search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 114850"

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் மாம்பழ சீசன் தொடங்கியுள்ளது. சந்தையில் ஒரு கிலோ ரூ.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மாந்தோப்புகள் உள்ளன. இந்த வருடம் கடுமையான வறட்சியின் காரணமாக மா விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஆண்டுதோறும் மார்ச் மாத கடைசியில் மாம்பழ சீசன் தொடங்கும்.

    இந்த வருடம் போதுமான ஈரம் பூமியில் இல்லாத காரணத்தால் மா விளைச்சலில் பின்னடைவு ஏற்பட்டு தற்போது அறுவடை தொடங்கியுள்ளது. முதன் முதலாக பாலாமணி மாம்பழ ரகம் நத்தம் சுற்றுவட்டார கிராமங்களில் அறுவடையாகி சந்தைக்கு வந்துள்ளது. இந்த பழம் 1 கிலோ மொத்த விலைக்கு ரூ.50க்கும் அதே பழம் சில்லரையாக ரூ.80க்கும் விற்பனையாகிறது.

    தற்போது வரும் இந்த மாம்பழம் இனிப்பும், துவர்ப்பும் வாசமும் நிறைந்துள்ளது. மருத்துவகுணம் நிறைந்த மாம்பழம் நத்தத்தில் கிராக்கியாக விலைபோகிறது. மா விவசாயிகள் இதுகுறித்து கூறியதாவது இந்த வருடம் இயற்கையின் ஒத்துழைப்பு இல்லாமல் பருவமழை பொய்த்துவிட்டது. ஆங்காங்கே ஆழ்குழாய் கிணறு மூலம் வெளியேற்றப்படும் தண்ணீரால் மட்டுமே மாமரங்கள் பாதுகாக்கப்படுகிறது. அந்த மாமரங்கள் மட்டுமே விளைச்சலை தந்துள்ளது. மற்ற மரங்கள் விளைச்சல் இன்றி காணப்படுகிறது.

    இந்த மாம்பழ சீசன் வருகிற ஜுன் மாதம் வரை நீடிக்கும், பாலாமணியை தொடர்ந்து கல்லாமை, காசா, இமாம்பசந்து, சப் பட்டை உள்ளிட்ட பல்வேறு மாம்பழரகங்கள் அடுத்தடுத்து விற்பனைக்கு வரும். கடந்த சில மாதங்களாக மழையே பெய்யவில்லை. இதனால் மாமரங்களுக்கு தேவையான நீர்ச்சத்து இல்லாமல் பட்டுப்போய்விட்டது. 

    இவ்வாறு அவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

    உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் 2 நாள் மாம்பழ கண்காட்சியினை முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் இன்று துவக்கி வைத்தார். #MangoFest #UP
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று முதல் 2 நாட்களுக்கு மாம்பழ கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 700 வகை மாம்பழங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

    இந்த மாம்பழ கண்காட்சியை முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்மந்திரி யோகி ஆதித்யநாத், நாட்டிலேயே அதிக அளவில் மாம்பழங்களை விளைவிக்கும் மாநிலம் உத்தரப்பிரதேசம் என பெருமிதம் தெரிவித்தார்.

    மேலும், விவசாயிகளின் வருவாய் மற்றும் தேவைகளை இரு மடங்காக உயர்த்த தோட்டக்கலை உதவும் எனவும், இந்த கண்காட்சி அதற்கான முயற்சியாக நடத்தப்படுவதாகவும் அப்போது அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த கண்காட்சியில் முதல்மந்திரி யோகி ஆதித்யநாத்தை கவுரவிக்கும் விதமாக உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய பகுதிகளில் விளையும் மாம்பழ வகைக்கு ‘யோகி மாம்பழம்’ என பெயர் சூட்டப்பட்டது. #MangoFest #UP
    பீகார் மாநிலம் ககாரியா நகரில் மாம்பழம் பறித்துக்கொண்டிருந்த சிறுவன் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பாட்னா:

    பீகார் மாநிலம் ககாரியா நகரில் அமைந்துள்ள மாந்தோப்பில் நேற்று அப்பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தோப்பின் உரிமையாளருக்கு தெரியாமல் மாம்பழம் பறித்துக் கொண்டிருந்துள்ளான். அப்போது, மர்மநபர் ஒருவர் அவனை துப்பாக்கியால் சுட்டதில் தலையில் குண்டு பட்டு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

