search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீதிபதிகள்"

    சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பிரகாஷ் தலைமையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 40 நீதிபதிகள் மற்றும் மாஜிஸ்திரேட்டு நீதிபதிகள் புழல் சிறையில் கைதிகளுக்கு அறிவுரை வழங்கினர். #PuzhalJail #Prisoners
    செங்குன்றம்:

    புழல் ஜெயிலில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள், பெண் குற்றவாளிகள் என மொத்தம் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் முதல் முறையாக குற்றம் செய்து கைது செய்யப்பட்டவர்களும் அடங்குவர்.

    இந்த நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள முதல் முறையாக குற்றம் செய்த குற்றவாளிகளுக்கு ‘கவுன்சிலிங்’ வழங்க நீதிபதிகள் முடிவு செய்தனர்.

    சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பிரகாஷ் தலைமையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 40 நீதிபதிகள் மற்றும் மாஜிஸ்திரேட்டு நீதிபதிகள் புழல் சிறையில் கைதிகளுக்கு அறிவுரை வழங்கினர்.

    இதற்காக சிறை வளாகத்தில் உள்ள ஆடிட்டோரிடயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. முதல் முறை குற்றவாளிகள் 150 பேருக்கு நீதிபதிகள் தனித்தனியாக ஆலோசனை மற்றும் அறிவுரை கூறினர்.



    ஒவ்வொரு கைதிகளுக்கும் சுமார் 5 முதல் 10 நிமிடம் வரை கவுன்சிலிங் வழங்கப்பட்டது. அப்போது சிறையில் இருந்து செல்லும்போது புதிய வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தார்கள். இந்த கவுன்சிலிங் 3 மணி நேரம் நடந்தது.

    புழல் சிறையில் 150 கைதிகளுக்கு நீதிபதிகள் நேரில் சென்று கவுன்சிலிங் வழங்கியது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. #PuzhalJail #Prisoners

    எச்.ஐ.வி. பாதித்த சாத்தூர் பெண்ணிடம் இருந்து 2 மாதமாக பிரித்து வைக்கப்பட்ட மூத்த மகளை, அவரிடமே மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் நேற்று ஒப்படைத்தனர். #HighCourtMaduraiBench #HIVBlood
    மதுரை:

    மதுரையை சேர்ந்த வக்கீல்கள் எஸ்.முத்துக்குமார், அப்பாஸ்மந்திரி ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தனித்தனியாக தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு எச்.ஐ.வி. தொற்றுடன் இருந்த ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எச்.ஐ.வி. பாதித்த பெண்ணுக்கு உரிய இழப்பீடு மற்றும் சிகிச்சை வழங்கவும், தானமாக பெறப்படும் ரத்தத்தை பாதுகாப்பாக பெற கடும் விதிகளை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுக்களில் கூறியிருந்தனர்.

    ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, எச்.ஐ.வி. பாதித்த பெண்ணை நேரில் அழைத்து தனி அறையில் வைத்து விசாரித்தனர். அப்போது, தன்னுடைய மூத்த மகளை 2 மாதமாக பார்க்காமல், மனரீதியாக பாதிக்கப்பட்டு இருப்பதாக அந்த பெண் தெரிவித்தார். இதையடுத்து அந்த பெண்ணின் கணவர், மூத்தமகள் ஆகியோரை ஆஜராகும்படி, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அதன்படி அவர்களும், பாதிக்கப்பட்ட பெண்ணும் நீதிபதிகளின் தனி அறையில் நேற்று ஆஜரானார்கள். அவர்களிடம் நீதிபதிகள் விசாரணை நடத்தினர்.

    பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:-

    ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்தபோது, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரையும், மூத்த மகளையும் ஆஜராக உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் அவர்கள் இன்று (நேற்று) ஆஜராகினர். பாதிக்கப்பட்ட பெண்ணை பார்த்ததும், அவரது கணவர் சேர்ந்து வாழ முயற்சிப்பதாக கூறியுள்ளார். ஆனால் அவர் தன்னை பார்த்துக்கொள்ள மாட்டார் என்று அந்த பெண் தெளிவாக கூறியுள்ளார்.

