search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 128738"

    • சாரங்கபாணி மகன் ஜெகவீரப்பாண்டியன் என்பவருக்கும் கடந்த 2016 ல் திருமணம் நடைபெற்றது.
    • புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    கடலூர்:

    விருத்தாச்சலம் தாலுக்கா நடியப்பட்டு கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் மகள் வனிதா என்பவருக்கும் பண்ருட்டி தாலுக்கா மேலிருப்பு கிராமம் சாரங்கபாணி மகன் ஜெகவீரப்பாண்டியன் என்பவருக்கும் கடந்த 2016 ல் திருமணம் நடைபெற்றது. அதன்பின்னர் 2 வருடம் வாழ்ந்த அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனது மனைவி வனிதாவினால் தனக்கும் தனது குடும்பத்தில் உடன் பிறந்த சகோதரர் சகோதரிகளுக்கும் பிரச்சனை அடிக்கடி வருவதை தவிர்க்க வேண்டி தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது மனுதாரர் வனிதா தனது கணவரை காணவில்லை என காடாம்புலியூர் போலீஸ் நிலையத்தில் கடந்த 23.01.2019 ல் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு காணாமல் போனவரை கண்டுபிடித்து வனிதாவிடம் ஒப்படைக்கப்பட்டது. பிறகு அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு வனிதா பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தி்ல் தனது கணவர் அவரது குடும்பத்துடன் சேர்ந்து வரதட்சணை கேட்டுதுன்புறுத்துவதாக போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அன்றைய தினமே வனிதாவின் கணவர் ஜெகவீரபா ண்டியன் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து வெளி வந்தவர் நிபந்தனை ஜாமினின் பேரில் 30 நாட்கள் தினந்தோறும் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டுள்ளார். தற்போது 2022 ஆம் ஆண்டு மே மாதம் வெளிநாடு (கத்தார்) சென்று விட்டார்.

    இந்த தகவல் அவரது மனைவி வனிதாவிற்கு நன்குதெரியும் ஆனால் அவர் வெளிநாடு சென்றது பிடிக்காமல் அவரக்கு மன உளைச்சல் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் .மேற்படி வனிதா 23.11.2022 ந் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2019 ல் காடாம்புலியூர் காவல் நிலையத்தில் தனது கணவரை காணவில்லை என கொடுத்த புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தனது கணவர் உயிருடன் உள்ளாரா அல்லது உறவினர்களால் கொல்லப்பட்டாரா என ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இது சம்மந்தமாக காடாம்புலியூர் காவல் துறையினர் மேலிருப்பு கிராமம் சென்று ஜெகவீரபாண்டியனின் உறவினர்களிடம் விசாரணை செய்ததில் அவர் வெளிநாடு கத்தாரில் உள்ளதாகவும், அவருடன் வீடியோ காலில் பேசி அவருக்கும் அவரது மனைவிக்குமான பிரச்சனைக்கான காரணம் அறிந்து அவர் பேசிய வீடியோ வாக்குமூல பதிவினை பதிவு செய்யப்பட்டது. இந்த பதிவினை போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி அரசு தரப்பு வழக்கறிஞரிடம் சமர்ப்பித்த உடன் நீதிமன்றம் சார்பில் மேற்படி காணாமல் போன ஜெகவீரபாண்டியனிடம் வீடியோ காலில் பேசி உண்மை தன்மையை வெளிப்படுத்தினார். இதனை உயர் நீதிமன்ற நீதிபதி அவர்கள் உண்மையை புரிந்து கொண்டு மேற்படி மனுதாரர் மீது நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாலும் காவலர்களை அலைக்க ழித்ததாலும் உண்மைக்கு புறம்பான மனுவினை சுய லாபத்திற்க்காக பயன்படுத்தியதற்க்காக ரூ. 50,ஆயிரம்அபராதம் 4 வார காலத்திற்க்குள் கட்ட வேண்டும். அப்படி தவறு்ம் பட்சத்தில் சிறைதண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் மேலும் இந்த மனு வினை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். 

