search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 113362"

    • மணிகண்டன் என்பவர் எதிர்பாராத விதமாக வேன் மோதி உயிரிழந்தார்.
    • முகமது அஷிப் என்பவர் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழந்தார்.

    கோவை,

    சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 38). இவர் தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது நண்பர் ஜெகநாதனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    பின்னர் உடுமலை- பொள்ளாச்சி சாலையில் இவர்கள் வந்துகொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேன் எதிர்பாராத விதமாக இவர்கள் மீது மோதியது. இதில் மணிகண்டனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இவரது நண்பர் ஜெகநாதனுக்கு வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக் காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக இறந்தார்.

    மேல் சிகிச்சைக்காக ஜெகநாதனை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கோமங்களம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் முருகன் (28) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல திருப்பூர் காங்கேயம் ரோடு பகுதியை சேர்ந்தவர் முகமது அஷிப் (22). சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் அன்னூரில் இருந்து அவினாசி சாலையில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கில் எதிர்பாராத விதமாக இவர் மீது மோதியது. இதில் அவருக்கு தலை மற்றும் மார்பில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இது குறித்து அன்னூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விமான நிலையத்தில் மருத்துவ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் வெளிநாடுகளில் இருந்த கோவைக்கு வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் மருத்துவ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நேற்று முன்தினம் சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் விமானத்தில் வந்த கணபதியை சேர்ந்த 41 வயது ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து அவருக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். மேலும் தனிமைப்படுத்தி சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தினர். தொடர்ந்து அவரை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    அவரது சளி மாதிரி எடுக்கப்பட்டு புதிய வகை கொரோனா தொற்று உள்ளதா என்பதை கண்டுபிடிப்பதற்காக மரபணு சோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு சிங்கப்பூரில் இருந்த கோவைக்கு வந்த கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    கோவை மாவட்டத்தில் தொற்று அதிமுள்ள பகுதிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 157 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியானது. இதில் நேற்று ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 41 ஆயிரத்து 673 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக வீடுகள், அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் என 100 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்ற 11 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர்.

    • இந்த ஆண்டு 668 கோவில்களுக்கு திருப்பணிகளைத் தொடங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டிருக்கின்றார்.
    • ரூ.17 கோடி செலவிலே திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி தொகுதி எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் சட்டசபையில் பேசியதாவது:-

    கிணத்துக்கடவு பேரூராட்சியில் பொன்மலை வேலாயுதசுவாமி கோவில் திருப்பணி முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உதவியோடு நிதி ஒதுக்கப்பட்டு, சுற்றுச்சுவர் அமைக்கின்ற பணி, கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

    ஆனால், உபயதாரருடைய பணி அனைத்தும் ஓரளவுக்கு முடிந்துவிட்டது. எனவே இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர், பொன்மலை வேலாயுதசுவாமி கோவில் திருப்பணியை மீண்டும் தொடங்கி, கும்பாபிஷேகம் நடத்துவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

    அதேபோல, மாசாணியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் 2010 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ந் நேதி நடைபெற்றது. இப்போது 14 ஆண்டுகளாகிவிட்டன. அந்த மாசாணியம்மன் கோவில் திருப்பணிக்கும் உரிய கும்பாபிஷேகப் பணியை தொடங்கி சிறப்பாக நடத்தி தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இதற்கு பதில் அளித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு பேசியதாவது:-

    வேலாயுதசுவாமி திருக்கோவில் என்பது உபயதாரர்கள் மற்றும் ஆணையர் பொது நல நிதியிலிருந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உபயதாரர்கள் நிதியில் மேற்கொள்ளப்படுகிற பணிகள் 80 சதவீதம் அளவிற்கு நிறைவுற்றிருக்கி றது. அதேபோல, சுற்றுச்சுவர் அமைக்கின்ற பணி தொடங்கப்பட்டு, பணிகள் எவ்வளவு முடிவுறுகிறதோ, அதற்கேற்றாற் போல் ஆணையர் பொதுநல நிதியில் வழங்கப்பட்ட அந்தத்தொகைக்கு ஒப்பந்ததாரர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகின்றது. இன்னும் போர்க்கால அடிப்படையில் விரைவாக நடவடிக்கை எடுத்து, அந்த சுற்றுச்சுவர் பணியை வேகப்படுத்துவோம்.