    தற்போது தன் குழந்தைகளுடன் அந்த பெண் தனது பெற்றோருடன் இருந்து வாழ்நாளை கழிக்க விரும்புகிறார். அங்கு தனது கணவர் வந்து பார்க்க எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை. எனவே 2 மாதமாக பிரித்து வைக்கப்பட்டு இருந்த சிறுமி, அவரது தாயாரிடம் ஒப்படைக்கப்படுகிறார். இந்த வழக்கில் மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியின் மனநலத்துறை உதவி பேராசிரியர் கீதாஞ்சலி, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தின் மருத்துவ அதிகாரி ரஞ்சித்ராம்குமார் ஆகியோரும் ஆஜரானார்கள்.

    பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வீடு, வேலை, இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக அரசிடம் கேட்டு, அடுத்த விசாரணையின்போது தெரிவிக்க கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியனுக்கு உத்தரவிடப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் சார்பில் ஆஜராக, வக்கீல் ஆர்.வெங்கடேசன் நியமிக்கப்படுகிறார். அவருக்கு ரூ.10 ஆயிரம் கட்டணத்தை சுகாதாரத்துறை செயலாளர் ஒரு வாரத்தில் வழங்க வேண்டும்.

    பாதிக்கப்பட்ட பெண் எப்போது வேண்டுமானாலும் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மைய மருத்துவ அதிகாரி ரஞ்சித்ராம்குமார் தெரிவித்துள்ளார். மேலும், அந்த பெண்ணுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். இந்த பெண்ணை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து டாக்டர்களே உரிய முடிவை எடுக்கலாம். இந்த வழக்கு வருகிற 29-ந்தேதி (அதாவது நாளை) ஒத்திவைக்கப்படுகிறது.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. #HighCourtMaduraiBench  #HIVBlood
    டெல்லியில் யாருக்கு அதிக அதிகாரம் உள்ளது என்பது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி உள்ளனர். #DelhiGovt #LieutenantGovernor #ArvindKejriwal
    புதுடெல்லி:

    டெல்லி மற்றும் புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கும், மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்ட துணைநிலை ஆளுநருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட், துணை நிலை ஆளுநருக்கே அதிகாரம் அதிகம் என்று தீர்ப்பளித்தது.



    இந்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், துணைநிலை ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது என்றும் அவர் அமைச்சரவையுடன் இணக்கமாக செயல்படவேண்டும் என்று கூறினர். நிர்வாக அதிகாரம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடமே உள்ளது என்றும் அந்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

    இந்த தீர்ப்பு மிக முக்கியமானது என்பதால் அதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகளும், தனித்தனியாக தீர்ப்பை வாசித்தனர்.  

    நீதிபதி சிக்ரி தனது தீர்ப்பில், காவல்துறையை துணை நிலை ஆளுநரே கவனிப்பார் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையர்கள் மற்றும் செயலாளர்கள் நியமனம் மற்றும் இடமாற்றம் அவரது அதிகாரத்துக்கு உட்பட்டது என்றும் தெரிவித்தார். 

    ‘விசாரணைக் கமிஷன் அமைப்பது மத்திய அரசின் வரம்பிற்கு உட்பட்டது என்பதால் முதல்வரால் அமைக்க முடியாது. இணை செயலாளர் மற்றும் அதற்கு மேல் அதிகாரம் உள்ள அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் துணைநிலை ஆளுநருக்கே உள்ளது. இணை செயலாளர் அந்தஸ்துக்கு கீழ் உள்ள அதிகாரிகளை மாநில அரசு நியமிக்கலாம். மின்சாரத்துறை டெல்லி அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்’ என்றும் நீதிபதி சிக்ரி தெரிவித்தார்.

    மற்றொரு நீதிபதி அசோக் பூஷன் தனது தீர்ப்பில், சேவைகள் பிரிவில் உள்ள அனைத்து அதிகாரிகளும் மத்திய அரசின் வரம்பிற்குள் தான் வருவார்கள் என்றும், அவர்களை நியமிக்கவோ மாற்றவோ துணைநிலை ஆளுநருக்கே அதிகாரம் இருப்பதாகவும் கூறினார்.

    சேவைகள் பிரிவில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், அந்த பிரிவு மட்டும் 3 நீதிபதி அமர்வுக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது. #DelhiGovt #LieutenantGovernor #ArvindKejriwal

    நாங்கள் ஆளைக் கொல்லும் புலிகள் அல்ல. எங்களைப் பார்த்து பயப்பட வேண்டாம் என்று மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். #SupremeCourt
    புதுடெல்லி:

    ஆந்திர மாநிலத்தில் டிரைமெக்ஸ் குரூப் என்ற தனியார் நிறுவனம் சட்டவிரோத சுரங்கத் தொழிலில் ஈடுபடுவதாகவும், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரியும் மத்திய அரசின் முன்னாள் செயலாளர் இ.ஏ.எஸ்.சர்மா, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கும், ஆந்திர அரசுக்கும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதையடுத்து, அந்நிறுவனம் சுரங்கத் தொழிலை நிறுத்தி வைக்க ஆந்திர அரசு உத்தரவு பிறப்பித்தது.

