search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவுன்சிலிங்"

    சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பிரகாஷ் தலைமையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 40 நீதிபதிகள் மற்றும் மாஜிஸ்திரேட்டு நீதிபதிகள் புழல் சிறையில் கைதிகளுக்கு அறிவுரை வழங்கினர். #PuzhalJail #Prisoners
    செங்குன்றம்:

    புழல் ஜெயிலில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள், பெண் குற்றவாளிகள் என மொத்தம் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் முதல் முறையாக குற்றம் செய்து கைது செய்யப்பட்டவர்களும் அடங்குவர்.

    இந்த நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள முதல் முறையாக குற்றம் செய்த குற்றவாளிகளுக்கு ‘கவுன்சிலிங்’ வழங்க நீதிபதிகள் முடிவு செய்தனர்.

    சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பிரகாஷ் தலைமையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 40 நீதிபதிகள் மற்றும் மாஜிஸ்திரேட்டு நீதிபதிகள் புழல் சிறையில் கைதிகளுக்கு அறிவுரை வழங்கினர்.

    இதற்காக சிறை வளாகத்தில் உள்ள ஆடிட்டோரிடயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. முதல் முறை குற்றவாளிகள் 150 பேருக்கு நீதிபதிகள் தனித்தனியாக ஆலோசனை மற்றும் அறிவுரை கூறினர்.



    ஒவ்வொரு கைதிகளுக்கும் சுமார் 5 முதல் 10 நிமிடம் வரை கவுன்சிலிங் வழங்கப்பட்டது. அப்போது சிறையில் இருந்து செல்லும்போது புதிய வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தார்கள். இந்த கவுன்சிலிங் 3 மணி நேரம் நடந்தது.

    புழல் சிறையில் 150 கைதிகளுக்கு நீதிபதிகள் நேரில் சென்று கவுன்சிலிங் வழங்கியது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. #PuzhalJail #Prisoners

    முதுகுளத்தூரில் கல்லூரி மாணவி ஒருவர் 18 வயது பூர்த்தியடைந்த உடனே காதலனுடன் சென்ற நிலையில் மாணவிக்கு ‘கவுன்சிலிங்’ வழங்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
    முதுகுளத்தூர்:

    முதுகுளத்தூரை சேர்ந்த கண்ணன் மகள் தீபிகா (வயது18). இவர் கீழக்கரையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவரும், கமுதி அருகே சீமனேந்தலை சேர்ந்தவரும், தற்போது பாம்பனில் வசித்து வரும் ராமன் மகன் வெற்றிவேலும் (21) கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

    கடந்த மாதம் 18 வயது தீபிகாவிற்கு பூர்த்தியடைந்ததையடுத்து, ஜூலை முதல் தேதியில் தீபிகா முதுகுளத்தூரில் தனது வீட்டிலிருந்து இரவு வெளியேறி, காதலன் வெற்றிவேல் வீட்டில் தஞ்சமடைந்தார்.

    இதுகுறித்து தீபிகாவின் தாய் அமுதா தனது மகளை காணவில்லை என முதுகுளத்தூர் போலீசில் புகார் தெரிவித்தார். இதையடுத்து முதுகுளத்தூர் போலீசார் காதல் ஜோடிகள் தீபிகா -வெற்றிவேலை கண்டுபிடித்து, முதுகுளத்தூர் கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு கீதா முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

    கல்லூரி மாணவி தீபிகாவிற்கு 18 வயது முடிந்து சில வாரங்களே ஆனநிலையில், அவருக்கு ராமநாதபுரம் சமூக நலத்துறை அதிகாரிகள் ‘கவுன்சிலிங்’ வழங்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

    மேலும் இருவரும் மேஜரான நிலையில் இருப்பதால் கவுன்சிலிங் முடிந்தபிறகு இருவரின் விருப்பபடி செல்லவும் உத்தரவிட்டார்.
    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் ஜூன் 25-ந் தேதி தொடங்கும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #MedicalCounselling #Vijayabaskar
    சென்னை:

    பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகி உள்ளது. உயர் கல்வி பெறக் கூடிய மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கியுள்ளனர். எம்.பி. பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். குறிப்பாக அரசு மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டும் போதாது. அதிக மதிப்பெண் பெற வேண்டும்.

    இந்தியாவிலேயே அதிக அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ள மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. இதனால் சுமார் 3500 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கின்றன. இது தவிர தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆயிரத்திற்கும் மேலாக உள்ளன. இந்த இடங்கள் கூட மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்படும்.

