search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 128233"

    • 8.11.1995-ம் ஆண்டு முதல் ரூ.1,500 சண்முகார்ச்சனைக்கு கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.
    • பக்தர்கள் புதிதாக நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை செலுத்தி நேர்த்திக்கடன் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் கார்த்திக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கோவில் மூலம் சண்முகார்ச்சனை நடத்த கடந்த 8.11.1995-ம் ஆண்டு முதல் ரூ.1,500 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.

    இதுதொடர்பாக தற்போதைய சூழ்நிலை மற்றும் விலைவாசி ஏற்றத்திற்கேற்ப கோவில் மூலம் சண்முகார்ச்சனை செய்ய கட்டணம் ரூ.5 ஆயிரம் என உயர்த்தி சட்டவிதிகளின்படி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இதுகுறித்து ஆட்சேபனை ஏதும் வரப்பெறாத நிலையில், கோவில் அறங்காவலர் குழு சுற்று தீர்மானத்தின்படி இந்து சமய அறநிலையத்துறை தூத்துக்குடி மண்டல இணை ஆணையரிடம் உத்தரவு பெறப்பட்டுள்ளது.

    அதன்படி, கோவில் மூலம் சண்முகார்ச்சனை செய்ய கட்டணம் ரூ.1,500-ல் இருந்து ரூ.5,000 என உயர்த்தப்பட்டு நாளை (திங்கட்கிழமை) முதல் கோவில் நிர்வாகத்தால் அமல்படுத்தப்படுகிறது.

    ஆகவே, பக்தர்கள் புதிதாக நிர்ணயம் செய்யப்பட்ட ரூ.5,000 கட்டணத்தை செலுத்தி சண்முகார்ச்சனை நேர்த்திக்கடன் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார்.
    • கலந்து கொண்டவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் முதுகலை விலங்கியல் துறை சார்பில், 'தற்போதைய சூழலில் மீன்வளர்ப்பு மற்றும் மீன் வகைப்பாட்டியல்' என்ற தலைப்பில் ஒரு நாள் பயற்சி பட்டறை நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். முதுகலை விலங்கியல் துறைத்தலைவர் செந்தில்குமார் வரவேற்று பேசினார்.

    காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியர் குமார் 'புரோ பயாட்டிக்கஸ் இன் அக்குவாகல்சர்' என்ற தலைப்பிலும், கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் கண்ணன் 'கடல்வாழ் உயிரினங்களின் பல்லுயிர் தன்மை மற்றும் பாதுகாப்பு' என்ற தலைப்பிலும் உரையாற்றினர். பின்னர் பங்கேற்பாளர்களுக்கு மீன் வகைப்பாட்டியல், மீன் வகைகளை கண்டறிதல், செதில்களின் வகைப்பாடு, நண்டு வகைகளை கண்டறிதல் உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பல்வேறு துறைத்தலைவர்கள் சுந்தரவடிவேல், கதிரேசன், பாலகிருஷ்ணன், கவிதா, கோகிலா, பேராசிரியர்கள் வசுமதி, ஆரோக்கியமேரி பர்னாந்து, சிவமுருகன், அபுல்கலாம் ஆசாத், அந்தோணிமுத்து பிரபு, ஆல்வின், லிங்கதுரை, மணிகண்டராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை முதுகலை விலங்கியல் துறை பேராசிரியர் லோக்கிருபாகர், கொளஞ்சிநாதன், ஆய்வக உதவியாளர் அன்புசெல்வன் மற்றும் முதுகலை விலங்கியல் துறை மாணவ-மாணவிகள் செய்து இருந்தனர். பேராசிரியை ரமாதேவி நன்றி கூறினார்.

    • கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் கருத்தரங்கத்திற்கு தலைமை தாங்கினார்.
    • கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுநிலை வேதியியல் துறை சார்பில் "சுற்றுச்சூழல் மற்றும் உயிரியல் அறிவியலில் சமீபத்திய முன்னேற்றங்கள்" என்ற தலைப்பில் தேசிய அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். முதுநிலை வேதியியல் துறை தலைவர் கோகிலா வரவேற்றார். பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை இணை பேராசிரியர் எஸ்.சபியா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு "செம்பை உயிரியல் வாழ்க்கையோடு இணைத்தல்" என்ற தலைப்பில் பேசினார். திருவனந்தபுரம் மார் இவானியோஸ் கல்லூரியின் பேராசிரியர் ஆர்.செல்வின் ஜோசிபல் "விசிபில் லைட் ட்ரைவன் டைட்டானியா பேஸ்டு நானோ காம்போசைட் சிஸ்டம் பார் என்விரான்மென்ட்ஸ் அப்ளிகேஷன்ஸ்" என்ற தலைப்பில் பேசினார். பேராசிரியர் கோகிலா கருத்தரங்க ஒருங்கிணைப்பாளராகவும், பேராசிரியர்கள் ஆல்வின் ஜெயதுரை, மூகாம்பிகை ஆகியோர் கருத்தரங்க அமைப்பாளராகவும் செயல்பட்டனர்.

