search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 113362"

    • கண்காட்சியில் 25 க்கும் மேற்பட்ட அரங்கங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
    • சிறுதானிய ஆண்டை முன்னிட்டு வேளாண் பல்கலைக்கழகத்தில் இந்த சிறுதானிய கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.

    வடவள்ளி,

    கோவை தமிழ்நாடு வேளான்மைப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச சிறுதானிய கருத்தரங்கு மற்றும் எதிர்காலம் சார்ந்த சிறுதானிய உணவுப் பொருட்கள் கண்காட்சி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அண்ணா அரங்கில் நடைபெற்றது.

    கண்காட்சியை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.கண்காட்சியில் 25 க்கும் மேற்பட்ட அரங்கங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் கம்பு, கேழ்வரகு, ராகி, திணை உள்ளிட்ட பயிர் வகைகள், நவதானியங்களில் தயார் செய்யப்பட்ட உணவு வகைகள் இந்த கண்காட்சியில் இடப்பெற்று இருந்தன.

    இந்த கருத்தரங்கில் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விஞ்ஞானிகள் இளம் ஆராய்ச்சியாளர்கள் மாணவர்கள் விவசாயிகள் மற்றும் நிறுவனங்கள் பேங்கேற்க உள்ளன.

    பின்னர் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சிறுதானிய ஆண்டை முன்னிட்டு வேளாண் பல்கலைக்கழகத்தில் இந்த சிறுதானிய கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு அதிக லாபம் தரக்கூடிய சிறுதா னியங்களை கண்டுபி டிக்கும் பணி ஆரம்பமாகி உள்ளது. அதே போல் சிறுதானியங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படும்.

    தமிழகம் முழுவதும் வேளாண்மைத்துறை சார்பில் 10 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சிறுதானியங்கள் பயிர்செய்யப்பட்டுள்ளது. 2.7 மெட்ரிக் டன் என்ற இலக்கை நோக்கி நாங்கள் பயணித்து வருகிறோம்.

    வேளாண்மை பல்கலைக்கழகத்தில் அதிக விளைச்சல் தரக்கூடிய புதிய சிறுதானிய ரகங்கள் உருவாக்கப்பபட உள்ளது.

    சிறுதானிய வளர்ச்சிக்கு தமிழக அரசு 82 கோடி ஒதுக்கியுள்ளது. விவசாயிகளை ஊக்குவிக்க அவர்களது நிலதத்திற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்து அவர்களுக்கு தரமான விதைகளையும் கொடுக்கும். பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்கள் புதிய பயிற்சி மேற்கொள்வதற்காக வெளிநாடுகளுக்கு அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் துபாய், கனடா போன்ற நாடுகளில் மாணவர்கள் அங்குள்ள புதிய முறைகள் அறிந்து பயிலக்கூடிய பயிற்சி மேற்கொள்ள வசதியாக இருக்கும். இந்த திட்டம் தொடங்கப்பட்டு ள்ளது பாராட்டத்தக்கதாகும். இதற்காக இந்தாண்டு 50 கோடி ரூபாய் தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    தென்னை கள் இறக்க விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாக அனைத்து தரப்பினரையும் கலந்தாலோசித்து அரசு முடிவு எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார். விழாவில் தமிழ்நாடு வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் முனைவர் சி.சமயமூர்த்தி, கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, தமிழ்நாடு வேளான்மை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வெ. கீதாலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் கிராந்திகுமார்பாடி, 3 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
    • 11 தாசில்தார் அலுவலகங்களிலும் வருகிற 31-ந்தேதி வரை வருவாய் தீர்வாயம் நடத்தப்பட உள்ளது

    கோவை,

    கோவை மாவட்டத்தில் உள்ள 11 தாசில்தார் அலுவலகங்களிலும் வருகிற 31-ந்தேதி வரை வருவாய் தீர்வாயம் நடத்தப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக ஆனைமலை தாசில்தார் அலுவலகத்தில் நேற்று வருவாய் தீர்வாயம் நடந்தது. மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    இதில் பெத்தநாயக்கனூர், தென்சித்தூர், சோமந்துறை, தென்சங்கம் பாளையம், ஆனைமலை ஒடையகுளம், வேட்டைக்காரன்புதூர், காளியாபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் பங்கேற்றனர். அவர்களிடம் முதியோர் உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, விரைவு பட்டா மாற்றம், விலையில்லா வீட்டுமனைப்பட்டா ஆகியவை தொடர்பாக கோரிக்கை மனுக்களை கலெக்டர் நேரடியாக பெற்றுக்கொண்டார்.

    இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய கலெக்டர் கிராந்திகுமார்பாடி, 3 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) சவுமியாஆனந்த், உதவி இயக்குநர் (நிலஅளவை) கோபாலகிருஷ்ணன், ஆனைமலை தாசில்தார் ரேணுகா தேவி உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். ஆனைமலை தாசில்தார் அலுவலகத்தில் இன்று (24-ந்தேதி) ஆத்துப்பொள்ளாச்சி, மார்ச்சநாயக்கன்பாளையம், அம்பாரம்பாளையம், சிங்காநல்லூர், நாயக்கன்பாளையம், வக்கம்பாளையம், பெரியபோது, ஆகிய ஊராட்சிகளுக்கும், வருகிற 25-ந்தேதி சமத்தூர், பில்சின்னாம்பாளையம், எஸ்.பொன்னாபுரம், தளவாய்பாளையம், பழையூர், தென்குமாரபாளையம், வீரல்பட்டி, நல்லூர், தொண்டாமுத்தூர், கம்பா லப்பட்டி, கரியாஞ் செட்டிபாளையம், கோட்டூர், அங்காலக்குறிச்சி, துறையூர், ஜல்லிப்பட்டி, அர்த்தநாரிபாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கும் வருவாய் தீர்வாயம் நடக்க உள்ளது.

    • கும்பாபிஷேக விழா கடந்த 20-ந் தேதி காலை 4.30 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்கியது.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா கடந்த 20-ந் தேதி காலை 4.30 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்கியது.

    தொடர்ந்து திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, விநாயகர் வேள்வி, கோமாதா வழிபாடு, அடியார்கள் காப்பணிதல், முளைப்பாரியை ஊர்வலம், தீர்த்த குடங்கள், விமான கலசங்கள் ஊர்வலம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து திருவிளக்கு வழிபாடு, நிலத்தவர் வழிபாடு, புற்று மண் எடுத்து வருதல், திருக்குடங்கள் கேள்வி சாலைக்கு புறப்பாடு, முதலாம் கால வேள்வி பூஜைகள், 108 வகையான காய்கனி கிழங்கு உள்ளிட்ட மூலிகை பொருட்கள், மலர் வழிபாடு, திருமுறை இசைத்தல் நடைபெற்றது.

    நாளை காலை 6 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, இரண்டாம் கால வேள்வி, ராகம், தாளம் வாசித்தல், பிரசாதம் வழங்குதல், மூன்றாம் கால வேள்வி பூஜைகள் நடை பெற்றது. நேற்று காலை 8 மணிக்கு திருமஞ்சனம், 9 மணிக்கு விமான கலசம் நிறுவுதல், 10 மணிக்கு நான்காம் கால வேள்வி பூஜைகள், மலர் வழிபாடு, திருமுறை இசைத்தல் மாலை 6 மணிக்கு ஐந்தாம் கால வேள்வி பூஜைகள், இரவு 7 மணிக்கு அம்மனுக்கு என் வகை மருந்து சாற்றுதல் நடைபெற்றது.

    இன்று அதிகாலை 4:30 மணிக்கு ஆறாம் கால வேள்வி பூஜைகள், 6:15 மணிக்கு திருக்குடங்கள் கோவிலை வந்து அடைதல், 6.45 மணிக்கு விமான கலசங்களுக்கும், 7.15 மணிக்கு மூர்த்திகளுக்கும் புனித நீரூற்றி கும்பாபிஷேக விழா வெகு விமர்ைசயாக நடைபெற்றது.

    தொடர்ந்து அம்மனுக்கு அலங்கார பூஜைகள், அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் பெரியநாயக்கன்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு அம்மன் அருள் பெற்றனர். மேலும் ஞாயிற்றுக்கிழமையில் இருந்தே கும்பாபிஷேக நாளான இன்றுவரை அன்னதான நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள், இந்துச மய அறநிலைத்துறை, பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி நிர்வாகம், ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்து இருந்தனர். மேலும் மருத்துவக்குழுவினர், காவல்துறை, தீயணைப்புதுறை என அனைவரும் உரிய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • கிராமப்புற பள்ளி மாணவர்களின் திறமைகளும், வெளிச்சத்திற்கு வருவதோடு, அங்கீகாரம் கிடைக்கிறது.
    • இதில், பள்ளிகளில் நடக்கும் நிகழ்வுகள், உடனடியாக பதிவேற்றப்படும்.

