search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொலையாளி"

    ஊமச்சிகுளத்தில் கட்டிட தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரை கொன்றவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை ஊமச்சிகுளம்- அலங்காநல்லூர் மெயின் ரோட்டில் வாலிபர் ஒருவர் அரிவாள் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதாக போ

    இதையடுத்து ஊமச்சிகுளம் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியனது.

    படுகொலை செய்யப்பட்ட வாலிபர் ஊமச்சிகுளம் அருகே உள்ள திருமால்புரத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி ராஜரத்னம் என்று தெரியவந்தது.

    ராஜரத்னத்துக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தினர் திருவண்ணாமலையில் குடியிருந்து வருகின்றனர்.

    எனவே ராஜரத்னம் சக தொழிலாளியான வீரபாண்டி சரவணன் என்பவருடன் திருமால் புரத்தில் தங்கி கட்டிட வேலை பார்த்தார்.

    ராஜரத்னம் நேற்று தொழில் வி‌ஷயமாக வீரபாண்டி சென்று உள்ளார். இந்த நிலையில் அவரின் உடல் அரிவாள் வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளது.

    கொலை குறித்து போலீசார் கூறும்போது, ராஜரத்னத்தின் இடுப்பு, தலையில் அரிவாள் வெட்டு விழுந்து உள்ளது. அவரை கொன்றது யார்? என்று தெரியவில்லை. ராஜரத்னத்துக்கு குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது. எனவே அவரை யாராவது குடிபோதையில் ஏற்பட்ட சண்டையில் வெட்டிக் கொன்றனரா? என்று விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறினார். கொலையாளிகளை தேடும் பணியில் போலீசார் மும்முரமாக உள்ளனர்.

    வில்லியனூரில் பைனான்ஸ் அதிபரை கொன்றது ஏன் என்பது குறித்து கொலையாளி வாக்குமூலம் அளித்துள்ளார்.
    வில்லியனூர்:

    வில்லியனூர் கணுவா பேட்டைய சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 55). பைனான்ஸ் அதிபர்.

    இவர் நேற்று முன்தினம் இரவு வில்லியனூர் கோட்டைமேடு சுடுகாட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரை அவரது நண்பர்கள் ராஜா, சக்திவேல், சபரி, நடராஜன் ஆகியோர் கொலை செய்தது தெரியவந்தது. 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

    கொலையாளி ராஜா போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    ராமலிங்கம் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். நானும் அவருடன் சேர்ந்து வட்டிக்கு பணம் கொடுத்தேன். இந்த நிலையில் எனக்கு வேண்டிய சிலருக்காக ராமலிங்கத்திடம் இருந்து ரூ.10 லட்சம் வாங்கி கடனாக கொடுத்திருந்தேன்.

    ஆனால் அதை வாங்கியவர்கள் அசலையும், வட்டியையும் தரவில்லை. எனவே ராமலிங்கம் என்னிடம் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார். இதனால் அவரை தீர்த்து கட்ட வேண்டும் என்று முடிவு செய்தேன்.

    இதற்காக எனது நண்பர்கள் சக்திவேல், சபரி, நடராஜன் ஆகியோர் உதவுவதாக தெரிவித்தனர். எனவே ராமலிங்கத்தை கொல்வதற்கு திட்டத்தை உருவாக்கினோம்.

    நேற்று முன்தினம் மதியம் அவரை வில்லியனூரில் உள்ள மதுபாருக்கு அழைத்து சென்று நன்றாக குடிக்க வைத்தோம். அதன்பிறகு தியேட்டருக்கு சென்று சினிமா பார்த்தோம். இரவு மீண்டும் அவரை குடிக்க அழைத்து அங்கு வைத்து கொல்வது என்று திட்டமிட்டோம்.

