search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நண்பர்கள்"

    வேலூர் அருகே கள்ளக்காதல் தகராறில் கணவனை கொன்று காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவி கைது செய்யப்பட்டார். கூட்டாளிகளும் சிக்கினர்.

    வேலூர்:

    வேலூர் அடுத்த பலவன்சாத்துகுப்பம் பாரதியார்நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் வெங்கட்யுவராஜ் (வயது 28). தனியார் நிதிநிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். இவருடைய மனைவி கோமதி (23) அதேபகுதியில் உள்ள ஒரு மருந்து கடையில் வேலைபார்த்து வந்தார். கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற வெங்கட்யுவராஜ், அதன்பின்னர் திரும்பி வரவில்லை.

    இதுகுறித்து கோமதி, பாகாயம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கோமதி மற்றும் வெங்கட்யுவராஜின் நண்பர்கள், அவர் பணிபுரிந்த நிதி நிறுவனத்தில் விசாரணை நடத்தினர். ஆனால் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில், 15 மாதங்களுக்கு பின்னர் வேலப்பாடியை சேர்ந்த ராஜ்குமார் (40) என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து வெங்கட்யுவராஜை கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து அவரைபிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கொடுத்த தகவலின்பேரில் பாகாயம் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் மோர்தானா அணை பகுதிக்கு சென்று அங்குள்ள காட்டுப்பகுதியில் கிடந்த வெங்கட்யுவராஜின் எலும்புகூடுகளை கைப்பற்றினர்.

    விசாரணையில் கள்ளக்காதல் காரணமாக வெங்கட்யுவராஜை கொலைசெய்தது தெரியவந்தது.

    ராஜ்குமார், ஆரணியை சேர்ந்த அவரது நண்பர்களான செந்தில் (33), வேலு (32), கோட்டீஸ்வரன் (38), விஜய் (23), கோமதி ஆகியோர் கைது செய்யபட்டனர்.

    இந்த கொலை சம்பவம் தொடர்பாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. கோமதி வேலூரில் உள்ள மெடிக்கல், பியூட்டிபார்லர் ஆகியவற்றில் வேலை பார்த்தவர். அப்போது ராஜ்குமாருடன் கள்ளதொடர்பு ஏற்பட்டது.

    கணவன் இல்லாத நேரத்தில் கோமதி வீட்டுக்கு சென்று ராஜ்குமார் சந்தித்தார். இது வெளியே தெரிந்தது. மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த வெங்கட்யுவராஜ் கோமதியை வேலைக்கு அனுப்பவில்லை. மேலும் போன்பேசுவதை நிறுத்த செய்தார்.

    கள்ளக்காதலனை சந்திக்க முடியாததால் கோமதி ஆத்திரமடைந்தார். ராஜ்குமாரை தொடர்பு கொண்டு கணவனை கொலை செய்ய கூறியுள்ளார்.

    அவரது நண்பர் செந்தில், ராஜ்குமார் இருவரும் வெங்கட்யுவராஜை கொலை செய்ய திட்டமிட்டனர். அவருக்கு இருக்கும் மது பழக்கத்தை பயன்படுத்தி கொண்டனர்.

    கொலை செய்வதற்கு 2 மாதத்துக்கு முன்பாக வேலூரில் உள்ள மதுபாரில் வெங்கட்யுவராஜ் மது குடித்தார். அவரை தேடி சென்று செந்தில் பேச்சு கொடுத்தார். தான் ராணுவத்தில் வேலை செய்கிறேன்.

    அடிக்கடி மது கிடைக்கும் எனக்கூறி மது வாங்கி கொடுத்தார். அவரை அடிக்கடி அழைத்து மது வாங்கி கொடுக்க ஆரம்பித்தார்.

    செந்திலின் நட்பை உண்மையென நம்பிய வெங்கட்யுவராஜ் அவருடன் நீண்ட நேரம் பொழுதை கழித்தார். மாலை நேரம் வந்ததும் கணவனிடம் செல்லமாக பேசி கோமதி மது குடிக்க அனுப்பி வைத்துள்ளார்.

    அவர் சென்றதும் ராஜ்குமாரை வீட்டுக்கு வரவழைத்து வீட்டில் தனிமையில் ஜாலியாக இருந்தனர். 2 மாதங்கள் இது நீடித்தது.

