search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வனத்துறையினர்"

    ஒகேனக்கல்லில் புகுந்த சிறுத்தை குட்டியை உயிருடன் பிடிக்க முடிவு செய்த வனத்துறையினர் சிறுத்தை சென்ற பகுதியில் வலைகளை கட்டி பிடிக்க முயன்று வருகின்றனர்.
    தர்மபுரி:

    ஒகேனக்கல் வனத்தையொட்டி ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் நீரேற்று நிலையம் உள்ளது.

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த நிலையத்தில் ஊழியர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் இருப்பார்கள்.

    இங்கு நேற்று முன்தினம் இரவு சிறுத்தை ஒன்று புகுந்தது. இருள் சூழ்ந்து இருந்ததால் அங்கிருந்த ஊழியர்கள் நாய் என நினைத்து அதை விரட்டியபோது அது அப்பகுதியில் இருந்த வெளிச்சத்தின் வழியாக சீறிப்பாய்ந்து ஓடியது.

    அப்போது தான் அது சிறுத்தை என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்த ஊழியர்கள், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து அங்கு வந்த ஒகேனக்கல் வன அலுவலர் கேசவன் தலைமையிலான வனத்துறையினர், நீரேற்று நிலையத்தின் உள்ளே சிறுத்தையை தேடினர். ஆனால் சிறுத்தை வனத்துறையினரின் தேடுதலில் சிக்கவில்லை.

    இதனால் சிறுத்தையை உயிருடன் பிடிக்க முடிவு செய்த வனத்துறையினர் சிறுத்தை சென்ற பகுதியில் வலைகளை கட்டி பிடிக்க முயன்று வருகின்றனர்.

    நீரேற்று நிலையத்தில் மழைநீர் வெளியேறும் வகையில் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    அந்த பகுதியில் புதர்கள் மண்டி கிடக்கிறது. எனவே சிறுத்தை அக்குழாயில் பதுங்கி இருக்க வாய்ப்பு உள்ளது. சிறுத்தையை பிடிக்க வலைகள் கட்டப்பட்டுள்ளன. சிறுத்தையை பார்த்த ஊழியர்கள் கூறிய தகவல் அடிப்படையில் சுமார் 10 கிலோ எடை கொண்ட குட்டி சிறுத்தையாக இருக்கலாம்.

    ஒகேனக்கல் பகுதியில் தற்போது நிலவும் கடும் வறட்சியால் தண்ணீர் மற்றும் உணவு தேடி வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விடுகின்றன. இதே போல் தான் சிறுத்தையும் வந்திருக்கலாம். சிறுத்தை ஊருக்குள் புகுந்து விடாமல் இருக்க கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளோம்.

    சிறுத்தை பிடிபட்ட பின்னர் அதை அடர்ந்த காட்டு பகுதியில் கொண்டு போய் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    கர்நாடக மாநிலத்தில் ஒரு வீட்டினுள் புகுந்து, வீட்டில் இருந்தவர்களை உயிர் பயத்தில் ஓடவிட்ட ராஜ நாகத்தை வனத்துறையினர் பிடித்து காட்டில் விட்டனர். #KingCobra
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் ஷிவமோகா மாவட்டம், மண்டகாடி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டினுள் நேற்று கொடிய விஷம் கொண்ட ராஜநாகப் பாம்பு புகுந்துள்ளது. வீட்டிற்குள் இருந்தவர்கள் பாம்பு சீறுவதைப் பார்த்ததும், உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக பதறியடித்து வெளியேறினர். பின்னர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அனைவரும் அந்த வீட்டின் முன் திரண்டனர். பின்னர் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து வனத்துறையினர் அங்கு வந்து பாம்பை பிடிக்க முயன்றனர். அவர்களைக் கண்டதும் பாம்பு சீறியது. இருப்பினும் உரிய பாதுகாப்புடன் தைரியமாக சென்று பாம்பை பிடித்த வனத்துறையினர், காட்டிற்குள் கொண்டு விட்டனர்.



    பிடிபட்ட ராஜ நாகம் கொடிய விஷத்தன்மை கொண்டது என்றும் இந்த பாம்பை பிடிப்பது கடினமான பணி என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர். #KingCobra

    ராமேஸ்வரத்தில் உள்ள மன்னார் வளைகுடாவில் பிளாஸ்டிக் பொருட்களை சுத்தம் செய்யும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். #Forestofficials #GulfofMannar
    ராமேஸ்வரம்:

    இந்தியப் பெருங்கடலில் லட்சத்தீவுக் கடலின் பகுதியில் மன்னார் வளைகுடா அமைந்துள்ளது. இது இந்தியாவின் தென்கிழக்கு முனைக்கும் இலங்கையின் மேற்குக் கரைக்கும் இடையில் 160 முதல் 200 கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. தென்னிந்தியாவில் உள்ள தாமிரபரணி ஆறும் இலங்கையில் உள்ள அருவி ஆறும் மன்னார் வளைகுடாவில் கலக்கின்றன.

