என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஐதராபாத்"
- திரைப்படத் துறையின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர் ராமோஜி ராவ்.
- ராமோஜி ராவின் உடலுக்கு அரசு மாரியாதை வழங்கப்பட்டது.
ராமோஜி ராவ் ஃபிலிம்சிட்டி, ராமோஜி குழும நிறுவனங்களின் தலைவரும், ஈநாடு பத்திரிகை நிறுவனருமான ராமேஜி ராவ் (87) உடல்நகுறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 3.45 மணிக்கு காலமானார்.
ராமோஜி பிலிம் சிட்டியை நிறுவியதன் மூலம் ஐதராபாத் மற்றும் திரைப்படத் துறையின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர் ராமோஜி ராவ். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து இன்று காலை ராமோஜி ராவுக்கு இறுதி அஞ்சலி நடைபெற்றது. வீட்டில் இருந்து ஊர்வலமாக ராமோஜி பிலிம் சிட்டி முழுவதும் எடுத்துச் செல்லப்பட்ட அவரது உடலுக்கு ஊழியர்கள் உள்ளிட்டோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து ராமோஜி ராவின் உடலுக்கு அரசு மாரியாதை வழங்கப்பட்டது.
இறுதி ஊர்வலத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு ராமோஜி ராவின் உடலை தனது தோளில் சுமந்து சென்றார்.
அவர்களை தொடர்ந்து குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்களது இறுதி மரியாதையை செலுத்தினர். இதையடுத்து ராமோஜி ராவின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
#WATCH | Telangana: TDP chief N Chandrababu Naidu attends the last rites of Eenadu & Ramoji Film City founder Ramoji Rao, in Hyderabad.
— ANI (@ANI) June 9, 2024
(Visuals source: I&PR, Government of Telangana) pic.twitter.com/x6JHDkJNaB
- அஜித்தின் 63-வது படத்தை 'மார்க் ஆண்டனி' பட இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
- இந்த படத்திற்கு 'குட் பேட் அக்லி' என பெயரிடப்பட்டுள்ளது. படம் 2025-ம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அஜித்தின் 63-வது படத்தை 'மார்க் ஆண்டனி' பட இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த திரைப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
இந்த படத்திற்கு 'குட் பேட் அக்லி' என பெயரிடப்பட்டுள்ளது. படம் 2025-ம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகியது. அஜித் இப்படத்தில் மூன்று வேடத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர் என்று சமீப காலமாக செய்திகள் பரவி வருகிறது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மே 10 அன்று ஐதராபாத்தில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று நேற்று முடிவடைந்த நிலையில் . இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜப்பானில் நடைபெற இருக்கிறது.
நேற்று படப்பிடிப்பு தளத்தில் ஆதிக் ரவிச்சதிரனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முதல் கட்ட படப்பிடிப்பில் ஒரு குத்து பாடலுக்கு நடன இயக்குனரான கல்யாண் மாஸ்டர் இயக்கியுள்ளார். அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் சிரஞ்சீவி தனது எக்ஸ் பக்கத்தில், மேரு மலையே தலைவணங்கும் அளவுக்கு வாழ்ந்த ராமோஜி ராவின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.
- காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, இயக்குனர் ராம் கோபால் வர்மா, இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
ராமோஜி ராவ் ஃபிலிம்சிட்டி, ராமோஜி குழும நிறுவனங்களின் தலைவரும், ஈநாடு பத்திரிகை நிறுவனருமான ராமேஜி ராவ் (87) உடல்நகுறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3.45 மணிக்கு காலமானார்.
ராமோஜி பிலிம் சிட்டியை நிறுவியதன் மூலம் ஐதராபாத் மற்றும் திரைப்படத் துறையின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர் ராமோஜி ராவ். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில், 'ராமோஜி ராவ் இந்தியாவின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டவர். அவருடன் பல முறை உரையாடுவதற்கு எனக்கு கிடைத்த வாய்ப்பை அதிர்ஷ்டமாக நினைக்கிறேன்.அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அபிமானிகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி' என்று பதிவிட்டுள்ளார். மேலும் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தனது எக்ஸ் பக்கத்தில், மேரு மலையே தலைவணங்கும் அளவுக்கு வாழ்ந்த ராமோஜி ராவின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.