    நாங்கள் இரவு நேரத்தில் கோட்டைமேடு சுடுகாட்டு பகுதியில் அமர்ந்து மது குடிப்பது வழக்கம். ராமலிங்கத்தை கொல்ல வேண்டும் என்பதற்காக இரும்பு குழாய் ஒன்றை எடுத்து சென்று அங்கு தயாராக வைத்திருந்தோம்.

    இரவு 9 மணி அளவில் ராமலிங்கத்தை அழைத்துக் கொண்டு நான் அங்கு சென்றேன். மற்ற 3 பேரும் பின்னர் வந்தனர். நாங்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மதுகுடித்தோம். அப்போது சக்திவேல், ராஜாவிடம் ஏன் பணம் கேட்டு தொல்லை கொடுக்கிறாய் என்று கூறி ராமலிங்கத்தை அடித்தார்.

    அப்போது மறைத்து வைத்திருந்த இரும்பு குழாயை எடுத்து ராமலிங்கத்தின் தலையில் பலமுறை ஓங்கி அடித்தோம். இதில் மண்டை உடைந்து அந்த இடத்திலேயே இறந்துவிட்டார். உடனே நாங்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டோம். நல்லூர் பகுதியில் பதுங்கி இருந்த எங்களை போலீசார் கைது செய்துவிட்டனர்.

    இவ்வாறு ராஜா வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

    கைதானவர்களிடம் சூப்பிரண்டு ரங்கநாதன், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் விசாரணை நடத்தி இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் அவர்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். #tamilnews
    நெல்லையில் இன்று அதிகாலை போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் 14 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள பக்கப்பட்டி கிராமத்தில் கடந்தமாதம் 26-ந் தேதி முத்துசாமி, அவரது பேரன் சுடலைமணி ஆகிய இருவரும் ஒரு கும்பலால் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக சகோதரர்கள் இரண்டு பேர் ஆலங்குளம் கோர்ட்டில் சரணடைந்தனர்.

    ஆனால் இந்த கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் தலைமறைவாக இருப்பதாகவும், அவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. இதுதொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

    அதில் மேலும் பலருக்கு இரட்டை கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக தனிப்படை போலீசார் அருண்குமார், சின்னதம்பி ஆகிய இரண்டு பேரை தீவிரமாக தேடிவந்தனர். அவர்கள் நெல்லை தச்சநல்லூர் பகுதியில் உள்ள சில அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் ஆதரவுடன் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர் உத்தரவின்பேரில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா, நெல்லை மாநகர போலீஸ் துணைகமி‌ஷனர் சுகுணாசிங் ஆகியோர் மேற்பார்வையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட போலீசார் துப்பாக்கியுடன் இன்று அதிகாலை 3 மணியளவில் தச்சநல்லூர் சத்திரம்புதுக்குளம் பகுதிக்கு சென்றனர்.

    அங்குள்ள கண்ணபிரான், எஸ்டேட் மணி ஆகியோர் வீடுகளை போலீசார் சுற்றி வளைத்து அதிரடி சோதனை நடத்தினார்கள். போலீசார் உள்ளே நுழைந்ததை பார்த்ததும் அங்கு தங்கியிருந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு திசைகளில் தப்பி ஓடினார்கள். போலீசாரும் அவர்களை விரட்டி சென்று பிடித்தனர்.

    இதில் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு மாநில இளைஞரணி செயலாளர் கண்ணபிரான் (வயது 40), எஸ்டேட் மணி (35), குமுளி ராஜ்குமார் (38) அருண், செல்லபாண்டி, கணேசன், விஜி, ஆறுமுகம், ராஜதுரை உள்பட 14 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது பல்வேறு கொலை, அடிதடி உள்பட ஏராளமான வழக்குகள் உள்ளன.

