search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டென்னிஸ்"

    • போட்டியில் அணிந்திருந்த ஆடையால் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளார்.
    • கால் சட்டையை சுற்றிலும் அலங்கரிப்பு வேலைகள் செய்யப்பட்டு இருந்தன.

    இரண்டு ஆண்டுகள் கழித்து நவாமி ஒசாகா அமெரிக்க ஓபன் தொடரில் களமிறங்கினார். ஜெலனா ஒஸ்டாபென்கோவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற நவாமி இந்த போட்டியில் அணிந்திருந்த ஆடையால் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளார்.

    நியான் கிரீன் நிற ஆடை அணிந்து களத்திற்குள் என்ட்ரி கொடுத்த நவாமி போட்டி துவங்குவதற்கு முன்பே அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். வழக்கமான டென்னிஸ் ஆடையை சற்று மறு வடிவமைப்பு செய்த நவோமா, ஜாக்கெட்-ஐ அலங்கரித்து அணிந்திருந்தார். இத்துடன் கால் சட்டையை சுற்றிலும் அலங்கரிப்பு வேலைகள் செய்யப்பட்டு இருந்தன.

    இவர் அணிந்திருந்த ஆடையை பின்புறம் இருந்து பார்த்தால் பட்டாம்பூச்சி போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு ஜாக்கெட்டில் நீண்ட டை இணைக்கப்பட்டு இருந்தது. இதே போல் கால் சட்டையில் சிறு சிறு மடிப்புகள் கூடுதலாக இணைக்கப்பட்டு இருந்தன. தனது ஆடை போட்டியில் எந்த இடையூறும் ஏற்படுத்தாத வகையில் பார்த்துக் கொண்ட நவாமி வெற்றி வாகை சூடினார்.



    • ஜோகோவிச் 24 கிராண்ட் சிலாம் பட்டம் வென்று சாதனை புரிந்துள்ளார்.
    • பெண்கள் பிரிவில் இகா ஸ்வியாடெக் சபலென்கா, ரைபகினா, கோகோ கவூப் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

    நியூயார்க்:

    ஒவ்வொரு ஆண்டும் 4 கிராண்ட்சிலாம் டென்னிஸ் போட்டிகள் நடைபெறும். இந்த ஆண்டு நடந்த பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் பட்டத்தை அல் காரஸ் (ஸ்பெயின்) வென்றார். ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை சின்னர் (இத்தாலி) கைப்பற்றினார். பெண்கள் பிரிவில் சபலென்கா (பெலாரஸ்) ஆஸ்திரேலிய ஓபனையும், இகா ஸ்வியாடெக் (போலந்து) பிரெஞ்சு ஓபன் பட்டத்தையும், பார்பரா கிரஜ்கோவா (செக் குடியரசு) விம்பிள்டன் பட்டத்தையும் வென்றார்கள்.

    ஆண்டின் கடைசி கிராண்ட்சிலாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நாளை (26-ந்தேதி) தொடங்குகிறது. செப்டம்பர் 8-ந் தேதி வரை இந்த போட்டி நடக்கிறது.

    இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஜோ கோவிச் (செர்பியா), சின்னர் அல்காரஸ், அலெக் சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி), மெட்வதேவ், ரூப லெவ் (ரஷியா) போன்ற முன்னணி வீரர்கள் பங்கேற்கிறார்கள்.

    ஜோகோவிச் 24 கிராண்ட் சிலாம் பட்டம் வென்று சாதனை புரிந்துள்ளார். 25-வது பட்டத்துக்காக அவர் காத்திருக்கிறார்.