    இந்நிலையில், இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தனியார் நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் பயந்து போய், தங்களது நிறுவனத்துக்கு எதிராக ஆந்திர அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறினார்.

    அதற்கு நீதிபதிகள், “நாங்கள் ஆளைக் கொல்லும் புலிகள் அல்ல. எங்களைப் பார்த்து மாநிலங்கள் பயப்பட வேண்டாம்” என்று கூறினர். #SupremeCourt
    பக்தர்களை அனுமதித்தல், சொத்து பராமரிப்பு பற்றி அனைத்து கோவில், மசூதிகளையும் நீதிபதிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #SupremeCourt
    புதுடெல்லி:

    இந்தியா முழுவதும் 20 லட்சம் இந்துக் கோவில்களும், 3 லட்சம் மசூதிகளும், பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவ தேவாலயங்களும் உள்ளன.

    இவற்றின் சொத்துக்களை பராமரித்தல், பக்தர்களை அனுமதிக்கும் விதிமுறைகள், சுகாதார வசதிகள், கணக்கு வழக்கு பராமரிப்பு போன்றவற்றில் பல பிரச்சனைகள் உள்ளன. இதற்கு உரிய தீர்வுகள் எட்டப்படாமலேயே இருக்கின்றன.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு இது தொடர்பாக புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. கோவில், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் மத அறக்கட்டளைகள் ஆகியவற்றின் மாவட்ட நீதிபதிகள் நேரடியாகவே இது சம்பந்தமாக ஆய்வு நடத்தலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது.

    ஒடிசா மாநிலம் பூரி ஜெகநாதர் கோவிலில் இந்துக்களை தவிர, மற்ற பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து மிரினாலினி பத்தி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்து இருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் ஆதர்ஸ் கோயல், அப்துல் நசீர் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள் பூரி ஜெகநாதர் கோவிலில் இந்துக்கள் மட்டுமல்லாமல் வழிபட விரும்பும் அனைவரையும் அனுமதிப்பதற்கு ஆலய நிர்வாகம் உரிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    இது சம்பந்தமாக மூத்த வக்கீல் கோபால் சுப்பிரமணியம் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமும் பேசி உரிய அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டுக்கு அளிக்க வேண்டும் என்றும் கூறினார்கள்.

    மேலும் நாட்டின் அனைத்து கோவில்கள், மசூதிகள், கிறிஸ்தவ தேவாலய நடைமுறைகள் குறித்து தன்னிச்சையாகவே நீதிபதிகள் தங்கள் கவனத்துக்கு எடுத்து கொண்டு சில உத்தரவுகளையும் பிறப்பித்தனர்.

    அதில், கோவில், மசூதி, தேவாலயங்களில் ஏதேனும் சர்ச்சைகள் தொடர்பாக மாவட்ட கோர்ட்டுக்கு மனு வந்தால் மாவட்ட நீதிபதி நேரடியாக சென்று கோவில், மசூதிகளை ஆய்வு செய்ய வேண்டும்.

    அங்கு வரவு- செலவு, சுகாதார வசதி, பக்தர்களை அனுமதிக்கும் விதிமுறைகள் போன்றவைகள் பற்றி முழுமையாக ஆய்வு நடத்தி ஐகோர்ட்டுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.

    ஐகோர்ட்டு அதை ஒரு பொதுநல வழக்காக எடுத்து விசாரணை நடத்தி உரிய தீர்ப்புகளை கூற வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.

    இது சம்பந்தமாக வக்கீல் கோபால் சுப்பிரமணியம் கருத்து தெரிவிக்கையில், இந்திய கோர்ட்டுகளில் சுமார் 3 கோடியே 10 லட்சம் வழக்குகள் தேங்கி கிடக்கின்றன. கோர்ட்டுகளில் 23 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன.

