search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்தை"

    • 10 கிலோ எடை கொண்ட ஆட்டுக்குட்டி ரூ.8 ஆயிரம் முதல் விற்பனையானது.
    • 1 கிலோ எடை கொண்ட நாட்டுக்கோழி ரூ.500க்கு விற்பனையானது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் வாரம் தோறும் வியாழக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. இங்கு திண்டுக்கல் மட்டுமின்றி திருச்சி, கரூர் போன்ற வெளி மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் அதிக அளவில் ஆடு, கோழிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று காலை 3 மணி முதல் சந்தை வியாபாரம் தொடங்கியது. வழக்கமாக வரும் வியாபாரிகளை விட நாமக்கல், சேலம் போன்ற மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் வியாபாரிகள் வந்திருந்தனர்.

    10 கிலோ எடை கொண்ட ஆட்டுக்குட்டி ரூ.8 ஆயிரம் முதல் விற்பனையானது. சந்தைக்கு அதிக அளவில் செம்மறி ஆடுகள் வந்திருந்த நிலையில் வெள்ளாடுகள் குறைந்த அளவே வந்தன. வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர்.

    கடந்த வாரம் வரை ரூ.6500க்கு விற்கப்பட்ட ஆட்டுக்குட்டிகள் இன்று ரூ.8,000 மட்டும் அதற்கும் மேலும் விற்பனையாகியது. இதே போல் கிராமங்களில் தீபாவளி பண்டிகை சமயங்களில் வீடுகளுக்கு வரும் உறவினர்களுக்கு நாட்டுக்கோழி சமையல் சமைத்து விருந்தளிப்பது முக்கியமான ஒன்றாகும். இதனால் நாட்டுக் கோழிகளுக்கு நல்ல விலை கிடைத்தது.

    1 கிலோ எடை கொண்ட நாட்டுக்கோழி ரூ.500க்கு விற்பனையானது. கேட்ட விலைக்கு நாட்டுக்கோழிகள் விற்றதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இன்று மட்டும் ரூ.3 கோடிக்கு மேல் ஆடு, கோழிகள் விற்பனையானது.

    அய்யலூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் நேற்று இரவு முதலே விட்டு விட்டு மழை பெய்து வந்தது. இன்று காலையிலும் மழை தொடர்ந்த நிலையிலும் ஆட்டுச்சந்தையில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. சந்தை அமைந்துள்ள பகுதியில் வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்பட்டால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாரம் தோறும் சந்தை நடைபெறும் நாளில் இது போன்ற சூழல் நிலவுவதால் இதற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

    தருமபுரி மாவட்டத்தில் சின்ன வெங்காயத்தின் விலை சரிவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாததால் வெங்காயம் வரத்து குறைவாக இருந்தது. காய்கறிகளின் விலைகள் உயர்ந்து வந்த நிலையில் சின்ன வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களாக சற்று உயர்ந்து வந்தது. ரூ.40 முதல் 50 வரை விற்பனையானது. இந்த நிலையில், தற்போது தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம்,  மாரண்டஅள்ளி,  அதகப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் சின்ன வெங்காயம் மிதமான விளைச்சல் அடைந்தும், வெளியில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட்டது. மேலும் தற்பொழுது  மகாராஷ்டிராவில் இருந்து வெங்காயம் வரத்தும் அதிகரித்து காணப்பட்டது.

    இதனால் உள்ளூர் சந்தைக்கு சின்ன வெங்காயம் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக  கிலோ ரூ.40 முதல் 50 வரை விற்பனையான சின்ன வெங்காயத்தின் விலை தற்போது குறைந்து கிலோ ரூ.30-க்கு விற்பனையாகிறது. மேலும் விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்யும் வியாபாரிகள் ரூ.20-க்கும் குறைவாகவே வாங்கி செல்கின்றனர். இதனால் சின்ன வெங்காயம் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், சின்ன வெங்காயம் சாகுபடி செய்யும்போது கிலோ ரூ.150 கொடுத்து வாங்கி பயிரிட்டு, ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை செலவு செய்துள்ளோம். ஆனால் இதன்மூலம் கிடைக்கும் இலாபத்தை வைத்து அறுவடை செய்யும் ஆட்களுக்கு கூலி கொடுக்கக்கூட முடியவில்லை என வேதனையுடன் கூறுகின்றனர்.
    அசாமில் நெல் வயல்களில் பயிர்களை சேதப்படுத்தும் எலிகளை விவசாயிகள் பொறி வைத்து பிடித்து வியாபாரிகளிடம் விற்பனை செய்கிறார்கள். 1 கிலோ எலிக்கறி ரூ.200க்கு சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