    கோவை,

    கோவை மாவட்ட கல்வித்துறை சார்பில், மாணவர்கள், ஆசிரியர்களின் திறமைகளை பதிவேற்ற, பிரத்யேக சமூக வலைதள பக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

    பள்ளிக்கல்வித்துறை சார்பில், அனைத்து மாவட்டங்களில் இருந்தும், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள், ஆசிரியர்களின் திறமைகள், கலைத் திருவிழாவில் மாணவர்களின் பங்களிப்பு ஆகியவற்றை, 'தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை' என்ற பெயரில், பேஸ் புக், இன்ஸ்டாகிராம், யூ-டியூப் ஆகியவற்றில் பதிவேற்றப்படுகிறது.

    இதனால், கிராமப்புற பள்ளி மாணவர்களின் திறமைகளும், வெளிச்சத்திற்கு வருவதோடு, அங்கீகாரம் கிடைக்கிறது. இதை கோவை மாவட்டத்திலும் மேற்கொள்ளும் வகையில், அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களின் திறமைகளுக்கு, மேடை ஏற்படுத்தி தர, கோவை மாவட்ட கல்வித்துறை சார்பில், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டுவிட்டரில் பிரத்யேக ஐ.டி., உருவாக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சுமதி கூறியதாவது:-

    பள்ளிக்கல்வித்துறை சார்பில், அரசுப்பள்ளி மாணவர்களின் நலனுக்காக, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. கலைதிருவிழா, வினாடி-வினா, சிறார் திரைப்பட போட்டி, வானவில் மன்ற போட்டிகள் நடத்தி, மாநில அளவில் தகுதிபெறுவோர், வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர்.

    இதுபோன்ற திறமையான மாணவர்கள், ஆசிரியர்களை அங்கீகரிக்கவும், அரசுப்பள்ளிகள் மீதான கவனத்தை அதிகரிக்கவும், சமூக வலைதளங்களில் பக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில், பள்ளிகளில் நடக்கும் நிகழ்வுகள், உடனடியாக பதிவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • சாலமன் பாரிஸ் தனியார் ஆஸ்பத்திரி முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு உள்ளே சென்றார்.
    • இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கோவை,

    கோவை கருப்பராயன் கோவில் வசந்தம் நகரை சேர்ந்தவர் சாலமன் பாரிஸ்(27). மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வருகிறார்.

    இவர் சம்பவத்தன்று கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு உள்ளே சென்றார். பின்னர் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்தது. இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கோவை சரவணம்பட்டி விசுவாசபுரத்தை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (56). ஒர்க் ஷாப் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் கோவை-சத்தி ரோட்டில் உள்ள தனியார் வணிக வளாகத்துக்கு சென்றார்.

    ெமாபட்டை வணிக வளாகத்துக்கு வெளியே நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது மொபட் மாயமாகி இருந்தது. இதுகுறி்த்து சரவணம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சிங்காநல்லூரில் 30 ஏக்கர் பரப்பளவில் திறந்தவெளி சிறை இயங்கி வருகிறது.
    • அனைத்து சிறைக்கைதிகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

    கோவை,

    கோவை மத்திய சிறை கட்டுப்பாட்டில் சிங்காநல்லூரில் 30 ஏக்கர் பரப்பளவில் திறந்தவெளி சிறை இயங்கி வருகிறது.

    இங்கு அனுமதிக்கப்படும் சிறைக்கைதிகள் அவர்களின் தண்டனை காலத்தை பயனுள்ள முறையில் கழிக்கவும், அதன்மூலம் வருவாய் ஈட்டவும் விவசாயத் தொழிலை முதன்மையாக கொண்டு வேலை செய்து வருகின்றனர்.

    கால்நடைகள் வளர்ப்பு, கோழி வளர்ப்பு, முயல் வளர்ப்பு மற்றும் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்ெலண்ணெய் போன்ற சமையல் எண்ணெய் உற்பத்தி செய்தல் போன்ற பணிகளும் செய்து வருகின்றனர்.