    ஆகம விதிப்படி 12 ஆண்டுகளில் எந்தெந்த கோவில்களில் எல்லாம் திருப்பணிகள் தொடங்கப்பட வேண்டுமோ, அவற்றையெல்லாம் கணக்கெடுத்து, இந்த ஆண்டு 668 கோவில்களுக்கு திருப்பணிகளைத் தொடங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டிருக்கின்றார். எனவே மாசாணியம்மன் கோவிலுக்கு மண்டலக் குழு, தொல்லியல் குழு, அதேபோல், மாநிலக் குழு ஆகிய மூன்றும் ஒப்புதல் பெறப்பட்டு, ரூ.17 கோடி செலவிலே திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • 2 டூரிஸ்ட் வேன்களில் ஒரே பதிவெண் இருந்ததை ஒருவர் சமூக வலைதளத்தில் பரப்பினார்.
    • போலீசார் 2 வேன்களையும் பறிமுதல் செய்தனர்.

    சூலூர்,

    சூலூர் புதிய பஸ் நிலையம் முன்பு டூரிஸ்ட் வேன் வாகனங்கள் மற்றும் வாடகை வாகனங்கள் நிறுத்தப்படுவது வழக்கம்.

    அவ்வாறு நிறுத்தப்பட்டிருந்த 2 டூரிஸ்ட் வேன்களில் ஒரே பதிவெண் இருந்தது. இதனை அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பரப்பினார். இது சூலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தகவல் அறிந்த சூலூர் போலீசார் புதிய பஸ்நிலையத்துக்கு சென்று சோதனை செய்தனர்.

    பின்னர் ஒரே பதிவெண்ணில் இயங்கிய 2 வேன்களையும் பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த 2 வேன்களும் ஒரே நபருக்கு சொந்தமானது என தெரியவந்தது. டூரிஸ்ட் வாகனங்களை வைத்துக் கொண்டு தொழிற்சாலைகளுக்கு கான்டிராக்ட் முறையில் இயக்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    தொடர் விசாரணையில் அவரிடம் உள்ள வாகனங்களுக்கு ஆர்.சி.புத்தகம் மட்டுமே இருப்பதாகவும், குறிப்பிட்ட வாகனங்களுக்கு இன்சூரன்ஸ், பெர்மிட் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது. தொடர்ந்து சூலூர் மோட்டார் வாகன ஆய்வாளரிடம் பரிந்துரை செய்த சூலூர் போலீசார் மேல்நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் வேறு யாராவது ஒரே பதிவெண்ணில் பல வாகனங்களை இயக்குகிறார்களா என போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

    • மார்ச் 26-ந் தேதி முதல் ஏப்ரல் 12ந் தேதிக்குள் 5 மாநிலங்களில் 21 இடங்களில் ஆய்வு.
    • கோவையில் 250 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

    கோவை,

    கோவை லட்சுமிமில் அருகே உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் தேசிய குழந்தைகள் உரிமை ஆணைய உறுப்பினர் ஆனந்த் ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழ்நாடு மற்றும் ஆந்திரா, கர்நாடகா தெலுங்கானா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் உள்ள கூர்நோக்கு இல்லங்களில் ஆய்வு மேற்கொண்டம். மார்ச் 26-ந் தேதி முதல் ஏப்ரல் 12ந் தேதிக்குள் 5 மாநிலங்களில் 21 இடங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளோம்.

    தமிழ்நாட்டில் ஏற்கனவே ஆய்வு தொடங்கி விட்டது. இன்று கோவையில் உள்ள கூர்நோக்கு இலங்களில் ஆய்வு மேற்கொண்டோம். இந்த ஆய்வின் போது கூர்நோக்கு இல்லங்களில் சிறுவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது தெரியவந்துள்ளது.

    கோவையில் எந்த புகாரும் இல்லை. கோவை மாவட்ட நிர்வாகத்திற்கு நேஷனல் கமிஷன் பாராட்டுக்கள் தெரிவிக்கிறது.

    இதுவரை 14 இடத்தில் ஆய்வு செய்து முடித்துள்ளோம். அடுத்ததாக தஞ்சாவூர், திருச்சி, நெல்லையில் ஆய்வு மேற்கொள்ள உள்ளோம். தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் இந்தியாவில் உள்ள அனைத்து கூர்நோக்கு இல்லங்களையும் ஆப் மூலமாக கண்காணித்து வருகிறோம்.