    இவர்களது பெயர் போலீஸ் நிலையங்களில் ரவுடிகள் பட்டியலிலும் உள்ளது. இவர்களிடம் தீவிர விசாரணை நடத்திய போலீசார், அவர்கள் பதுங்கியிருந்த வீடுகளில் சோதனை நடத்தினார்கள். அப்போது வீடுகளின் மறைவிடங்களில் ஏராளமான அரிவாள்களும், நாட்டு வெடிகுண்டுகளும் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    அங்கு ஒரு சொகுசு கார் உள்பட 2 கார்கள் நின்றன. அதிலும் நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் அரிவாள்கள் இருந்தன. அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தம் 9 நாட்டு வெடிகுண்டுகள், 27 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 2 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    போலீசார் இன்று அதிகாலை நடத்திய இந்த அதிரடி சோதனையால் அந்த பகுதி முழுவதும் போர்களம் போல் பரபரப்பாக காணப்பட்டது.

    கைதான 14 ரவுடிகளையும் பாளை ஆயுதப்படை போலீஸ் மைதானாத்தில் உள்ள அலுவலகத்திற்கு கொண்டு சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அவர்களில் பக்கப்பட்டி இரட்டை கொலையில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது? வேறு சதிசெயல்களில் அவர்கள் ஈடுபட்டார்களா? திட்டம் தீட்டினார்களா? என போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வருகிற 10-ந் தேதி, தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவன தலைவர் பசுபதிபாண்டியனின் நினைவு நாள் வருகிறது. இதை முன்னிட்டு சிலரை கொலை செய்யவும், அவர்கள் திட்டம்தீட்டி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகளும் பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் அரிவாள்களுடன் 14 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    டிராக்டர் டிரைவர் படுகொலை வழக்கில் கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மேலூரில் மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

    மேலூர்:

    மேலூர் அருகே உள்ள மேலவளவு போலீஸ் சரகத்துக்குட்பட்ட பட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சபரீஸ்வரன் (வயது 21). டிராக்டர் டிரைவரான இவரை, நேற்று மர்ம கும்பல் சரமாரியாக ஆயுதங்களால் தாக்கியது.

    இதில் பலத்த காயம் அடைந்த சபரீஸ்வரன், மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது குறித்து மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் சபரீஸ்வரன் உடலை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல போலீசார் முயன்றனர். இதற்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் எனக்கூறிய அவர்கள் ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். இதன் காரணமாக அந்தப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து மேலூர், மேலவளவு, பட்டூர் பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையாக குவிக்கப்பட்டனர்.

    இன்று காலை சபரீஸ்வரனின் உறவினர்கள், ஆஸ்பத்திரி முன்புள்ள அழகர்கோவில் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் வந்தார். அவர் மறியலில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்தார்.

    இந்த நிலையில் மேலூர் பஸ் நிலையம் முன்பு 100-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் திரண்டு மறியல் நடத்தினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    போலீசார் கலைந்து செல்ல அறிவுறுத்தியும், மறியல் கைவிடப்பட வில்லை. கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதனைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

    போதைப்பொருள் கடத்தல்காரர்கள், வியாபாரிகளுக்கு மரண தண்டனை விதிக்க தீர்மானித்துள்ள நிலையில் குற்றவாளிகளை தூக்கிலிட்டு கொல்ல ஆள்தேர்வில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது. #Noosework #SriLankacapitalpunishment #twohangmen
    கொழும்பு:

    தீவு நாடான இலங்கையை வெள்ளையர் ஆண்டு வந்த 1815-ம் ஆண்டு வாக்கில் ஆட்சிக்கு எதிராக கலகம் செய்தவர்களுக்கு ராஜதுரோக குற்றச்சாட்டின் பேரில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 

    பின்னர், வெள்ளையர் ஆட்சியில்  சுதந்திரம் அடைந்த பிறகு 1956-ம் ஆண்டு தூக்கு தண்டனையை ரத்து செய்து அந்நாள் பிரதமர் பண்டாரா நாயகே உத்தரவிட்டார். 

    பயங்கரவாத தாக்குதலில் பண்டாரா நாயகே கொல்லப்பட்ட பிறகு 1959-ல் மீண்டும் தூக்கு தண்டனை விதிக்கும் சட்டம் அமலுக்கு வந்தது. பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்ட இந்த சட்டம் 2004-ம் ஆண்டு நீதிபதி சரத் அம்பேப்பிட்டியா சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு இன்று வரை உயிர்ப்புடன் உள்ளது. 

