search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 113362"

    • காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    • முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள், மாநகராட்சி ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை மாநகராட்சி 1-வது வார்டு பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையான நகர்புற நலவாழ்வு மையத்தினை (ஆரம்ப சுகாதார நிலையம்) அப்பநாயக்கன்பாளையம் பகுதியில் நிதி ஒதுக்கீடு செய்து, அமைத்து நேற்று காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இதன் தொடர்ச்சியாக வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி நகர்புற நலவாழ்வு மையத்தினை ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி மரக்கன்று நட்டு வைத்து சிறப்பித்தார்.

    நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்பிரமணியன், வட்ட செயலாளர் ராஜசேகரன், பிரபாகரன், மண்டல சுகாதார ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் பவுன்ராஜ், மருத்துவர் அஸ்வின்ராஜ், உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ம.தி.மு.க, காங்கிரஸ், கொ.ம.தே.க உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள், மாநகராட்சி ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.  

    • பேரூராட்சி பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியது.
    • பேரூராட்சி தலைவர் மரகதம் வீரபத்திரன் மரக்கன்றுகளை நட்டார்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

    உலக சுற்றுச்சூழல் தினம் மற்றும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பேரூராட்சி பகுதியில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்பினர் மற்றும் பேரூராட்சி இணைந்து பேரூராட்சி பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியது.

    முதற்கட்டமாக பேரூராட்சி அருகில் உள்ள தனியார் பள்ளியில் பேரூராட்சி தலைவர் மரகதம் வீரபத்திரன் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்.

    இதில் பேரூராட்சி துணைத்தலைவர் சண்முகசுந்தரம் கவுன்சிலர்கள் ஸ்ரீதரன், ராஜேஸ்வரி, சித்ரா, ஜெயலட்சுமி, சாவித்திரி, பேரூராட்சி அலுவலர்கள், தன்னார்வ அமைப்பினர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பேரூராட்சி பகுதிகள் முழுவதும் பேரூராட்சிக்கு சொந்தமான இடங்கள் மற்றும் நகர் பகுதிகள் சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெறும் என செயல் அலுவலர் வீரபாண்டியன் தெரிவித்தார். 

    • வாகனத்தின் மூலம் ஒலிபெருக்கி மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலமாக விழிப்புணர்வு.
    • ஆன்லைன் மோசடி போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    கோவை,

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல், காவலர் செயலி, சைபர் குற்றங்கள், டெலிகிராம் போன்றவற்றால் ஏற்படும் அபாயங்கள், ஆன்லைன் மோசடி போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், பஸ் நிறுத்தங்கள், பள்ளி, கல்லூரி பகுதிகள், வணிக வளாகங்கள் போன்ற பகுதிகளில் மாநகர காவல்துறையின் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இவர்கள் தங்களுக்கு என பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ள வாகனத்தின் மூலம் ஒலிபெருக்கி மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலமாக இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    மாநகர காவல் ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ரோகிணி, ஈஸ்வரன், பிரேமலதா மற்றும் தலைமைக் காவலர் ராஜ்பிரியா ஆகியோர் அடங்கிய குழுவினர் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • செங்காம்பு கருவேப்பிலைக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும்.
    • கருவேப்பிலைக்கு குறைந்த பட்ச விலையாக கிலோவுக்கு ரூ.20 நிர்ணயம் செய்ய வேண்டும்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் மேட்டுப்பாளையம் தாலுகா உள்ளது.

    இதில் தோலம்பாளையம், வெள்ளியங்காடு, காளம்பாளையம், தேக்கம்பட்டி, சிறுமுகை, இலுப்பநத்தம், பெள்ளேபாளையம், ஜடையம்பாளையம், சிக்காரம்பாளையம், பெள்ளாதி பகுதிகளில் கத்திரி, வெண்டை, புடலங்காய், சுரக்காய், முள்ளங்கி, தங்காளி, வெண் பூசணி உள்ளிட்ட பல்வேறு நாட்டு காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகிறது.

    இதுபோக பெள்ளேபாளையம், சிக்காரம்பாளையம், பெள்ளாதி, மருதூர், கிட்டாம்பாளையம், மங்களக்கரைபுதூர், ஜடையம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் வாழை மற்றும் நாட்டுகாய்களுக்கு இணையாக கருவேப்பிலை விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இங்கு விளைவிக்கப்படும் கருவேப்பிலை திருச்சி, கரூர், கோவை, நாமக்கல், ஈரோடு, சென்னை, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.

