என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 113362"
- பெண் என்ஜினீயர் பேசுவது போல அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மெசேஜ் அனுப்பி வந்தார்.
- என்ஜினீயர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
கோவை,
கோவை ஆர்.எஸ்.புரம் சி.எம்.சி. காலனியை சேர்ந்தவர் 22 வயது இளம் பெண். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.
இந்தநிலையில் யாரோ மர்மநபர் ஒருவர் பெண் என்ஜினீயரின் புகைப்படத்தை வைத்து போலியாக அவரது பெயரில் இன்ஸ்டாகிரம் பக்கத்தை தொடங்கினார். பின்னர் அந்த பக்கத்தின் மூலம் பெண் என்ஜினீயர் பேசுவது போல அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மெசேஜ் அனுப்பி வந்தார். இதனை பார்த்த இளம்பெண்ணின் நண்பர்கள் இது குறித்து அவருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெண் என்ஜினீயர் இது குறித்து உடனடியாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண் என்ஜினீயர் பெயரில் அவரது புகைப்படத்தை வைத்து போலியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கி மெசேஜ் அனுப்பி வந்த மர்மநபரை தேடி வருகிறார்கள்.
- குடிபோதையில் ஒருவரை ஒருவர் மாறி, மாறி தாக்கி கொண்டனர்.
- குமார் போத்தனூர் போலீசில் புகார் செய்தார்.
குனியமுத்தூர்,
கோவை போத்தனூர் அருகே உள்ள அண்ணாபுரத்தை சேர்ந்தவர் குமார் (வயது 34). இவர் தனியார் இன்சூரன்சு நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது நண்பர்களான பாலாஜி, நிசாந்த், செல்வராஜ் ஆகியோருடன் அந்த பகுதியில் உள்ள ரெஸ்டாரண்டுக்கு சென்றார்.
அங்கு வைத்து 4 பேரும் மது குடித்தனர். பின்னர் குமார் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். மோட்டார் சைக்கிள் மெட்டூர் கார்மல் நகர் அருகே சென்ற போது அங்கு நின்று கொண்டு இருந்த 3 பேர் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் குமாரை மிரட்டி தகராறு செய்தனர். இது குறித்து அவர் தனது நண்பர்கள் 3 பேருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அவர்கள் ஒரு காரில் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது குடிபோதையில் ஒருவரை ஒருவர் மாறி, மாறி தாக்கி கொண்டனர். தாக்குதலில் செல்வராஜ் என்பவருக்கு கையில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அவரது நண்பர்கள் உடனடியாக அவரை மீட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுகுறித்து குமார் போத்தனூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் குடிபோதையில் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட போத்தனூர் அன்பு நகரை சேர்ந்த அந்ேதாணி ராஜசேகர், தூத்துக்குடியை சேர்ந்த விஜய் (26), புதுக்கோட்டையை சேர்ந்த அந்ேதாணி ஜோசப் (23) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- அடுத்தடுத்த நாட்களில் நடந்த சம்பவத்தால் தோட்ட தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர்.
- 4 இடங்களில் சிறுத்தையை கண்காணிக்க கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
வால்பாறை,
வால்பாறை அடுத்து சிறுகுன்றா எஸ்டேட் பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் சில தினங்களுக்கு முன்பு தேயிலை தோட்ட பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில பெண்ணை சிறுத்தை தாக்கியது.
இதை தொடர்ந்து அதே பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில வாலிபரையும் சிறுத்தை தாக்கியது. அடுத்தடுத்த நாட்களில் நடைபெற்ற சம்பவங்களால் தோட்ட தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர்.
தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என வடமாநில தொழிலாளர்கள் எஸ்டேட் நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் வால்பாறை வனச்சரக அலுவலர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில் 4 இடங்களில் சிறுத்தையை கண்காணிக்க கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து வனத்துறையினர் அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கண்காணிப்பு காமிராவையும் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
- 25 மீட்டர் கம்பியுடன் கூடிய மோட்டார் பம்ப் வைத்திருந்தார்.
- 3 வாலிபர்கள் மோட்டார் பம்பை திருடி கொண்டு ஓடினர்.