    இதனால் ஏற்கனவே பணிச்சுமை அதிகமாக உள்ளது. இப்போது கோவில், மசூதி, தேவாலயங்களை ஆய்வு செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு இருப்பதால் பணிச்சுமை இன்னும் அதிகரிக்கும் என்று கூறினார். #SupremeCourt
    சரண் அடைந்த குற்றவாளியை நீதிமன்றத்துக்குள் புகுந்து கைது செய்த தலைமை காவலருக்கு ரூ.500 அபராதம் விதித்து ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    சென்னை:

    கோவை சிங்காநல்லூரில் கொலை வழக்கில் தேடப்பட்ட சந்தோஷ் என்பவர், கடந்த ஏப்ரல் 10-ந்தேதி திருப்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

    அப்போது சிங்காநல்லூர் காவல் நிலைய காவலர்கள், நீதிமன்ற அறைக்குள் நுழைந்து, சந்தோஷை கைது செய்தனர்.

    இதற்கு கண்டனம் தெரிவித்த திருப்பூர் பார் கவுன்சில், சம்பவம் தொடர்பாக தலைமை நீதிபதிக்கு அறிக்கை அனுப்பி வைத்தது.

    காவல் துறையினரின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த தலைமை நீதிபதி, சரணடைந்தவரை நீதிமன்ற அறைக்குள் சென்று கைது செய்ய கூடாது என காவல் துறையினருக்கு தெரியாதா? என கேள்வி எழுப்பி இருந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக ஐகோர்ட் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஆஷா ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன், தலைமை காவலர் ராபர்ட், டிரைவர் வேலன் ஆகியோர் நேரில் ஆஜரானார்கள். 3 பேரும் தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டனர்.

    தலைமை காவலர் தான் கோர்ட்டுக்குள் சென்று கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டார் என்று தெரியவந்தது. இதையடுத்து தலைமை காவலருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர், டிரைவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது.

    நேரில் ஆஜரான காவல் துறை ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேரும் தங்களுடைய செயலுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி மனுதாக்கல் செய்தனர்.

    மேலும், நீதிமன்றத்திற்குள் காவல்துறையினர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, நீதிமன்றத்திற்குள் நுழைந்து சந்தோஷை கைது செய்த தலைமை காவலரின் மன்னிப்பை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி, அவருக்கு 500 ரூபாய் அபராதம் விதித்தார்.
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பேரணியில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் 2 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கிறது.
    புதுடெல்லி:

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். 100-வது நாள் போராட்டத்தில் பேரணியாக சென்று கலெக்டரிடம் மனு கொடுப்பதாக இருந்தது. அப்போது வன்முறை வெடித்ததால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியானார்கள்.

    தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணைய குழு நேரடி கள ஆய்வில் ஈடுபட்டது. அந்த குழு அளித்த அறிக்கையில், அதிகப்படியான மனித உரிமை மீறல்கள் நடந்திருப்பதாக சுட்டிக்காட்டியதை அடுத்து ஆணையத்தின் 2 நீதிபதிகள் அமர்வு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

    மிக முக்கியமான வழக்குகளை மட்டும் தான் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் 2 பேர் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாதமே விசாரணை தொடங்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
    புதிதாக நியமிக்கப்பட்ட ஐகோர்ட்டு நீதிபதி நியமனத்தை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டுக்கு புதிதாக 7 நீதிபதிகளை நியமித்து சமீபத்தில் ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதைத்தொடர்ந்து நிர்மல்குமார், ஆஷா, சுப்பிரமணியம் பிரசாத் உள்பட 7 பேரும் கடந்த 4-ந் தேதி நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர்.

    இவர்களில் சுப்பிரமணியம் பிரசாத்தை நீதிபதியாக நியமித்தது செல்லாது என்று அறிவிக்கக்கோரி வக்கீல் ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    அந்த மனுவில், சென்னை ஐகோர்ட்டுக்கு நீதிபதியாக நியமிக்கப்படுபவர் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சென்னை ஐகோர்ட்டிலும், அதன் அதிகார வரம்புக்கு உட்பட்ட கோர்ட்டிலும் வக்கீலாக பணியாற்றி இருக்க வேண்டும். ஆனால், சுப்பிரமணியம் பிரசாத் அதுபோன்று பணியாற்றவில்லை என்று கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஆஷா ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘சுப்பிரமணியம் பிரசாத் சுப்ரீம் கோர்ட்டில் மூத்த வக்கீலாக கடந்த 2015-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட அவருக்கு அனைத்து தகுதியும் உள்ளது’ என்று வாதாடினார்.

    மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘இந்திய அரசியல் சாசனத்துக்கு முரணாக நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் நியமனம் நடைபெறவில்லை. ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட அவருக்கு தகுதி உள்ளது. இந்த பதவிக்கு அவர் பொருத்தமானவர் தான் என்று சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டின் மூத்த நீதிபதிகள் குழு(கொலிஜியம்) முடிவு செய்துள்ளது. எனவே, இந்த மனுவை ஏற்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று உத்தரவிட்டனர். #tamilnews
    தீர்ப்பின் அடிப்படையில் வரும் விமர்சனங்களை தாங்கக்கூடிய மனநிலையில் நீதிபதிகள் இருக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறினார்.
    சென்னை:

    சைதை துரைசாமியின் மனிதநேயம் மையம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., சிவில் நீதிபதிகள் பதவிகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை நடத்திவருகிறது.

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சிவில் நீதிபதிகள் பதவிக்கான தேர்வை வருகிற 9-ந்தேதி நடத்துகிறது. இந்த தேர்வில் கலந்துகொள்பவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை சைதை துரைசாமியின் மனிதநேய மையம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், பெண் வக்கீல்கள் சங்கத்துடன் இணைந்து நடத்தியது. இந்த பயிற்சி வகுப்பு நேற்றுடன் முடிவடைந்தது.

    இந்த பயிற்சி நிறைவு விழாவில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    நான் 16 ஆண்டுகளுக்கு மேலாக நீதிபதி பதவி வகிக்கிறேன். நான் சிறந்த தீர்ப்பு வழங்கினேன் என்றால் அது என்னுடைய தீர்ப்பு என்று மட்டும் சொல்லமுடியாது. அந்த வழக்கில் ஆஜரான வக்கீல்களின் திறமையான வாதமும் காரணம் என்று கூறவேண்டும். வக்கீல்கள் பல தரப்பட்ட தீர்ப்புகளின் விவரங்களையும், சட்டங்களை எடுத்துரைத்து சிறப்பாக வாதம் செய்தால்தான் சிறப்பான தீர்ப்பை ஒரு நீதிபதியால் பிறப்பிக்க முடியும்.

    நீதிபதிகள் தங்கள் தீர்ப்புகளின் மூலமாக பேசவேண்டும். தீர்ப்புகள் தான் நீதிபதிகளை எடைபோடும். நீதிபதிகள் அளிக்கும் தீர்ப்புகளை பார்க்கும்போது, நீதி வழங்கப்பட்டுள்ளது என்பது முழுமையாக தெரியவேண்டும். நீதிபதியாக அமர்ந்துவிட்டாலே யாருக்கும் ஆதரவாகவோ, சாதகமாகவோ செயல்படக்கூடாது. ஒரு தீர்ப்பின் அடிப்படையில் வரும் விமர்சனங்களை தாங்கக்கூடிய மனநிலையில் நீதிபதிகள் இருக்கவேண்டும். விமர்சனங்களை தாங்கக்கூடிய பாறைகளாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு தலைமை நீதிபதி பேசினார்.

    நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜிக்கு, சைதை துரைசாமியின் மனிதநேயம் மையத்தின் நிர்வாக அறங்காவலர் வெற்றி துரைசாமி நினைவு பரிசு வழங்கினார்.

    இயக்குனர் எம்.கார்த்திகேயன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயலாளர் ராஜகுமார் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 
    ஸ்டெர்லைட் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணை வலுவானதாக இல்லை என்று நீதிபதிகள், மூத்த வக்கீல் கருத்து கூறியுள்ளனர். #BanSterlite
    சென்னை:

    ‘ஸ்டெர்லைட்’ நிறுவனத்துக்கு எதிராக தூத்துக்குடியில் பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தினார்கள். அவர்களது 100-வது நாள் போராட்டம், கடந்த மே 22-ந்தேதி நடந்தது. அன்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட சென்ற பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில், 13 பேர் பலியாகினர்.

    இதைத்தொடர்ந்து இந்த நிறுவனத்தை இழுத்து மூட மே 28-ந்தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதனால் அந்த நிறுவனத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இத்துடன் பிரச்சினை முடிந்ததா?, இனி இந்த நிறுவனம் செயல்படாதா? அரசின் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்தால், அந்த நிறுவனத்துக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்து விடுமா?, அரசாணை ரத்தாகி விடுமா? அந்த நிறுவனம் மீண்டும் செயல்பட தொடங்குமா? என்பது உள்பட பல கேள்விகள் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    இதுகுறித்து சட்டவல்லுநர்களிடம் கேட்டால், தமிழக அரசின் நடவடிக்கை வெறும் கண் துடைப்பு நாடகம். அந்த அரசாணையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால், ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என்று கருத்து கூறுகின்றனர்.

