ்ச்சிக்கு துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் ஏற்பாடு செய்திருந்தார். இந்த விருந்தில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டார்.

    பின்னர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருப்பது பற்றியும், மும்பையில் சிலர் இருப்பது பற்றியும் சித்தராமையாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-



    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு செல்ல மாட்டார்கள். அவ்வாறு வரும் தகவல்கள் உண்மையல்ல. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு செல்ல இருப்பதாக வதந்தி பரவுகிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யாரும் கட்சியை விட்டு செல்ல மாட்டார்கள். கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா சதி செய்கிறது. இதற்காக எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் சேரப்போவதாக பா.ஜனதாவினர் பொய் தகவல்களை கூறி வருகின்றனர்.

    எம்.எல்.ஏ.க்கள் தங்களது தொகுதியில் தான் இருக்க வேண்டுமா?, வேறு எங்கும் செல்லக்கூடாதா?. எம்.எல்.ஏ.க்கள் மும்பை செல்வதில் எந்த தவறும் இல்லை. அவர்களது விருப்பப்படி மும்பை சென்றுள்ளனர். அவர்கள் திரும்பி வருகிறார்கள். இதனை பெரிதுபடுத்த வேண்டாம். கூட்டணி ஆட்சிக்கு எந்த பிரச்சினையும் இல்லை. மாநிலத்தில் கூட்டணி ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு சித்தராமையா கூறினார். #Congress #Siddaramaiah
    ராஜஸ்தான் மாநிலத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 199 எம்.எல்.ஏ.க்களில் 158 பேர் கோடீசுவரர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. #Rajasthan #MultiMillionaire
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் 199 எம்.எல்.ஏ.க்கள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 158 பேர் கோடீசுவரர்கள். இதில் காங்கிரஸ் தலைவர்கள் ப்ரஸ்ராம் மோர்டியா ரூ.172 கோடியும், உதய்லால் அஞ்சனா ரூ.107 கோடியும், சுயேச்சை எம்.எல்.ஏ. ராம்கேஷ் மீனா ரூ.39 கோடியும் உள்ளதாக வருமான வரி கணக்கில் தெரிவித்துள்ளனர். கடந்த சட்டமன்றத்தில் 145 பேர் கோடீசுவரர்களாக இருந்தனர்.

    59 எம்.எல்.ஏ.க்கள் 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையும், 129 எம்.எல்.ஏ.க்கள் பட்டம் மற்றும் முதுநிலை பட்டமும் படித்துள்ளனர். 7 பேர் எழுத, படிக்க மட்டுமே தெரியும் என்று கூறியுள்ளனர். மொத்தம் 23 பெண் எம்.எல். ஏ.க்கள் உள்ளனர். 46 எம்.எல்.ஏ.க்கள் மீது குற்றவழக்குகள் உள்ளன. இவர்களில் 28 பேர் மீது தீவிரமான குற்றவழக்குகள் உள்ளன. பர்சாடிலால் என்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது கொலை வழக்கு உள்ளது. #Rajasthan #MultiMillionaire
    தெலுங்கானா சட்டசபைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 119 எம்.எல்.ஏ.க்களில் 73 பேர் குற்ற வழக்குகளை சந்தித்து வருவது தெரிய வந்துள்ளது. #Telangana #MLA #CriminalRecord
    ஐதராபாத்:

    தெலுங்கானா சட்டசபைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 119 எம்.எல்.ஏ.க்களில் 73 பேர் குற்ற வழக்குகளை சந்தித்து வருவது தெரிய வந்துள்ளது. அவர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்த டெல்லியை சேர்ந்த ஜனநாயக சீர்திருத்த சிந்தனை சங்கம் இத்தகவலை தெரிவித்துள்ளது.

    இவர்களில், 47 பேர், கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான குற்றம் போன்ற கடுமையான குற்ற வழக்குகளை சந்தித்து வருகின்றனர். குற்ற வழக்குகளை சந்திப்பவர்களில் அதிகம்பேர் (50 பேர்) தெலுங்கானா ராஷ்டிர சமிதியை சேர்ந்தவர்கள் ஆவர். கடந்த சட்டசபையில் இடம்பெற்ற ஒரு எம்.எல்.ஏ.வின் சராசரி சொத்து மதிப்பு ரூ.7 கோடியே 70 லட்சமாக இருந்தது.