    கருத்தரங்கில் ஆதித்தனார் கல்லூரி, கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி, நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர் அந்தோணி முத்துபிரபு, ஆய்வக உதவியாளர் ஐகோர்ட் மகாராணி மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

    • மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் நடந்தது.
    • அப்துல் கலாமின் பொன்வரிகளான கனவு காணுங்கள் என்பதை மேற்கோள் காட்டி எம்.கே.ஜானகிராமன் பேசினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. ஆதித்தனார் கல்லூரி முன்னாள் மாணவரும், உளவியலாளரும், ஊக்கமளிக்கும் பேச்சாளரும், ஓமன் சலாலாவில் இந்திய கவுன்சில் கிளப்பிற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவருமான டாக்டர் எம்.கே.ஜானகிராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    அவர் பேசுகையில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பொன்வரிகளான கனவு காணுங்கள், தூக்கத்தில் வருவது அல்ல கனவு, நம்மை தூங்க விடாமல் செய்வதே கனவு என்று மேற்கோள் காட்டி பேசினார். மேலும் மாணவர்கள் வாழ்க்கையில் சாதிப்பதற்கு தொடர்புத்திறன், தன்னம்பிக்கை, சுய உந்துதல், நேர மேலாண்மை, ஒழுக்கம் போன்ற நற்பண்புகளை கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி, கணித துறை தலைவி வாசுகி, வேதியியல் துறை பேராசிரியர் ஜோதி ஸ்டெல்லா ஆகியோர் செய்து இருந்தனர்.

    • உடன்குடியில் அனல் மின் நிலையம் திறப்பதற்கான வேலை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
    • 16106 ,16105 ஆகிய ரெயில்கள் எப்பொழுதும் அதிக பயணிகளுடன் ஒடிக்கொண்டி ருக்கிறது.

    நாசரேத்:

    நாசரேத் நகர வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் அசுபதி சந்திரன் தென்னக ரெயில்வே பொதுமேலாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருச்செந்தூர் ஒரு முக்கியமான கோவில் நகரம். இங்கு தமிழ்நாடு மட்டும் அல்லாமல் இந்தியாவின் பல நகரங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    மேலும் அதன் அருகில் உள்ள ஊர்களான உடன்குடியில் அனல் மின் நிலையம் திறப்பதற்கான வேலை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    மேலும் குலசேகரன்பட்டி னமும் ஒரு புண்ணிய நகரமாகும். அவ்வூரிலும் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்குரிய வேலைகளும் இந்திய அரசாங்கத்தால் நடைபெற்று கொண்டிருக்கிறது.

    இந்த வேலைகளுக்காக பல தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து திருச்செந்தூர் வரை வந்து அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்கின்றனர்.

    மேலும் நெல்லை- திருச்செந்தூருக்கு இடைப்பட்ட நாசரேத் ஊர் ஒரு கல்வி நகரமாகும். இவ்வூரில் பல பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்கல்வி கல்லுாரிகள், மருத்துவமனைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் ஆகியவை சிறப்பாக இயங்கி கொண்டிருக்கின்றன.

    பலதரப்பட்ட மக்களும் வந்து செல்வதற்கு வசதியாக வண்டி எண் 16106 ,16105 ஆகிய ரெயில்கள் திருச்செந்தூர்-சென்னை, சென்னை-திருச்செந்தூருக்கு இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த ரெயில் எப்பொழுதும் அதிக பயணிகளுடன் ஒடிக்கொண்டி ருக்கிறது. இதில் இடம் கிடைப்பது சிரமமாக உள்ளதால் திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கும் கார்டு லைன் வழியாக பகல் நேர விரைவு ரெயில் இயக்கிட வேண்டும்.

    திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கும் கார்டு லைன் வழியாக பகல் நேர விரைவு ரெயில் இயக்கி தந்தால் இந்த பகுதி மக்கள் மிகவும் பயன் அடைவார்கள்.

