search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 113362"

    • படுகாயம் அடைந்த கவுதமை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையத்தை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் கவுதம் (வயது 21). கல்லூரி மாணவர்.

    சம்பவத்தன்று இவர் தனது நண்பரான விஷ்ணு (21) என்பவரது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றார்.மோட்டார் சைக்கிளை விஷ்ணு அதிவேகமாக ஓட்டிச் சென்றார். மோட்டார் சைக்கிள் கோவை - அவினாசி ரோட்டில் சென்ற போது விஷ்ணு ரோட்டின் நடுவே இருந்த வேகத்தடையை கவனிக்காமல் சென்றார்.

    அப்போது பின்னால் அமர்ந்து இருந்த கவுதம் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே கவுதம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அன்னூர் அருகே உள்ள புகலூரை சேர்ந்தவர் கந்தசாமி (69). டிரைவரான இவர் லாரியை ஓட்டிச் சென்று டிராக்டர் மீது மோதினார்.இதில் படுகாயம் அடைந்த கந்தசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பாலக்காட்டை சேர்ந்தவர் பாபு (40). சம்பவத்தன்று இவர் வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற மொபட் பாபு மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நவீன தொழில்நுட்பத்தை கொண்டு வேளாண்துறை வளர்ச்சி அடைந்து வருகிறது.
    • விவசாயிகளுக்கு தென்னை பற்றிய கையேடு வழங்கப்பட்டு உள்ளது.

    பொள்ளாச்சி,

    தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் வேளாண்உழவர்துறை சார்பில், தென்னை பூச்சி தாக்குதல் கட்டுப்பாடு, உர மேலாண்மை ஆகியவை தொடர்பான கருத்தரங்கு, பொள்ளாச்சி மூலனூர் கிராமத்தில் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி தலைமை தாங்கினார்.

    இதில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்தார். அப்போது தென்னை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தென்னை நோய் வாடலை கட்டுப்படுத்துவது தொடர்பாக விவசாயிகளுக்கு எடுத்து கூறினார்கள். கையேடுகளும் வழங்கப்பட்டன.

    இதனை தொடர்ந்து செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கருத்தரங்கில் பேசியதாவது:-

    நவீன தொழில்நுட்பத்தை கொண்டு வேளாண்துறை வளர்ச்சி அடைந்து வருகிறது. மேலும் இனி வரும் காலங்களில் வேளாண் சார்ந்த தகவல்களுக்கு கியூ ஆர் கோடு அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளது.இதன் வாயிலாக விவசாயிகள் எளிதில் விவசாயம் சார்ந்த தகவல்களை பெறலாம்.

    மேலும் விவசாயிகளுக்கு தென்னை பற்றிய கையேடு வழங்கப்பட்டு உள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் ஏற்படும் தென்னை நோய் தாக்குதல் மற்றும் சத்து குறைபாடு ஆகியவற்றை கட்டுப்படுத்துவது குறித்து தென்னை ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் இணைந்து இந்த கருத்தரங்கை நடத்தியுள்ளனர்.

    "கொங்கு மண்டலத்தில் கூலித்தொழிலாளர் பற்றாக்குறை உள்ளது. போதிய கொள்முதல் விலையும் கிடைக்கவில்லை. எனவே குறுகியகால சாகுபடியில் விலை கட்டுப்படி ஆகாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

    தென்னை சாகுபடியில் விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல தென்னையில் ஏற்படும் பூச்சித்தாக்குதல் மற்றும் வாடல் நோயை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளும் முழுவீச்சில் முடுக்கி விடப்படும்" என்று தெரிவித்து உள்ளார்.

    • இந்த எந்திரத்தில் மொத்தம் 300 பைகள் இருப்பு வைக்க முடியும்.
    • ஒரிரு நாட்களில் இந்த இயந்திரம் பயன்பாட்டுக்கு வர உள்ளது

    கோவை,

    தமிழக அரசின் சார்பில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் தட்டு, டம்ளர், பாலித்தீன் கவர்கள் உள்ளிட்ட 14 வகையான பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பிளாஸ்டிக் பைகளை தவிர்க்கும் வகையில் துணியால் தயாரிக்கப்பட்ட மஞ்சப்பை பயன்படுத்து வதை தமிழக அரசு ஊக்கப்படுத்தி வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில், கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மஞ்சப்பை விநியோகிக்கும் தானியங்கி எந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.