    கவுகாத்தி:

    அசாம் மாநிலம் பக்சா மாவட்டம் குமரிகட்டா என்ற கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரச்சந்தை நடக்கும். இங்கு எலிக்கறி விற்பனை மிகவும் அமோகமாக நடைபெற்று வருகிறது. கோழிகறி, பன்றி கறியை விட எலிக்கறி அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.

    நெல் வயல்களில் பயிர்களை சேதப்படுத்தும் எலிகளை விவசாயிகள் பொறி வைத்து பிடிக்கிறார்கள். இந்த எலிகளை விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் வாங்கி வாரச்சந்தையில் விற்பனை செய்கிறார்கள்.

    புதிதாக பிடிக்கப்பட்ட எலிகளுடன் தோல் உரிக்கப்பட்ட எலிக்கறி, வேக வைக்கப்பட்ட எலிக்கறி விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிலோ எலிக்கறி ரூ.200க்கு விறக்கப்படுகிறது.

    பழங்குடி மக்களுக்கு எலிகள் நல்ல வருமானம் தரும் தொழிலாக உள்ளது. தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் அவர்கள் குளிர் காலத்தில் வேலை இல்லாதபோது எலிகளை பிடித்து விற்று வருமானம் தேடிக் கொள்கிறார்கள்.

    இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறும்போது, “கடந்த சில ஆண்டுகளாக வயல்வெளிகளில் எலிகள் அதிகமாகி வருகின்றன. அவைகள் பயிர்களை நாசம் செய்வதால் பொறி வைத்து பிடிக்கிறோம். பின்னர் வியாபாரிகளிடம் விற்று விடுகிறோம்” என்றார். #ratmeat 

    கர்நாடகா மாநிலத்தில் விளையும் பொன்னி ரக அரிசிகளின் விற்பனை சந்தையாக தமிழகம் முற்றிலும் மாறி விட்டது. டெல்டா மாவட்டங்களில் வறட்சி காரணமாக 75 சதவீத விவசாயிகள் வேலையின்றி தவிக்கின்றனர். #TNfarmers #delta
    தஞ்சாவூர்:

    உலகின் முதல் தொழில் விவசாயம். இந்த தொழிலில் தமிழனே தலைசிறந்து விளங்குகிறான்.

    தமிழகத்தில் ஒரு காலத்தில் முப்போகம் விளைந்த நெல்ரகங்கள் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இயற்கை விவசாயத்தை தமிழக விவசாயிகள் கடைபிடித்து வந்தனர். இதனால் மண் வளம் பாதுகாக்கப்பட்டது.

    இந்தநிலையில் வெளிநாட்டு வேளாண் முறைகள் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு குட்டை நெல் ரகங்கள் அதிகமாக பயிரிடப்பட்டன. இதனால் கால்நடைகளுக்கு தீவனங்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள் திகழ்ந்தன. லட்சக்கணக்கான ஏக்கரில் சம்பா சாகுபடி செய்து வந்தன. காவிரி நீர் பாசனத்தில் முப்போகம் விளைச்சல் கண்ட டெல்டா மாவட்டங்கள் செல்வச் செழிப்போடு திகழ்ந்தன.

    கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை பொய்த்து விட்டதால் டெல்டா மாவட்டங்களில் ஒரு போக சாகுபடி கூடசெய்வது அரியதாகி விட்டது. வறட்சியின் காரணமாக வயல்வெளிகள் பாலைவனம் போல காட்சி தருகின்றன.

    தமிழகத்தில் நெல் சாகுபடி வீழ்ச்சியை சந்தித்த நிலையில் கர்நாடகாவில் தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகிறது. அங்கு ஒரு போகம் விளைந்த இடங்களில் தற்போது முப்போகம் சாகுபடி நடைபெற்று வருகின்றன.