    மேலும் இந்த பகுதிக்கு தொழில் வளர்ச்சியும் கிடைக்கும். மேலும் இங்குள்ள மக்கள் நலன் கருதி வண்டி எண் 16845 ஈரோட்டில் இருந்து நெல்லை, வண்டிஎண் 16846 நெல்லையில் இருந்து ஈரோடு வரை ரெயில் களை மேற்சொன்ன காரணங்களுக்காக திருச்செந்தூர் வரை நீட்டித்து தருமாறும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாளை தெப்ப உற்சவம் நடக்கிறது.
    • 8-ந்தேதி அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் வீதியுலா நடக்கிறது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான மாசிப்பெரும் திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திருவிழாவின் 10-ம் நாளான இன்று சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. முன்னதாக விநாயகர் தேர் நிலையத்தில் இருந்து காலை 7.05 மணிக்கு புறப்பட்டு எட்டு ரத வீதிக ளில் உலா வந்து 7.40 மணிக்கு நிலையம் வந்து சேர்ந்தது. தொடர்ந்து 7.50 மணிக்கு சுவாமி தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. தேரை மாலை முரசு நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.

    பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை பிளக்க தேர் எட்டு ரத வீதிகளில் வலம் வந்து நிலையம் சேர்ந்தது.

    விழாவில் மாலைமுரசு நிர்வாக இயக்குனர் இரா.கதிரேசன் ஆதித்தன், திருச்செந்தூர் சார்பு நீதிபதி வஷீத் குமார், கோவில் இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர் குழு உறுப்பினர் கணேசன், காயாமொழி முப்பிடாதி அம்மன் கோவில் அக்தார்கள் குமர குருபர ஆதித்தன், ரெங்க நாத ஆதித்தன், ராதாகிருஷ் ணன் ஆதித்தன்,காயா மொழி ஊர் பிரமுகர்கள் எஸ்.எஸ்.ஆதித்தன், ஹெக்டேவார் ஆதித்தன், ஜீவானந்த ஆதித்தன், எஸ்.ஆர்.எஸ். சபேஷ் ஆதித்தன், ஜெயேந்திர ஆதித்தன், குமரேச ஆதித்தன், ராஜேந்திர ஆதித்தன், இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி. ஜெயக்குமார், ஏரல் அருணாசல சுவாமி கோவில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டி நாடார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    11-ம் திருவிழாவான நாளை(செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜை நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு சுவாமி அம்பாள் யாதவர் மண்டகப் படி வந்து அங்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனைக்கு பின் இரவு 7 மணிக்கு மேல் திருநெல்வேலி நகரத்தார் மண்டகப்படி சேர்த்தல் 10.30 மணிக்கு மேல் தெப்ப உற்சவம் நடக்கிறது.

    12-ம் திருவிழாவான வருகிற 8-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் எட்டு வீதிகளில் உலா வந்து வடக்கு ரத வீதியில் உள்ள 14 ஊர் செங்குந்த முதலியார் மண்டபம் சேர்தல், அங்கு இரவு 9 மணிக்கு சுவாமி அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பா டுகளை கோவில் அறங்காவ லர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவ லர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், கோவில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் பணி யாளர்கள் செய்திருந்தனர்.

    • இஸ்ரோ தலைமை விஞ்ஞானி மந்திரமூர்த்தி போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
    • படைப்பாற்றல் மிக்க நபராக மாறுவதற்கு அதிர்ஷ்டம் தேவையில்லை என்று விஞ்ஞானி மந்திரமூர்த்தி கூறினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 58-வது கல்லூரி நாள் விழா நேற்று மாலையில் நடந்தது.

    இஸ்ரோ தலைமை விஞ்ஞானி

    கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் மகேந்திரன் ஆண்டறிக்கை வாசித்தார்.

    ஆமதாபாத் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) செயல்பாட்டு மைய தலைமை விஞ்ஞானி மந்திரமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்வி மற்றும் விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

    ஊக்கப்பரிசு

    டாக்டர் பட்டம் பெற்றவர்களுக்கும், 25 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கும், விருது பெற்ற பேராசிரியர்களுக்கும் ஊக்கப்பரிசுகளை வழங்கினார். பின்னர் தலைமை விஞ்ஞானி மந்திரமூர்த்தி பேசியதாவது:-

    நான் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி முன்னாள் மாணவர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். மிகவும் ஏழ்மையான குடும்ப சூழ்நிலையில் பிளஸ்-2 படிப்புக்கு பிறகு உயர்கல்வி படிக்கும் வாய்ப்பை இக்கல்லூரி எனக்கு வழங்கியது.