    வெங்கட்யுவராஜிக்கு மது வாங்கி கொடுக்க பணம் அதிக செலவானது. இதனால் திட்டமிட்ட படி அவரை கொலை செய்ய செந்தில் அவரது கூட்டாளிகளுடன் ஒகேனக்கல் அழைத்து சென்றனர். அங்குள்ள காட்டுபகுதியில் மது குடித்தனர்.

    அப்போது வெங்கட் யுவராஜின் போனில் அவரது நண்பர் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். அவரிடம் ஒகேனக்கல்லில் செந்திலுடன் இருப்பதை கூறிவிட்டார். இதனால் அங்கு வைத்து கொலை செய்யும் முடிவை கைவிட்டனர்.

    பின்னர் மோர்தானா அணை அருகே காட்டு பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். அதிக மது ஊற்றி கொடுத்து வெங்கட்யுவராஜை டவலால் கழுத்தை இறுக்கி கொன்று விட்டு உடலை போட்டு சென்றுள்ளனர்.

    போலீசார் உடலை தேடி சென்றபோது எலும்பு கூடாகவே கிடந்தது. மேலும் வெங்கட்யுவராஜ் பேண்ட் கைபற்றினர் அவர்கள் குடித்த போது விட்டு சென்ற மதுவுடன் இருந்த பாட்டிலும் அப்படியே கிடந்தது அதையும் போலீசார் மீட்டனர்.

    கணவனை கொலை செய்துவிட்டு அவர் மாயமானதாக கோமதி நாடக மாடியுள்ளார்.

    கள்ளதொடர்பையும் தொடர்ந்தார் 15 மாதங்களுக்கு பிறகு கொலையில் துப்பு துலக்கி குற்றவாளிகளை கைது செய்த இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசாரை அதிகாரிகள் பாராட்டினர்.

    வேல்ராம்பேட்டில் நண்பர்களுடன் மதுகுடித்து விட்டு வந்தததை தாய் கண்டித்ததால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை வேல்ராம்பேட் முதல் குறுக்குதெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவரது மனைவி ருக்குமணி. இவர்களது மகன் ராஜ்குமார் (வயது18). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு புருசோத்தமன் இறந்து விட்டார். இதையடுத்து ருக்குமணி வீட்டுவேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார்.

    10-ம்வகுப்பு வரை படித்த ராஜ்குமார் அவ்வப்போது பெயிண்டர் வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு புத்தாண்டையொட்டி ராஜ்குமார் நண்பர்களுடன் சேர்ந்து மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்தார்.

    இதனை அவரது தாய் ருக்குமணி கண்டித்தார். இதனால் ராஜ்குமார் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். கோபம் தணிந்த பின் மகன் வீட்டுக்கு வருவான் என்று ருக்குமணி கருதி அவரை தேடவில்லை. நள்ளிரவு ஆகியும் ராஜ்குமார் வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த ருக்குமணி வீட்டின் பின்புறத்தில் உள்ள கொட்டகைக்கு சென்று பார்த்தார். அப்போது ராஜ்குமார் துப்பட்டாவால் தூக்குபோட்டு தொங்குவதை கண்டு ருக்குமணி அலறினார்.

    பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் இருந்து ராஜ்குமாரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ராஜ்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் பழனி ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்பூர் மாவட்டம் கள்ளப்பாளையம் காட்டு பகுதியில் ஒர்க்ஷாப் தொழிலாளி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இந்த சம்பவம் குறித்து நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் கள்ளப்பாளையம் காட்டு பகுதியில் 30 வயது மதிக்கதக்க வாலிபர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    இது குறித்து மங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கொலை செய்யப்பட்ட வாலிபர் உடலை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் கோவை சோமனூர் அருகே உள்ள ஊஞ்சப்பாளையம் எல்லைக்காடு பகுதியை சேர்ந்த மகேந்திரன் (30) என்பது தெரியவந்தது.

    இவர் கருமத்தம் பட்டியில் உள்ள கிரீல் ஒர்க்ஷாப்பில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு அஞ்சலி என்ற மனைவியும், மோகன பிரியா என்ற மகளும், விஷால் என்ற மகனும் உள்ளனர்.