    தகவல் அறிந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    மாம்பழம் பறித்த சிறுவன் துப்பாக்கியால் தலையில் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    நிபா வைரஸ் பீதியால் ஊத்துக்கோட்டை மாம்பழ மார்க்கெட்டு வியாபாரம் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது. மாம்பழம் வாங்க வியாபாரிகள் தயங்குகின்றனர்.
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள சென்னேரி, நரசாரெட்டி கண்டிகை, புதுகுப்பம், ஆம்பாக்கம், பேரடம், மதனம்பேடு, என்.எம். கண்டிகை, தாராட்சி, நெல்வாய், பாலவாக்கம், கரடிபுத்தூர், செங்கரை, தேர்வாயகண்டிகை, கண்ணன்கோட்டை.

    பூண்டி, சீதஞ்சேரி, அம்மம் பாக்கம், காரணி, சுப்பாநாயுடு கண்டிகை, நந்தனம், கொடியமேபேடு, படயகொடியமேபேடு, வெள்ளாத்துக்கோட்டை, நம்பாக்கம், அரியத்தூர், சென்றான்பாளையம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மாந்தோட்டங்கள் உள்ளன.

    இங்கு பங்கினபள்ளி, ருமானி, ஜவாரி, சில்பசந்த், மல்கோவா, ஹாபிஸ், செந்துரை பழரகங்கள் பயிரிடப்படுகின்றன. இந்த மாம்பழங்களுக்கு கடும் கிராக்கி உண்டு.

    தஷ்போது சீசனையொட்டி ஊத்துக்கோட்டை மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக அதிக அளவில் மாம்பழங்கள் வந்து குவிந்து வருகின்றன.

    இங்கு திருவள்ளூர், பூந்தமல்லி, போரூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், தாம்பரம், சென்னை போன்ற வெகு தூரத்தில் இருந்து வரும் மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரிகள் மாம்பழங்களை வாங்கி செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் நிபா வைரஸ் பழங்களால் பரவுகிறது என்ற பீதியால் பெரும்பாலான பொதுமக்கள் மாம்பழங்களை சாப்பிட தயங்குகின்றனர்.

    இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஊத்துக்கோட்டை மாம்பழ மார்க்கெட்டு தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் விலையும் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது

    பங்கனபல்லி கிலோ ரூ. 20-க்கு விற்கப்படுறது. அதேபோல் ஜவாரி கிலோ ரூ. 25, ருமானி ரூ. 8, செந்துரை ரூ. 8, நாட்டு ரகம் வெறும் ரூ. 5-க்கு விற்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு பங்கனபல்லி ரூ. 40, ஜவாரி ரூ. 50, ருமானி ரூ. 25, செந்துரா ரூ. 30 நாட்டு ரகம் ரூ.20 விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    நிபா வைரஸ் பீதி காரணமாக பொது மக்களிடத்தில் மாம்பழம் வாங்கும் ஆர்வம் குறைந்துள்ளதாக புதுகுப்பத்தை சேர்ந்த மாரி என்ற வியாபாரி தெரிவித்தார்.

    வியாபாரம் இல்லாததால் ஊத்துக்கோட்டை மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வந்த மாம்பழங்கள் அழுகி வருகின்றன. விவசாயிகள் லாரி மற்றும் டிராக்டர்களில் கொண்டு சென்று கொட்டி அழித்து வருகின்றனர். #tamilnews
    மாங்கனியில் 20 வகையான வைட்டமின்களும், தாது சத்துகளும் உள்ளன. இயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை சாப்பிட்டு உடல் நலத்தை மேம்படுத்துங்கள்.
    மாங்கனி முக்கனிகளுள் ஒன்று. தமிழ் இலக்கியத்தில் மாம்பழத்துக்கு தனி சிறப்பு உண்டு. பழனி மலை முருகன் மாங்கனி (ஞானப்பழம்) கிடைக்காததால் தன் பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு சென்ற கதையை நாம் அறிவோம்.

    இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 283 மாம்பழ வகைகள் இருக்கின்றன. இவற்றில் 30 வகைகள் பிரசித்திப் பெற்றவை. நமது தேசிய கனி என்ற சிறப்பை பெற்றது மாங்கனி.