    பெண்கள் பிரிவில் இகா ஸ்வியாடெக் சபலென்கா, ரைபகினா, கோகோ கவூப் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

    • ஜோகோவிச் 7-6 (7-3), 7-6 (7-2) என்ற செட்களில் ஸ்பெயின் வீரர் அல்காரஸை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.
    • தனது மகளை கட்டியணைத்து ஜோகோவிச் அழுத காட்சிகள் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் விளையாட்டு என்பதையும் கடந்து வீரர்களின் ஆத்மார்த்தமான உணர்வுகளை வெளிக்கொண்டு வருவதாக உள்ளது. வெற்றியாக இருந்தாலும் தோல்வியாக இருந்தாலும் அது அழுகையாக வெளிப்படுகிறது. இது ரசிகர்கள் மீதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறுவதில்லை.

    அந்த வகையில் செர்பிய நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் நட்சத்திரமான நோவக் ஜோகோவிச் மற்றும் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் இடையே நடந்த போட்டியானது அத்தகையதொரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நேற்று நடந்த இந்த டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஜோகோவிச் 7-6 (7-3), 7-6 (7-2) என்ற செட்களில் ஸ்பெயின் வீரர் அல்காரஸை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். கார்லோஸ் அல்காரஸ் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

    சில மாதங்களுக்கு முன் நடந்த விம்பிள்டன் இறுதிப்போட்டியில் அல்காரஸிடம் ஜோகோவிச் தோற்ற நிலையில் தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த போட்டி அமைந்தது. இது இரு வீரர்களையும் உணர்ச்சி வசப்பட வைப்பதாக அமைந்தது.

    பார்வையாளர்கள் இடத்தில் இருந்த தனது மகளை கட்டியணைத்து ஜோகோவிச் அழுத காட்சிகள் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கிடையில் தோல்வியால் கார்லோஸ் அல்காரஸ் கண்கலங்கும் காட்சிகளும் ரசிகர்களைக் கலங்க வைத்துள்ளது. 

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதியில் செர்பியா வீரர் ஜோகோவிச் வென்றார்.
    • ஸ்பெயின் வீரர் அல்காரஸ் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரசுடன் மோதினார்.

    இதில் ஜோகோவிச் 7-6 (7-3), 7-6 (7-2) என்ற செட்களில் வென்று தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    • பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதியில் சீன வீராங்கனை வென்றார்.
    • குரோசியா வீராங்கனை வெகிக் தோல்வி அடைந்தார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சீனா வீரங்கனை குயின்வென் ஜெங், குரோசியா வீராங்கனை வெகிக்குடன் மோதினார்.

    இதில் ஜெங் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் எளிதில் வென்று தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். குரோசிய வீராங்கனை வெகிக் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    • டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் கேத்தரினா மற்றும் மச்சாக் ஜோடி தங்கம் வென்றது
    • தங்கம் வென்றதும் ஒருவரையொருவர் கட்டியணைத்து முத்தமிட்டுக் கொண்டனர்.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் செக் குடியரசின் கேத்தரினா மற்றும் மச்சாக் ஜோடி 6-2, 5-7, 10-8 என்ற செட் கணக்கில் சீனாவில் வாங் சின்யு மற்றும் ஜாங் ஜிசென் ஜோடியை தோற்கடித்து தங்கம் வென்றனர்.

    தங்கம் வென்றதும் ஒருவரையொருவர் கட்டியணைத்து முத்தமிட்டுக் கொண்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    2021 ஆம் ஆண்டு முதல் கேத்தரினாவும் மச்சாக்கும் காதலித்து வந்தனர். பாரிஸ் ஒலிம்பிக் தொடங்குவதற்கு சில வாரங்கள் முன்பு அவர்கள் இருவரும் பிரேக் அப் செய்து கொண்டனர். பிரேக் அப் செய்திருந்தபோதும் நாட்டுக்காக கலப்பு இரட்டையர் பிரிவில் விளையாட இருவரும் சம்மதித்தனர்.

    பிரேக் அப் செய்து கொண்ட காதல் ஜோடி ஒலிம்பிக்கில் தங்கம் வென்று முத்தமிட்டுக் கொண்டது இணையத்தில் பேசுபொருளானது.

    தங்கம் வென்ற பின்பு பேசிய கேத்தரினா, " நீங்கள் குழப்பம் அடைவதை பார்க்க நாங்கள் விரும்புகிறோம். எங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை" என்று சிரித்தபடியே தெரிவித்தார்.