    இதனால் அங்கு விளையும் நெல் அரவை செய்யப்பட்டு தமிழகத்திற்கு அதிகளவில் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

    தமிழகத்தில் விளையும் நெல் அரசு மூலம் கொள்முதல் செய்யப்பட்டு பொது வினியோக திட்டத்திற்கு அரிசி அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    இதனால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காத நிலைமை ஏற்பட்டு உள்ளது. அதே நேரத்தில் கர்நாடகா பொன்னி அரிசி பெரும் அளவில் வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டு தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த அரிசி கிலோ ரூ.45 முதல் ரூ.55 வரை விற்பனை செய்யப்படுகிறது. சுருக்கமான சொன்னால் கர்நாடகா மாநிலத்தில் விளையும் பொன்னி ரக அரிசிகளின் விற்பனை சந்தையாக தமிழகம் முற்றிலும் மாறி விட்டது.

    இதனால் கர்நாடக விவசாயிகளிடம் நல்ல விலை கொடுத்து வியாபாரிகள் நெல்லை கொள்முதல் செய்து வருகின்றனர். இதன் காரணமாக கர்நாடகா விவசாயிகள் நல்ல பொருளாதார நிலையை எட்டி உள்ளனர். அவர்கள் கால்நடைகளுக்கு குளிர்சாதன வசதி செய்யும் நிலை ஏற்பட்டு உள்ளது.



    தமிழகத்தில் வறட்சி காரணமாக வேலை இல்லாத நிலை ஏற்பட்டதால் டெல்டா விவசாயிகள் கேரளாவிற்கு சென்று கட்டிட தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய நகரங்களில் செயல்படும் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்களில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை கொண்டு குடும்ப செலவுகளை செய்து வருகின்றனர்.

    டெல்டா மாவட்டங்களில் தற்போது 75 சதவீத விவசாயிகள் வேலையின்றி தவிக்கின்றனர். கிராம புறங்களில் வசிப்பவர்கள் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இதன் எதிரொலியாக 25 சதவீத விவசாய பணிகளுக்கும் ஆட்கள் கிடைக்காத அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நாற்று நடவு முதல் அறுவடை வரை எந்திரங்களை கொண்டே செய்து வருகின்றனர். வயல்களில் ரசாயன உரங்களை அதிகமாக பயன்படுத்தியதால் மண் வளம் குறைந்து விட்டது.

    இதுமட்டுமின்றி மணல் கடத்தல் அதிகளவில் நடந்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் இருந்து கடத்தப்படும் மணல்கள் சென்னை, கோவை, கேரளா உள்பட பல்வேறு இடங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன. ஒரு மாட்டு வண்டி அளவிலான மணல் ரூ.2 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. வருமானம் இல்லாத விவசாயிகள் மாட்டு வண்டியில் மணல் எடுத்து விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

    விவசாயத்தில் கர்நாடகா முன்னேறி வரும் நிலையில் தமிழகம் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடுபவர்கள் விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி வீட்டு மனைகளாக்கி வருகின்றனர். இதன்காரணமாக எதிர்கால தலைமுறைக்கு அரிசி கிடைக்காத நிலை ஏற்படும். அரிசிக்காக வெளி மாநிலங்களையும், வெளி நாடுகளையும் எதிர்பார்க்கும் கட்டாயம் ஏற்படும். எனவே எதிர்கால நலனை கருத்தில் கொண்டு விவசாய நிலங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி தண்ணீரை வழங்காத கர்நாடகாவின் அரிசியை தமிழ்நாட்டில் வாங்குவதை புறக்கணிக்க வேண்டும்.

    தமிழகம் மற்றும் கேரளாவில் தான் அரிசியை அதிகமாக பயன்படுத்துகின்றனர். வட மாநிலங்களில் வசிக்கும் மக்கள் கோதுமையை தான் முக்கிய உணவாக கொண்டுள்ளனர். தமிழகத்தில் கர்நாடகா அரிசியை வியாபாரிகளும், பொதுமக்களும் வாங்காமல் புறக்கணித்தால் கர்நாடகா அரிசி விலை வீழ்ச்சி அடையும். இதனால் கர்நாடகா விவசாயிகள் ஆர்வம் காட்டாத சூழ்நிலை ஏற்படும்.

    அப்போது தான் தமிழகத்துக்கு வழக்கம் போல் கர்நாடகா தண்ணீர் தரும் முடிவுக்கு வரும். இதற்கு தமிழர்களிடம் ஒற்றுமை உணர்வு ஏற்பட்டால் தான் சாத்தியமான சூழ்நிலை உருவாகும்.  #TNfarmers #delta
    ×