ஜுனியர் என்.டி.ஆர் தனது எக்ஸ் பக்கத்தில், இந்திய சினிமாவிலும் பத்திரிக்கைத் துறையிலும் தீர்க்கதரிசியாக விளங்கிய ராமோஜி ராவின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். எனது முதல் படமான நின்னு சூடலனி உருவாக காரணமாக இருந்த அவரை என்றென்றைக்கும் நினைவில் வைத்திருப்பேன். அவரது ஆன்மா சாந்தியடைவதாக. அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்வதாக பதிவிட்டுள்ளார்.
மேலும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, இயக்குனர் ராம் கோபால் வர்மா, இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
- கடந்த மாதம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர் படக்குழுவினர். அஜித் இப்படத்தில் மூன்று வேடத்தில் நடிக்கவுள்ளார்.
- படப்பிடிப்பு கடந்த மே 10 அன்று ஐதராபாத்தில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று நேற்று முடிவடைந்த நிலையில் . இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜப்பானில் நடைபெற இருக்கிறது.
மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் சமீபத்தில் அஜித் குமார் கமிட்டானார்.
விடாமுயற்சி படத்தைத் தாண்டி குட் பேட் அக்லி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரலானது. இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் யார் யார் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் ரசிகர்களிடையே தொன்றியுள்ளது.
கடந்த மாதம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர் படக்குழுவினர். அஜித் இப்படத்தில் மூன்று வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர் என்று சமீப காலமாக செய்திகள் பரவி வருகிறது. இந்த படமானது 2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மே 10 அன்று ஐதராபாத்தில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று நேற்று முடிவடைந்த நிலையில் . இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜப்பானில் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் படத்தின் அடுத்த அப்டேட் கிடைத்துள்ளது. படத்தில் மலையாள நடிகர் பிரேமலு புகழ் நஸ்லேன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுக்குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெலியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஐதராபாத் அணியின் தோல்வியை தாங்கி கொள்ள முடியாமல் அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் கண்ணீர் விட்டு அழுதார்.
- பாலிவுட்டின் மூத்த நடிகரான அமிதாப் பச்சன், காவ்யா மாறனுக்காக வருந்துவதாகத் தெரிவித்துள்ளார்.
காவ்யா மாறனுக்காக மிகவும் வருந்துகிறேன்.. ஐதராபாத் அணியின் தோல்வி குறித்து அமிதாப் பச்சன் சொன்னது இதுதான்
நேற்று (மே 26) நடந்த ஐபிஎல் 2024 தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து மோதின. முதலில் டாஸ் வென்ற பேட்டிங்கை தேர்வு செய்த ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 113 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனைத் தொடர்ந்து பேட்டிங் இறங்கிய கொல்கத்தா அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 10.3 ஓவரில் 114 ரன்கள் எடுத்து 3 வது முறையாக வெற்றிக் கோப்பையை தட்டிச் சென்றது. இதற்கிடையில் ஐதராபாத் அணியின் தோல்வியை தாங்கி கொள்ள முடியாமல் அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் கேமராவிற்கு எதிர்புறம் திருப்பியபடி கண்ணீர் விட்டு அழுதார்.
கண்ணீரை மறைத்து சிரித்தப்படி அவரது அணியின் வீரர்களுக்குக் கைதட்டி வரவேற்றார். இதனை பார்த்த ரசிகர்கள் கஷ்டமாக உள்ளது என சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாலிவுட்டின் மூத்த நடிகரான அமிதாப் பச்சன், காவ்யா மாறனுக்காக வருந்துவதாகத் தெரிவித்துள்ளார்.
அவர் நடத்திவரும் பிளாகில் ஐபிஎல் இறுதிப்போட்டி குறித்து குறிப்பிட்ட அவர், "எஸ்ஆர்ஹச் அணி தோல்வியடைந்தது மிகுந்த ஏமாற்றத்தைத் தருகிறது. ஸ்டேடியத்தில் தோல்விக்குப் பிறகு எஸ்ஆர்ஹச் உரிமையாளர் காவ்யா மாறன் உணர்ச்சிவசப்பட்டு, கண்ணீரில் விட்டார். கேமராக்களில் இருந்து முகத்தைத் திருப்பி, தனது கண்ணீரை அவர் மறைத்தார். அவருக்காக நான் மிகவும் வருடத்தப்படுகிறேன்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து அந்த பதிவில் அவர், "பரவாயில்லை..மை டியர், தோல்வியில் மனத்தைத் தளரவிட்டுக்கொடுக்காதே நாளை மற்றொரு நாளே!" என்று ஆறுதல் கூறியுள்ளார்.
