search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாவோயிஸ்டு"

    தேர்தலை புறக்கணிக்குமாறு முண்டக்கையில் உள்ள விவசாயிகள் மற்றும் தோட்ட தொழிலாளர்களுக்கு மாவோயிஸ்டுகள் சுவரொட்டிகள் மற்றும் பேனர்கள் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். #LokSabhaElection #Maoist #BoycottElection
    வயநாடு:

    கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். 23-ந் தேதி, அங்கு வாக்குப்பதிவு நடக்கிறது. இந்நிலையில், அந்த தொகுதிக்கு உட்பட்ட முண்டக்கை நகரில் மாவோயிஸ்டுகள் ஒட்டிய சுவரொட்டிகள் மற்றும் பேனர்கள் நேற்று காணப்பட்டன.

    அதில், தேர்தலை புறக்கணிக்குமாறு முண்டக்கையில் உள்ள விவசாயிகள் மற்றும் தோட்ட தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வாசகங்கள் இடம்பெற்று இருந்தன. இதையடுத்து, அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக துணை ராணுவப்படைகள் வரவழைக்கப்பட்டன. நிலைமையை கண்காணித்து வருவதாகவும், விசாரணையை தொடங்கி உள்ளதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கருப்பசாமி தெரிவித்தார்.

    கடந்த மாதம் 6-ந் தேதி, மாவோயிஸ்டு தலைவர் ஜலீல், துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டதில் இருந்தே வயநாட்டில் போலீசார் உஷார்நிலையில் இருந்து வருகிறார்கள். #LokSabhaElection #Maoist #BoycottElection 
    மாவோயிஸ்டுகளுடன் சண்டையிட்டு வீர மரணம் அடைந்த சிறப்பு அதிரடிப்படை உதவி ஆணையர் பிரமோத் குமார் சத்பதிக்கு அசோக சக்ரா விருது வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. #AshokChakra #OdishaPolice #PramodKumarSatpathy
    புதுடெல்லி:

    ராணுவம், போலீஸ் மற்றும் பாதுகாப்புபடை உள்ளிட்டவற்றில் வீரதீர செயல்கள் புரிந்து, நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களை கவுரவிக்கும் விதமாக அவர்களுக்கு ‘அசோக சக்ரா’ விருது வழங்கப்படுகிறது.

    அந்த வகையில், ஒடிசா மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுடன் சண்டையிட்டு வீர மரணம் அடைந்த சிறப்பு அதிரடிப்படை உதவி ஆணையர் பிரமோத் குமார் சத்பதிக்கு அசோக சக்ரா விருது வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது.

    கடந்த 2008-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந் தேதி இரவில் 500-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் ஒடிசாவின் கன்ஜம் மாவட்டத்துக்குள் நுழைத்து போலீஸ் நிலையங்கள் மற்றும் சோதனை சாவடிகளை சூறையாடினர். இதில் 14 போலீசார் உள்பட 15 பேர் கொல்லப்பட்டனர்.

    அதன் பின்னர் மாவோயிஸ்டுகள் அனைவரும் அங்கு உள்ள காட்டுப்பகுதிக்குள் சென்று பதுங்கி கொண்டனர். அதனை தொடர்ந்து சிறப்பு அதிரடிப்படை உதவி ஆணையர் பிரமோத் குமார் சத்பதி, தன்னுடைய படை வீரர்களுடன் அங்கு சென்று மாவோயிஸ்டுகளை சுற்றிவளைத்தார். அப்போது மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டதில் பிரமோத் குமார் சத்பதி வீர மரணம் அடைந்தார்.

    அவருடைய ஒப்பற்ற தியாகத்தையும், வீரத்தையும் கவுரவிக்கும் விதமாக அவருக்கு இந்த விருது வழங்கப்படுவதாக உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  #AshokChakra #OdishaPolice #PramodKumarSatpathy
    மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்து ஈரோடு மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    ஈரோடு:

    தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடக மாநில எல்லை பகுதியிலும் வனப்பகுதியிலும் மாவோயிஸ்டுகள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள்.

    குறிப்பாக கேரள மாநில எல்லையிலும் வனப்பகுதியிலும் இவர்களின் நடமாட்டம் அதிகம் உள்ளது. கோவையில் இவர்களின் நடமாட்டம் குறித்து 24 மணி நேரமும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    இதேபோல் மேற்கு தொடர்ச்சி மலை முழுவதும் மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்து அந்தந்த மாவட்ட போலீசார் ரகசிய விசாரணையும் நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்ட வனப் பகுதிகளான சத்தியமங்கலம், கடம்பூர் ஆகிய வனப் பகுதிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின்பேரில் மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்ட வனப்பகுதி தவிர மாவட்டத்தின் எந்த ஒரு பகுதியிலும் மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் கிடையாது என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் சென்னையில் இருந்து ஈரோடு போலீசாருக்கு ஒரு ரகசிய கடிதம் வந்ததாகவும் அதில் ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் தங்கி இருப்பதாகவும், அவர்களால் எந்த அபாயமும் ஏற்படலாம், கொரில்லா தாக்குதலிலும் ஈடுபடலாம் எனவும் கூறப்பட்டிருந்ததாக கூறப்பட்டிருந்தது.