    ஒரிரு நாட்களில் இந்த இயந்திரம் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இது தொடர்பாக, அதிகாரிகள் கூறும் போது, "பொது மக்களிடம் மஞ்சப்பை பயன்பாட்டை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்த எந்திரத்தில் மொத்தம் 300 பைகள் இருப்பு வைக்க முடியும். ஒரு பையின் விலை ரூ.10. எந்திரத்தில் ரூ.10 நாணயம் மற்றும் ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200 நோட்டுகளை செலுத்தி, தேவையான எண்ணிக்கையை குறிப் ிட்டு பையை பெற்றுக் கொள்ளலாம்.

    ஆனால், இதில் மீதி சில்லரையை பெற முடியாது.

    க்யூ ஆர் கோடு வசதியும் உள்ளது. ஜி-பே, பரிவர்த்தனைகள் மூலமும் ஸ்கேன் செய்து தொகையை செலுத்தி பையை பெற்றுக் கொள்ளலாம்" என்றனர்.

    • இந்த ஆண்டு 4 இடங்கள் குறைந்து 13-வது இடத்தை பிடித்துள்ளது.
    • தேர்வு எழுதிய கைதிகளில் ஒருவர்அதிகபட்சமாக 327 மதிப்பெண்கள் பெற்று உள்ளார்

    கோவை,

    தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடந்தது.

    கோவை மாவட்டத்தில் 526 பள்ளிகளை சேர்ந்த 20 ஆயிரத்து 81 மாணவர்கள், 20 ஆயிரத்து 175 மாணவிகள் என மொத்தம் 40 ஆயிரத்து 256 பேர் இந்த தேர்வை எழுதினர்.

    இதன் முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியானது. இதில் கோவை மாவட்டத்தில் தேர்வு எழுதிய 40 ஆயிரத்து 256 மாணவ, மாணவிகளில் 18 ஆயிரத்து 221 மாணவர்கள், 19 ஆயிரத்து 416 மாணவியர் என மொத்தம் 37 ஆயிரத்து 637 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 93.49 ஆகும். இது கடந்த ஆண்டை விட 1.11 சதவீதம் அதிகம்.

    13-வது இடம்

    தேர்வு எழுதிய மாண வர்களில் 90.74 சதவீதம் பேரும், மாணவிகளில் 96.24 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் கடந்த ஆண்டு 9-வது இடம் பிடித்திருந்த நிலையில் இந்த ஆண்டு 4 இடங்கள் குறைந்து 13-வது இடத்தை பிடித்துள்ளது.

    தமிழகத்தில் மொத்தம் 12,638 பள்ளிகளை சேர்ந்தவர்கள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 87.45 சதவீதம். அரசு உதவி பெறும் பள்ளிகள் 92.24 சதவீதமும், தனியார் பள்ளிகள் 97.38 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன. இதைத்தவிர்த்து இரு பாலர் பயின்ற பள்ளிகள் 91.58 சதவீதமும், ஆண்கள் பள்ளிகளில் 83.25 சதவீதமும், பெண்கள் பள்ளிகள் 94.38 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் 3,718 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றள்ளன. இதில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 1,026 ஆகும்.

    கோவை மத்திய சிறையில் 45 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என மொத்தம் 47 பேர் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வை எழுதினார்கள். இதில் தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இது 100 சதவீத தேர்ச்சியாகும். தேர்வு எழுதிய கைதிகளில் ஒருவர்அதிகபட்சமாக 327 மதிப்பெண்கள் பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிறுமி 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்தார்.
    • சாத்தப்பன் சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறினார்.

    கோவை

    கோவை சாந்திமேடு பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். இவருக்கு தாய், தந்தை இல்லை. இதனால் இவர் தனது தாத்தா, பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த சாத்தப்பன் (வயது 31) என்பவர் மிஸ்டு கால் மூலமாக நண்பராக பழகினார். சம்பவத்தன்று சிறுமி வீட்டில் தனியாக இருந்தார்.