    கொலையாளிகளை பிடிக்க திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர்கள் முத்துசாமி, சரோஜா ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த தனிப்படையினர் மகேந்திரன் மனைவி அஞ்சலியிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் தனது கணவர் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்தார்.

    சிறிது நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டார். அதன் பின்னர் வீட்டிற்கு வரவில்லை. வழக்கமாக இரவு சென்றால் காலையில் தான் வருவார் என்பதால் அவரை தேடவில்லை. இந்த நிலையில் தான் அவர் கொலை செய்யப்பட்டு காட்டுக்குள் பிணமாக கிடப்பதாக தகவல் வந்தது என கூறி உள்ளார்.

    மகேந்திரன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் அவர் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ராமாச்சி பாளையம் என்ற இடத்தில் கிடந்தது.

    அதனை போலீசார் கைப்பற்றினார்கள். மகேந்திரனை அவரது நண்பர்கள் யாராவது ராமாச்சி பாளையம் பகுதிக்கு அழைத்து வந்து இருக்கலாம்.

    பின்னர் ஏற்பட்ட தகராறில் அவரை கொலை செய்ய விரட்டி இருக்கலாம். மகேந்திரன் உயிர் தப்பிக்க ஓடும் போது அவரை விரட்டி சென்று கள்ளப்பாளையம் பகுதியில் கொலை செய்து இருக்கலாம் என தனிப்படையினர் சந்தேகம் அடைந்துள்ளனர். இது தொடர்பாக மகேந்திரன் நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    25 வருட நட்புக்கு இலக்கணமாக வறுமையில் வாடும் பள்ளி தோழர்களுக்கு உதவும் வகையில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கி உதவி வருகின்றனர்.
    மாணவர் பருவ நட்பு என்பது ரெயில் பெட்டி நட்பை போன்றது தான். ரெயில் பயணத்தின் போது நட்பாக பழகினாலும் இறங்கும் இடம் வந்ததும் இறங்கி அவரவர் பாதையில் சென்று விடுவர்கள்.

    கிட்டத்தட்ட பள்ளிக்கூட நட்பும் அதே மாதிரித்தான். பள்ளி, கல்லூரிகளில் ஒன்றாக படிப்பார்கள். படிப்பு முடிந்ததும் வேலை, குடும்பம் என்று ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கை பாதையில் பயணிப்பார்கள்.

    ‘எப்போதாவது’ யாரையாவது சந்தித்தால் ஹாய் நண்பா எப்படி இருக்கே? பிள்ளைகள் என்ன செய்கிறார்கள்? என்ற விசாரிப்போடு முடித்துக்கொள்வது தான் வழக்கம்.

    ஆனால் ஆவடி காமராஜ்நகர் நாசரத் மேல்நிலைப்பள்ளியில் 1993-ம் ஆண்டு பிளஸ்-2 முடித்து வெளியேறியவர்கள் வித்தியாசமானவர்கள்.

    பள்ளிப்படிப்பை முடித்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. சுமார் 200 மாணவ-மாணவிகள் ஒன்றாக படித்தவர்கள். இப்போது எங்கெங்கோ... என்னென்ன வேலைகளிலோ... மனைவி குழந்தைகளுடன் இருப்பார்கள், உண்மை தான்.

    சென்னையில் வசிப்பவர்களில் ஒரு சிலர் மட்டும் சந்தித்து பேசிக்கொள்வார்கள். அப்போது கார்த்திக் என்ற சக பள்ளித்தோழர் ஒருவர் திடீரென்று மரணம் அடைந்துவிட்டார். அவருக்கு 2 குழந்தைகள். சரியான வேலை எதுவும் இல்லாததால் அந்த குடும்பம் தடுமாறியது. பள்ளி தோழனின் மனைவி- குழந்தைகள் கஷ்டப்படுகிறார்களே அவர்களுக்கு எப்படி உதவுவது என்று அவருக்கு புரியவில்லை.