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு தனக்கு நேர்ந்தது குறித்து கேசவன் நண்பர்களிடம் தெரிவித்தார்.
    • நண்பர்கள் விசாரித்தபோது பணம் பறித்து சென்றது போலீஸ் அதிகாரி இல்லை என்பது தெரியவந்தது.

    சென்னை:

    அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. காலனி மறைமலை அடிகள் தெருவை சேர்ந்தவர் கேசவன். அண்ணாசாலையில் உள்ள தனியார் கார் விற்பனை நிலையத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

    இவர் கடந்த 19-ந்தேதி காலை எழும்பூர் எத்திராஜ் சாலையில் தபால் நிலையம் அருகே உள்ள கடை ஒன்றில் டீ குடித்தபடி சிகரெட் புகைத்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் கேசவனிடம் புகை பிடித்ததை கண்டித்தார்.

    மேலும் 'நான் போலீஸ் உயர் அதிகாரி'பொது இடத்தில் நின்று பொதுமக்களை பாதிக்கும் வகையில் சிகரெட் பிடிக்கலாமா? தபால் நிலையம் முன்பு சிகரெட் பிடித்ததால் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.

    அபராத தொகையை கட்டவில்லை என்றால், கைது செய்வேன் என்று மிரட்டினார். மேலும் கேசவனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்ல மோட்டார் சைக்கிளில் ஏற்ற முயன்றார். இதனால் பயந்து போன கேசவன் அபராதத்தை நான் கட்டிவிடுகிறேன் என்று கூறி, அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு சென்று ரூ.25 ஆயிரத்தை எடுத்து போலீஸ் போல் மிரட்டிய வாலிபரிடம் கொடுத்தார். பின்னர் அந்த வாலிபர் பணத்துடன் அங்கிருந்து சென்று விட்டார்.

    இதனை வெளியில் சொன்னால் நண்பர்கள் கேலி செய்வார்கள் என்று நினைத்து கேசவன் யாரிடமும் சொல்லாமல் இருந்தார். அவர் தன்னை மிரட்டி பணம் பெற்றது போலீஸ் அதிகாரி என்று நினைத்து இருந்தார்.

    இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தனக்கு நேர்ந்தது குறித்து கேசவன் நண்பர்களிடம் தெரிவித்தார். நண்பர்கள் விசாரித்தபோது பணம் பறித்து சென்றது போலீஸ் அதிகாரி இல்லை என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கேசவன் எழும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து விசாரித்தனர்.

    அப்போது கேசவனிடம் போலீஸ் அதிகாரி போல் மிரட்டி பணம் பறித்து சென்றது நெற்குன்றம் ஜெயராம் நகரை சேர்ந்த ஊர்க்காவல் படை வீரரான டான்ஸ் ஸ்டூவர்ட் (32) என்பது தெரிந்தது. சம்பவத்தன்று பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் போது, சிகரெட் புகைத்த கேசவனை மிரட்டி அவர் ரூ.25 ஆயிரத்தை பறித்து சென்றது உறுதியானது. இதையடுத்து டான்ஸ் ஸ்டூவர்ட்டை போலீசார் கைது செய்தனர்.

    • சாலையில் திரிந்த மாடுகளை நகராட்சி பணியாளர்கள் பிடித்து அபராதம் விதித்தனர்.
    • மாடுகளை சாலைகளில், தெருக்களில் மேய்ச்சலுக்கு விடக்கூடாது என்று எச்சரித்து ஒப்படைத்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர்பகுதியில் சிவகங்கை ரோடு, ராமேசுவரம் செல்லும் நான்கு வழிசாலை, பழைய பஸ்நிலையம், சுந்தரபுரம், கடைவீதி, சிவகங்கை ரோடு, தாயமங்கலம்ரோடு, கன்னார் தெரு, சிப்காட், மூங்கில் ஊரணி ஆகிய பகுதிகளில் ஏராளமான வீடுகளில் உள்ள பசுமாடுகளை இரவு-பகலாக அதன் உரிமையாளர்கள் மேய்ச்சலுக்கு அவிழ்த்து விடுகின்றனர்.