    அப்போது அங்கு சென்ற சாத்தப்பன் சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறினார். பின்னர் அவரை கோவைக்கு அழைத்து வந்து திருமணம் செய்து ஒரு ஆண்டுகளாக கணவன் -மனைவியாக வாழ்ந்து வந்தனர். இதன் காரணமாக சிறுமி கர்ப்பமானார். இதனை அறிந்த ஒருவர் துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    • சிறுமிக்கு வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
    • ஆனைமலையை சேர்ந்த வாலிபர் கடத்திச் சென்று திருமணம் செய்தார்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள தொண்டாமுத்தூரை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவருக்கு ஆனைமலையை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த வாலிபர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்றார். பின்னர் அவர் சிறுமியை திருமணம் செய்தார். சிறுமி திடீரென மாயமானதால் அவரை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போதுதான் தங்களது மகளை ஆனைமலையை சேர்ந்த வாலிபர் கடத்திச் சென்று திருமணம் செய்தது தெரிய வந்தது. இது குறித்து அவர்கள் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜமாபந்தி நிகழ்ச்சியில் பட்டா மாறுதல் தொடர்பாக மனு அளிக்கலாம்
    • பேரூரில், கலால் துணை ஆணையர் தலைமையில், 23 முதல் ஜூன் 1-ந் தேதி வரை நடக்கிறது.

    கோவை,

    கோவை மாவட்டத்தில், 23-ந் தேதி ஜமாபந்தி நிகழ்ச்சி தொடங்குகிறது. பட்டா மாறுதல், உட்பிரிவு செய்தல், ரேஷன் கார்டு பெறுவது தொடர்பாக பொதுமக்கள் மனு கொடுக்கலாம்.

    கோவை மாவட்டத்தில், 11தாலுகாக்கள் உள்ளன. இதில் ஆனைமலையில் கலெக்டர் தலைமையிலும், கிணத்துக்கடவில் டி.ஆர். ஓ. தலைமையிலும் 23-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை ஜமாபந்தி நிகழ்ச்சி நடக்கிறது.

    பொள்ளாச்சியில் பொள்ளாச்சி சப்-கலெக்டர் முன்னிலையில் 23 முதல் 31-ந் தேதி வரை, வால்பாறையில் டி.ஆர்.ஓ. முன்னிலையில் 23-ந் தேதி மட்டும், சூலுாரில், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் தலைமையிலும், மதுக்கரையில் கோவை தெற்கு கோட்டாட்சியர் முன்னிலையிலும், 23 முதல் 30 -ந் தேதி வரை ஜமாபந்தி நடைபெற உள்ளது.

    பேரூரில், கலால் துணை ஆணையர் தலைமையில், 23 முதல் ஜூன் 1-ந் தேதி வரை, மேட்டுப்பாளை யத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக் டர் முன்னிலையில், 23 முதல் 30-ந் தேதி வரை, அன்னுாரில் வடக்கு வருவாய் கோட்டாட்சியர் தலைமையில், 23 முதல் 25-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது.கோவை வடக்கு தாலுகாவில், மாவட்ட வழங்கல் அலுவலர் தலை மையில் 23 முதல், 31-ந் தேதி வரை, தெற்கு தாலுகா வில் 23 முதல் 24-ந் தேதி வரையும் ஜமாபந்தி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பட்டா மாறுதல், உட்பிரிவு செய்தல், நில எல்லை அளத்தல், முதி யோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப் பட்டா, ரேஷன் கார்டு பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக, அந்தந்த தாலுகா அலுவல கங்களில் நடைபெறும் ஜமாபந்தியில், காலை 10 மணியளவில் மனு அளிக்கலாம் என, கலெக் டர் கிராந்திகுமார் தெரி வித்துள்ளார்.

    • வாலிபர்கள் 2 பேர் சந்தேகத்திற்கிடமாக சுற்றி கொண்டிருந்தனர்.
    • கைதானவர்களிடம் இருந்து 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    பொள்ளாச்சி மரப்பேட்டை சந்திப்பில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பொள்ளாச்சி கிழக்கு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக 2 பேர் சுற்றி கொண்டிருந்தனர்.

    சந்தேகத்தின் பேரில் 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசா ரித்தனர். விசாரணையில், அவர்கள் ஒடிசாவை சேர்ந்த சித்து பத்தன்(வயது 23), பல்லடம் சுக்கம்பாளை யத்தை சேர்ந்த முகிஜா என்பதும், கஞ்சா விற்பதற்காக அங்கு நின்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அவர்க ளிடம் இருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த னர். தொடர்ந்து அவர்க ளிடம் நடத்திய விசார ணையில், அவர்களது கூட்டாளிகளான ஒடிசா வை சேர்ந்த அமர்நாத்மூன், உத்தரபிரதேசத்தை சேர்ந்த மனு அகமத் ஆகியோர் செஞ்சேரிபுதூரில் கஞ்சா விற்பதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று அங்கு கஞ்சா பதுக்கி விற்ற மனு அகமத், அமர்நாத்மூன் ஆகியோரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்தும் 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    வடக்கிபாளையம் போலீசார் வடக்கிபாளையம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த சருண்(26), முகமது முஸ்த பா(23) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.