    ஆனால், நடப்பு சட்டசபையில் இடம்பெறும் எம்.எல்.ஏ.வின் சராசரி சொத்து மதிப்பு 2 மடங்காக உயர்ந்து, ரூ.15 கோடியே 71 லட்சமாக உள்ளது. காங்கிரசை சேர்ந்த ராஜ்கோபால் ரெட்டி ரூ.314 கோடி சொத்துகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். #Telangana #MLA #CriminalRecord
    காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மும்பை செல்ல உள்ளதாக வெளியான தகவல் வெறும் வதந்தி என்று சித்தராமையா கூறியுள்ளார். #Siddaramaiah #Congress
    பெங்களூரு :

    கர்நாடக மந்திரிசபையை விரிவாக்கம் செய்யாததால், அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி தலைமையில் மும்பை செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    அந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் கூட்டணி ஆட்சிக்கு சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சித்தராமையாவிடம் பெங்களூருவில் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-

    அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மும்பைக்கு செல்ல உள்ளதாக வெளியான தகவல் வெறும் வதந்தி. எங்கள் கட்சியில் எந்த பிரச்சினையும் இல்லை. அதனால் எதற்காக அவர்கள் மும்பை செல்கிறார்கள்?. மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இதுபற்றி அனைவரும் சேர்ந்து முடிவு எடுப்போம்” என்றார்.

    அதிருப்தியில் உள்ள பி.சி.பட்டீல் எம்.எல்.ஏ. கூறுகையில், “நான் எங்கும் போகவில்லை. செல்ல வேண்டிய அவசியமும் இல்லை. எங்கள் கட்சி தலைவர்கள் பிரச்சினையை தீா்ப்பார்கள்” என்றார். #Siddaramaiah #Congress
    இந்தியாவின் பணக்கார கட்டிட காண்டிராக்டர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் பாஜக எம்எல்ஏ முதல் இடத்தில் உள்ளார். #BJP #MangalPrabhatLodha
    மும்பை:

    மராட்டிய மாநிலம் மலபார்ஹில் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. மங்கள் பிரபாத் லோதா.

    கட்டிட காண்டிராக்ட் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் இவர் மிகப்பெரிய கோடிசுவரர் ஆவார்.

    இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான இந்தியாவின் பணக்கார கட்டிட காண்ட்டிராக்டர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    இதன்படி பா.ஜனதா எம்.எல்.ஏ.வான மங்கள் பிரபாத் லோதாவுக்கு ரூ.27,150 கோடி சொத்து இருப்பது தெரிய வந்தது. அவர் இந்திய பணக்கார கட்டுமான நிறுவன அதிபர்களில் முதல் இடத்தில் உள்ளார்.

    கடந்த ஆண்டு அவர் ரூ.18,610 கோடியுடன் 2-வது இடத்தில் இருந்தார். தற்போது ரூ.8540 கோடி சொத்து அதிகரித்து முதல் இடத்துக்கு முன்னேறி இருக்கிறார்.

    எம்பசி பிராபர்ட்டி டெவலப்மென்ட் அதிபர் ரூ.23,160 கோடி சொத்துடன் 2-வது இடத்தில் உள்ளார். அவர் கடந்த ஆண்டு ரூ.16,700 கோடியுடன் 3-வது இடத்தில் இருந்தார். #BJP #MangalPrabhatLodha
    நாடு முழுவதும் 7 எம்பி-க்கள் 199 எம்எல்ஏ-க்கள் பான் கார்டு விவரங்களை வெளியிடவில்லை என்று ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
    புதுடெல்லி

    எம்பி-க்கள் மற்றும் எல்எல்ஏ-க்கள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவில் பான் கார்டு குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும். 542 எம்பி-க்கள் மற்றும் 4086 எம்எல்ஏ-க்கள் ஆகியோர் தங்களது பான் கார்டு தகவலை தெரிவித்திருக்கிறார்களா? என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் அமைப்புகள் ஒரு ஆய்வறிக்கையை தயார் செய்ததது.

    இந்த ஆய்வறிக்கையில் 7 எம்பி-க்கள் 199 எம்எல்ஏ-க்கள் பான் கார்டு தகவலை தெரிவிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. பான் கார்டு விவரங்களை சமர்பிக்காத மக்கள் பிரதிநிதிகளில், அதிகம் பேர் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்களே. காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த 51 எம்எல்ஏ-க்கள் பான் கார்டு விவரங்களை வெளியிடவில்லை. அதேபோல், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த 42 எம்எல்ஏ-க்கள், சிபிஐ(எம்) கட்சியைச் சேர்ந்த 25 எம்எல்ஏ-க்கள் வெளியிடவில்லை.

    மாநில வாரியாக கேரளாவில் 33 எம்எல்ஏ-க்களும், மிசோரத்தில் (28), மத்திய பிரதேசத்தில் (19) எம்எல்ஏ-க்களும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

    ஒடிசாவில் இரண்டு எம்பி-க்களும், தமிழ்நாட்டில் இரண்டு எம்பி-க்களும் அசாம், மிசோரம், லட்சதீவு ஆகியவற்றில் இருந்து தலா ஒரு எம்பி-க்களும் பான்கார்டு விவரங்களை சமர்பிக்கவில்லை. தமிழ்நாட்டில் பான் கார்டு விவரங்களை சமர்பிக்காத இரண்டு எம்பி-க்களுமே அதிமுகவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
    கேரளாவில் வன அதிகாரியை மிரட்டிய கோங்காடு தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்எல்ஏ மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் பாலக்காடு மண்ணார்க்காடு காஞ்சிரப்புழாவில் ஆக்கிரமிப்புக்கு எதிராக வன ரேஞ்சர் நடவடிக்கை எடுத்தார்.