    காவல்துறை இயக்குனர் மற்றும் சிறைகள், சீர்த்திருத்தப்பணிகள் துறை தலைவர் அம்ரேஷ் பூஜாரி அறிவுரையின் படியும், கோவை சரக சிறைத்துறை துணைத்தலைவர் சண்முகசுந்தரம் வழிகாட்டுதல்படியும், கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா தலைமையில் உலக தேனீ வளர்ப்பு தினத்ைத முன்னிட்டு சிறை கைதிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

    கோவை தேனீ பண்ணை சார்பில் தேனி வளர்ப்பு நிபுணர் ரஞ்சித்பாபு, சிறை கைதிகளுக்கு தேனீ வளர்ப்பு தொடர்பான தொழில்நுட்ப பயிற்சியும், விற்பனை முறைகளையும் சிறைக்கைதிகள் விடுதலைக்கு பிறகு அதனை ஒரு தொழிலாக செய்வதற்கான வழிமுறைகள் குறித்தும் பயிற்சி அளித்தனர்.

    இந்த பயிற்சி வகுப்பில் அனைத்து சிறைக்கைதிகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

    • நேற்று காலை 8 மணி முதல் 10 மணி மஹா கணபதி ஹோமம் நடைபெற்றது.
    • கும்பாபிஷேகத்தை குருந்தமலை கோவில் ஐயர் விவேக் செய்து வைத்தார்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே வனப்பத்திரகாளியம்மன் கோவில் சாலையில் உள்ள ரத்தின விநாயகர் கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா இன்று நடைபெற்றது. இதனையொட்டி நேற்று காலை 8 மணி முதல் 10 மணி மஹா கணபதி ஹோமம் நடைபெற்றது.

    தொடர்ந்து மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன்பின் இன்று காலை 4.30 மணிக்கு முதல் 6 மணி வரை கோவிலில் யாகசாலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் 6.30 மணிக்கு கோவிலை சுற்றி புனித நீர் எடுத்து வரப்பட்டது.

    தொடர்ந்து 6.45 மணியில் இருந்து 7 மணிக்குள் கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ரத்தின விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

    கும்பாபிஷேகத்தை குருந்தமலை கோவில் ஐயர் விவேக் செய்து வைத்தார். கும்பாபிஷேக விழாவில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • சரவணன் போதையில் கதவை பூட்டாமல் அயர்ந்து தூங்கினார்.
    • இது குறித்து சரவணன் ஆழியாறு போலீசில் புகார் செய்தார்.

    கோவை,

    கோவை மாவட்டம் ஆழியாறு அருகே உள்ள துறையூரை சேர்ந்தவர் சரவணன் (வயது30). கூலித்தொழிலாளி.

    சம்பவத்தன்று இவரது மனைவி மற்றும் குழந்தைகள் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று இருந்தனர். வீட்டில் சரவணன் மட்டும் தனியாக இருந்தார்.

    சம்பவத்தன்று இரவு இவர் மது போதையில் வீட்டிற்கு வந்தார். பின்னர் போதையில் கதவை பூட்டாமல் அயர்ந்து தூங்கினார்.

    அப்போது வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 4 பவுன் தங்க நகைகள், ரூ. 14 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளைடித்து தப்பிச் சென்றார்.

    போதை தெளிந்து எழுந்த சரவணன் நகை மற்றும் பணம் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து ஆழியாறு போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டிற்குள் நுழைந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.

    • குறைதீர்ப்பு கூட்டம் வருகிற 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் நடக்க உள்ளது.
    • கலெக்டர் கிராந்திகுமார்பாடி நேரடியாக கலந்து கொள்ள உள்ளார்.

    கோவை,

    கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடப்பு மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் வருகிற 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் நடக்க உள்ளது.

    இதில் கலெக்டர் கிராந்திகுமார்பாடி நேரடியாக கலந்து கொண்டு விவசாயிகளிடம் இருந்து மனுக்களை பெற உள்ளார். எனவே கோவை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், இந்த கூட்டத்தில் நேரடியாக கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு கேட்டு பயன் பெறலாம். குறைதீர்ப்பு கூட்டத்துக்கு வரும் விவசாயிகள், கொரோனா விதிமுறைகளையும் முறையாக பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பாலகிருஷ்ணனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.
    • புகாரின் பேரில் ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    திருப்பூர் மாவட்டம் பெத்தம்பட்டி என்.எம்.காலனியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (35). இவர் தச்சு வேலை செய்து வந்தார். குடும்ப பிரச்சினை காரணமாக பாலகிருஷ்ணன் மனைவியை பிரிந்து, தனது தாயாருடன் வசித்து வந்தார்.

    இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. சம்பவத்தன்று பாலகிருஷ்ணன் பொள்ளாச்சி அம்பாரம்பாளையம் ஆற்றில் குளித்து கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மர்பநபர் ஒருவர் ஓடுவதை கண்டு சஞ்சீவ்குமார் சார்தா அதிர்ச்சி அடைந்தார்.
    • இதுகுறித்து அவர் சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார்.

    கோவை,

    கோவை வேலாண்டிபாளையம் கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் சஞ்சீவ்குமார் சார்தா(55). இவர் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல கடையில் வியாபாரத்தை முடித்து விட்டு வீட்டிற்கு வந்தார்.

    பின்னர் குடும்பத்தினருடன் வீட்டில் உள்ள 1-வது மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அவரது வீட்டின் மொட்டை மாடியில் இருந்து அடையாளம் தெரியாத மர்பநபர் ஒருவர் ஓடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே, வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அலமாரியில் வைக்கப்பட்டிருந்த 6½ கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.42 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்மநபர் திருடி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து அவர் சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.

    • முதுமலை புலிகள் சரணாலயத்தில் பல்லுயிரின பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.
    • மாணவர்களிடம் களிமண்களை கொடுத்த வனத்துறை அதிகாரிகள், வனவிலங்குகளின் உருவத்தை வடிவமைக்கும்படி கூறினர்.

    மேட்டுப்பாளையம்,

    நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் சரணாலயம் உள்ளது. இங்கு உள்ள மசினகுடி, யானைப்பாடி ஆகிய காட்டுப்பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்களில் பலர் வனத்துறையில் வனவராக வேலை பார்த்து வருகின்றனர். இன்னும் சிலர் தெப்பக்காடு யானைகள் புத்துணர்வு முகாமில் பாகன்களாக உள்ளனர்.

    இதுதவிர வனவிலங்கு வேட்டை தடுப்பு, தீ பரவல் தடுப்பு மற்றும் பல்லுயிரின பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு குழுக்களில் பழங்குடியின மக்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

    முதுமலை புலிகள் சரணாலயத்தில் பல்லுயிரின பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி பழங்குடியின மாணவர்களை அடர்வனத்திற்குள் சுற்றுலா அழைத்து செல்ல வனத்துறையினர் திட்டமிட்டனர்.

    அதன்படி மசினகுடி, ஆனைப்பட்டியை சேர்ந்த 40 பழங்குடியின மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, நேற்று அவர்கள் யானை சவாரி மூலம் புலிகள் காப்பகத்தில் உள்ள அடர்வனத்திற்குள் அழைத்து செல்லப்பட்டனர்.

    10 கி.மீ சுற்றளவுக்கு சென்ற மாணவ-மாணவிகள், காட்டுப்பகுதியில் சுற்றித்திரியும் மான்கள், யானை உள்பட பல்வேறு வனவிலங்குகளை நேரடியாக கண்டு களித்து உற்சாகம் அடைந்தனர்.

    இதனை தொடர்ந்து மீண்டும் அவர்கள் சரணாலய அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

    அங்கு அவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. பின்னர், மாணவ-மாணவிகளின் சுவாரசியத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டது.இதன் ஒருபகுதியாக மாணவர்களிடம் களிமண்களை கொடுத்த வனத்துறை அதிகாரிகள், வனவிலங்குகளின் உருவத்தை வடிவமைக்கும்படி கூறினர்.

    அப்போது மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் பாம்பு, பறவைகள் ஆகியவற்றின் உருவங்களை களிமண்ணால் வடிவமைத்து அசத்தினார்கள். மேட்டுப்பாளையம் முதுமலை புலிகள் சரணாலயத்தில் முதல்முறையாக பழங்குடியின மாணவ- மாணவிகள் யானை சவாரி மூலம் காட்டை சுற்றிப்பார்த்த சம்பவம், அந்த பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×