    இப்பகுதியினை சுற்றிலும் மீன்களின் இருப்பிடமாகத் திகழும் பவளப் பாறைகள் அதிகளவில் காணப்படுகின்றன. 104 வகை கடின பவளப்பாறைகள் மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படுகின்றன.

    இந்நிலையில் மன்னார் வளைகுடா பகுதியில்  மக்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்கள் காற்றில் மிதந்து கடலின் அடியில் சென்று ஆழத்தில் குப்பையாக படிந்துள்ளது. இதனால் கடல் வெகுவாக மாசுப்படுகிறது.

    இதையடுத்து ராமேஸ்வரத்தைச் சேர்ந்த, ஸ்கூபா டைவிங் நன்கு தெரிந்த வனத்துறை அதிகாரிகள் கடலுக்கடியில் ஆழமாக சென்று,  படிந்திருக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர். #Forestofficials #GulfofMannar










    ராமநாதபுரம் மாவட்டம் தாமோதரன்பட்டினம் அருகே கடல் பகுதியில் மீனவர்கள் வலையில் அபூர்வ ஆமை சிக்கியது.
    தொண்டி:

    ராமநாதபுரம் மாவட்டம் தாமோதரன்பட்டினம் அருகே கடல் பகுதியில் சில மீனவர்கள் நேற்று காலை மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த மீனவர்களின் வலையில் அபூர்வ வகை கடல் ஆமையான அழுங்காமை ஒன்று சிக்கியுள்ளது.

    இதனைக்கண்ட மீனவர்கள் உடனடியாக இதுபற்றி தொண்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து வனச்சரகர் சதீஷ் உத்தரவின் பேரில் தொண்டி வனவர் சுதாகர், வன காப்பாளர் ஜோசப், வேட்டை தடுப்பு காவலர்கள் செல்வராஜ், ராஜேசுவரன் ஆகியோர் அங்கு விரைந்து சென்று மீனவர்களின் வலையில் சிக்கிய ஆமையை பாதுகாப்பாக மீட்டனர். அதன் பின்னர் வனத்துறையினர் அந்த ஆமையை ஆழமான கடல் பகுதிக்கு கொண்டு சென்று மீண்டும் கடலில் விட்டனர்.
    கிருஷ்ணகிரியில் தோட்டத்தில் புகுந்த 11 அடி மலைப்பாம்பை வனத்துறையில் பிடித்து வன பகுதியில் கொண்டு விட்டனர்.
    வேப்பனஅள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா, பட்டா குருபரபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சித்தப்பா (வயது50). இவரது தோட்டத்தில் திடீரென சத்தம் கேட்டது. அப்போது அந்த பகுதியில் அவர் சென்று பார்த்த போது 11 அடி நீள மலைப்பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

    இது குறித்து வனத்துறையினருக்கு  தகவல் கொடுத்தனர். அதன் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாம்பு பிடிக்கும் குச்சியை வைத்து அந்த மலைப்பாம்பை பிடித்தனர். பின்னர் செப்டிபள்ளி வன பகுதியில் கொண்டு விட்டனர்.

    தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே காலில் அடிபட்டு கிடந்த மானை வனத்துறையினர் சிகிச்சை அளித்து காட்டில் கொண்டு விட்டனர்.
    இண்டூர்:

    தருமபுரி மாவட்டம் அரூர், பாப்பாரப்பட்டி, தொப்பூர் ஆகிய வனப்பகுதிகளில் மான், காட்டெருமை போன்ற வனவிலங்குகள் உலாவி வருகின்றன. வனப்பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மழை இன்றி ஏரி மற்றும் குளங்கள் வறண்டு கிடக்கின்றன. இதனால் வனப்பகுதிகளில் உள்ள வனவிலங்குகள் அடிக்கடி தண்ணீர் மற்றும் இரையை தேடி நகருக்குள் புகுந்து விடுவது வழக்கம் தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள பேடரஅள்ளி கிராமத்தில் இன்று காலில் அடிப்பட்டு காயமடைந்த நிலையில் மான் ஒன்று மயங்கி கிடந்தது.

    இதனை அப்பகுதியில் இருந்த நாய்கள் ஒன்று திரண்டு வந்து குரைத்தது. சத்தம் கேட்டு வெளியே வந்த அந்த பகுதி மக்கள் நாய்களை விரட்டி விட்டனர். இதுகுறித்து உடனே அவர்கள் இண்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து மானை மீட்டு பாப்பாரப்பட்டி அரசு கால்நடை மருத்துவ மனைக்கு மானை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அடிப்பட்ட மானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் அங்கு வந்த வனசரக அலுவலர் சுப்பிரமணி மானை மீட்டு மொரப்பூர்- பாப்பாரப்பட்டி இடையே உள்ள வனப்பகுதியில் விட்டனர்.
    ×