    இதனால் ஈரோடு மாவட்ட போலீசார் இடையே ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது.

    இது குறித்து கருங்கல் பாளையம் போலீசாரிடம் கேட்டபோது, “இது குறித்து நாங்கள் விசாரிக்கவில்லை. கியூ பிராஞ்ச் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களிடம் தான் கேட்க வேண்டும். நாங்களும் எங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடவடிக்கை எடுத்து கொண்டிருக்கிறோம்” என்று கூறினர்.

    ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் இருப்பது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனிடம் இன்று மாலைமலர் நிருபர் கேட்டபோது அதற்கு அவர் கூறியதாவது:-

    எனது பார்வைக்கும் இது வந்தது. மாவோயிஸ்டு ஊடுருவி இருப்பதாகவும் அவர்கள் கொரில்லா தாக்குதல் நடத்த இருப்பதாகவும் சொன்னார்கள். இதில் எவ்வித உண்மையும் இல்லை.

    மேலும் இதுபற்றி கியூ பிராஞ்சு போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளார்கள். நாங்களும் மாவட்டம் முழுவதும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சந்தேகப்படும் நபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். இதுவரை மாவோயிஸ்ட் யாரும் சிக்கவில்லை.

    வனப்பகுதிகளான சத்தியமங்கலம் தாளவாடி பகுதிகளிலும் 24 மணி நேரம் போலீசார் விழிப்புடன் உள்ளனர்.

    இவ்வாறு எஸ்.பி.சக்தி கணேசன் கூறினார்.
    பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் சதித்திட்டம் தீட்டியது தொடர்பாக, மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். #NationwideRaid #Maoist
    ஐதராபாத்:

    மராட்டிய மாநிலம் புனேவில் கடந்த ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி, இடதுசாரி ஆதரவாளர்கள் ஒரு மாநாடு நடத்தினர். அதில் பேசியவர்கள், ஆவேசமாக பேசினர்.

    அதைத்தொடர்ந்து, அம்மாநிலத்தின் கோரேகான்-பீமா கிராமத்தில் வன்முறை வெடித்தது. மராத்தா சமூகத்தினரும், தலித் சமூகத்தினரும் மோதிக் கொண்டனர். வன்முறையை தூண்டும்வகையில் பேசியதாக கடந்த ஜூன் மாதம் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் டெல்லியில் பிடிபட்ட ஒருவரிடம் கைப்பற்றப்பட்ட கடிதத்தில், “ராஜீவ் காந்தி கொலை பாணியில், பிரதமர் மோடியை கொலை செய்வோம்” என்று மாவோயிஸ்டுகள் எழுதி இருந்தனர். இதன்மூலம், மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் சதித்திட்டம் தீட்டி இருப்பது தெரியவந்தது.



    அந்த கடிதத்தில், ஐதராபாத்தை சேர்ந்த புரட்சிகர இடதுசாரி எழுத்தாளர் பி.வரவர ராவின் பெயர் இருந்தது. இந்நிலையில், அவரை கைது செய்ய புனே போலீசார், நேற்று ஐதராபாத்துக்கு வந்தனர். ஐதராபாத் போலீசாரின் ஒத்துழைப்புடன், வரவர ராவின் மருமகனும், மூத்த பத்திரிகையாளருமான கே.வி.குர்மாநாத், புகைப்பட நிபுணர் கிராந்தி ஆகியோர் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

    பின்னர், வரவர ராவின் வீட்டுக்கு சென்று அவரை கைது செய்தனர். அவரை ஐதராபாத் கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு, புனேவுக்கு அழைத்து சென்றனர். புனே கோர்ட்டில் இன்று அவரை ஆஜர்படுத்துகிறார்கள்.

    இதுபோல், மாவோயிஸ்டு ஆதரவாளர்களை குறிவைத்து தெலுங்கானா, மராட்டியம், அரியானா, ஜார்கண்ட், டெல்லி, கோவா, சத்தீஷ்கார் என மொத்தம் 7 மாநிலங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. அரியானா மாநிலம் பரிதாபாத்தில் நடந்த சோதனையில், இடதுசாரி சிந்தனையாளரும், வக்கீலுமான சுதா பரத்வாஜ் கைது செய்யப்பட்டார்.

    மும்பையில் நடந்த சோதனையில், மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் வெர்னன் கோன்சல்வ்ஸ், அருண் பெரேரா, டெல்லியில் நடந்த சோதனையில் சிவில் உரிமை ஆர்வலர் கவுதம் நவலகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த நடவடிக்கைகளுக்கு, காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஜெய்பால் ரெட்டி கூறுகையில், “இந்த கைதை கண்டிக்கிறோம். உரிய குற்றச்சாட்டு இல்லாமல், எந்த மனித உரிமை ஆர்வலரையும் கைது செய்யக்கூடாது” என்றார்.

