search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓபிஎஸ்"

    ஓட்டுக்கு ரூ.500 தந்தால் வாங்க வேண்டாம் என்றும் ஓபிஎஸ் மகனிடம் ரூ.5 ஆயிரம் கேளுங்கள் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #Elangovan

    பேரையூர்:

    தி.மு.க. கூட்டணி சார்பில் தேனி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.

    இவர் தொகுதிக்குட்பட்ட மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, சேடப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என ஆளும் கட்சியினர் ரூ.500 கொடுத்து வருகிறார்கள். அதை வாங்காதீர்கள். அதற்கு பதிலாக ஓ.பி.எஸ்.மகனிடம் ரூ.5 ஆயிரம் கொடுங்கள் என கேளுங்கள். அவர்கள் கொடுக்கும் பணம் உங்களை ஏமாற்றி கோடி கோடியாய் கொள்ளையடித்தது தான்.


    இத்தனை நாள் உங்களை எப்படி எல்லாம் ஏமாற்றி இருக்கிறார்கள். எனவே ஆளும் கட்சியிடம் பணத்தை வாங்கிக்கொண்டு அவர்களுக்கு நாமம் போடுங்கள்.

    பணம் வாங்கி கொண்டு கை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள். நான் வென்றால் தொகுதியில் அடிப்படை வசதிகள் அனைத்தையும் உடனே செய்து கொடுப்பேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #Elangovan

    பசும்பொன் தேவர் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர். #ThevarJayanthi #EdappadiPalaniswami #OPS
    கமுதி:

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்து ராமலிங்கத் தேவரின் நினைவிடம் உள்ளது. இங்கு தேவரின் 111-வது ஜெயந்தி விழா மற்றும் 56-வது குருபூஜை விழா கடந்த 28-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம் தேவரின் ஆன்மீக விழாவும் 2-ம் நாளில் அரசியல் விழாவும் நடைபெற்றது.

    3-வது நாளான இன்று (30-ந் தேதி) குருபூஜை விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் தேவர் நினைவிடம் வந்து அஞ்சலி செலுத்தினர்.

    நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில் யாகசாலை பூஜைகள் நடந்தன.

    அதன் பின்னர் அஞ்சலி நிகழ்ச்சி தொடங்கியது. அகில இந்திய முக்குலத்தோர் பாசறை தலைவர் சிற்றரசு தலைமையில் தொண்டர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக்கழக நிறுவனத்தலைவர் மூர்த்தி தலைமையில் 500 பேர் ஊர்வலமாக வந்து தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

    தென்நாட்டு மக்கள் கட்சித்தலைவர் கணேசன் தலைமையிலும் மரியாதை செலுத்தப்பட்டது. கமுதி, கடலாடி, முதுகுளத்தூர், தூத்துக்குடி, விளாத்திகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பால்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து வந்தனர்.

    அதைத்தொடர்ந்து காலை 9 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

    அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், டாக்டர் மணிகண்டன், காமராஜ், ஓ.எஸ்.மணியன், டாக்டர் விஜயபாஸ்கர், பாஸ்கரன் மற்றும் அன்வர்ராஜா எம்.பி., மாவட்டச் செயலாளர் முனியசாமி, ஒன்றிய செயலாளர் காளிமுத்து மற்றும் பலர் இதில் பங்கேற்றனர்.

    தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தென் மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன் தலைமையில் டி.ஐ.ஜி.க்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஆளில்லா விமானம் மூலமும் கண்காணிப்பு பணி நடைபெற்றது.



    முன்னதாக மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். #ThevarJayanthi #EdappadiPalaniswami #OPS

    ×