    கோவையைப் பொறுத்தவரை கூர் நோக்கு இல்லம் சிறப்பாக உள்ளது. கோவை மாவட்ட போலீஸ் துறை ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் என்ற திட்டத்தை உருவாக்கி மாணவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு பல்வேறு வகையில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

    கோவையில் குழந்தை திருமணங்கள் அதிகளவில் நடக்கிறது. இந்த தகவல் வந்ததும் அதிகாரிகள் திருமணங்களை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுவரை கோவையில் 250 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

    கோவை மாவட்டத்தில் குழந்தைகள் தங்கள் குறைகளை தெரிவிக்கும் வகையில் விரைவில் ஒரு தனிக்குழு அமைக்கப்படும். அந்த குழுவினரிடம் குழந்தைகள் தங்கள் குறைகளை தெரிவித்து கொள்ளலாம்.

    நீட் தொடர்பாக ஒரு மாணவி ரெயில் முன் பாய்ந்து பலியானதாக செய்தி வந்தது. ஆணையத்தின் சார்பில் அந்த மாணவிக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சமூக வலைதளத்தில் நீட் குறித்து அவதூறு பரப்புகின்றனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன்.

    தமிழக அரசு தேசிய குழந்தைகள் ஆணையத்திற்கு ஒத்துழைப்பு தருகின்றனர். சில இடங்களில் மதமாற்றம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான புகார்கள் அதிகம் வருகிறது. ஆனால் கோவையில் அதுபோன்று ஒரு புகாரும் வரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், கோவை வடக்கு தாசில்தார் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • டெம்போ 6 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • கணவன், மனைவி 2 பேரும் சிக்கி படுகாயம் அடைந்தனர்.

    குனியமுத்தூர்.

    கோவை மதுக்கரை மார்க்கெட்டை சேர்ந்தவர் சிவதாஸ்(61). இவரது மனைவி நாகமணி(50).

    சிவதாஸ் அதே பகுதியில் கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். இன்று காலை சிவதாஸ் தனது மனைவியுடன் டெம்போ வாகனத்தில் சென்றார்.வாகனம் போடி பாளையம் பிரிவு அருகே வந்தபோது சிவதாஸ் வண்டியை திருப்ப முயற்சித்தார்.

    அப்போது, எதிரே கேரளாவை நோக்கி வேகமாக வந்த கண் டெய்னர் லாரி மொபட் மீது மோதியது. இதில் டெம்போ சாலையோரம் இருந்த 6 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கணவன், மனைவி 2 பேரும் சிக்கி படுகாயம் அடைந்தனர்.

    அப்போது அந்தவழியாக துடியலூர் யூனிட்டை சேர்ந்த பேரூர் சப் டிவிஷன் ஊர்க்காவல் படையினர் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் இந்த விபத்தை பார்த்ததும் வாகனத்தை நிறுத்தி விட்டு, இறங்கி சென்று டெம்போவில் இருந்த கணவன், மனைவியை மீட்டு வெளியில் கொண்டு வந்தனர்.

    பின்னர் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து சிவதாஸ், அவரது மனைவி நாகமணியை மீட்டு சுந்தராபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் மதுக்கரை போலீசார் விரைந்து வந்து, லாரியை ஓட்டி வந்த நபரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

    • வீட்டில் இருந்த 17 வயது மாணவி, ஸ்ரீநிதி மற்றும் ரம்யா ஆகியோர் மாயமானார்கள்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பெண்களை தேடி வருகின்றனர்.

    கோவை,

    கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் கோவை டாடாபாத்தில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமானார்.

    அவரது பெற்றோர் அக்கம்பக்கம் தேடியும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் கோவை மத்திய அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவியை தேடி வருகின்றனர்.

    சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் ஸ்ரீநிதி (21). இவர் கோவை பீளமேட்டில் தனியார் விடுதியில் தங்கி அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று விடுதியில் இருந்த ஸ்ரீநிதி திடீரென யாரிடமும் கூறாமல் வெளியே சென்று விட்டார். பின்னர் வெகு நேரமாகியும் அவர் விடுதிக்கு திரும்பவில்லை.

    திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் அருகே சாமிபுதூரை சேர்ந்தவர் ரம்யா(19). இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறினார், ஆனால் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தனர் ஆனால் அவர் கிடைக்கவில்லை.