    இதுகுறித்து, சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் ஏ.சிராஜூதீனிடம் கேட்டபோது, ‘இப்படி ஒரு அரசாணையை பிறப்பிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை. ஒரு தொழிற்சாலை தொடங்குவதற்கு முன்பு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெறவேண்டும். அவ்வாறு வழங்கப்படும் அனுமதியின்போது விதிக்கப்படும் விதிமுறைகளை மீறினால், அந்த அனுமதியை ரத்து செய்ய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அதிகாரம் உள்ளது. அந்த விதிமீறலை சரி செய்துவிட்டு, மீண்டும் அனுமதி கேட்க அந்த நிறுவனத்துக்கு உரிமை உள்ளது. அப்படி இருக்கும்போது அந்த ஆலையை நிரந்தரமாக மூட அரசுக்கு அதிகாரமே கிடையாது’ என்றார்.

    மேலும் அவர், ‘வேதாந்தா நிறுவனம் இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்டது. வெளிநாட்டு முதலீட்டினால், ஸ்டெர்லைட் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து, இந்தியாவுக்கு இடையே முதலீடுகளை பாதுகாப்பதற்கான இருதரப்பு ஒப்பந்தங்கள் இருக்கிறது. ஒருவேளை இந்த ஒப்பந்தத்தை மீறி இந்த நிறுவனம் மூடப்பட்டால், அதற்கான இழப்பீடு அனைத்தையும் மாநில அரசான தமிழக அரசுதான் வழங்க வேண்டும்’ என்றார்.

    ஆனால், இந்த அரசாணையே பலவீனமானது என்கிறார் சென்னை ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி டி.அரி பரந்தாமன். அவர் கூறியதாவது:-

    நான் வக்கீலாகவும் இருந்தவன், நீதிபதியாகவும் இருந்தவன். ஒரு அரசாணையை அரசு எப்படி பிறப்பிக்கும் என்று எனக்கு மட்டுமல்ல, அரசு உயர்அதிகாரிகள் அனைவருக்கும் தெரியும். மக்கள் எழுச்சியினால், ஒரு தொழிற்சாலையை மூடும்போது, எதற்காக மூடப்படுகிறது? அதற்கான காரணம் என்ன? அந்த தொழிற்சாலை செய்த விதிமீறல் என்ன? அதனால் பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் என்ன பாதிப்பு? இதற்கு முன்பு நடந்த விபத்துகள் எத்தனை? அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் என்று விரிவான விளக்கத்தை குறைந்தது 5 பக்கங்களில் கூறி, இந்த காரணங்களால், இந்த தொழிற்சாலை மூடப்படுகிறது என்று அரசாணையை வெளியிட்டு இருக்கவேண்டும்.

    ஆனால், 2 பக்கம் கூட அரசாணை இல்லை. அதுவும் இரண்டே இரண்டு பத்தியில், இரண்டு காரணங்கள் கூறி, தொழிற்சாலையை மூடுகிறோம் என்று தமிழக அரசு கூறுகிறது. இந்த அரசாணையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால், உடனடியாக அந்த அரசாணை ரத்து செய்யப்பட்டு விடும். மீண்டும் தொழிற்சாலை செயல்பட தொடங்கிவிடும்.

    அதை மக்கள் எதிர்த்தால், நாங்கள் என்ன செய்வது? நீதிமன்றம், எங்கள் அரசாணையை ரத்து செய்துவிட்டது. நீதித்துறையின் வேலையே இதுதானே? என்று மக்களின் எல்லா கோபத்தையும், நீதிமன்றத்துக்கு எதிராக திருப்பி விடுவார்கள்.

    அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படும் போது, தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், ஏன் அரசாணையை ரத்து செய்தோம்? அரசாணை சட்டப்படி பலவீனமாக இருந்தது. சரியான காரணங்களை சட்டப்படி கூறாததால், ரத்து செய்தோம் என்று பொதுமக்களிடம் போய் விளக்கம் அளிக்க முடியுமா? பொதுக்கூட்டம் போட முடியுமா? அந்த நீதிபதிகளினால் வாய்திறக்கவே முடியாது.