    நல்ல மாணவராக இருந்து ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படி, சரியான பாதையை தேர்ந்தெடுத்து தேவையான உழைப்பை வழங்கியது எனது வெற்றிக்கு காரணமாக இருந்தது.

    வாழ்க்கையில் வெற்றி பெறுவது மிக சிக்கலானது, சவால்கள் நிறைந்தது. அதேபோன்று வெற்றிக்கான வழிமுறையை தேர்ந்தெடுப்பதும் மிகவும் முக்கியம். நாம் திறமைகளை மெருகேற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கும்.

    கடின உழைப்பு

    விஞ்ஞானியாகவோ அல்லது எந்த துறையிலும் ஒரு படைப்பாற்றல் மிக்க நபராக மாறுவதற்கு அதிர்ஷ்டம் தேவையில்லை. முறையான கல்வி, ஆழ்ந்த சிந்தனைத்திறன் உள்ளவர்கள் நிச்சயம் எந்த துறையிலும் சிறந்த வல்லுனராகலாம். மாணவர்கள் எப்போதும் தாழ்வு மனப்பான்மை கொள்ளக்கூடாது. தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    நாம் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தாலும், எந்த சூழ்நிலையிலும் அது நம்மை பாதிக்கக்கூடாது. கடின உழைப்பையும், அறிவாற்றலையும் கொண்டு வெற்றி பெற வேண்டும். நம்மை பலவீனப்படுத்தும் நிகழ்வுகளை அறிவாற்றலால் முறியடியுங்கள். எந்த பின்பலமும் இல்லாத சூழ்நிலையில் இருந்து முன்னுக்கு வந்த நானும் இதற்கு சிறந்த உதாரணம்.

    நுணுக்கமான அறிவு

    மாணவர்களின் தன்னம்பிக்கையை உடைக்கும் எந்த விஷயத்தையும் ஏற்று கொள்ளாதீர்கள். வெற்றி ஒன்றே குறிக்கோளாக கொண்டு வாழ்வை எதிர்கொள்ள வேண்டும். மாணவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட விஷயங்களை கற்றுக் கொண்டால், அது எப்போதும் கை கொடுக்கும். கிடைக்கிற வாய்ப்புகளை எல்லாம் கல்லூரி பருவத்திலேயே பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    அனைத்து துறைகளிலும் நுணுக்கமான அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதுவே இன்றைய தேவையாக இருக்கிறது. கல்வியின் பயன் அதிகம் இருந்தாலும், அறிவை மேம்படுத்துதலே முதன்மையானது. சவாலான வாழ்க்கையின் பிரச்சினைகளை நுட்பமான அறிவு கொண்டு வெல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆண்டு மலர் வெளியீடு

    விழாவில் கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் ஆண்டு மலரை வெளியிட, அதனை விஞ்ஞானி மந்திரமூர்த்தி பெற்றுக்கொண்டார். கல்லூரி பொருளியல் துறை தலைவர் ரமேஷ் வாழ்த்தி பேசினார்.

    விழாவில் ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட் ராமராஜ், ஆதித்தனார் கல்வி நிறுவன செயலாளர் நாராயணராஜன், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் சாம்ராஜ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரிய செசிலி மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். நூலகர் முத்துகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    • நாளை காலை 7 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது.
    • 7-ம்தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் மாசி திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை நேரங்களில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வருகிறது.

    8-ம் திருவிழாவான நேற்று பகல் 1.45 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் பச்சை சாத்தி சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேல கோவிலில் சேர்தல் நடைபெற்றது. 9-ம் திருவிழாவான இன்று இரவு 10 மணிக்கு தேர் கடாட்சம் நடக்கிறது.