    இந்த 2 சம்பவங்கள் குறித்தும் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பெண்களை தேடி வருகின்றனர்.

    • போலீசார் கோவை ஜங்சன், ரோபர்ஸ்டன் ரோடு பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
    • 46 பாக்கெட் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

    கோவை,

    கோவை புறநகர் போலீசார் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்பவர்களை தீவிரமாக கண்காணித்து கைது செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கோவை ஆர்.எஸ். புரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் கோவை ஜங்சன், ரோபர்ஸ்டன் ரோடு பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு செய்தனர்.

    அப்போது சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பாஸ்கரன் (வயது48) அந்த பகுதியில் பெட்டி கடையில் வைத்து குட்கா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர்.

    சோதனையில் அங்கு குட்காவை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பாஸ்கரனை கைது செய்து அவரிடம் இருந்து 26 பாக்கெட் குட்காவை, பறிமுதல் செய்தனர். இதேபோன்று கோவை கெம்பட்டி காலனி பகுதியில் குட்கா பதுக்கி விற்ற சிவக்குமார் 44 என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 20 பாக்கெட் குட்காவை பறிமுதல் செய்தனர்.  

    • 7 நிலை ராஜகோபுரம் அமைக்க வேண்டுமென பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
    • ரூ.5. 30 கோடி மதிப்பில் கோபுரம் அமைக்கப்படவுள்ளது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் வனபத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் ஆடி குண்டம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் அமாவாசை உள்ளிட்ட பல்வேறு நாட்களிலும் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வன பத்திரகாளியம்மன் கோவிலுக்கு வந்திருந்து அம்மனை தரிசனம் செய்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

    இந்த கோவிலில் 7 நிலை ராஜகோபுரம் அமைக்க வேண்டுமென பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

    இந்த நிலையில் கோவிலில் ரூ.5. 30 கோடி மதிப்பில் 7 நிலை ராஜகோபுரம் அமைக்கும் பணியினை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார்.

    இதில் வனப்பத்திரகாளி அம்மன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, காரமடை அரங்கநாதர் கோவில் செயல் அலுவலர் லோகநாதன், இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் கவிதாகல்யா ணசுந்தரம், பரம்பரை அரங்காவலர் வசந்தா சம்பத், தாசில்தார் மாலதி, மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையர் வினோத், தலைமைச் செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம், ஒன்றிய செயலாளர்கள் சுரேந்திரன், எஸ்.எம்.டி.கல்யாணசுந்தரம், மாவட்ட பிரதிநிதி மேடூர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    • தங்கவேலுக்கும் சுதர்சனுக்கும் இடையே மீதி பணம் கொடுப்பதில் தகராறு ஏற்பட்டது.
    • கண்டக்டர் தங்கவேலு பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தார்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மகாலிங்கபுரம் ஆறுமுகம் நகரை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 57).

    இவர் அரசு போக்குவரத்து கழகம் பொள்ளாச்சி கிளையில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் தங்கவேலுக்கும், திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த சுதர்சன் (21) என்பவருக்கு இடையே மீதி பணம் கொடுப்பதில் தகராறு ஏற்பட்டது.

    சம்பவத்தன்று தங்கவேலு பொள்ளாச்சி பழைய பஸ் நிலையத்தில் பஸ்சில் அமர்ந்து இருந்தார். அப்போது அங்கு வந்த சுதர்சன் கடந்த மாதம் என்ன தப்பா பேசுனல, இப்ப பேசுடா பார்க்கலாம் என கூறி கண்டக்டர் தங்கவேலுவை தாக்கினார். பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    இது குறித்து கண்டக்டர் தங்கவேலு பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 41,526 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.
    • 180 பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது

    கோவை,

    தமிழகத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மாதம் தொடங்கி நடந்தது. இந்த தேர்வுகள் முடிந்த நிலையில் தற்போது 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.

    இந்த தேர்வுகள் வருகிற 20-ந் தேதி வரை நடக்கிறது. முதல் நாளான இன்று மொழிப்பாட தேர்வு நடந்தது. இதனை தொடர்ந்து வருகிற 10-ந் தேதி ஆங்கில பாடத்துக்கான தேர்வும், 13-ந் தேதி கணிதம், 15-ந் தேதி மொழித்தேர்வு, 17-ந் தேதி அறிவியல், 20-ந் தேதி சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகள் நடக்கிறது.