    இப்பகுதியில் விளையும் செங்காம்பு கருவேப்பிலைக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். மேலும் ஒரு சில விவசாயிகள் கருவேப்பிலையை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேளாண்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

    இதனிடையே தற்போது கருவேப்பிலைக்கு 1 கிலோவிற்கு ரூ.4 மட்டுமே கிடைத்து வருகிறது. இதனால் விவசாயிகள் வெட்டு கூலி கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனிடையே உரிய விலை கிடைக்காததால் பெள்ளோபாளையம், பட்டக்காரனூர், பெள்ளாதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் கருவேப்பிலைக்கு களைக்கொல்லி மருந்துகளை அடித்து வருகின்றனர். இதனால் கருவேப்பிலைகள் செடியிலேயே கருகி உதிர்ந்து வருகின்றனர். இதன் காரணமாக விவசாயிகள் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர்.

    இதுகுறித்து கிட்டாம்பாளையத்தை சேர்ந்த விவசாயி பாலமுருகன் கூறியதாவது:-

    மேட்டுப்பாளையம் தாலுகாவில் நாட்டு காய்கள், வாழைக்கு அடுத்த படியாக கருவேப்பிலையும் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இதில் இப்பகுதியில் விளையும் கருவேப்பிலைக்கு நல்ல மணம் உள்ளதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் இதற்கு நல்ல கிராக்கி உள்ளது.

    இதனிடையே கருவேப்பிலை நடவு செய்து 1 வருடத்தில் அறுவடைக்கு தயாராகும். அதன்பின் 4 மாதத்திற்கு ஒரு முறை அறுவடை செய்யலாம். 1 ஏக்கருக்கு சுமார் 4 முதல் 6 டன் வரை கருவேப்பிலை கிராப் தரும்.

    இதன்படி 1 கிலோவிற்கு குறைந்த பட்சம் ரூ.20 விலை கிடைத்தால் மட்டுமே விவசாயிகள் இதில் குறைந்த பட்ச லாபம் பார்க்க முடியும். ஆனால் தற்போது கிலோவிற்கு ரூ.4 மட்டுமே விலை கிடைத்து வருகிறது.

    இதனால் செயவதறியாமல் விவசாயிகள் சிலர் இதனை காட்டுக்கு உரமாக போட்டு வருகின்றனர். ஒரு சிலர் களைக்கொல்லி மருந்து அடித்து வருகின்றனர்.

    இதனிடையே அரசு கருவேப்பிலைக்கு குறைந்த பட்ச விலையாக கிலோவுக்கு ரூ.20 நிர்ணயம் செய்ய வேண்டும் என கூறினர்.

    • கடையில் இருந்து புகை வருவதாக அந்த வழியாக சென்றவர்கள் தகவல் தெரிவித்தனர்.
    • கடையின் உரிமையாளர் வடக்கிப்பாளையம் போலீசில் புகார் செய்தார்.

    கோவை,

    பொள்ளாச்சி அருகே உள்ள பணிக்கம்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 51). இவர் சூலக்கல் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையை கிணத்துக்கடவு அருகே உள்ள தேவராய புரத்தை சேர்ந்த கிருஷ்ணவேணி (38) என்ற பெண் கவனித்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு கிருஷ்ணவேணி வழக்கம் போல கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றார். கடையில் இருந்து புகை வருவதாக அந்த வழியாக சென்றவர்கள் கிருஷ்ணவேணிக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர் உடனடியாக சென்று கடைக்கு சென்று தீயை அணைத்தார். இதில் கடையில் இருந்த வேட்டி, சேலைகள் எரிந்து இருந்தது. அந்த வழியாக சென்ற வயரும் கருகி இருந்தது. எனவே மின் கசிவு காரணமாக தீ பிடித்து இருக்கலாம் என நினைத்து கிருஷ்ணவேணி வீட்டிற்கு சென்றார்.

    அவர் மறுநாள் காலையில் கடையை திறக்க சென்றார். அப்போது கடையில் இருந்த எண்ணை பாக்கெட்டுகள், சூடன், திரி ஆகியவற்றை சேதப்படுத்தி யாரோ மர்ம நபர் தீ வைத்து விட்டு சென்றது தெரிய வந்தது. மேலும் அவர்கள் கடைக்குள் ஆபாச வார்த்தைகளை எழுதி விட்டும் சென்றிருந்தனர்.