    10-ம் திருவிழாவான நாளை (திங்கட்கிழமை) விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    காலை 7 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் மீன லக்னத்தில் தேரோட்டம் நடக்கிறது. மாசி திருவிழா தேரோட்டத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பாதயாத்திரை பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    11-ம் திருவிழாவான நாளை மறுநாள் (செவ்வாய் கிழமை) அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜை நடக்கிறது அன்று மாலை 4.30 மணிக்கு சுவாமி, அம்பாள் யாதவர் மண்டகப்படி வந்து அங்கு அபிசேகம், அலங்கார தீபாராதனைக்கு பின் இரவு 7 மணிக்கு மேல் திருநெல்வேலி நகரத்தார் மண்டகப்படி சேர்த்தல் நடக்கிறது. அங்கு 10.30 மணிக்கு மேல் சுவாமி குமரவிடங்க பெருமான் தெப்பத்தில் 11 சுற்றுகள் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    விழாவில் ஒவ்வொரு நாளும் கோவில் வளாகத்தில் உள்ள கலையரங்கில் சமய சொற்பொழிவு, திருவாசகம் முற்றோதுதல், பரத நாட்டியம், பட்டிமன்றம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    விழாவுக்கான ஏற்பாடு களை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், கோவில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    • பச்சை சாத்தி கோலத்தில் சுவாமி சண்முகரை கண்டால் வாழ்வில் செல்வம் செழிக்கும், வளம்சேரும் என்பது ஐதீகம்.
    • நாளை தேர் கடாட்சம் நடக்கிறது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிர மணியசுவாமி கோவில் மாசி திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்று வருகிறது.

    7-ம் திருவிழாவான நேற்று மாலை சுவாமி சண்முகர் வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் செம்பட்டு அணிந்து செம்மலர்கள் சூடி, செம்மேனியுடன் சிவப்பு சாத்தி கோலத்தில் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    8-ம் திருவிழாவான இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனையும் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.

    அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர், பிரம்மன் அம்சமாக வெள்ளை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளில் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடைபெற்றது.

    தொடர்ந்து பகல் 11.30 மணிக்கு விஷ்ணு அம்சமாக சுவாமி சண்முகர், வள்ளி, தெய்வானையுடன் பச்சை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பச்சை சாத்தி சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடைபெற்றது.

    பச்சை சாத்தி கோலத்தில் சுவாமி சண்முகரை கண்டால் வாழ்வில் செல்வம் செழிக்கும், வளம்சேரும் என்பது ஐதீகம். எனவே இதனை காண இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரண்டிருந்தனர்.

    9-ம் திருவிழாவான நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10 மணிக்கு தேர் கடாட்சம் நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 10 திருவிழாவான நாளை மறுநாள் (திங்கள் கிழமை) காலை 7 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் மீன லக்னத்தில் தேரோட்டம் நடக்கிறது.

    11-ம் திருவிழாவான 7-ந்தேதி இரவு 10.30 மணிக்கு மேல் தெப்ப உற்சவம் நடக்கிறது. 12-ம் திருவிழாவான 8-ந் தேதி மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் எட்டு வீதிகளில் உலா நடைபெற்று இரவு 9 மணிக்கு சுவாமி, அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து விழா நிறைவு பெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், கோவில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • திங்கட்கிழமை சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது.
    • 7-ந்தேதி தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 7-ம் நாளான நேற்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுக்கு பின், உருகு சட்டசேவை நடைபெற்றது.

    பின்னர் சுவாமி சண்முகர், வள்ளி- தெய்வானையுடன் ஸ்ரீபெலி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமி-அம்பாள்களுக்கு தங்கம், வைர ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

    காலையில் சுவாமி, அம்பாள்களுடன் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் வெற்றிவேர் சப்பரத்தில் தூண்டிகை விநாயகர் கோவில் அருகில் உள்ள பிள்ளையன்கட்டளை மண்டபத்தில் எழுந்தருளினார்.

    அங்கு சுவாமி- அம்பாள்களுக்கு அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடைபெற்றது.

    மாலை 4.45 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் செம்பட்டு அணிந்து, செம்மலர்கள் சூடி, செம்மேனியுடன் சிவப்பு சாத்தி கோலத்தில் தங்க சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாமி பின்புறம் சிவ அம்சமாக நடராஜர் கோலத்தில் காட்சி கொடுத்தார். சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    8-ம் நாளான இன்று (சனிக்கிழமை) அதிகாலை சுவாமி சண்முகர் வெள்ளுடை அணிந்து, வெண்ணிற பூக்களால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளை சாத்தி கோலத்தில் பிரம்மா அம்சமாக பெரிய வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.

    காலை 11.30 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை நிற பட்டு உடுத்தி, பச்சை இலை மற்றும் மரிக்கொழுந்து மாலை அணிந்து பச்சை சாத்தி கோலத்தில் விஷ்ணு அம்சமாக பச்சை நிற கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.

    10-ம் நாளான நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. 11-ம் நாளான 7-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • 6-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது
    • 7-ந்தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் மாசி திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வருகிறது.