    சாலையில் சுற்றி திரியும் இந்த மாடுகளால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். இதுகுறித்து நகராட்சி அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது. நகராட்சி நிர்வாகம் மாடுகளை சாலை மற்றும் தெருபகுதியில் மேய்ச்சலுக்கு விடக்கூடாது என்று வாகனத்தில் ஒலி பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. இதை பொருட்படுத்தாமல் வழக்கம்போல் மாடுகள் ரோட்டில் திரிந்தன. நகராட்சி ஆணையாளர் சக்திவேல் உத்தரவின்படி சுகாதார ஆய்வாளர் தங்கதுரை மற்றும் பணியாளர்கள் கடைவீதி மற்றும் சாலையில் திரிந்த 10-க்கும் மேற்பட்ட பசுமாடுகளை பிடித்து நகராட்சி அலுவலக வளாகத்தில் கட்டிபோட்டனர்.

    அந்த மாடுகளுக்கு தண்ணீர், புல், கீரைகளை வழங்கினர். மாடுகளை தேடி வரும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து மீண்டும் மாடுகளை சாலைகளில் , தெருக்களில் மேய்ச்சலுக்கு விடக்கூடாது என்று எச்சரித்து ஒப்படைக்கப்படும்.

    • சேகரிக்கப்படும் குப்பையில் இருந்து அவினாசி கைகாட்டிபுதூரில் உள்ள வளம் மீட்பு பூங்காவில் மக்காத குப்பையிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது.
    • 15 நாட்கள் கால கெடு கொடுத்து அனைவரும் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து தருவதற்கு 15 நாட்கள் அவகாசம் தர உள்ளது.

    அவினாசி, நவ.23-

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள 18 வார்டுகளில் குடியிருப்புகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் தினசரி டன் கணக்கில் குப்பை சேருகிறது. பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் 52 தள்ளுவண்டிகளில் துப்புரவு பணியாளர்கள் தினசரி குப்பையை சேகரித்து வருகின்றனர்.

    இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பையில் இருந்து அவினாசி கைகாட்டிபுதூரில் உள்ள வளம் மீட்பு பூங்காவில் மக்காத குப்பையிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. எனவே வீடுகள், தொழிற்கூடங்கள், வணிக நிறுவனங்களில் தினசரி குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து துப்புரவு பணியாளர்களிடம் தர வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் பெரும்பாலானவர்கள் அதை கடைப்பிடிப்பதில்லை.

    இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் கூறுகையில், பேரூராட்சி நிர்வாகத்தினர் ஒருவாரத்திற்கு வீடுவீடாக சென்று குப்பையை தரம்பிரிக்காதவர்கள் யார் என்று ஆய்வுப் பணி மேற்கொள்ள உள்ளனர். பெரிய வார்டுகள், வியாபார நிறுவனங்களில் அதிக அளவில் குப்பை சேருகிறது. பொதுமக்கள் தாங்களாகவே தரம் பிரித்து வழங்கினால் தூய்மை பணியாளர்களுக்கு வேலை பழு குறைவதுடன் அனைத்து பகுதிகளிலும் விரைவில் குப்பை சேகரிக்க ஏதுவாக இருக்கும்.

    குப்பையில்லா பேரூராட்சியாக மாற்றும் நோக்குடன் குப்பைகள் தேங்காமல் தினசரி சேகரிப்பதற்காக 15-வது நிதிக்குழு மானியம் மூலம் பேட்டரி மூலம் இயங்கும் வகையில் ஒலிபெருக்கி வசதியுடன்4 ஆட்டோக்கள் வாங்கப்பட்டுள்ளது. இதில் 2-பகுதிகளாக பிரித்து குப்பைகள் சேகரிக்கப்படும். அதற்கு முன்பாக 15 நாட்கள் கால கெடு கொடுத்து அனைவரும் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து தருவதற்கு 15 நாட்கள் அவகாசம் தர உள்ளது. மேலும் தரம்பிரிக்காமல் குப்பையை வைத்திருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்புத்தர வேண்டுகிறோம் என்றார்.