கோவை,
கோவை அன்னூர் அருகே திப்புநாயக்கன்பாளையத்ததை சேர்ந்தவர் மூர்த்தி(47). விவசாயி. இவர் தனது தோட்டத்து அறையில் பழுது பார்பதற்காக 25 மீட்டர் கம்பியுடன் கூடிய மோட்டார் பம்ப் வைத்திருந்தார். சம்பவத்தன்று மூர்த்தி தோட்டத்திற்கு சென்றார். அப்போது அங்கு 3 வாலிபர்கள் மோட்டார் பம்பை திருடி கொண்டு ஓடுவதை பார்த்த அவர் சத்தம் போட்டார்.
சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உதவியுடன் 3 வாலிபர்களையும் விரட்டி பிடித்து அன்னூர் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், அவர்கள் அன்னூர் வடக்கலூரை சேர்ந்த அருள்பிரகாஷ்(33), ஜீவானந்தம் (33), சின்னதுரை(34) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ெரயில் புறப்பட தயாராக இருந்தது.
- 58 வயது மதிக்கத்தக்க அந்த நபர் யார்? என விசாரணை நடந்து வருகிறது.
கோவை,
கோவை ரெயில் நிலையத்தில் கடந்த 18-ந் தேதி 5-வது பிளாட்பாரத்தில் இருந்து கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட தயாராக இருந்தது. அப்போது அங்கு சென்ற ஒருவர் ரெயில்வே தண்டவாளத்தில் தலை வைத்து ரெயில் முன்பு படுத்துக்கொண்டார். பின்னர் ரெயில் புறப்பட்டபோது ரெயிலில் சிக்கி அவர் ரத்த வெள்ளத்தில் பலியானார். தகவல் அறிந்து வந்த ரெயில்வே போலீசார் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 58 வயது மதிக்கத்தக்க அந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சட்ட மசோதா நகல்களை எரித்தனர்.
- பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
கோவை,
தமிழகத்தில் 12 மணி நேர வேலை சட்ட மசோதாவிற்கு மாநிலம் முழுவதும் பல்வேறு அமைப்பினர், கட்சியினர், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாவட்ட செயலாளர் அர்ஜுன் தலைமையில் சட்டத்தை கண்டித்து போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென அந்த சட்ட மசோதா நகல்களை எரித்தும். தமிழக அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பியும் கண்டனத்தை பதிவு செய்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் நகல் எரிப்பை தடுக்க முற்பட்டதால் அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இதனால் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
- தினசரி பாதிப்பு எண்ணிக்கை 70-ஐ கடந்துள்ளது.
- மாவட்டத்தில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 400-ஐ கடந்துள்ளது.
கோவை,
கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கிராம செவிலியர்கள் மூலம் 12 ஆயிரம் கர்ப்பிணி பெண்கள் கண்காணிக்க ப்பட்டு வருவதாக சுகாதா ரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த ஒருமாத காலமாக தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 70-ஐ கடந்துள்ளது.
மாவட்டத்தில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 400-ஐ கடந்துள்ளது. கொரோ னா தொற்று கர்ப்பிணிகள், இணை நோய் பாதிப்புள்ள வர்கள், முதியவர்களை எளிதில் பாதிக்கிறது.
இந்நிலையில், கர்ப்பிணி பெண்கள் கிராம செவிலி யர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து ள்ளனர்.இது குறித்து சுகாதா ரத்துறை துணை இயக்குநர் அருணா கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் கிராம சுகாதார செவிலியர்கள் மூலம் தொடர்ந்து கண்காணி க்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தற்போது கூடுதலாக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. லேசான காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகள் இருந்தாலும் உடனடியாக கிராம செவிலியர்களுக்கு தகவல் அளிக்க கர்ப்பிணி களுக்கு அறிவுறுத்தப்ப ட்டுள்ளது.இது போன்ற லேசான அறிகுறிகள் இருக்கும் காப்பிணிகளுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்க ளில் பரிசோ தனைகள் மேற்கொ ண்டு உரிய சிகிச்சை கள் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது. இதுவரை கர்ப்பிணி களுக்கு பெரியளவில் பாதிப்பில்லை. இருப்பினும், எளிதில் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால் மிகவும் கவனமுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சரண்குமார் கூலி தொழிலாளியாக உள்ளார்.
- சரண்குமார் அரிவாளால் பிரேம்குமாரை வெட்டினார்.