    7-ம் திருவிழாவான இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    அதிகாலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் கும்ப லக்னத்தில் சண்முகபெருமான் உருகு சட்ட சேவை நடைபெற்றது.

    காலை 9 மணிக்கு சுவாமி சண்முகர் வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளி பிள்ளையன் கட்டளை மண்டபம் சேர்தல் நடைபெற்று அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது.

    மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் சிவப்பு சாத்திக் கோலத்தில் எழுந்தருளி 8 ரத வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.

    8-ம் திருவிழாவான நாளை (சனிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனையும், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. அதிகாலை. 5மணிக்கு சுவாமி சண்முகர் வெள்ளை சாத்தி கோலத்தில் வீதியுலா நடக்கிறது.

    தொடர்ந்து பகல் 11.30 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் வள்ளி- தெய்வானையுடன் பச்சை சாத்தி சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது. 9-ம் திருவிழா இரவு 10 மணிக்கு தேர் கடாட்சம் நடக்கிறது.

    இதற்கிடையே மாசித்திருவிழாவை யொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழாவான 6-ந்தேதி (திங்கள்கிழமை) தேரோட்டம் நடக்கிறது அன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. அன்று காலை 7 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது.

    11-ம் திருவிழாவான 7-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது தொடர்ந்து மற்ற கால பூஜை நடக்கிறது.

    அன்று மாலை 4.30 மணிக்கு சுவாமி அம்பாள் யாதவர் மண்டகப்படி வந்து அங்கு அபிசேகம் அலங்கார தீபாராதனைக்கு பின் இரவு 7மணிக்கு மேல் திருநெல்வேலி நகரத்தார் மண்டகப்படி சேர்தல், அங்கு 10.30 மணிக்கு மேல் தெப்ப உற்சவம் நடக்கிறது.

    12-ம் திருவிழாவான 8-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் எட்டு வீதிகளில் உலா வந்து வடக்கு ரத வீதியில் உள்ள 14 ஊர் செங்குந்த முதலியார் மண்டபம் சேர்தல், அங்கு இரவு 9மணிக்கு சுவாமி அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடபெற்று விழா நிறைவு பெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், கோவில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • இன்று சிவப்பு சாத்தி கோலத்தில் சுவாமி காட்சி கொடுக்கிறார்
    • 6-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 6-ம் திருநாளான நேற்று கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. காலை 7 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி கோ ரதத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்தார். மாலையில் கீழ ரதவீதியில் உள்ள திருவாவடுதுறை ஆதினம் மண்டபத்துக்கு வந்த சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனைக்கு பின்னர் மேலக்கோவில் சென்றடைந்தனர். பின்னர் இரவு சுவாமி வெள்ளித்தேரிலும், அம்பாள் இந்திர விமானத்திலும் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.

    மாசித்திருவிழாவை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    நேற்றும் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், புஷ்ப காவடி, சூரிய காவடி, பறவை காவடி எடுத்தும் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    திருவிழாவின் 7-ம் திருநாளான இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. வழக்கமான பூஜைகளுக்கு பின்னர் 8.45 மணியளவில் சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் வெற்றிவேர் சப்பரத்தில் தூண்டிகை விநாயகர் கோவில் அருகே உள்ள பிள்ளையன் கட்டளை மண்டபத்துக்கு எழுந்தருளுகிறார்.

    அங்கு அபிஷேகம், அலங்காரமாகி, மாலை 4.30 மணிக்கு தங்க சப்பரத்தில் சுவாமி சண்முகர், வள்ளி, தெய்வானை அம்பாளுடன் செம்பட்டு அணிந்து, செம்மலர்கள் சூடி, செம்மேனியுடன் சிவப்பு சாத்தி கோலத்தில் சிவன் அம்சமாக எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    8-ம் திருநாளான நாளை (சனிக்கிழமை) அதிகாலையில் சுவாமி சண்முகர் பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளுடை அணிந்து, வெந்நிற மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளை சாத்தி கோலத்தில் பிரம்மா அம்சமாக எழுந்தருளி வீதி உலா வருகிறார்.

    பகல் 11.30 மணிக்குள் சுவாமி சண்முகர் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை நிற பட்டு உடுத்தி, பச்சை இலை மற்றும் மரிக்கொழுந்து மாலை அணிந்து பச்சை சாத்தி கோலத்தில் விஷ்ணு அம்சமாக எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

    10-ம் திருநாளான வருகிற 6-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 11-ம் திருநாளான 7-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு தெப்ப உற்சவம் நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    ×