    இது குறித்து கடையில் உரிமையாளர் வடக்கிப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் போலீசார் சந்தேகம்படும்படி சுற்றித்திரிந்த சூலக்கல்லை 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் தான் கடையில் தீ வைத்து ஆபாச வார்த்தைகளை எழுதி இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.

    • ஹேமலதா தனது யூடியூப் சேனலில் ஒருசில வர்த்தக முதலீட்டு விளம்பரங்கள் போட்டார்.
    • ஹேமலதா கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை ஏமாற்றி இருக்கலாம்.

    கோவை,

    கோவையில் முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக கூறி, லட்சக்கணக்கில் பணமோசடி செய்ததாக, மாடர்ன் மம்மி யூடியூப் சேனல் நிர்வாகி ஹேமலதா, கணவர் ரமேஷ், கேமராமேன் அருணாச்சலம் ஆகிய 3 பேரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை விளாங்குறிச்சி அக்கம்மாள் கார்டனை சேர்ந்த ஹேமலதா கடந்த 2000-ம் ஆண்டு மாடர்ன் மம்மி என்ற பெயரில் யூடியூப் சேனலை தொடங்கி உள்ளார். இவர் ஆரம்பத்தில் பதிவிட்ட வீடியோக்கள், நடுத்தர இல்லத்தரசிகளிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இதனால் அவரது சேனலை ஆயிரக்கணக்கானோர் பார்க்கத் தொடங்கினர். மாடர்ன் மம்மி சேனலுக்ககான அளப்பரிய வரவேற்பு, ஒருசில வணிக நிறுவனங்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    எனவே அவர்கள் தங்களின் விற்பனை பொருட்களை பிரபலப்படுத்தும்படி கேட்டு கொண்டனர். அதன்படி ஹேமலதாவும் வீடியோ பதிவிட்டார். ஹேமலதா போட்ட விற்பனை பதிவுகள், வாடிக்கையாளரை மிகவும் கவர்ந்தது.

    ஹேமலதாவின் யூடியூப் சேனலை நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் அதிகம் பார்த்து வருகின்றனர். எனவே அவர்களை மேலும் கவரும் வகையில் யூடியூப் சேனலில் சுய லாபத்துடன் கூடிய வர்த்தக விளம்பரங்களை பதிவு செய்வது என்று முடிவு செய்தார்.

    அப்போதுதான் அவருக்கு ஆன்லைன் மூலம் முதலீட்டு விளம்பரம் செய்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் யோசனை வந்தது. இதன்படி அவர் தனது யூடியூப் சேனலில் ஒருசில வர்த்தக முதலீட்டு விளம்பரங்கள் போட்டார். இது வாடிக்கையாளர்களிடம் ஈர்ப்பை ஏற்படுத்தியது.

    எனவே அவர்கள் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தினர். அப்போது அவர்களுக்கு முதிர்வு தேதியில் ஏற்கெனவே சொன்னபடி ஹேமலதா பணத்தை அனுப்பி வைத்து உள்ளார். இது வாடிக்கையாளர்களிடம் கூடுதல் ஆர்வத்தை தூண்டியது. எனவே சின்ன மண்புழுவை போட்டு பெரிய மீனை பிடிப்பது என்று ஹேமலதா முடிவு செய்தார்.

    இதனை தொடர்ந்து அவர் மாடர்ன் மம்மியில், எங்களிடம் ரூ.1200 முதலீடு செய்தால் 20 நாட்களில் ரூ.1500 வழங்கப்படும் என்று வீடியோ பதிவு செய்தார். ஹேமலதா ஏற்கனவே முந்தைஅறிவுப்புகளுக்கு பேசியபடி பணம் கொடுத்து உள்ளதால், வாடிக்கையாளர்கள் முண்டியடித்து கொண்டு பணம் கட்டினர்.

    இந்த வகையில் ஹேமலதாவுக்கு லட்சக்கணக்கில் பணம் சேர்ந்து உள்ளது. இந்த நிலையில் பணமுதிர்வு காலம் வந்தது. அந்த நேரத்தில் ஹேமலதா செல்போனை சுவிட்ச்ஆப் செய்து தலைமறைவானார். இது வாடிக்கையார்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், இது தொடர்பாக கோவை குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்து உள்ளார்.