    மேலும், பெண் எழுத்தாளர் அருந்ததி ராய், பிரபல வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குகா உள்ளிட்டோர் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.  #NationwideRaid #Maoist
    கேரளாவில் இருந்து தப்பிய பெண் மாவோயிஸ்டு ஊடுருவதை தடுக்க கேரளாவை ஒட்டியுள்ள கோவை மாவட்ட எல்லைப் பகுதிகளில் சோதனை சாவடி அமைத்து போலீசார் விடிய, விடிய சோதனை மேற்கொண்டனர்.
    கோவை:

    கேரள மாநிலம் வயநாடு, மலப்புரம், பாலக்காடு மாவட்ட வன பகுதிகளில் மாவோயிஸ்டுகள் கும்பலாக பதுங்கி உள்ளனர். இவர்களில் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாவோயிஸ்டுகள் சிகிச்சைக்காக தமிழகத்துக்குள் ஊடுருவ இருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    குறிப்பாக கர்நாடகாவை சேர்ந்த பெண் மாவோயிஸ்டு சுந்தரி உள்பட சில மாவோயிஸ்டுகள் காரில் தப்பித்துள்ளதாகவும், அவர்கள் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி வழியாக தமிழகத்துக்குள் ஊடுருவக்கூடும் என்றும் கோவை மாவட்ட போலீசாருக்கு தகவல் அளித்தனர்.


    இதைத்தொடர்ந்து கேரளாவை ஒட்டியுள்ள கோவை மாவட்ட எல்லை பகுதிகளில் அதிரடி வாகன சோதனை நடத்தப்பட்டது. ஆனைக்கட்டி, முள்ளி, மாங்கரை, பில்லூர் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள சோதனை சாவடிகளில் தடுப்பு அமைத்து வாகனங்களை தீவிரமாக சோதனை செய்தனர்.

    குறிப்பாக கேரள பதிவு எண் கொண்ட வாகனங்களில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. வாகன ஓட்டிகளின் விவரம் முழுமையாக சேகரிக்கப்படுகிறது. சுந்தரி உள்பட தேடப்படும் மாவோயிஸ்டுகள் சிலரின் புகைப் படங்கள் செக்போஸ்டில் பணியாற்றும் போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதை வைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம், காரமடை கோப்பனாரி வனத்திலும் இங்குள்ள அரக்கடவு, எழுத்துக்கல் புதூர் உள்பட 50-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களிலும் தீவிர சோதனை நடத்தினர்.

    ஆனைக்கட்டியை ஒட்டியுள்ள காட்டுக்குழிக்காடு, ராயர் ஊத்துப்பதி, கம்பு கண்டி மற்றும் அட்டுக்கல், சேம்புக்கரை, தூமனூர் உள்ளிட்ட கிராமங்களில் போலீசார் சாதாரண உடையில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதிகளில் புதிய நபர்களின் நடமாட்டம் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    இந்த சோதனை நேற்று பிற்பகலில் தொடங்கி விடிய, விடிய நடந்தது. இன்று 2-வது நாளாக நீடித்தது. எல்லை வழியாக வரும் அரசு பஸ்களையும் நிறுத்தி சந்தேகத்திற்கிடமாக யாராவது இருக்கிறார்களா? என சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் சோதனையில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் 40 பேர், மாவட்ட போலீசார் 50 பேர், ஆயுதப்படை போலீசார் என மொத்தம் 100-க்கும் மேற்பட்ட போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
    பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு எதிரான ஆயுதமாக மாவோயிஸ்டு பயங்கரவாதிகளை சில அரசியல் கட்சிகள் பயன்படுத்தி வருகின்றன என்று அருண்ஜெட்லி குற்றம் சாட்டியுள்ளார். #BJP #ArunJaitley

    புதுடெல்லி:

    பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் திட்டமிட்ட திடுக்கிடும் தகவலை போலீசார் வெளியிட்டுள்ளனர். இத்தகவல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக மத்திய மந்திரி அருண்ஜெட்லி அரசியல் கட்சிகள் மீது குற்றம் சாட்டியுள்ளார். அவர் தனது வலை தள பக்கத்தில் கூறிதாவது:-

    கடந்த சில நாட்களாக மாவோயிஸ்டு பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்து இருப்பதை உணர முடிகிறது. அந்த அமைப்பின் ஆதிக்கம் இல்லாத பகுதிகளிலும் பயங்கரவாத சம்பவங்கள் நடந்து வருகின்றன. இது தேசத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.

     


    பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு எதிரான ஆயுதமாக மாவோயிஸ்டு பயங்கரவாதிகளை சில அரசியல் கட்சிகள் பயன்படுத்தி வருகின்றன. இந்த நடவடிக்கைகள் சரியானதல்ல.

    ஆட்கொல்லி புலியின் மீது சவாரி செய்வது ஆபத்தாகத்தான் முடியும் என்பதை அக்கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். மாவோயிஸ்டு பயங்கரவாதத்தை வேரறுப்பது குறித்து அனைத்து தரப்பினரும் சிந்திக்க வேண்டும். ஏனெனில் இது மிகத் தீவிரமான வி‌ஷயம்.

    இவ்வாறு அருண்ஜெட்லி குறிப்பிட்டுள்ளார். #BJP #ArunJaitley

    ×