- நேற்றைய போட்டியில் வென்றதன் மூலம் ஐபிஎல் கோப்பையை 3 வது முறையாக கொல்கத்தா அணி கைப்பற்றியது
- பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக் கான் கேகேஆர் அணியின் இணை உரிமையாளராக உள்ளார்
ஐபிஎல் தொடரில் நேற்று (மே 26) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் ஐதராபாத் - கொல்கத்தா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஐதராபாத் அணி தொடக்கம் முதலே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 113 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனையடுத்து பேட்டிங் இறங்கிய கொல்கத்தா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 10.3 ஓவரில் 114 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐபிஎல் கோப்பையை 3 வது முறையாக கொல்கத்தா அணி கைப்பற்றியது. தொடக்கம் முதலே கொல்கத்தாவின் வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக அணியின் பயிற்சியாளரான கவுதம் காம்பிர் விளங்குகிறார்.
நேற்றைய போட்டியின் வெற்றிக்குப் பிறகு கேகேஆர் அணி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது. அந்த வகையில் பாலிவுட்டின் முன்னணி நடிகரும் கேகேஆர் அணியின் இணை உரிமையாளருமான ஷாருக் கான், மைதானத்துக்குள் வந்து அணியில் உள்ளவர்களைக் காட்டித் தழுவி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அப்போது கேகேஆர் வெற்றிக்கு முக்கிய காரணகர்த்தாவாக கவுதம் கம்பீரின் நெற்றியில் ஷாருக் முத்தமிட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக கவுதம் காம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக தேர்வாக அதிகம் வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், அவரை கேகேஆர் அணி பயிற்சியாளராகவே நீடிக்க வலியுறுத்தி அவருக்கு ஷாருக் கான் பிளாங்க் செக் கொடுத்தாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
- சைவ உணவுக்காரர்களுக்கு இந்த மருந்து வெல்லத்தோடு சேர்த்து கொடுக்கப்படும்.
- கடந்த ஆண்டு சுமார் 2 லட்சம் பேருக்கு மீன் பிரசாதம் வழங்கப்பட்டது.
ஐதராபாத், நம்பல்லி கண்காட்சி மைதானத்தில் ஒவ்வொரு ஆண்டும், பருவ மழையின் தொடக்க காலமான ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் மீன் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
அப்போது ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிருள்ள மீன் வாயில் மருந்தை வைத்து அதை அப்படியே பாதிக்கப்பட்டவரின் தொண்டையில் வைத்து விழுங்க வைப்பார்கள்.
இலவசமாக வழங்கப்படும் இந்த மீன் மருந்தை பெற இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஆஸ்துமா நோயாளிகள் அங்கே கூடுவது வழக்கம். இதை பாத்தினி ஹரிநாத் கவுட் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் பரம்பரை பரம்பரையாக செய்து வருகிறார்கள்.
நிகழ்ச்சியில் மீன் பிரசாதமாக, உயிருள்ள விரால் மீனின் வாயில் மஞ்சள் நிற மூலிகை பேஸ்ட்டை வைத்து ஆயிரக்கணக்கான ஆஸ்துமா நோயாளிகளுக்கு கொடுக்கப்படும்.
சைவ உணவுக்காரர்களுக்கு இந்த மருந்து வெல்லத்தோடு சேர்த்து கொடுக்கப்படும்.
நம்பள்ளியில் உள்ள கண்காட்சி மைதானத்தில், பத்தினி குடும்பத்தினரால், ஆண்டுதோறும் வழங்கப்படும் 'மீன் பிரசாதம்' ஜூன் 8ம் தேதி பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.
ஆஸ்துமா மற்றும் பிற சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பத்தினி குடும்பத்தினர் மீன் பிரசாதம் வழங்குகிறார்கள்.
இந்த ஆண்டு வருகிற ஜூன் 8-ந் தேதி மீன் பிரசாதம் வழங்க உள்ளனர்.
கடந்த ஆண்டு சுமார் 2 லட்சம் பேருக்கு மீன் பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு, எண்ணிக்கை அதிகரிக்கும் என, ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
- மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் சமீபத்தில் அஜித் குமார் கமிட்டாகி இருந்தார் .