    எனவே போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தான் ஹேமலதா முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக கூறி பலரை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் வசூலித்த விவரம் தெரிய வந்து உள்ளது.

    இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், யூடியூபர் ஹேமலதா கிட்டத்தட்ட 595 வீடியோக்களை சேனலில் பதிவிட்டு உள்ளார். இவருக்கு 1.59 லட்சம் பார்வையாளர்கள் உள்ளனர். ஹேமா பதிவிட்ட அனைத்து வீடியோக்களையும் சுமார் ஒரு கோடியே 89 லட்சத்து 21 ஆயிரத்து 371 பேர் பார்த்து உள்ளனர்.

    எனவே ஹேமலதா கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை ஏமாற்றி இருக்கலாம் என்று கருதுகிறோம். எனவே மாடர்ன் மம்மி சேனல் மூலம் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் இதுதொடர்பாக போலீசாரிடம் புகார் தரவேண்டும். அப்போதுதான் பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை திரும்ப பெற்றுத்தர முடியும் என்று வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    மேலும் கைதான யூடியூ பர் ஹேமலதா, அவரது கணவர் உள்பட 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்கான நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகிறார்கள்.

    • வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் ரெயில் இயக்கப்பட்டு வந்தது.
    • இந்த ரெயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி ரெயில் நிலையங்களில் நிற்கும்.

    கோவை,

    கோவையில் இருந்து திருப்பதிக்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் ரெயில் இயக்கப்பட்டு வந்தது.

    இந்த ரெயிலில் கோவை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இந்த ரெயிலில் பயணித்து திருப்பதிக்கு சென்று வந்தனர்.

    இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியிலும் வரவேற்பு கிடைத்தது. ரெயிலை கூடுதல் நாட்களும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை பயணிகளிடம் எழுந்தது.

    இந்த நிலையில் கோவை-திருப்பதி இடை யே செவ்வாய்க்கிழமை மட்டும் இயக்கப்பட்டு வந்த ரெயில், நிரந்தரமாக வாரத்துக்கு 4 நாட்கள் இயக்கப்பட உள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோவை-திருப்பதி இடையே செவ்வாய்க்கிழமை தோறும் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த ரெயிலானது, வாரத்துக்கு 4 நாட்கள் நிரந்தரமாக இயக்கப்பட உள்ளது.

    அதன்படி கோவை-திருப்பதி விரைவு ரெயில் (எண்:22616) செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6.10 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் பிற்பகல் 1.20 மணிக்கு திருப்பதி சென்றடையும்.

    திருப்பதி-கோவை ரெயில் (எண்: 22615) திங்கட்கிழமை, புதன்கிழமை, வியாழக்கிழமை, சனிக்கிழமைகளில் பிற்பகல் 3 மணிக்கு திருப்பதியில் புறப்பட்டு, அதே நாள் இரவு 10.45 மணிக்கு கோவை வந்தடையும்.

    இந்த ரெயிலானது திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஏஜென்சி நடத்தி வந்த ஜஷ்வா மங்கலநிசாந்தா மற்றும் உறவினர்களுக்கு போலி விசாவை தந்துள்ளார்.
    • போலீசார் மோசடி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜஷ்வாவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    இலங்கையை சேர்ந்த பிரேமரத்னா மகன் மங்கலநிசாந்தா (வயது 48). இவர் திருப்பூர் மாவட்டம் தெக்கலூரில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் அவர் கடந்த 2021-ம் ஆண்டு கோவை ஆர்.எஸ்.புரம், வடகோவையில் தனியார் ஏஜென்சி நடத்தி வந்த ஜஷ்வா (வயது34) என்பவரிடம், எனக்கும் உறவினர்களுக்கு விசா ஏற்பாடு செய்து தர வேண்டும் என கேட்டார். இதற்காக அவர் சகல ஆவணங்களையும் சமர்ப்பித்து இருந்தார்.

    அப்போது விசா பெறுவதற்கு ரூ.11 லட்சத்துக்கும் மேல் செலவாகும் என்று ஜஷ்வா கூறினார். எனவே மங்கல நிசாந்தா மற்றும் உறவினர்கள் ஜஷ்வாவின் வங்கி கணக்கில் பல்வேறு தவணைகளாக ரூ. 11 லட்சத்து 71 ஆயிரத்து 466 பணத்தை செலுத்தி உள்ளனர்.