    கடந்த 6-ந் தேதி நடைபெற்ற நீட் தேர்வு முடிவு ஜூன் 5-ந் தேதி வெளியாக உள்ளது. பிளஸ்-2 தேர்வு முடிவுகளும் வெளியாகி இருப்பதால் எம்.பி.பி.எஸ். கவுன்சிலிங் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.



    இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் ஜூன் 25-ந் தேதி தொடங்கும். 15 சதவிகிதம் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான இடங்களுக்கு 2 சுற்று கலந்தாய்வு நடைபெறும்.

    இந்த மாத இறுதியில் கலந்தாய்வுற்கான விண்ணப்ப படிவம் மருத்துவ கல்வி இயக்ககத்தின் மாணவர் சேர்க்கை குழுவின் மூலம் வினியோகிக்கப்படும்.

    இதன் மூலம் அரசு மருத்துவ கல்லூரிகள், இ.எஸ்.ஐ., அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி, தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்படும் என்றார்.

    மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் எட்வின் ஜோ கூறுகையில், ஒருசில தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களை சரண்டர் செய்ய கேட்டு இருக்கிறோம். சில கல்லூரிகள் இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரத்திற்காக காத்து இருக்கிறது’ என்றார்.

    மருத்துவ கலந்தாய்வு தொடங்குவதற்கு 4 நாட்களுக்கு முன்னதாக ரேங்க் பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம்.

    12ம் வகுப்புபொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்பட உள்ள நிலையில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.#Exam #Result #Plus2 #TamilNadu #minister #sengottaiyan
    சென்னை:

    கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் இம்மாதம் பல்வேறு தேதிகளில் அறிவிக்கப்பட உள்ளன.

    முதல் கட்டமாக, 12ம் வகுப்புபொதுத் தேர்வு முடிவுகள் மே 16ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

    மேற்கண்ட மூன்று பொதுத் தேர்வுகளையும் சேர்த்து ஏறத்தாழ 27,72,384 மாணவர்கள் தேர்வெழுதி முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர்.

    மதிப்பெண் குறைந்த காரணத்திற்காகவோ அல்லது தேர்வில் தோல்வி அடைந்த காரணத்திற்காகவோ சில மாணவர்கள் தவறான முடிவுகளை மேற்கொள்வதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    பொதுத் தேர்வு முடிவுகள் வெளிவந்தவுடன் மனசோர்வுடன் உள்ள மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பள்ளி அளவில் தகுந்த ஆசிரியர்களைக் கொண்டு மனசோர்விலிருந்து விடுபட்டு தன்னம்பிக்கை பெறுவதற்கான ஆலோசனைகள் வழங்குவது தொடர்பாக அனைத்துத் தலைமையாசிரியர்களுக்கும் தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

    24 மணி நேரமும் செயல்படக்கூடிய உடனடி தகவல் மையம் பள்ளிக் கல்வி இயக்ககத்தில் செயல்பட்டு வருகிறது.

    பாதிக்கப்பட்ட மாணவர்களோ அல்லது அவர்களது பெற்றோர்களோ இம்மையத்தை 14417 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகுந்த ஆலோசனைகளைப் பெறலாம். இதற்கென சிறப்பு பயிற்சி பெற்ற மனநல வல்லுநர்கள் இம்மையத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

    தேர்வு முடிவுகள் வெளி வரும் நாளன்றுபெற்றோர்கள் கவனத்துடன் இருந்து மனசோர்வுடன் இருக்கும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளித்து அரவணைக்க வேண்டியது அவசியமாகும்.



    அதேபோல், தன்னுடன் பயிலும் சக மாணவர்களில் எவரேனும் ஒருவர் மதிப்பெண் குறையும் என்ற மனசோர்வில் இருந்தால் சகமாணவர்கள் தன்னம்பிக்கை யூட்டி மனசோர்விலிருந்து வெளிக்கொணரவேண்டும்.

    தமிழகத்தைப் பொறுத்த வரையில், அனைத்து மாணவர்களுக்கும் நல்ல எதிர் காலத்தை அரசு உருவாக்கி வருகிறது.

    எனவே, பெற்றோர்களும், மாணவ கண்மனிகளும், ஆசிரியபெருந்தகைகளும், ஊடகத் துறையைச் சேர்ந்த அனைத்துநண்பர்களும் சேர்ந்து தேர்வுமுடிவுகளை எதிர்கொள்ளும் மாணவ, மாணவியர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தும் பணியினை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு கூறியுள்ளார்.#Exam #Result #Plus2 #TamilNadu #minister #sengottaiyan
    ×