    • புகையிலை பொருட்களை தடைகளை மீறி பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக சுகாதாரத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
    • 5 கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டாரத்தில் உள்ள கடைகளில் சிலர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை தடைகளை மீறி பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக சுகாதாரத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வட்டார சுகாதார மேற்பா ர்வையாளர் பால்ஏசுதாஸ் தலைமை யிலான சுகாதாரத்துறை அதிகாரிகள் சங்கராபுரம் பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர்.

    சோதனையில் கள்ளக்குறிச்சி மெயின் ரோடு, அரசு ஆண்கள் பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்த 5 பெட்டிக்கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து 5 கடைகளின் உரிமையா ளர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்ததோடு, கடைகளில் இருந்த புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து உரிமை யாளர்களை எச்சரித்தனர். இந்த ஆய்வின்போது சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், பாலமுருகன், பாசில், பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் குணதீபன், ஜனார்த்தனன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • வீடு, வீடாக தூய்மை பணியாளர்கள் குப்பைகளை தரம் பிரித்து வாங்கி நாள்தோறும் வரும் வாங்கி வாகனங்கள் மூலம் நகராட்சி குப்பை கிடங்கில் கொண்டு கொட்டுகின்றர்.
    • நாள்தோறும் இந்த குப்பைகளை அகற்றினாலும் குப்பைகள் அகற்றிய உடனே பொதுமக்கள் சிலர் குப்பைகளை கொட்டி செல்கின்றனர்.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டில் பல்வேறு இடங்களில் நகராட்சி சார்பில் மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம்பிரித்து வைத்து எடுத்து செல்லும் வகையில் குப்பை தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் நகராட்சி சார்பில் வீடு, வீடாக தூய்மை பணியாளர்கள் குப்பைகளை தரம் பிரித்து வாங்கி நாள்தோறும் வரும் வாங்கி வாகனங்கள் மூலம் நகராட்சி குப்பை கிடங்கில் கொண்டு கொட்டுகின்றர்.

    இந்நிலையில் சீர்காழி நகராட்சி 14வது வார்டில் உள்ள கல்யாணி சீனிவாசபுரம் செல்லும் பகுதியில் முகப்பில் குப்பைகள் அதிக அளவு கொட்டப்பட்டு குப்பை மேடாக காட்சி யளிக்கிறது. நாள்தோறும் இந்த குப்பைகளை அகற்றினாலும் குப்பைகள் அகற்றிய உடனே பொதுமக்கள் சிலர் குப்பைகளை கொட்டி செல்கின்றனர்.

    அதன்படி சீர்காழி நகராட்சி சார்பில் அப்பகுதியில் பொது இடத்தில் குப்பை கொட்ட தடை விதித்து, மீறினால் நடவடிக்கை அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி நிர்வாக

    சார்பில் எச்சரிக்கை விடுக்கும் எச்சரிக்கை பலகை தயார் செய்யப்பட்டு அப்பகுதியில் வைக்கப்பட்டது. இந்தப் பணியை நகர மன்ற உறுப்பினர் ஜெயந்தி பாபு மற்றும் நகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    • இந்த தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை யில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர்-சார்பு நீதிபதி இருதயராணி முன்னிலையில் விருதுநகர் மாவட்ட குழந்தைத் தொழிலாளர் தடுப்புப் படை உறுப்பினர்களுக்கான காலாண்டுக் கூட்டம் நடந்தது.

    குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கை மற்றும் மீட்கப்பட்ட குழந்தைகளின் மறுவாழ்வு விவரம் குறித்து விருதுநகர் மாவட்ட குழந்தைத் தொழிலாளர் ஒருங்கிணைப்பு அலுவலர்/தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்தார்.