    அப்போது தான் அவருக்குள் ஒரு ஐடியா உதித்தது. உடன் படித்த தோழர்களை ஒன்று திரட்ட தொடங்கினார்கள். 60-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று சேர்ந்துவிட்டார்கள். ஒரு நண்பர் அமெரிக்காவில் உயர்ந்த பதவியில் இருக்கிறார். சிலர் வியாபாரம் செய்து செல்வ செழிப்புடன் இருக்கிறார்கள். சிலர் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணிபுரிகிறார்கள்.

    அனைவரும் அவர்கள் படித்த பள்ளியிலேயே ஒன்று கூடினார்கள். மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்கள். அதோடு நின்றுவிடவில்லை.

    அவர்களோடு படித்தவர்களில் யார்? யார்? வறுமையில் இருக்கிறார்கள்? குழந்தைகளை படிக்க வைக்க முடியாமல் சிரமப்பகிறார்கள்? என்பதை தேடிப்பிடித்தார்கள்.

    அந்த குழந்தைகளின் கல்வி செலவுக்கு உதவ தொடங்கினார்கள். இந்த நிலையில் இறந்துபோன பள்ளித்தோழனின் மகளுக்கு ‘டெங்கு’ காய்ச்சல் வந்தது. அந்த குழந்தையை காப்பாற்ற எல்லோரும் பண உதவி செய்து உயர் சிகிச்சை அளித்தார்கள். ஆனாலும் அந்த குழந்தையை காப்பாற்ற முடியவில்லை.

    அதன்பிறகு பள்ளித் தோழர்களுக்கு உதவுவதற்கு ‘கிளாப்ஸ்’ என்ற அறக்கட்டளையை தொடங்கினார்கள். அதில் ஒவ்வொருவரும் நன்கொடை கொடுத்து அறக்கட்டளையிலும் சில லட்சங்கள் நிதி சேர்ந்துள்ளது. அந்த அறக்கட்டளை மூலம் நலிவுற்ற தோழர்களின் குழந்தைகளுக்கான கல்வி செலவை வழங்கி வருகிறார்கள்.

    இறந்துபோன கார்த்திக்கின் மகனை அவர்கள் படித்த நாசரத் பள்ளியிலேயே படிக்க வைக்கிறார்கள். முன்னாள் மாணவர்கள் சேர்ந்து செய்யும் இந்த மனிதநேய உதவியை கவுரவிக்கும் வகையில் பள்ளி நிர்வாகம் சலுகையும் வழங்கி வருகிறது.

    ஒன்றாய் கூடி மகிழ்ந்திருந்தவர்களிடம் பொறுப்பாளர்கள் பெயர் விவரம் கேட்டபோது நாங்கள் எல்லோருமே பொறுப்பாளர்கள் தான். எங்களுக்குள் ஒரிருவர் பெயரை மட்டும் முன்னிலைப்படுத்தி இனியும் ஒரு பிரிவு எங்களுக்குள் வேண்டாம் என்று நினைக்கிறோம் என்று கேட்டுக்கொண்டார்கள்.

    இது தான் உண்மையான நட்பு.

    முகஸ்துதிக்காக நட்பு பாராட்டுபவர்கள் மத்தியில் மனப்பூர்வமாக நட்பு பாராட்டி வாழும் இவர்கள் நட்புக்கு இலக்கணமானவர்கள்.
    வில்லியனூர் அருகே மதுகுடிக்கும் போது நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே தொண்டமாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது28). இவரும் அகரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பழனி (45), வினோத்குமார்(25) மற்றும் ராகுல் (19) ஆகியோரும் நண்பர்கள். இவர்கள் 4 பேரும் நேற்று மாலை தொண்டமாநத்தம் எஸ்.எஸ். நகரில் மதுகுடித்தனர். அப்போது திடீரென கிருஷ்ணனுக்கும் மற்ற 3 பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த பழனி உள்பட 3 பேரும் சேர்ந்து கிருஷ்ணனை சரமாரியாக தாக்கினர். மேலும் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் கையில் பலத்த காயம் அடைந்த கிருஷ்ணன் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார்.