கோவை,
கோவை ஏரிபட்டி மரம்புடுங்கி கவுண்டனூரை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது23). டிரைவர். இவரது உறவினர் சரண்குமார்(21). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த சரன்குமார் பிரேம்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டினார்.
வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த சரண்குமார் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பிரேம்குமாரை வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர்.இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து சரண்கு மாரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது
- மழை காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
கோவை,
கோவை மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. இதனால் பகல் நேரங்களில் அனல் காற்று வீசியது.
இதன் காரணமாக மக்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இந்தநிலையில் நேற்று மாலை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான பொள்ளாச்சி, சின்ேகானா, சின்னக்கல்லாறு, வால்பாறை பி.ஏ.பி., மாக்கினாம்பட்டி உள்ளிட்ட இடங்களில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை 1 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
மழை காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
பொள்ளாச்சி தன்னிச்சி யப்பன் கோவில் வீதியில் ஒரு வீடு மழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் இடிந்து விழுந்தது.
அங்கு யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை.
மேலும் அந்த பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக மரப்பேட்டை நடுநிலை ப்பள்ளியில் தங்க வைக்க ப்பட்டனர்.
இதே போல சின்னியம்பாளையம் பகுதியில் மழை காரணமாக கால்வாயில் அடைப்பு ஏற்பட்டது. இதனால் ஆர்.எம். நகர் வீதியில் மழைநீர் குளம் போல் தேங்கியது.
மேலும் மழையின் காரணமாக பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் 1 மணி நேரத்துக்கு மேலாக மின் தடை ஏற்பட்டது.
நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 308.90 மில்லி மீட்டர் மழை பெய்தது. அதிகபட்சமாக மாக்கினாம்பட்டியில் 91 மி.மீட்டர், பொள்ளாச்சியில் 68 மி.மீட்டர், வால்பாறை பி.ஏ.பி.யில் 43 மி.மீ, வால்பாறை தாலுகா 42 மி.மீ., சின்கோனா 23.மி.மீ., சின்னக்கல்லாறு 22 மி.மீ., ஆழியாறு 7.60 மி.மீ., ஆனைமலை தாலுகா 5.30 மி.மீ., கிணத்துக்கடவு 5மி.மீ., சேலையாறு 2 மி.மீட்டர் என மழை பதிவாகி இருந்தது. திடீரென கோவை மழை பெய்து குளிர்வி த்ததால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி யடைந்தனர்.
- ஆனந்தகுமாருக்கு குடிபழக்கம் இருந்து வந்தது.
- மாமியாரிடம் உங்கள் மகளை என்னுடன் சேர்ந்து வாழ அனுப்புமாறு கூறினர்.
கோவை,
கோவை ஆனைமலை அருகே சமத்தூரை சேர்ந்தவர் 33 வயது இளம்பெண். கூலி தொழிலாளி.
இவருடைய இளைய மகளை அதே பகுதியை சேர்ந்த ஆனந்த குமார் (33) என்பவருக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தார்.
இந்த நிலையில் ஆனந்தகுமாருக்கு குடிபழக்கம் இருந்து வந்தது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதில் கோபம் அடைந்த இவரது மனைவி 15 நாட்களுக்கு முன்பு அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
சம்பவத்தன்று ஆனந்த குமார் குடிபோதையில் அவரது மனைவி வீட்டிற்கு சென்றார்.
அங்கு ஆனந்தகு மாரின் மனைவி மற்றும் மாமியார் இருந்தனர். இதையடுத்து ஆனந்தகுமார் மாமியாரிடம் உங்கள் மகளை என்னுடன் சேர்ந்து வாழ அனுப்புங்கள் என கூறினர்.
அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த, ஆனந்தகுமார் அவரை தகாத வார்த்தைகளால் திட்டினார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த பீர் பாட்டிலை எடுத்து அவரது தலையில் தாக்கினார். மேலும் கொலை மிரட்டல் விடுத்து தப்பிவிட்டார்.
இதில் படுகாயம் அடைந்த அவர் வலி தாங்க முடியாமல் கத்தினார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் காயம் அடைந்தவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து அவர் கோட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற ஆனந்த குமாரை தேடி வருகின்றனர்.
- உலகளவில் மிகுதியாக வெங்காய உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
- மலேசியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கோவை,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்பை உருவாக்கியுள்ளது.
