search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலதிபர்"

    சமீப காலங்களில் 36 தொழிலதிபர்கள் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி இருப்பதாக அமலாக்கத்துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. #VijayMallya #NiravModi #EnforcementDirectorate
    புதுடெல்லி:

    தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நிரவ் மோடி போன்றவர்கள்தான் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டதாக பரவலான கருத்து நிலவுகிறது. ஆனால், 36 தொழிலதிபர்கள் சமீப காலங்களில் தப்பி ஓடி இருப்பதாக அமலாக்கத்துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் கைதான ஆயுத தளவாட தரகர் சூசன் மோகன் குப்தா என்பவரின் ஜாமீன் மனு மீது டெல்லி தனிக்கோர்ட்டில் நேற்று நடந்த விவாதத்தின்போது, இத்தகவலை தெரிவித்தது.



    துபாயில் இருந்து கொண்டுவரப்பட்ட ராஜீவ் சக்சேனா அளித்த தகவலின் பேரில், இந்த ஊழலில் சூசன் மோகன் குப்தாவின் தொடர்பு தெரிய வந்து அவர் கைது செய்யப்பட்டார்.

    அவரது ஜாமீன் மனு, நீதிபதி அரவிந்த் குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குப்தாவின் வக்கீல், குப்தா சமூகத்துடன் ஆழமாக பின்னி பிணைந்தவர் என்பதால், அவருக்கு ஜாமீன் வழங்குமாறு வலியுறுத்தினார்.

    அந்த வாதத்தை அமலாக்கத்துறையின் அரசு சிறப்பு வக்கீல்கள் டி.பி.சிங், என்.கே.மட்டா ஆகியோர் நிராகரித்தனர். அவர்கள் கூறியதாவது:-

    விஜய் மல்லையா, லலித் மோடி, நிரவ் மோடி, மெகுல் சோக்சி, ஸ்டெர்லிங் நிறுவனத்தின் சந்தேசரா சகோதரர்கள் ஆகியோரும் சமூகத்துடன் பின்னி பிணைந்தவர்கள்தான். இருப்பினும், அவர்கள் வெளிநாட்டுக்கு தப்பி விட்டனர். சமீப காலங்களில், இதுபோன்று 36 தொழிலதிபர்கள் வெளிநாட்டுக்கு ஓடியுள்ளனர். இவரும் தப்ப வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.  #VijayMallya #NiravModi #EnforcementDirectorate
    உத்தனபள்ளி அருகே இன்று நடந்த வாகன சோதனையில் தொழிலதிபரிடம் இருந்து ரூ.3 லட்சத்து 56 ஆயிரத்து 500 பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ராயக்கோட்டை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படை கண்காணிப்பு குழுவினர் தொடர்ந்து வாகன சோதனை செய்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அடுத்துள்ள உத்தனப்பள்ளி பஸ் நிலையம் அருகே இன்று காலை தோட்டக்கலை உதவி இயக்குனர் சிதம்பரம் தலைமையில் பறக்கும்படையினர் வாகன சோதனை ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக கெலமங்கலத்தில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்ற காரை மறித்து சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.3 லட்சத்து 56 ஆயிரத்து 500 பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து காரில் வந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் கிருஷ்ணகிரி மாவட்டம், காந்திநகர் பகுதியை சேர்ந்த தொழிலதிபரான செல்வராஜ் என்பது தெரியவந்தது. அவர் பெட்ரோல் மற்றும் போர்வெல் வாகனமும் சொந்தமாக வைத்திருப்பது தெரிய வந்தது.

    தொழிலதிபரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. அதிகாரியிடம் உரிய ஆவணங்களை காட்டி பின்னர் இந்த பணத்தை கொண்டு செல்லலாம் என்று தொழில திபரிடம் தெரிவித்தனர். #tamilnews
    மகாராஷ்டிர மாநிலத்தில் மின்சாரம் திருடிய தொழிலதிபருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. #PowerTheftCase
    தானே:

    மகாராஷ்டிர மாநிலத்தில் மின்திருட்டை தடுக்கும் வகையில் மின்வாரிய பறக்கும் படையினர் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர். அவ்வகையில் கடந்த 2004ம் ஆண்டு பிவண்டி தாலுகா காரிவலி பகுதியில் உள்ள விசைத்தறி தொழிற்சாலையில் சோதனை நடத்தப்பட்டதில் மின்திருட்டு கண்டறியப்பட்டது.

    மின் மீட்டரை சேதப்படுத்தி, அதன்மூலம் 64802 யூனிட் மின்சாரத்தை முறைகேடாக விசைத்தறி தொழிற்சாலைக்கு பயன்படுத்தியது தெரியவந்தது. திருடப்பட்ட மின்சாரத்தின் மதிப்பு ரூ.2 லட்சத்து 99 ஆயிரத்து 700 ஆகும்.



    இதுதொடர்பாக தொழிற்சாலை உரிமையாளர் காண்டிலால் அம்ருத்லால் ஹரியா மீது மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 14 ஆண்டுகளாக நீடித்த இந்த வழக்கின், வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், மின்திருட்டில் ஈடுபட்ட தொழிலதிபர் காண்டிலாலுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்தார். மேலும் 9 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். #PowerTheftCase
    சிபிஐ அதிகாரி லஞ்சம் பெற்றதாக புகார் கொடுத்த ஐதராபாத் தொழிலதிபருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #CBIVsCBI #BriberyCase #RakeshAsthana #BusinessmanSatishSana
    புதுடெல்லி:

    ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் சதீஷ் சனா சி.பி.ஐ.யிடம் ஒரு புகார் அளித்தார். அதில், இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி மீதான சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் இருந்து தன்னை விடுவிப்பதற்கு இடைத்தரகர் மூலம் சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக கூறியிருந்தார்.