    தொழிலாளர் துறையால் 1.10.2021 முதல் 31.10.2022 வரை கடைகள் மற்றும் நிறுவனங்களில் மேற்கொண்ட ஆய்வுகள் மற்றும் மாவட்ட தடுப்புப் படை குழு மூலம் மேற்கொள்ளப்பட்ட சிறப்பாய்வில் குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய ஒரு நிறுவனம் மற்றும் சட்டத்திற்கு முரணாக 18 வயது நிரம்பாத வளரிளம் பருவத்தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 39 நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    மேற்படி காலத்தில் குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 5 கடைகள் நிறுவனங்கள் மீது ரூ.85 ஆயிரம் நீதிமன்றத்தால் அபராதம் விதிக்கப்பட்டது.

    18 வயது நிரம்பாத வளரிளம் பருவத் தொழிலாளரை பணிக்கு அமர்த்திய 32 நிறுவனங்கள் மீது ரூ.2 லட்சத்து60 ஆயிரம் விருதுநகர் மாவட்ட கலெக்டரால் அபராதம் விதிக்கப்பட்டது என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.தொழிற்சாலைகளில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத் துறையால் மேற்கொண்ட ஆய்வுகள் மற்றும் மாவட்ட தடுப்புப் படை குழு மூலம் மேற்கொள்ளப்பட்ட சிறப்பாய்வில் குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 4 தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் மற்றும் சட்டத்திற்கு முரணாக 18 வயது நிரம்பாத வளரிளம் பருவத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 8 தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் மீதும் தொழிற்சாலைகள் சட்டம் மற்றும் குழந்தைத் தொழிலாளர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொ ள்ளப்பட்டது.

    மேற்படி காலத்தில் குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 2 தொழிற்சாலைகளின் உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் 18 வயது நிரம்பாத வளரிளம் பருவத் தொழிலாளரை பணிக்கு அமர்த்திய 4 தொழிற்சாலைகளின் உரிமையாளருக்கு ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் அபராதமும் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டது.விருதுநகர் மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால் 1098 என்ற சைல்டு லைன் இலவச தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்குமாறு கேட்டுகொள்ளப்பட்டது.

    சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அனிதா, விருதுநகர் துணை காவல் கண்காணிப்பாளர் அர்ச்சனா, விருதுநகர் மற்றும் சிவகாசி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் துணை இயக்குநர்கள் சித்ரா, ஸ்ரீதரன், இசக்கிராஜா மற்றும் தொழிலாளர் துறையை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்தார்.

    • திண்டிவனத்தில் போலீசார் விடிய விடிய வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.
    • குற்றவாளிகள் யாரேனும் இருக்கிறா ர்களா? என எப்.ஆர்.எஸ். என்ற செயலி மூலம் கண்டறிந்தனர்.

    விழுப்புரம்:

    கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு நடந்தது. இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெடிகுண்டு நிபுணர்கள் திண்டிவனம் ெரயில் நிலையம் மற்றும் முக்கிய இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். இதனை தொடர்ந்து திண்டிவனம்- மரக்காணம் சாலையில் திண்டிவனம் இன்ஸ்பெக்டர் பிரேமா மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் லட்சுமி நாராயணன், தலைமை போலீ சார் அன்புவேல், சோலை, போலீசார் அய்யனார், அப்துல் ரசீத் மற்றும் போலீ சார் தீவிர வாத தடுப்பு முன்னெச்சரிக்கையாக வாகன சோத னையில் ஈடுபட்டனர்.

    சந்தேகம் படும்படியான நபர்கள் யாரேனும் வருகி றார்களா? எனவும் சோத னையில் ஈடுபட்ட போலீசார் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் குற்றவாளி கள் யாரேனும் இருக்கிறா ர்களா? என எப்.ஆர்.எஸ். என்ற செயலி மூலம் கண்டறிந்தனர். மேலும் சரியான ஆவணங்கள் இல்லாத வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டம் முழு வதும் வாகன சோதனை நடைபெறுவது குறிப்பிட த்தக்கது.