உலகளவில் மிகுதியாக வெங்காய உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகியவை சின்ன வெங்காயம் பயிரிடும் முக்கிய மாநிலங்களாகும்.
தமிழ்நாட்டில், திண்டுக்கல், திருப்பூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், தேனி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் சின்ன வெங்காயம் அதிகளவு உற்பத்தி செய்யப்படுகிறது.
சின்ன வெங்காயம் உற்பத்தியில் அதிக பங்கு உள்நாட்டு நுகர்வுக்கே பயன்படுவதால் உள்நாட்டு தேவைக்கு ஏற்ப கர்நாடகா ஆந்திரபிரதேசத்திலிருந்து சின்ன வெங்காயம் தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது.
தமிழ்நாட்டில் இருந்து சின்ன வெங்காயம், மேற்கு ஆசியா, இலங்கை, பங்களதேஷ், மலேசியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்தியாவில், சின்ன வெங்காயத்தின் முக்கிய உற்பத்தியாளராக தமிழ்நாடு உள்ளது. தற்போது திருச்சி மற்றும் திண்டுக்கல் சந்தைக்கு பெரம்பலூர், தாராபுரம், பல்லடம் ஆகிய இடங்களிலிருந்தும் மற்றும் கர்நாடகாவிலிருந்தும் சின்ன வெங்காயம் வரத்து உள்ளது.
விலை முன்னறிவிப்பு திட்டமானது, கடந்த 23 ஆண்டுகளாக திண்டுக்கல் சந்தையில் நிலவிய சின்ன வெங்காயம் விலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.
ஆய்வுகளின் அடிப்படையில், தரமான சின்ன ெவங்காயத்தின் சராசரி பண்ணை விலை அறுவடையின் போது (மே முதல் ஜூன் வரை) கிலோ ரூ.30 முதல் ரூ.32 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் சந்தை அடிப்படையில், விற்பனை முடிவுகளை எடுக்கலாம் என பரிந்துரைக்கப்படுகின்றனர்.
- நேற்று காலை 10 மணிக்கு 2-ம் கால யாக பூஜை நடந்தது.
- மகாராஜன் தலைமையில் மஞ்சுநாதன் குழுவினரின் பட்டிமன்றம் நடக்கிறது.
கோவை,
கோவை சுண்டாக்காமுத்தூர் ராமசெட்டியாளையத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
இதை முன்னிட்டு கடந்த 21-ந் தேதி காலை 8 மணியளவில் பொன்னப்பசெட்டியார் தோட்டத்தில் இருந்து தீர்த்தக்குடங்கள் ஊர்வலம், மாலை 4 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம், விமான கலசங்கள் ஊர்வலம், இரவு 7 மணிக்கு முதலாம் கால யாக பூஜை நடந்தது.
நேற்று காலை 10 மணிக்கு 2-ம் கால யாக பூஜை, மாலை 6 மணியளவில் 3-ம் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து இன்று காலை 7 மணிக்கு 4-ம் கால யாக பூஜை, காலை 8 மணிக்கு திருக்குடங்கள் கோவிலை சுற்றி வலம் வருதல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து காலை 8.15 மணியளவில் கோவிலின் விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இதையடுத்து காலை 8.45 மணிக்கு மூல மூர்த்திகளுக்கு புனிதநீர் ஊற்றி நன்னீராட்டு விழா நடந்தது. கும்பாபிஷேக விழா ராமானந்த குமரகுருபர சுவாமிகள் தலைமையில் நடந்தது.
காலை 10 மணிக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜை, 10.30 மணிக்கு மகா அன்னதானம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து மாலை 6 மணிக்கு ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்ற வழிபாடும், இரவு 8 மணிக்கு வீடும், நாடும் சிறக்க காரணம் ஆண்களின் உழைப்பா? பெண்களின் உழைப்பா? என்ற தலைப்பில் தேவக்கோட்டை மகாராஜன் தலைமையில் மஞ்சுநாதன் குழுவினரின் பட்டிமன்றம் நடக்கிறது. மேலும் 48 நாட்கள் மண்டல பூஜை நடக்கிறது.
விழாவில் மாநகாரட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன், தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி, கவுன்சிலர்கள் தென்றல் முருகேசன், குனிசை செந்தில்குமார், ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை முருகன் தலைமையிலான கோவில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்