    பின்னர் இது குறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து பழனி உள்பட 3 பேரையும் தேடி வருகிறார்கள்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளால் கடத்தி கொலை செய்யப்பட்ட ராணுவ வீரரின் மரணத்துக்கு பழிவாங்குவதற்காக அவரது நண்பர்கள் 50 பேர் ராணுவம் மற்றும் போலீசில் இணைய ஆயத்தமாகி வருகின்றனர். #JammuKashmir #RevengeforFriend
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் மெந்தார் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் அவுரங்கசீப். இவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த ஜூன் மாதத்தில் ரமலான் விடுமுறையின் போது, தனது சொந்த கிராமத்துக்கு வந்த அவுரங்கசீப் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு மிக கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் அவரது உறவினர்கள் மட்டுமின்றி நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது. தனது நண்பரின் மரணத்தில் தீரா துயரடைந்த அவுரங்கசீப்பின் நண்பர்கள் அந்த பயங்கரவாதிகளை பழிவாங்குவது என முடிவு செய்தனர். மேலும், இந்தியாவில் உலவும் பயங்கரவாதத்தையும் அடியோடு அழிக்க அவர்கள் உறுதிகொண்டனர்.



    இதனால், சவூதியில் தாங்கள் பார்த்த வேலையை கைவிட்டு 50 பேர் இந்தியாவுக்கு திரும்பியுள்ளனர். நண்பரை கொன்ற பயங்கரவாதிகளை அடியோடு அழிப்பதையே உயர்ந்த லட்சியமாக கொண்ட அவர்கள் தற்போது ராணுவம் மற்றும் காவல்துறையில் இணைய ஆயத்தமாகி கொண்டிருக்கின்றனர்.

    நண்பரின் உயிர் இழப்புக்கு காரணமான கொடியவர்களை பழிவாங்க முறையான பாதையை கையில் எடுத்து போராட இருக்கும் இந்த 50 பேருக்கும் பல்வேறு பகுதிகளில் இருந்து பாராட்டும், ஆதரவும் குவிந்தவண்ணம் உள்ளது. #JammuKashmir #RevengeforFriend
    பாகிஸ்தானில் ஆகஸ்ட் 11-ம் தேதி இம்ரான் கான் பதவியேற்பார் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், பதவியேற்பு விழாவில் வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Pakistan #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் கடந்த மாதம் 25-ம் தேதி நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி முதன்முறையாக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளது. இருப்பினும் தனிப்பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் கைவசம் இல்லாததால், சுயேட்சை மற்றும் சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.

    இதையடுத்து, பாகிஸ்தான் பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் ஆகஸ்ட் 11-ம் தேதி பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த பதவியேற்பு விழாவில் இந்திய பிரதமர் மோடி உட்பட பல்வேறு வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

    மோடிக்கு அழைப்பு விடுப்பதன் மூலம் இந்தியா பாகிஸ்தான் இடையேயான உறவு மேம்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.



    இந்நிலையில், பதவியேற்பு விழாவில் வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு இல்லை என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டு ஊடகங்களில் பேசிய தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஃபவத் சவுத்ரி, முன்னர் இம்ரான் கானின் நண்பர்களான சுனில் கவாஸ்கர், கபில் தேவ், நவ்ஜோத் சித், மற்றும் இந்தி நடிகர் அமீர் கான் ஆகியோருக்கும், இந்தியா, சீனா உட்பட சார்க் கூட்டமைப்பில் உள்ள அனைத்து நாட்டு தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டிருந்தது.

    இதையடுத்து தற்போது அந்த முடிவு மாற்றப்பட்டுள்ளதாவும், வெளிநாட்டு தலைவர்களை விடுத்து, நண்பர்களை மட்டும் அழைத்து, தனது பதவியேற்பு விழாவை எளிமையாக நடத்த இம்ரான் கான் விரும்புவதாவும் ஃபவத் சவுத்ரி தெரிவித்துள்ளார். #Pakistan #ImranKhan
    ஐ.டி.ஐ.யில் சேர்ந்ததற்கு நண்பர்களுக்கு மது விருந்து கொடுத்த மாணவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    வேலூர்:

    வேலூர் தொரப்பாடி கே.கே.நகரை சேர்ந்தவர் குமார். இவருடைய மகன் சக்திவேல் (வயது 22). 10-ம் வகுப்பு வரை படித்திருந்த இவர் இந்த ஆண்டு ஐ.டி.ஐ.யில் சேர்ந்துள்ளார்.