- இந்நிலையில் குட் பேட் அக்லி படத்தைக் குறித்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் சமீபத்தில் அஜித் குமார் கமிட்டாகி இருந்தார் .
விடாமுயற்சி படத்தைத் தாண்டி குட் பேட் அக்லி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரலானது. இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் யார் யார் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் ரசிகர்களிடையே தொற்றியுள்ளது.
இந்நிலையில் குட் பேட் அக்லி படத்தைக் குறித்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் அஜித் மூன்று முக பாவனையை கொடுத்தபடியுள்ளார். ஒன்று சாந்தமாகவும், ஒன்று சிரித்துக்கொண்டும் மற்றொன்று கோவமாக முக பாவனையில் காணப்படுகிறார். மேஜையில் துப்பாக்கிகள் இடம் பெற்றுள்ளன. இந்த போஸ்டர் தற்பொழுது ரசிகர்களுக்கு விருந்து அலளிக்கும் வகையில் இருக்கிறது. தற்பொழுது சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகிரது. படத்தை புஷா திரைப்படத்தை தயாரித்த மைத்த்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர் மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார்.
அதன்படி ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜூன் 6 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குட் பேட் அக்லி படம் 2025 ஆம் ஆண்டு பொங்கல் விருந்தாக வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விடாமுயற்சி படத்தைத் தாண்டி குட் பேட் அக்லி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
- குட் பேட் அக்லி படம் 2025 ஆம் ஆண்டு பொங்கல் விருந்தாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் அஜித் குமார் நடித்து வருகிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு தடைகளுக்கிடையே நடந்து வருகிறது. இதுவரை விடாமுயற்சி படத்தைக் குறித்து பெரிய அளவிளான எந்த அப்டேட்டும் வராததால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் சமீபத்தில் அஜித் குமார் கமிட்டாகி இருந்தார். இது ரசிகர்களை மீண்டும் உற்சாகம் அடையச் செய்தது.
விடாமுயற்சி படத்தைத் தாண்டி குட் பேட் அக்லி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.சமீபத்தில் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரலானது. மார்க் ஆண்டனி படத்தின் மூலம் ஹிட் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன், அஜித்தை வைத்து இயக்கும் குட் பேட் அக்லி படம் தாராமானதாக இருக்கும் என்று ரசிகர்கள் இப்போதே கூறிவருகின்றனர். இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் யார் யார் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் ரசிகர்களிடையே தொற்றியுள்ளது.
இந்நிலையில் குட் பேட் அக்லி படத்தைக் குறித்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜூன் 6 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குட் பேட் அக்லி படம் 2025 ஆம் ஆண்டு பொங்கல் விருந்தாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இடிபாடுகளுக்கு அடியில் இருந்து உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
- தெலுங்கானாவின் பல்வேறு பகுதிகளிலும் பெய்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள பாச்சுபல்லி பகுதியில் பெய்த கனமழை காரணமாக கட்டுமானத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் நான்கு வயது குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
பலியானவர்கள் ஒடிசா மற்றும் சத்தீஸ்கரைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்றும் இந்த சம்பவம் நேற்று நடந்ததாகவும் பாச்சுபல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
இடிபாடுகளுக்கு அடியில் இருந்து உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
தெலுங்கானாவின் பல்வேறு பகுதிகளிலும் பெய்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
பேரழிவு நிவாரணப் படை குழுக்கள், நகரின் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள தண்ணீர் மற்றும் விழுந்த மரங்களை அகற்றி வருவதாக கிரேட்டர் ஐதராபாத் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ராம் பாபு மஹதே தலைமையிலான குழுசாத்தியக் கூறுகளை ஆய்வு செய்தனர்.
- ஜூலை 1 முதல் இரு நகரங்களுக்கும் மீண்டும் விமானங்கள் இயக்கப்பட உள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் இருந்து ஐதராபாத், பெங்களூரு நகரங்களுக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தினசரி விமான சேவையை வழங்கி வந்தது.
இதற்கிடையே இந்தாண்டு மார்ச் மாதம் முதல் தற்காலிகமாக விமான சேவை நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதற்கிடையே புதுச்சேரியில் இருந்து விமான சேவையை தொடங்க புதுச்சேரி அரசு பல்வேறு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தது.