    இதனையடுத்து தங்களின் உறவு குறித்து பேசிய மச்சாக், "டாப் சீக்ரெட்" என்று கிண்டலாக தெரிவித்தார்.

    • ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலியா ஜோடி வென்றது.
    • இங்கிலாந்து ஜோடி தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றது.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன்-ஜான் பீர்ஸ் ஜோடி, இங்கிலாந்தின் ராஜீவ் ராம்-ஆஸ்டின் கிராஜிசெக் ஜோடியுடன் மோதியது.

    இதில் ஆஸ்திரேலியா ஜோடி 6-7 (6-8), 7-6 (7-1), 10-8 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றி அசத்தியது.

    இதில் மேத்யூ எப்டன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஜோகோவிச்சிடம் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜோகோவிச் முதன்முறையாக ஒலிம்பிக் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
    • விம்பிள்டன் இறுதிப் போட்டியில் அல்கராஸிடம் நேர் செட்களில் ஜோகோவிச் தோல்வியடைந்தார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் உடன் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் மோதவுள்ளார்.

    அரையிறுதி போட்டியில் கனடா வீரர் பெலிக்ஸ் ஆகரை 6-1, 6-1 என்ற நேர் செட்களில் எளிதில் வென்று கார்லோஸ் அல்காரஸ் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தினார்.

    மற்றொரு அரையிறுதி போட்டியில் இத்தாலியின் லோரென்சோ முசெட்டியை 6-4, 6-2, என்ற நேர் செட்களில் வென்று நோவக் ஜோகோவிச் இறுதிசுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

    25 க்ராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ஜோகோவிச் முதன்முறையாக ஒலிம்பிக் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

    இந்த ஆண்டின் தொடக்கத்தில், விம்பிள்டன் தொடரின் இறுதிப் போட்டியில் அல்கராஸிடம் நேர் செட்களில் ஜோகோவிச் தோல்வியடைந்தார்.

    இந்நிலையில் ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் அல்காரஸை வென்று ஜோகோவிச் பழி தீர்ப்பாரா என்று அவரது ரசிகர்கள் இப்போட்டியை ஆர்வத்துடன் உற்று நோக்கியுள்ளனர்.

    வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இத்தாலியின் லோரென்சோ முசெட்டி மற்றும் கனடாவின் பெலிக்ஸ் ஆகர் ஆகியோர் போட்டி போடுகின்றனர்.

    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் போலந்து வீராங்கனை வென்றார்.
    • இதன்மூலம் இகா ஸ்வியாடெக் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், ஸ்லோவாகியா வீராங்கனை அன்னா கரோலினாவுடன் மோதினார்.

    இதில் ஸ்வியாடெக் 6-2, 6-1 என்ற நேர் செட்களில் எளிதில் வென்று வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தினார்.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் வென்றார்.
    • கனடா வீரர் பெலிக்ஸ் ஆகர் தோல்வி அடைந்தார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், கனடா வீரர் பெலிக்ஸ் ஆகருடன் மோதினார்.

    இதில் அல்காரஸ் 6-1, 6-1 என்ற நேர் செட்களில் எளிதில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தினார்.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் செர்பியா வீரர் ஜோகோவிச் வென்றார்.
    • ஸ்பெயின் வீரர் அல்காரஸ் ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறினார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், கிரீஸ் வீரர் சிட்சிபாசுடன் மோதினார்.

    இதில் ஜோகோவிச் 6-3, 7-6 (7-3) என்ற செட்களில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெறும் அரையிறுதியில் ஜோகோவிச் இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டியுடன் மோதுகிறார்.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் வென்றார்.
    • ஜெர்மனி வீரர் ஸ்வரேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் டாமி பாலுடன் மோதினார்.

    இதில் அல்காரஸ் 6-3, 7-6 (9-7) என்ற செட்களில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ், இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டியிடம் 5-7, 5-7 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    ×