    இதனையடுத்து வன அதிகாரியை கோங்காடு தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ., விஜயதாஸ் வனரேஞ்சருக்கு போன் செய்து உனது காலை உடைப்போன் என்று மிரட்டியுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இந்நிலையில்வன அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் மண்ணார்க்காடு போலீசார் எம்.எல்.ஏ., விஜயதாஸ் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இது குறித்து எம்.எல்.ஏ., விஜயதாஸ் கூறும்போது, வன ஊழியர்கள் பழங்குடி மக்களை வீடு புகுந்து மிட்டியுள்ளனர். அவர்களின் விவசாய நிலங்களில் உள்ள தண்ணணீர் குழாயை உடைத்து பயிர்களை சேதப்படுத்தினர்.

    1987-க்கு முன்பே இங்கு குடியிருந்த மக்களிடம் அதற்கான ஆவணங்களும் உள்ளன. இது குறித்து வன ரேஞ்சருக்கு போனில் அறிவுரை மட்டுமே கூறினேன். மிரட்டவில்லை. மிரட்டியதுபோன்ற குரல் என்னுடையது அல்ல. இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    ஆதாயம் பெறும் பதவி விவகாரத்தில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 27 பேர் தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனுக்களை ஜனாதிபதி தள்ளுபடி செய்தார். இதன்மூலம் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 27 பேரின் பதவி தப்பியிருக்கிறது. #AAP #PresidentKovind #ArvindKejriwal
    புதுடெல்லி:

    டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 27 எம்.எல்.ஏ.க்கள் அங்குள்ள அரசு மருத்துவமனைகளில் இயங்கி வரும் நோயாளிகள் நலக் கமிட்டிகளுக்கு தலைவராக நியமிக்கப்பட்டு இருந்தனர். இவ்வாறு ஆதாயம் பெறும் இரட்டை பதவிகளை வகித்து வரும் அவர்களை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என ஜனாதிபதிக்கு மனுக்கள் அனுப்பப்பட்டன.



    இந்த மனுக்களை அவர் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைத்தார். அவற்றை பரிசீலித்த தேர்தல் கமிஷன், அந்த மனுக்களை விசாரிப்பதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை எனக்கூறி நிராகரித்தது. பின்னர் இது தொடர்பாக ஜனாதிபதிக்கும் தேர்தல் கமிஷன் சில பரிந்துரைகளை வழங்கியது.

    இந்த பரிந்துரைகளின் அடிப்படையில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனுக்களை ஜனாதிபதி தள்ளுபடி செய்தார். இதற்கான உத்தரவில் அவர் சமீபத்தில் கையெழுத்து போட்டார். இதன்மூலம் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 27 பேரின் பதவி தப்பியிருக்கிறது.

    முன்னதாக நாடாளுமன்ற செயலாளர்களாக நியமிக்கப்பட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 20 பேரை தேர்தல் கமிஷன் தகுதிநீக்கம் செய்ததும், அதை ஐகோர்ட்டு ரத்து செய்ததும் குறிப்பிடத்தக்கது. 
    கோவாவில் பாஜக எம்.எல்.ஏ.வின் மகன் ஓட்டிய ஆடம்பர கார் மோதிய விபத்தில் 18 வயது இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #GoaMLASon #CarAccident
    பனாஜி:

    கோவா மாநிலத்தின் ஆளும் பாஜக அரசின் எம்.எல்.ஏ.வான கிலென் டிக்லோவின் மகன் கைல் கிலென் சௌசா டிக்லோ நேற்று இரவு தேசிய நெடுஞ்சாலையில் தனது ஆடம்பர காரில் வேகமாக சென்றுகொண்டு இருந்தபோது சாலையை கடக்க முயன்ற 2 இளம்பெண்கள் மீது வேகமாக மோதினார்.

    இந்த விபத்தில் படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் டைனியாட் வஹித் பிஸ்தி என்ற 18 வயது பெண் சிகிச்சை பலனின்றி பலியானார். சம்ரின் காலித் பிஸ்தி என்ற மற்றொரு பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



    இந்த விபத்தின்போது அப்பகுதியில் இருந்த மக்கள் கார் மீது கற்களை எரிந்து சேதப்படுத்தவும், காரில் தீ வைக்கவும் முயற்சித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் பாஜக எம்.எல்.ஏ.வின் மகன் கைல் கிலென் சௌசா டிக்லோ கைது செய்யப்பட்டார். மேலும், காரில் தீ வைக்க முயன்ற பொதுமக்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில், நேற்று இரவு கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வின் மகன் கைது செய்யப்பட்டு இன்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #GoaMLASon #CarAccident
    ×