    இவருடைய நண்பர்கள் ஜீவாநகரை சேர்ந்த வெற்றிவேல் (18), கே.கே.நகரை சேர்ந்த நவீன்குமார் (19). வெற்றிவேல் வேலூரில் உள்ள ஒரு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டும், நவீன்குமார் 2-ம் ஆண்டும் படித்து வருகிறார்கள். ஐ.டி.ஐ.யில் சேர்ந்ததற்காக சக்திவேல் அவரது நண்பர்களுக்கு பார்ட்டி வைப்பதாக கூறியுள்ளார்.

    நேற்று இரவு 7 மணி அளவில் சக்திவேல், வெற்றிவேல், நவீன்குமார் மற்றும் 3 பேர் என மொத்தம் 6 பேர் வேலூர் அடுத்த அப்துல்லாபுரத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு சென்றனர். அங்குள்ள பாரில் அவர்கள் மதுகுடித்தனர்.

    அ.தி.மு.க. பிரமுகருக்கு சொந்தமான அந்த பாரில் வேலூர் வசந்தபுரத்தை சேர்ந்த ஆறுமுகம் (38) என்பவர் சிக்கன், முட்டை விற்பனை செய்து வந்தார்.

    நேற்று அவரது நண்பர் சதுப்பேரியை சேர்ந்த சதீஷ்குமார் (29) வந்து மது குடித்தார். அப்போது சக்திவேலின் நண்பர்களுக்கும் சதீஷ் குமாருக்கும் இடையே போதையில் தகராறு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்தனர்.

    பின்னர் சக்திவேல் அவரது நண்பர்கள் 6 பேரும் அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டனர். 3 பேர் ஒரு மோட்டார்சைக்கிளில் முதலில் சென்றுவிட்டனர். சக்திவேல், வெற்றிவேல், நவீன்குமார் ஆகிய 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.

    அப்போது மீண்டும் சதீஷ்குமாருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சதீஷ்குமார், ஆறுமுகம் ஆகியோர் சக்திவேல், வெற்றிவேல், நவீன்குமார் ஆகிய 3 பேரையும் மதுபாட்டில் மற்றும் கத்தியால் சரமாரியாக குத்தினர்.

    இதில் 3 பேருக்கும் வயிற்றில் குத்து விழுந்து சக்திவேலுக்கு குடல் வெளியே வந்துவிட்டது.

    உடனே அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சக்திவேல் பரிதாபமாக இறந்தார்.

    மற்ற 2 பேரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சி.எம்.சி. மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    பார் தொழிலாளி ஆறுமுகத்தை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் இவர் சதீஷ்குமாருக்கு மது பாட்டில்களை எடுத்து கொடுத்தது தெரியவந்துள்ளது.

    சதீஷ்குமார் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஆட்டோ டிரைவர் கொலையில் அவரது நண்பர்கள் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருச்சி:

    திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 37), ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி மரியபுஷ்பம் என்ற மனைவியும், ஹரிஷ் (5), ஆதித்யா (7) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.

    நேற்று முன்தினம் செந்தில்குமார் வீட்டில் கட்டில் அருகே தரையில் விழுந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி மரியபுஷ்பம் எடமலைப்பட்டி புதூர் போலீசில் புகார் செய்தார்.

    அதில் நேற்று முன்தினம் ராமச்சந்திரா நகரில் டாஸ்மாக் கடை அருகே தனது கணவர் செந்தில்குமாருக்கும், சிலருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும் இதில் தாக்கப்பட்டதால் அவர் இறந்து விட்டதாகவும் கூறியிருந்தார்.

    இதைத்தொடர்ந்து போலீசார் செந்தில்குமாரின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நேற்று அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    அப்போது செந்தில்குமார் தாக்கப்பட்டதில் காயம் அடைந்து இறந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக போலீசார் மாற்ற உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக செந்தில்குமாருடன் தகராறில் ஈடுபட்ட அவரது நண்பர்கள் உள்பட 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அதிக போதையில் அவர் இறந்திருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில் பலர் சேர்ந்து தாக்கியதில் செந்தில்குமார் இறந்ததாக தெரியவந்துள்ளதால் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

    ×