    அதன்பிறகு அவர்களுக்கு போலி விசா தரப்பட்டது. இந்த நிலையில் மங்கலநிசாந்தாவின் உறவினர் அந்த விசா மூலம் இலங்கை சென்றார். அப்போது கொழும்பு விமானநிலைய அதிகாரிகள் சோதனை செய்து பார்த்தனர். இதில் அது போலி விசா என்பது தெரியவந்தது. எனவே அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்து அதிர்ச்சி அடைந்த மங்கலநிசாந்தா, ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் நம்பிக்கை மோசடி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஏஜென்சி உரிமையாளர் ஜஷ்வாவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்
    • சைபர் கிரைம் தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்படும் - போலீஸ் சூப்பிரண்டு பேட்டி

    சூலூர்,

    கோவை மாவட்டத்தில் ஏற்கனவே 4 போலீஸ் நிலையங்கள் உள்ளன. இந்தநிலையில் சூலூர் மற்றும் கோட்டூரில் புதிய மகளிர் போலீஸ் நிலையங்கள் தொடங்கப்பட்டு உள்ளன.

    இந்த 2 புதிய மகளிர் போலீஸ் நிலையங்களை தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.

    சூலூரில் நடந்த மகளிர் போலீஸ் நிலைய திறப்பு விழாவில் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர், டி.ஐ.ஜி. விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டார். போலீஸ்நிலையத்தை டி.எஸ்.பி. ைதயல் நாயகி ரிப்பன் வெட்டி திறந்தார். போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் மற்றும் பிரமுகர்கள் குத்து விளக்கேற்றி வைத்தனர்.

    தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாரா யணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சூலூர் காவல் நிலையத்தில் எண்ணற்ற வழக்குகள் மகளிர் சார்ந்து வருவதால் பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது.

    தற்போது அங்கு செல்ல வேண்டியது இல்லை. சூலூரில் தொடங்கப்பட்டு உள்ள மகளிர் காவல் நிலையத்திலேயே தீர்வு காணலாம்.

    அனைத்து உட்கோட்டத்திலும் விரைவில் மகளிர் காவல் நிலையம் உருவாக்கப்படும். அனைத்து மகளிர் காவல் நிலையங்களிலும் சைபர் தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்படும். மகளிர் எந்த நேரத்திலும் மகளிர் காவல் நிலையங்களை அணுகி சைபர் தொடர்பான குற்றங்களுக்கு புகார் அளிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில், கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தளபதி முருகேசன், கண்ணம்பாளையம் பசுபதி, சூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மன்னவன், வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பரசு, சுல்தான்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோவிந்தராஜ், தி.மு.க. கோவை மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் செல்வகுமார், சூலூர் பேரூராட்சி உறுப்பினர் விஜயகுமார், பாஜக மகளிர் மாவட்ட அணி தலைவர் ரேவதி, பொருளாளர் கார்த்திகேயினி, கண்ணம்பாளையம் பேரூராட்சி உறுப்பினர் பத்மநாபன், மகளிர் அமைப்பு தன்னார்வலர் வெற்றிச்செல்வி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    சூலூர் மகளிர் போலீஸ் நிலையம் கோவில்பாளையம், கருமத்தம்பட்டி, சூலூர், சுல்தான்பேட்டை, செட்டிப்பாளையம் உள்ளிட்ட 6 போலீஸ்நிலையங்களை உள்ளடக்கி இருக்கும். 

    • வாலிபர்கள் குடோனில் இருந்து செம்பு பொருட்களை திருடி விட்டு வெளியே வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
    • அனீஸ் ரகுமான் மற்றும் மன்சூர் ரகுமான் ஆகியோர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    குனியமுத்தூர்,

    கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் அமீர் அப்பாஸ் (வயது42). இவர் கரும்புகடை பாரதி நகரில் பழைய மின்சாதன பொருட்கள் குடோன் நடத்தி வருகிறார். இவரது குடோனில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை கரும்பு கடையை சேர்ந்த அப்பாஸ் (23) என்பவர் வேலை பார்த்தார்.