    • அபராதம் விதிப்பதில் மும்முரம் காட்டும் போலீசார் ராஜபாளையம் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
    • ஆனால் போலீசார் அபராதம் விதிப்பது மட்டும் எந்த விதத்தில் நியாயம்? என்று தெரிவித்தனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகராட்சியான ராஜபாளையத்தில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப வாகன எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ராஜ பாளையம் நகராட்சி சார்பில் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை, தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக பெரும்பாலான சாலைகளில் பள்ளம் தோண்டப்பட்டு அதனை சரியாக மூடாமல் குண்டும், குழியுமாக காட்சிய ளிக்கிறது.

    இதுதவிர சத்திரப்பட்டி ரோடு ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகளும் பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன. இதனால் ராஜ பாளையம் பொது மக்கள் நாள்தோறும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி படும் அவஸ்தை சொல்லி மாளாது.

    ராஜபாளையம்-தென்காசி மெயின் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் அந்தப்பகுதியை கடக்க குறைந்தது 30 நிமிடங்கள் ஆகிறது. ராஜபாளையத்தில் இருந்து வேறொரு பகுதிக்கு செல்ல எந்த சாலையை பயன்படுத்தினாலும் அங்கு ஏதாவது திட்டப்பணிகள் என்ற பெயரில் பள்ளம் தோண்டி வைத்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைவது தொடர்ந்து நடந்து வருகிறது.

    ராஜபாளையத்தில் போக்குவரத்து நெரிசலை சீர்படுத்த போதிய போலீசார் நியமிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதன் காரணமாக வாகனங்கள் இஷ்டத்திற்கு சென்று மேலும் மேலும் போக்குவரத்து நெரிசலை சிக்கலாக்குகின்றன.

    ஆனால் இதை யெல்லாம் கண்டு கொள்ளாமல் தற்போது ராஜபாளையம் போலீசார் ஹெல்மெட் அணியாமல் மற்றும் விதிமுறைகளை பின்பற்றவில்லை என கூறி மோட்டார் சைக்கிள்களை மறித்து அபராதம் போடும் பணியில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.

    கண் எதிரே போக்குவரத்து நெரிசல் இருந்தாலும் அதனை கண்டுகொள்ளாமல் சாலையின் நடுவில் வாகனங்களை மறித்து போலீசார் அபராதம் விதிப்பது ராஜபாளையம் பகுதி மக்களை கடும் அதிருப்பதியடைய செய்துள்ளது. போலீசார் வாகனத்தின் எண்களை பதிவு செய்து அபராத தொகையை செலுத்துமாறும் உரிமையாளரின் செல்போனுக்கு தகவல் அனுப்புகிறார்கள். போலீசாரின் இந்த நடவடிக்கையால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ராஜபாளையம் நகரில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவித சாலைப்பணிகளும் நடைபெறவில்லை. அதற்கு மாறாக நன்றாக இருக்கும் சாலைகளையும் பள்ளம் தோண்டி வைத்துள்ளனர். மழை காலங்களில் சேறும், சகதியுமாகவும் மற்ற நேரங்களில் குண்டும், குழியுமாக காணப்படும் சாலையை சரி செய்ய எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால் போலீசார் அபராதம் விதிப்பது மட்டும் எந்த விதத்தில் நியாயம்? என்று தெரிவித்தனர்.

    • திருச்சி ரோட்டில் தனியார் சூப்பர் மார்க்கெட் இயங்கி வருகிறது.
    • இந்த சூப்பர் மார்க்கெட்டில் கடந்த 2015-ம் ஆண்டு விற்பனையை பெருக்குவதற்காக பொருட்கள் வாங்குவோருக்கு குலுக்கல் பரிசு திட்டத்தை அறிவித்தது.