    பொள்ளாச்சி பகுதியில் ஒரே நாளில் கஞ்சா விற்றதாக 6 பேர் கைது செய்யப்பட்டு, 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    • கல்லூரியில் நடப்பாண்டில், 1,433 இடங்கள் நிரப்பப்படுகிறது.
    • 6-ந் தேதி முதல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடக்கிறது.

    கோவை,

    தமிழகத் தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்ப டிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பம் ஆன்லைன் மூலம் கடந்த 8-ந் தேதி முதல் நடந்து வருகிறது.

    இந்நிலையில், கோவை அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை படிப்பில் பி.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பிஎஸ்சி கணிதம், இயற்பி யல், தாவரவியல், பிகாம் உள்ளிட்ட 23 படிப்பு கள் வழங்கப்படுகிறது. நடப்பா ண்டில், 1,433 இடங்கள் நிரப்பப்ப டுகிறது. இதற்கு www. tngasa.in என்ற இணை யதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் ரூ.48, பதிவு கட்டணம் ரூ.2ஆகும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்ட ணம் இல்லை. பதிவு கட்டணம் ரூ.2 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.

    இதனை தொடர்ந்து வருகிற 26-ந் தேதி முதல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடக்கிறது. மேலும், தமிழக அளவில் சென்னை மாநில கல்லூரி மற்றும் கோவை அரசு கலைக்கலூரிக்கு அதிக ளவில் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து ள்ளனர்.

    சிறப்பு பாடமான பாதுகாப்பு துறை பாடத்திற்கும் நீலகிரி, கோவை அரசு கலைக்கல்லூரிக்கு அதிக மாணவர்கள் விண்ணப்பி த்துள்ளனர். தவிர, பிகாம், பிகாம் சிஏ. பிஎஸ்சி கணினி அறிவியல் பாடத்திற்கு மாணவர்கள் மத்தியில் அதிகளவில் ஆர்வம் உள்ளது.

    இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் கோவை அரசு கலைக் கல்லூரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஏராளமான மாணவர்கள் குவிந்திருந்தனர். அவர்கள் விண்ணப்பிக்க ஊழியர்கள் உதவி களை செய்தனர்.

    • கர்நாடகாவில் இருந்து 17 பேர் நீலகிரிக்கு சுற்றுலாவிற்கு வந்தனர்.
    • 2-வது கொண்டை ஊசி வளைவு அருகே தனியார் பஸ் மீது வேன் மோதியது.

    மேட்டுப்பாளையம்,

    நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு கர்நாடகா மாநிலம் பெள்ளேரி பகுதியில் இருந்து 17 பேர் தனியார் சுற்றுலா வேன் மூலம் சுற்றுலாவிற்கு வந்தனர். ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி பகுதிகளில் சுற்றி பார்த்து விட்டு மீண்டும் தங்களது ஊருக்கு கோத்தகிரி வழியாக திரும்பிக் கொண்டு இருந்த னர்.

    வாகனத்தை பெள்ளேரி பகுதியை சேர்ந்த விஸ்வா (20) என்பவர் ஓட்டினார். வாகனம் கோத்தகிரி சாலையில் 2-வது கொண்டை ஊசி வளைவு அருகே வந்த போது முன்னால் சென்ற தனியார் பஸ் மீது வேன் மோதியது. இதில் வேன் டிரைவர் விஸ்வா (20), வினோத் (35), உலியம்மா (50), வீரம்மா (30), வீரோவ் (13), ராம்சரன் (14), தேஜீ (11), பஸ்வராஜ் (12), பாப்பா (34), லட்சுமி (30), நாகவேந்திரா (30), நாகராஜ் (40), மனோஜ் (6), கலரம்மா (44), மகானி (12) உள்ளிட்ட 17 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் நவநீதிகி ருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து விபத்தில் படுகாயம் அடை ந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு மேட்டுப்பா ளையம் அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்த னர். மேலும் விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவைகள் மையத்தில் 23 நோய்களை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை வழங்கப்படுகிறது.
    • பொருட்களை உரிய நேரத்தில் வழங்க விற்பனையாளர்களிடம் அறிவுறுத்தினார்.