    மாமரம் 300 வருடத்துக்கு பிறகும் கூட கனி தரும். இந்திய மாம்பழ வகைகளில் அல்போன்சா, மல்கோவா, சேலம் குண்டு, சேலம் அல்போன்சா, செந்தூரா, பங்கனப்பள்ளி, நீலம், லாங்க்ரா, காலாப்பட், பாதாமி அல்போன்சா, ராஸ்புரி, கோல, பெத்தரசலு, சுவர்ணரேகா, லாங்க்ரா போன்றவை பிரசித்தி பெற்றவை.



    உலகில் இனிப்பான மாங்கனி பிலிப்பைன்ஸ் நாட்டில் விளையும் காரபோவ் தான். இதில் 14 வகைகள் உண்டு. தமிழகத்தில் ஏழைகளின் மாம்பழம் ருமானி. இதன் விலை குறைவு.

    உலகில் மாம்பழம் அதிகம் விளைவது இந்தியாவில் தான். மாங்கனியில் 20 வகையான வைட்டமின்களும், தாது சத்துகளும் உள்ளன. மாங்கனி கொழுப்பைக் குறைக்கும். முகப்பருக்களை அழிக்கும். முகப்பொலிவு தரும். எலும்புகளை வலுவாக்கும். உடலில் உள்ள நச்சுத்தன்மையை முறியடிக்கும். தாம்பத்ய வாழ்க்கைக்கு சிறந்தது.

    சர்க்கரை நோயாளிகள் தங்கள் உடல் நிலைக்கேற்ப மருத்துவ ஆலோசனை பெற்று மாம்பழம் சாப்பிடலாம். கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை சாப்பிடக் கூடாது. அவை உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும். பருவகாலத்துக்கு ஏற்ப கனிகளை உட்கொள்ள வேண்டும்.

    தற்போது மாம்பழ சீசன் நடந்துகொண்டு இருக்கிறது. இயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை சாப்பிட்டு உடல் நலத்தை மேம்படுத்துங்கள்.

    வக்கீல் ஏ.எஸ்.பிலால், சென்னை
    ரசாயன முறையில் பழங்களை பழுக்கவைப்பது இப்போது அதிகரித்திருக்கிறது. செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் என்னவென்று பார்க்கலாம்.
    ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, மாம்பழம், மாதுளை, கொய்யா, சீத்தா... என நமக்காகக் கொட்டிக்கிடக்கின்றன விதவிதமான பழங்கள். ரசாயன முறையில் பழங்களை பழுக்கவைப்பது இப்போது அதிகரித்திருக்கிறது.

    கால்சியம் கார்பைடு, பாஸ்பரஸ், எத்திலீன் போன்ற ரசாயனங்கள் மூலமாகப் பழங்கள் செயற்கையாகப் பழுக்கவைக்கப்படுகின்றன. இப்படிப் பழுக்க வைப்பதால் அதன் இயல்பு பாதிக்கப்படுகிறது. மாம்பழம் சாப்பிடுவதே அதிலுள்ள மினரல்ஸ், மல்டி வைட்டமின்களுக்காகத்தான். ஆனால், செயற்கையாகப் பழுக்கவைக்கப்பட்டவற்றில் இவை எதுவும் இருக்காது.

    செயற்கையாகப் பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்களில் அதன் இனிப்புத்தன்மை அதிகரித்துவிடும். அதைச் சாப்பிட்டால் அடிக்கடி வயிற்றுப்போக்கு, வயிறு மந்தம், சருமப் பிரச்னைகள், அல்சர் போன்ற பாதிப்புகள் உண்டாகும். கால்சியம் கார்பைட் கலந்த உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டால் புற்றுநோய் (Carcinogenic) உண்டாவதற்கான வாய்ப்புண்டு. எனவே, வாங்கும்போது கவனமாகப் பார்த்து வாங்க வேண்டும்.



    "கால்சியம் கார்பைடால் வயிறு தொடர்பான பிரச்சனைகள், கண் எரிச்சல், சரும அலர்ஜி, வாந்தி போன்றவை உண்டாகலாம். சில நேரங்களில் சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. இதில், ஆர்சனிக் இருந்தால் புற்றுநோய் உண்டாகவும் வாய்ப்பிருக்கிறது. மாம்பழம் சாப்பிட்டதால் வயிற்றுப்போக்கு கோடைக்காலங்களில் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும்.

    அதற்குக் காரணம் இதுபோன்று ரசாயனங்கள்தான். இதனால் உடலில் நீர்வறட்சி ஏற்பட்டு, உடல் வலுவிழக்க வாய்ப்பிருக்கிறது. அதனால் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.
    ×