    கோவை மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார் என கோவையை சேர்ந்த 388 பள்ளிகள், பொள்ளாச்சியை சேர்ந்த 138 பள்ளிகள் என 526 பள்ளிகளை சேர்ந்த 20,936 மாணவர்கள், 20,590 மாணவிகள் என மொத்தம் 41,526 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

    மேலும் பள்ளியின் மூலம் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக 150 தேர்வு மையங்களும், தனித்தேர்வர்களுக்காக 7 தேர்வு மையங்கள் என 157 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. தேர்வு மையங்களில் மாணவ-மாணவிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது.

    முதல் நாள் தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு முடிந்தது. தேர்வில் முறைகேடுகளை தடுப்பதற்காக 180 பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் 157 முதன்மை கண்காணிப்பாளர்கள், 157 துறை அதிகாரிகள், நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    மேலும் தேர்வு தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே அனைத்து மாணவ-மாணவிகளும் மையங்களுக்கு வந்தனர். பின்னர் ஹால் டிக்கெட்டை பரிசோதனை செய்த பின்னர் தேர்வு அறைக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். மொழி பாடத்தேர்வை மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் எழுதி விட்டு வந்தனர்.

    • தேர்த்திருவிழா கடந்த 15-ந்தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது.
    • 10-ந்தேதி இரவு 8 மணிக்கு மகா அபிஷேகத்துடன் விழா நிறைவுபெறுகிறது.

    பொள்ளாச்சி,

    பொள்ளாச்சி கடை வீதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் வெள்ளி தேர்த் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றதால் மண்டல பூஜை முடிந்த பிறகு தேர்த்திருவிழா கடந்த 15-ந்தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது.

    இதை தொடர்ந்து 21-ந்தேதி இரவு 10 மணிக்கு கோவில் முன் கம்பம் நடப்பட்டது. இதை தொடர்ந்து பெண்கள் வீடுகளில் இருந்து மஞ்சள் நீர் கொண்டு கம்பத்திற்கு ஊற்றி வழிபட்டு வருகின்றனர். திருவிழா முடியும் வரை இந்த கம்பத்திற்கு பெண்கள் மஞ்சள் தண்ணீர் ஊற்றி வழிபடுவார்கள். கடந்த 28-ந்தேதி கம்பத்தில் கோவில் பூவோடு வைக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து பக்தர்கள் பல்வேறு பகுதியில் இருந்து பூவோடு ஏந்தி கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை 6 மணிக்கு கோவிலுக்கு பக்தர்கள் மா விளக்கு எடுத்து வந்தனர். அதை தொடர்ந்து காலை 10 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நேற்று இரவு 7 மணிக்கு நடை பெற்றது. இதையொட்டி 21 அடி உயர வெள்ளித்தேரில் மாரியம்மனும், 12 அடி உயர மரத்தேரில் விநாயகரும் எழுந்தருளினர். இரவு 9 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. அப்போது பக்தர்கள் அம்மா தாயே, காவல் தெய்வமே என்று பக்தி கோஷம் எழுப்பினர். அம்மன் மலர் அலங்காரத்தில் சிவப்பு நிற பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    கோவில் வளாகத்தில் தொடங்கிய தேரோட்டம் மார்க்கெட் ரோடு வழியாக வந்து வெங்கட்ரமணன் வீதியில் இமான்கான் வீதி சந்திப்பில் நிறுத்தப்பட்டது. தேர்த்திருவிழாவையொட்டி உதவி போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா தலைமையில் போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். 2-ம் நாள் தேரோட்டம் இன்று (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு புறப்பட்டு உடுமலை ரோடு வழியாக வந்து சத்திரம் வீதியில் நிறுத்தப்படுகிறது.

    நாளை (வெள்ளிக் கிழமை) இரவு 7 மணிக்கு 3- ம் நாள் தேரோட்டம் புறப்பட்டு, நிலைக்கு வருதல், அதை தொடர்ந்து பரிவேட்டை, தெப்பத்தேர் விழா நடைபெறுகிறது. நாளை மறுநாள் (சனிக்கி ழமை) காலை 8.30 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடுதல், இரவு 9 மணிக்கு கம்பம் எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    10-ந்தேதி இரவு 8 மணிக்கு மகா அபிஷேகத்துடன் விழா நிறைவுபெறுகிறது. 

    ×