தொடர்ந்து இண்டிகோ-ஏர் நிறுவனம் புதுச்சேரியில் இருந்து ஐதராபாத், பெங்களூருவுக்கு விமானங்களை இயக்க முன் வந்துள்ளது.
ஜூலை 1-ந் தேதி முதல் இந்த இரு நகரங்களுக்கு மீண்டும் விமானங்கள் இயக்கப்பட உள்ளது.
இதன் ஒரு பகுதியாக இண்டிகோ நிறுவனத்தின் பிரதிநிதிகள் விமான நிலையத்தில் ஆய்வு நடத்தினர். விமான நிலையத் தின் முனைய கட்டிடம், ஓடுபாதை மற்றும் கட்டுப்பாட்டு கோபுரம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் இண்டிகோ நிறுவனத்தின் மூத்த மேலாளர் ராம் பாபு மஹதே தலைமையிலான குழுவினரும் விமானங்களை இயக்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து புதுச்சேரி விமான நிலையத்தின் இயக்குநர் ராஜசேகர் ரெட்டி கூறியதாவது:-
பயணிகள் முனைய கட்டிடம், ஓடுபாதை, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம், வானிலை ஆய்வுத்துறை அலுவலகங்கள், தீயணைப்பு, எரிபொருள் நிலையம் மற்றும் செயல்பாட்டு பகுதிகளை இந்த குழுவினர் பார்வையிட்டனர்.
விமானங்களை இயக்குவதற்கான வசதிகள் இருப்பது குறித்து குழு திருப்தி அடைந்துள்ளது.
அதன்படி ஜூலை 1-ந் தேதி முதல் புதுச்சேரியில் இருந்து பெங்களூரு மற்றும் ஐதராபாத் வரை விமான சேவைகளை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
மேலும் சில வழித்தடங்களை இதில் சேர்க்க ஆபரேட்டர்கள் விரும்புகின்றனர். எந்தெந்த பகுதிக்கு என்பது விரைவில் முடிவு செய்யப்படும்.
கவர்னர், முதல்-அமைச்சர் மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் ஆகியோர் விமான சேவையை விரைவில் தொடங்கவும், புதுச்சேரியை அதிக இடங்களுடன் விமானத்தின் மூலம் இணைக்கவும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- குடியிருப்பு கேட்-ன் அருகே இருந்த தண்ணீர் தொட்டி திறந்து கிடந்ததை அவர் கவனிக்கவில்லை.
- தண்ணீர் தொட்டியை மூடிவிட்டு மனிதநேயத்தை குண்டுகுழியில் புதைத்த நபரை வசைபாடி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள கோண்டாபூரில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அதில் ஷேக் அக்மல் என்ற இளைஞர் (22 வயது) வசித்து வந்துள்ளார். இவர் வழக்கமாக ஜிம்முக்கு சென்று வந்துள்ளார். நேற்று அதிகாலை வழக்கம் போல் ஜிம்முக்கு சென்று விட்டு மீண்டும் குடியிருப்புக்கு திரும்பியுள்ளார்.
அப்போது குடியிருப்பு கேட்-ன் அருகே இருந்த தண்ணீர் தொட்டி திறந்து கிடந்ததை அவர் கவனிக்கவில்லை. இதனால், எதிர்பாராத விதமாக தண்ணீர் தொட்டிக்குள் விழுந்துள்ளார் ஷேக் அக்மல். இதனை குடியிருப்பில் இருந்த நபர் பார்த்தும், பார்க்காதது போல் இருந்தது மட்டுமல்லாமல் ஷேக் அக்மலை காப்பாற்ற முயற்சிக்காமல் தண்ணீர் தொட்டியை மூடிவிட்டு சென்றுள்ளார்.
இந்த சம்பவங்கள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது. மனிதத் தவறால் நிகழ்ந்த எதிர்பாராத சம்பவம் என்ற போதும், தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த நபரை காப்பாற்றாமல் தண்ணீர் தொட்டியை மூடிச்சென்ற அந்த நபரின் செயல் மனிதநேயம் குறித்து பல்வேறு கேள்விகளை நம் முன்னே எழுப்புகிறது.
தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த ஷேக் அக்மல் உயிரிழந்த நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், இளைஞரை காப்பாற்றாமல், தண்ணீர் தொட்டியை மூடிவிட்டு மனிதநேயத்தை குண்டுகுழியில் புதைத்த நபரை வசைபாடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்