    இதையடுத்து அவர் வேலையை விட்டு நின்று விட்டார். இந்நிலையில் வழக்கம்போல காலையில் குடோனை திறப்பதற்கு அமீர்அப்பாஸ் சென்றார். பின்னர் குடோனை திறந்து விட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 4 வாலிபர்கள் குடோன் திறந்து இருப்பதை கண்டு உள்ளே புகுந்தனர். பின்னர் உள்ளே இருந்த 5 கிலோ செம்பு பொருட்களை திருடி விட்டு வெளியே வந்தனர். சிறிது நேரத்தில் வெளியே சென்று விட்டு வந்த அமீர்அப்பாஸ், அந்த வாலிபர்கள் குடோனில் இருந்து செம்பு பொருட்களை திருடி விட்டு வெளியே வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் 4 வாலிபர்களையும் மடக்கி பிடித்து கரும்புகடை போலீசில் ஒப்படைத்தனர்.

    பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் ஏற்கனவே இவரது குடோனில் வேலை பார்த்த அப்பாஸ் (23) என்பவர், அவரது நண்பர்களான அனீஸ் ரகுமான் (22), மன்சூர் ரகுமான் (24), தவூபிக் (17) ஆகியோர் உதவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று குடோனில் இருந்த பொருட்களை திருட முயன்றதை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். இதில் அனீஸ் ரகுமான் மற்றும் மன்சூர் ரகுமான் ஆகியோர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெண்ணின் தந்தை தகராறை விலக்கிவிடவே சென்றது தெரியவந்ததால் விசாரணைக்கு போலீசார் விடுவித்தனர்.
    • போலீசார் விக்னேஷை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை,

    கோவை சுந்தராபுரத்தை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 21). கூலித் தொழிலாளி. இவரும் செட்டிப்பாளையத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். நேற்றுமுன்தினம் நள்ளிரவு பிரசாந்த் தனது காதலிக்கு பிறந்த நாள் என்பதால் கேக் வெட்டி வாழ்த்து சொல்வதற்காக தனது நண்பர்களுடன் அவரது வீட்டிற்கு சென்றார்.

    குடிபோதையில் இருந்த அவர்கள் வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றனர். அப்போது பிரசாந்த் தனது காதலியின் பெயரை கூறி வெளியே வருமாறு அழைத்தார்.

    இந்த சத்தம் கேட்டு பெண்ணின் தந்தை மகாதேவன், தாய் மாமா விக்னேஷ் ஆகியோர் வெளியே வந்தனர். அப்போது பிரசாந்த் அவர்களிடம் பிறந்த நாள் கொண்டாட தனது காதலியை வெளியே அனுப்புமாறு கூறி தகராறு செய்தார்.

    இதில் ஆத்திரம் அடைந்த விக்னேஷ் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து பிரசாந்தை வெட்டினார். இதில் அவர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.

    இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் விக்னேஷ், பிரசாந்தை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் விக்னேஷை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த சம்பவத்தில் இளம்பெண்ணின் தந்தை மகாதேவன், பிரசாந்தை கட்டையால் தாக்கியதாக அவருடன் சென்ற நண்பர்கள் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் மகாதேவனையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் தகராறை விலக்கிவிடவே சென்றது தெரியவந்தது. இதையடுத்து மகாதேவனை விசாரணைக்கு பின்னர் போலீசார் விடுவித்தனர்.

    • பஸ் கண்டக்டர் அபுபக்கர் சித்திக் தூங்குகிறார் என நினைத்து அவரை எழுப்பினார்.
    • போலீசார் பெரியசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்

    கோவை,

    மதுரை அருகே உள்ள ஏழுமலையை சேர்ந்தவர் பெரியசாமி என்ற முருகன் (வயது 50). இவர் கேரள மாநிலம் திருச்சூரில் சலவைத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது குடும்பத்தினர் சொந்த ஊரில் வசித்து வருகின்றனர்.

    பெரியசாமி சொந்த ஊருக்கு செல்வதற்காக புறப்பட்டார். இதற்காக அவர் திருச்சூரில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த கேரள மாநில அரசு பஸ்சில் ஏறினார். பஸ்சில் பயணம் செய்த போது பெரியசாமி மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

    பஸ் பொள்ளாச்சி பஸ் நிலையம் வந்ததும் பயணிகள் அனைவரும் இறங்கி சென்றனர். ஆனால் பெரி யசாமி மட்டும் இறங்காமல் இருந்தார். இதனை பார்த்த பஸ் கண்டக்டர் அபுபக்கர் சித்திக் தூங்குகிறார் என நினைத்து அவரை எழுப்பினார்.

    ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை. உடனடியாக அவர் இது குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பெரியசாமியை பரிசோதனை செய்தனர். அப்போது அவர் இறந்தது தெரிய வந்தது.

    பின்னர் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×