    அரசாணையில் என்ன காரணம் கூறப்பட்டுள்ளது. அது சரியா, தவறா என்பதை மட்டும்தான் நீதிபதிகள் ஆய்வு செய்வார்கள். அந்த காரணத்தை தெளிவாக அரசாங்கம் தான் கூறவேண்டும். அதை செய்யாமல், நீதித்துறையின் மீது பழியை போட தயாராகி விட்டார்கள்.

    உண்மையில் தொழிற்சாலையை மூட வேண்டும் என்று தமிழக அரசுக்கு எண்ணம் இருந்தால், அமைச்சரவையை கூட்டி, கொள்கை முடிவு எடுக்கலாம். அல்லது தற்போது சட்டசபை நடக்கிறது. சட்டசபையில் சிறப்பு தீர்மானம் இயற்றலாம். ஆனால், அதை எல்லாம் செய்யவில்லை. அந்த அளவுக்கு ‘கார்ப்பரேட்’ நிறுவனங்களுக்கு சக்தி இருக்கிறது.

    ரஜினிகாந்த் என்ன பேசுகிறார் பார்த்தீர்களா? ‘காலா’ படத்தில் வரும் பாடல் வரிகள் என்ன என்று தெரியுமா? நிலம், நீர் உரிமைக்காக போராடுவோம். எங்கள் வறுமைகள் ஒழிய போராடுவோம். எங்கள் தலைமுறை காக்க போராடுவோம். எங்கள் கண்கள் தூங்கும் வரை போராடுவோம். எங்கள் இறுதி மூச்சு வரை போராடுவோம். அதிரடிப்படையாக இருக்கிறோம் வெறியாய். போராளிகள் நாங்கள் எல்லாம் போராடுவோம் என்ற பாடலை நன்றாக இசை அமைத்து யாரோ பாடி கொடுக்க, அந்த பாட்டுக்கு ரஜினிகாந்த் நடித்துள்ளார். அது திரையில் வரும் வேஷம் போட்ட ரஜினியின் முகம். நேற்று (அதாவது நேற்று முன்தினம்) அவர் பேட்டியில் கூறியது உண்மையான ரஜினியின் முகம். தூத்துக்குடி பொதுமக்கள் என்ன சமூக விரோதியா?

    ஸ்டெர்லைட் விவகாரத்தில் பல பேர் மக்களுக்கு எதிராக உள்ளனர். 2010-ம் ஆண்டு ஸ்டெர்லைட் நிறுவனத்தை இழுத்து மூடவேண்டும் என்று ஐகோர்ட்டு மதுரை கிளையில் நீதிபதிகள் தர்மாராவ், என்.பால்வசந்தகுமார் விரிவாக தீர்ப்பு அளித்தனர். சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யும்போது, அப்போது மத்திய அரசும், மாநில அரசும் அந்த நிறுவனத்துக்கு எதிராக தீவிரமாக செயல்படாததால், மீண்டும் அந்த தொழிற்சாலை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. அப்போது தி.மு.க.தான் தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது.

    எனவே, வலுவில்லாத அரசாணையை தமிழக அரசு பிறப்பித்து, பழியை நீதித்துறையின் மீது போட தயாராகி விட்டது.

    இவ்வாறு நீதிபதி டி.அரி பரந்தாமன் கூறினார்.

    இந்த அரசாணை குறித்து பெயர் சொல்ல விரும்பாத ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூடி அரசு பிறப்பித்த அரசாணையில் என்ன கூறப்பட்டுள்ளது? ஸ்டெர்லைட் நிறுவனம் செயல்படும் அனுமதியை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் புதுப்பிக்கவில்லை. அதன்பின்னர் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    சுற்றுச்சூழல், வனம், வன விலங்குகளை பாதுகாக்க மாநில அரசுக்கு இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், பிரிவு 48ஏ வின்படியும், தண்ணீர் சட்டம் பிரிவு 18(1)(பி)யின்படியும், பெரும்பான்மையான பொதுமக்களின் விருப்பத்தின் அடிப்படையிலும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பரிந்துரையின் அடிப்படையிலும், இந்த நிறுவனத்தை மூட உத்தரவிடுகிறோம் என்று கூறப்பட்டுள்ளது. இதுதான் ஒரு தொழிற்சாலையை மூட அரசு கூறும் காரணமா?

    ஸ்டெர்லைட் நிறுவனத்தை இழுத்து மூடவேண்டும் என்று ஐகோர்ட்டு மதுரை கிளையில் வைகோ உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் தர்மாராவ், என்.பால்வசந்தகுமார் விசாரித்தார்கள்.