    அந்தப் புகாரின் அடிப்படையில் ராகேஷ் அஸ்தானா, துணை போலீஸ் சூப்பிரண்டு தேவேந்தர் குமார், மனோஜ் பிரசாத், சோமேஷ் பிரசாத் உள்ளிட்டவர்கள் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் தேவேந்தர் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.



    இந்நிலையில், ராகேஷ் அஸ்தானா மீது புகார் அளித்த சதீஷ் சனா, உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் சிபிஐ சிறப்பு இயக்குனர் மீது புகார் அளித்ததால் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அதனால் ஐதராபாத் போலீசார் தனக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

    அவரது மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தொழிலதிபர் சதீஷ் சனாவுக்கு தேவையான பாதுகாப்பை வழங்கும்படி காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேசமயம், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.பட்நாயக் முன்னிலையில் தனது வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும் என்ற சதீஷ் சனாவின் கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.

    மேலும், ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிராக லஞ்ச வழக்கு விசாரணைக்காக அனுப்பப்பட்ட சிபிஐ சம்மனுக்கு இடைக்கால தடை விதிக்கவும் நீதிபதிகள் மறுத்துவிட்டனர். #CBIVsCBI #BriberyCase #RakeshAsthana #BusinessmanSatishSana
    குடியாத்தம் அருகே ரூ.1 கோடி கேட்டு தொழிலதிபரை கடத்தியது தொடர்பாக 6 பேரை கைது செய்த போலீசார் பணம், மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார், பைக்கை பறிமுதல் செய்தனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் நடுப்பேட்டை வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 60). இவருக்கு சொந்தமாக திருமண மண்டபம் உள்ளது. மேலும் பல நிதி நிறுவனங்களில் பங்குதாரராக உள்ளார்.

    கடந்த 6-ந்தேதி காலையில் தொழிலதிபர் சேகர் நடைபயிற்சி முடித்து விட்டு குடியாத்தம் காமராஜர் பாலம் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது காரில் வந்த 6 பேர் கும்பல் துப்பாக்கி முனையில் அவரை கடத்தி சென்றனர். அவரது குடும்பத்தினருக்கு போன் செய்து ரூ.1 கோடி கேட்டுள்ளனர். மேலும் சேகரை சரமாரியாக தாக்கி உள்ளனர்.

    இந்த நிலையில் தொழிலதிபர் குடும்பத்தினர் பல லட்ச ரூபாயை கடத்தல் கும்பலிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கடத்தல் கும்பல் அவரை விடுவித்தனர். பின்னர் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    இது குறித்து குடியாத்தம் போலீசில் புகார் செய்தனர். குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு தலைமையில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயராஜ் உள்ளிட்டோர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    சேகர் கடத்தப்பட்ட அன்று அவரது குடும்பத்தினருக்கு வந்த செல்போன் அழைப்புகளையும், சேகரின் செல்போன் சிக்னல்கள் இருந்த டவர்களும் தீவிரமாக ஆராயப்பட்டது. அப்போது ராணிப்பேட்டையை அடுத்த காரைகூட்ரோடு பகுதி மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூரை அடுத்த என்.ஆர்.பேட்டை பகுதியை காட்டியது.

    மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் குறித்தும் துப்பு கிடைத்தது. இதனையடுத்து நடத்திய விசாரணையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேகர் வீட்டிற்கு தேவையான ஸ்டீல் கிரில் செய்ய குடியாத்தத்தை சேர்ந்த ஒரு வெல்டிங் கடையில் ஆர்டர் கொடுத்து அதற்கான பணத்தை கொடுத்துள்ளார்.

    ஆனால் பலமாதங்கள் ஆகியும் ஸ்டீல் கிரில் செய்து கொடுக்கவில்லை. அப்போது சேகர் வெல்டிங் கடை உரிமையாளர் மூர்த்தி என்பவரை அவதூறாக பேசியுள்ளார்.

    இதனால் கோபமடைந்த மூர்த்தி, சேகரை பழிவாங்க முடிவு செய்து தனது கடை ஊழியருடன் பெங்களூருவை சேர்ந்த கடத்தல் கும்பலுடன் தொடர்பு கொண்டு சேகரை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டனர்.

    இதனையடுத்து பெங்களூருவை சேர்ந்த கடத்தல் கும்பல் சித்தூர் என்.ஆர்.பேட்டையை சேர்ந்த சிலருடன் குடியாத்தத்திற்கு வந்துள்ளனர். பின்னர் வெல்டிங் கடை உரிமையாளர் மூர்த்தியின் காரில் துப்பாக்கி முனையில் சேகரை கடத்தி சென்று ராணிப்பேட்டை வழியாக ஆந்திர மாநிலம் சித்தூர் என்.ஆர்.பேட்டையில் உள்ள மாந்தோப்புக்கு கொண்டு சென்று சரமாரியாக தாக்கி உள்ளனர். பின்னர் அவரது குடும்பத்தினரிடம் இருந்து பணம் பெற்று சேகரை விடுவித்தது தெரியவந்தது.

    இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக குடியாத்தத்தை சேர்ந்த வெல்டிங் கடை உரிமையாளர் மூர்த்தி (39), ஊழியர் பாபு (34) மற்றும் சித்தூர் என்.ஆர்.பேட்டையை சேர்ந்த வினோத்குமார் (24), சங்கர் (25), ராஜாமணி (28), முன்னா என்கிற முனீஷ்கான் (32) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் பணம், ஒரு கார், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய பெங்களூர் பசவேஸ்வரா நகரை சேர்ந்த நவீன், அருண், ரபீக், சித்தூரை சேர்ந்த சுதாகர் ஆகியோரை தேடி வருகின்றனர்.#tamilnews
    ×