    நாமக்கல்:

    நாமக்கல், திருச்சி ரோட்டில் தனியார் சூப்பர் மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த சூப்பர் மார்க்கெட்டில் கடந்த 2015-ம் ஆண்டு விற்பனையை பெருக்குவதற்காக பொருட்கள் வாங்குவோருக்கு குலுக்கல் பரிசு திட்டத்தை அறிவித்தது. அதன்படி ரூ.2,000, ரூ.1,500 மற்றும் ரூ.1000-க்கு பொருட்கள் வாங்கினால் பரிசு குலுக்களில் கலந்து கொண்டு மோட்டார் சைக்கிள், ஏ.சி, வாஷிங் மெஷின் மற்றும் வெள்ளி காசு வெல்லலாம் என அறிவிக்கப்பட்டது.

    அக்கடை வாடிக்கையாளர் ஒருவர் கடந்த 2015, ஆகஸ்ட் 3-ந் தேதி ரூ.1808-க்கு பொருட்கள் வாங்கினார். அதற்கான ரசீதும், கூப்பனும் பெற்றார். கூப்பனின் ஒரு பகுதியை அங்குள்ள பெட்டியில் போடுமாறு சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள் கூறினர்.

    இந்நிலையில், பரிசுகள் கிடைக்கும் என்ற பேராசையை மக்களுக்கு தூண்டி, தன் நிறுவனத்தின் விற்பனையை பெருக்குவதே இதன் நோக்கம் எனவும், நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படியும் தமிழ்நாடு பரிசு திட்டங்கள் தடை சட்டத்தின் படியும் இது நேர்மையற்ற வணிக முறையாகும் என்று கூறி, அந்த வாடிக்கையாளர் தமிழ்நாடு பயனீட்டாளர் சங்கம் மூலம் 2015-ம் ஆண்டு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கு விசாரணை நடத்திய நுகர்வோர் ஆணையம் சம்பந்தப்பட்ட சூப்பர் மார்க்கெட் நிறுவனம் நுகர்வோர் நலநிதிக்கு ரூ.5000, வழக்கு செலவாக ரூ.23,000 என மொத்தம் ரூ. 28,000-ஐ 2 மாத காலத்தில் செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் 9 சதவீத வட்டியுடன் செலுத்தவும் உத்தரவிட்டது. 

    • கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை.
    • புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு ‘சீல்’.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய ப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதையடுத்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் திட்டச்சேரி சப்-இ ன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் சுரேஷ், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்ஆண்டனி பிரபு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் டென்னிசன், வீரப்பிள்ளை, சிவக்குமார் ஆகியோர் திருமருகல் பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது பன்னீர்செ ல்வம் (வயது 65) என்பவரின் கடையில் புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது.

    இதையடுத்து உணவு பாதுகாப்புதுறை அதிகாரி கடைக்கு 'சீல்' வைத்தனர்.

    மேலும் கடைகளில் வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    • போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என பேரூராட்சி தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் ஏராளமான மாடுகள் திரிகின்றன. இதனால் வாகனங்களில் செல்வோர் பாதிக்கப்படுகின்றனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் ஏராளமான மாடுகள் திரிகின்றன. இதனால் வாகனங்களில் செல்வோர் பாதிக்கப்படுகின்றனர். சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையை நம்பி பலர் விவசாயப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆடு, மாடுகள் வயல் வெளிகளில் மேய்ச்சலுக்கு செல்ல முடியாமல் கிழக்கு கடற்கரை சாலையிலேயே இரவு, பகலாக திரிகின்றன. பெரும்பாலும் மாடுகளே அதிகளவில் கிழக்கு கடற்கரை சாலையை ஆக்கிரமித்துக்கொள்கிறது.

    நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளும் வாகன ஓட்டிகளும், குறிப்பாக இரு சக்கர வாகனத்தில் செல்வோரும் இந்த மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளாகிறார்கள். இது குறித்து தொண்டி முதல் நிலை பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவஹர் அலிகான் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், மாடுகளின் உரிமையாளர்கள் நாளை (10-ந் தேதி)-க்குள் தங்களது மாடுகளை பிடித்து கட்ட வேண்டும். தவறினால் 11-ந் தேதி முதல் சாலையில் திரியும் மாடுகளின் உரிமையாளர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

    ×