    ஒரு நிகழ்ச்சிக்காக தூத்துக்குடி சென்றிருந்த நீதிபதி என்.பால்வசந்தகுமார், ஸ்டெர்லைட் தொழிற்சாலை உள்ள பகுதிக்கு சென்றார். ஆய்வு செய்தார். அங்குள்ள தண்ணீர், நிலம் மாசு அடைந்திருப்பதை உறுதி செய்தார். அங்கிருந்த போது தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய ரசாயன நாற்றத்தை உணர்ந்தார். அதன்பின்னர், நீதிபதிகள் இருவரும் விரிவான தீர்ப்பை கூறி, அந்த தொழிற்சாலையை இழுத்து மூட உத்தரவிட்டார்கள்.

    அந்த உத்தரவில், ஸ்டெர்லைட் நிறுவனம் எந்தெந்த விதிகளை மீறியுள்ளது? எதற்காக இந்த தொழிற்சாலையை இழுத்து மூட உத்தரவிடுகிறோம்? என்று பல பக்கங்களுக்கு பல காரணங்களை கூறி, தீர்ப்பு அளித்துள்ளனர். அந்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ள காரணங்களை கூறி, இப்போது கூட தமிழக அரசு விரும்பினால், புதிதாக கூடுதல் அரசாணை ஒன்றை பிறப்பிக்க முடியும். அதாவது, ஸ்டெர்லைட் நிறுவனம், அரசாணையை எதிர்த்து வழக்கு தொடர்வதற்கு முன்பாக, கூடுதல் அரசாணையை பிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #BanSterlite
    புதுவை நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஜூலை மாதம் 2-வது வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபைக்கு மாநில அரசின் பரிந்துரையின் பேரில் மத்திய உள்துறை 3 நியமன எம்.எல். ஏ.க்களை நியமிக்கும்.

    மத்திய உள்துறை கடந்த ஜூலை மாதம் மாநில அரசின் பரிந்துரை இல்லாமல் 3 நியமன எம்.எல்.ஏ.க்களை புதுவை சட்டசபைக்கு நேரடியாக நியமித்தது.

    பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர் மற்றும் செல்வகணபதி ஆகியோர் நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்டனர்.

    இவர்களுக்கு கவர்னர் கிரண்பேடி பதவி பிரமாணம் செய்து வைத்தார். எம்.எல்.ஏ.க்கள் நியமனத்தை அதிகாரம் பெற்ற நபரிடம் இருந்து தனக்கு எந்த உத்தரவும் வரவில்லை என கூறி புதுவை சபாநாயகர் வைத்திலிங்கம் ஏற்க மறுத்து விட்டார்.

    மத்திய அரசின் நேரடி எம்.எல்.ஏ.க்கள் நியமனத்துக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் காங்கிரஸ், தி.மு.க. தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி தீர்ப்பு அளித்தது.

    யூனியன் பிரதேசங்களை பொறுத்தமட்டில் எம்.எல். ஏ.க்களை நியமிக்கும் அதிகாரம் மத்திய உள் துறைக்கு உள்ளது என்றும், நியமன எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் சட்டசபைக்குள் அனுமதிக்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு தீர்ப்பில் கூறப்பட்டது.

    ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி மேல் முறையீடு செய்தார். ஏப்ரல் 6-ந் தேதி மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் வந்தது. அப்போது விசாரணையை மே 17-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அசோக் பூ‌ஷண் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமிநாராயணன் சார்பில் மூத்த வக்கீல் கபில்சிபலும், மத்திய அரசின் சார்பில் வக்கீல் பாலசுப்பிரமணியனும் ஆஜராகினர்.

    மத்திய அரசு தரப்பில் காவிரி வழக்கு விசாரணைக்கு மத்திய அரசின் தலைமை வக்கீல் கே.கே. வேணுகோபால் ஆஜராகி உள்ளதால் இந்த வழக்கு விசாரணையை பிற்பகல் 2 மணிக்கு ஒத்தி வைக்குமாறு வக்கீல் பாலசுப்பிரமணியன் கேட்டுக்கொண்டார்.

    முக்கிய வழக்குகள் பிற்பகலில் விசாரணைக்கு வர இருப்பதால் வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க முடியாது என நீதிபதிகள் மறுத்து ஜூலை 2-வது வாரத்துக்கு வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தனர்.

    ×