    கோவை,

    கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவைகள் மையத்தை கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர், அங்கு சிகிச்சை பெற்றுவருபவர்களின் விவரங்கள், அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை விவரங்கள் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார்.

    இந்த மையத்தில் 0 முதல் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஏற்படும் மூளை வளர்ச்சி குறைபாடு, அன்னப்பிளவு மற்றும் உதட்டு பிளவு, கோணக்கால்கள், பிறவிக்கண்புரை, பிறவிக்காது கேளாமை, பிறவி இருதய நோய்கள், மாறுகண், தாலசீமியா, ரத்தசோகை, வைட்டமின் ஏ குறைபாடு, வைட்டமின் டி குறைபாடு உள்பட 23 நோய்களை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை வழங்கப்படுகிறது.

    இங்கு 2022-23 ஆண்டில் 15,000 புறநோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். 4 ஆண்டுகளில் 107 பேருக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 92 பேருக்கு அன்னப்பிளவு மற்றும் உதட்டு பிளவு அறுவைச் சிகிச்சையும், ஆட்டிசம் சிகிச்சை 102 குழந்தைகளுக்கும், 450 பேருக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து ராமநாதபுரம் நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலையின் முத்துராமலிங்கம் வீதி நியாயவிலைக் கடை, பாரதிநகர் 6 வீதி நியாயவிலைக் கடைகளில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

    அங்கு மொத்த குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை, குடும்ப அட்டை தாரர்களுக்கு விநியோகிக்கப்பட்ட விவரம், இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி, பாமாயில், கோதுமை, பருப்பு உள்ளிட்ட பொருட்களின் இருப்பு விவரங்களையும் கேட்டறிந்ததுடன், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவேண்டிய பொருட்களை உரிய நேரத்தில் வழங்க நியாய விலை கடை விற்ப னையாளர்களிடம் அறிவுறுத்தி னார்.

    மேலும், ராமநாதபுரம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவசர சிகிச்சை அறை, மார்பக பரிசோதனை அறை, தடுப்பூசி அறை, ஆய்வகம், பிரசவ வார்டு, ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதுடன் அங்கு கர்ப்பணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்ட விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின்போது உதவி ஆட்சியர்(பயிற்சி) சவுமியா, அரசு மருத்துவ க்கல் லூரி மருத்து வமனை முதல்வர் டாக்டர் நிர்மலா, மாவட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன், துணை இயக்குநர்(சுகாதாரப் பணிகள்) டாக்டர்.அருணா, மருத்துவ அலுவலர் டாக்டர்.பாலகுமார், ஆகியோர் உடனிருந்தனர்.

    • உணவு குடிநீர் தேடி குடியிருப்பு, விளை நிலங்களில் நுழைந்து பொதுமக்களையும் விவசாயிகளையும் அச்சுறுத்தி வருகின்றன.
    • யானைகள் கிராமத்துக்குள் இருந்த மாடுகளை துரத்தியபடி சென்றது.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரத்திற்குட்பட்ட நெல்லிமலை அடிவாரத்தில் குரும்பூர், சமயபுரம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இதனிடையே வனப்பகுதியில் இருந்து காட்டுயானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உணவு குடிநீர் தேடி குடியிருப்பு, விளை நிலங்களில் நுழைந்து பொதுமக்களையும் விவசாயிகளையும் அச்சுறுத்தி வருகின்றன.

    இதில் வனப்பகுதியில் கடந்த சில மாதங்களாக காட்டு யானை பாகுபலியுடன் கூடுதலாக 3 காட்டுயானைகள் நடமாடி வருகின்றன. குறிப்பாக அதிகாலை நேரத்திலும் மாலை நேரத்திலும் சமயபுரம் கிராமத்தில் உள்ள கிராம சாலையை கடந்து செல்கிறது.

    இன்று காலை முதலில் பாகுபாலி யானையும், அந்த யானையை தொடர்ந்து மற்ற 3 யானைகளும் வந்தன. அந்த யானைகள் கிராமத்துக்குள் இருந்த மாடுகளை துரத்தியபடி சென்றது.

    அந்த சமயம் பொதுமக்கள் அச்சம் அடைந்து தங்கள் வீடுகளை பூட்டிக் கொண்டு உள்ளேயே இருந்து கொண்டனர். இப்பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் காட்டு யானை அடிக்கடி ஊருக்குள் வருவது அந்த பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே அந்த யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×