    கடந்த 1976-ம் ஆண்டில் இருந்து இதுவரை இலங்கையில் யாரும் தூக்கிலடப்படவில்லை என்றாலும் மரண தண்டனை விதிக்கப்பட்ட 356 கைதிகள் தூக்கு மர நிழலில் சிறைக்குள் இளைப்பாறி வருகின்றனர். 

    கைதிகளை தூக்கிலிடும் கொலையாளிகள் பணிஓய்வு பெற்று செல்வதால் அந்த வேலைக்கு புதிய நபர்களை தேர்வு செய்ய முடிவெடுத்த இலங்கை சிறைத் துறை கடந்த 2013-ம் ஆண்டு இதற்கான அறிவிப்பை வெளியிட்டது. 

    இந்த வேலைக்கு அப்போது விண்ணப்பித்த 176 பேரில் இறுதியாக 3 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் இருவர் நியமன உத்தரவுக்குப் பின்னர் மாதங்கள் ஆகியும் வேலைக்கு திரும்பவே இல்லை. இதனால் தேர்வுப் பட்டியலில் இருந்த மூன்றாவது தகுதியான நபரை வரவழைத்த சிறைத்துறை அதிகாரிகள் அவருக்கு ஒரு வாரம் பயிற்சி அளித்தனர். 

    தூக்கு மேடையை சுற்றிக்காட்டி தூக்கு கயிறு எவ்வாறு கழுத்தில் இறுகும் என்று விளக்கிக் கூறியபோது அதிர்ச்சி அடைந்த அந்த நபரும் "இந்த வேலை எனக்கு வேண்டாம்" என்று கூறி ஓட்டம் பிடித்தார். 
    இந்நிலையில், போதைப்பொருள் கடத்தல்காரர்கள், வியாபாரிகளுக்கு மரண தண்டனை விதிக்க இலங்கை தீர்மானித்துள்ள நிலையில் குற்றவாளிகளை தூக்கிலிட்டு கொல்ல ஆள்தேர்வில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது.

    இலங்கையில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தவும், போதைப் பொருள் கடத்தல் கும்பல்களை களையெடுக்கவும் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அவ்வகையில் போதைப் பொருள் சார்ந்த குற்றச்செயல்களுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்க முடிவு செய்தது. 

    இந்த முடிவிற்கு இலங்கை அமைச்சரவை சமீபத்தில் ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது. மரண தண்டனையை நிறைவேற்றும் அரசின் முடிவுக்கு சர்வதேச பொதுமன்னிப்பு சபை மற்றும் பல்வேறு மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    இருப்பினும், அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதால், போதைப்பொருள் வழக்கில் கைதாகி, மரண தண்டனையை எதிர்நோக்கி காத்திருக்கும் 18  குற்றவாளிகளுக்கான தண்டனையை நிறைவேற்றுவதற்கு சட்டரீதியான பணிகளை அரசு தொடங்கி உள்ளது. 

    இதனால் புதிதாக இரு கொலையாளியை தேர்வு செய்யும் முயற்சியில் இலங்கை சிறைத்துறையினர் மீண்டும் களமிறங்கியுள்ளனர்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இலங்கை சிறைத்துறை செய்தியாளர் துஷாரா உப்பில்டேனியா, 'மரண தண்டனையை நிறைவேற்ற அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து காலியாக உள்ள இந்த கொலையாளி பணிக்கு ஆள்தேர்வு நடைபெறும்’ என இன்று தெரிவித்துள்ளார்.

    அடுத்த வாரம் இதற்கான விளம்பரம் வெளியிடப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கான தேர்வு நடைபெறும். தகுதியான நபர்கள் பணியமர்த்தப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #Noosework #SriLankacapitalpunishment #twohangmen
    ×