search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 128738"

    • திங்கள் நகர் சுற்று வட்டார பகுதிகளில் காலை மாலை வேளைகளில் போக்குவரத்து நெருக்கடி அதிக அளவில் உள்ளன
    • அதிகமாக மாணவர்கள் ஏற்றி வந்த 3 பள்ளி வாகனங்கள், தலை கவசம் அணியாத பின்னாடி இருப்பினும் தலை கவசம் அணியாத 30 மோட்டார் சைக்கிள்கள்

    கன்னியாகுமரி :

    அனுமதிக்க பட்ட நபர்களை விட அதிகமாக பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த பள்ளி வாகனங்கள் உட்பட 69 வாகனங்களுக்கு குளச்சல் போக்குவரத்து காவல்துறை அதிகாரி வில்லியம் அவர்களால் திங்கள் நகர் ரவுண்டானா அருகே வைத்து அபராதம் விதிக்கப்பட்டது.

    திங்கள் நகர் சுற்று வட்டார பகுதிகளில் காலை மாலை வேளைகளில் போக்குவரத்து நெருக்கடி அதிக அளவில் உள்ளன. இதனை அடுத்து குளச்சல் போக்குவரத்து காவல்துறை இன்ஸ்பெக்டர் வில்லியம் மற்றும் போலீசார் திங்கள் நகர் ரவுண்டானா அருகே அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அதிகமாக மாணவர்கள் ஏற்றி வந்த 3 பள்ளி வாகனங்கள், தலை கவசம் அணியாத பின்னாடி இருப்பினும் தலை கவசம் அணியாத 30 மோட்டார் சைக்கிள்கள், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்கள் இயக்கம் செய்த 3 நபர்கள், காப்பீடு இல்லாமல் 2 நபர்கள் செல்போன் பேசி கொண்டு வாகனம் ஓட்டுதல், கார்களில் கறுப்பு நிற காகிதம் ஒட்டியது போன்ற போக்குவரத்து விதிமுறைகள் மீறல்களுக்கு என்று மொத்தம் 69 வாகன உரிமையாளர் மீது அபராதம் விதிக்கப்பட்டது.

    • தமிழகத்தில் புதிய அபராத தொகை வசூலிப்பு தொடர்பாக கடந்த மாதம் அரசாணை வெளியிடப்பட்டது.
    • சென்னையில் கடந்த 15 நாட்களில் ரூ.1 கோடியே 88 லட்சத்து 82 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

    சென்னை:

    போக்குவரத்து விதிமீறலை கட்டுப்படுத்துவதற்காக மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு, திருத்தங்களை மேற்கொண்டது. அதன்படி போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகையை பன்மடங்கு உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த புதிய அபராத தொகையை பல மாநிலங்கள் அமல்படுத்தி உள்ளன. தமிழகத்தில் புதிய அபராத தொகை வசூலிப்பு தொடர்பாக கடந்த மாதம் அரசாணை வெளியிடப்பட்டது.

    அதன்படி, தலைக்கவசம் அணியாமல் இருசக்கரம் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.1,000 (பழைய அபராதம் ரூ.100), செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டினால் ரூ.1,000, ஆம்புலன்ஸ் மற்றும் அவசர சேவை வாகனங்களுக்கு வழிவிடாமல் இருந்த வாகன ஓட்டிகளுக்கு ரூ.10 ஆயிரம், இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணித்தவர்களுக்கு ரூ.1000, கார்களில் சீட் பெல்ட் அணியாமல் பயணிப்பவர்களுக்கு ரூ.1000, பதிவெண் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.2,500, வாகனம் உரிமம் தொடர்பாக விதிமீறலில் ஈடுபட்டால் ரூ.10 ஆயிரம், ஆபத்தான வகையில் வாகனம் ஓட்டினால் ரூ.1000, அதிவேகமாக வாகனம் ஓட்டினால் ரூ.1000, மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மட்டுமல்லாமல் அதுதெரிந்தே அவருடன் பயணிப்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி போக்குவரத்து போலீசார் அபராதம் வசூலிக்கத் தொடங்கி உள்ளனர்.

    சென்னையில் கடந்த 15 நாட்களில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 30 ஆயிரத்து 699 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் ரூ.1 கோடியே 88 லட்சத்து 82 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    இந்நிலையில், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை அதிகரித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ஜலாலுதீன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

    அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது:-

    போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை பல மடங்கு அதிகரித்ததன்மூலம் தினக்கூலிகள், ஆட்டோ டிரைவர்கள், பிற பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

    சாலைகளின் நிலைமை, போக்குவரத்து நெரிசல், கவனக்குறைவுடன் வாகனம் இயக்குவது, குடிபோதையில் வாகனம் இயக்குவது ஆகியவை சாலை விபத்துக்கு முக்கிய காரணியாக இருந்தபோதிலும், அபராத தொகை அதிகரித்துள்ளதன் மூலமாக காவல்துறையினர் அப்பாவி மக்களை துன்புறுத்துவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. அபராத தொகையை உயர்த்தும் முன் பொதுமக்களுக்கு அரசு முறையான சாலையை ஏற்படுத்தி கொடுத்திருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.

    இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து, வழக்கின் விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    • காலாவதியான பொருட்களை கண்டறிந்து அழிக்க வேண்டும்
    • பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை

    கன்னியாகுமரி:

    கண்ணணூர் ஊராட்சிக்குட்பட்ட வீராலிகாட்டு விளை பகுதியில் நேற்று மாலை மறைவான பகுதியில் ஒரு டெம்போவில் பேக்கரி பொருட்களை ரோட்டோரம் கொட்டி வைத்துவிட்டு மின்னல் வேகத்தில் டெம்போ சென்றது.

    சிறிது நேரத்தில் அந்த பகுதியில் உள்ள சிறுவர்கள் ரோட்டோரம் சாக்லெட், பிஸ்கட் மற்றும் குளிர்பானங்களை கொட்டி இருந்ததை கண்டு பெட்டி பெட்டியாக வீட்டுக்கு எடுத்து சென்றனர். இது அந்த பகுதி முழுவதும் பரவியது. உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வந்த பார்த்தனர். அனைத்து பொருள்களும் காலாவதி யானவை என தெரிய வந்தது.

    உடனே அந்த பகுதி மக்கள் கண்ணணூர் ஊராட்சி மன்ற தலைவர் ரெஜினி விஜிலாபாய் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜ் ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதற்கிடையில் மீண்டும் அதே இடத்திற்கு மற்றொரு டெம்போ காலா வதியான பேக்கரி பொருள் களை கொட்ட வந்தது. உடனே ஊராட்சி மன்ற தலை வரும், வார்டு உறுப்பி னர்கள் ஜெயா அனிதா, மற்றும் ஊர்மக்க ளும் சேர்ந்து வாகனத்தை சிறை பிடித்தார்கள்.

    உடனே திருவட்டார் போலீஸ் நிலையத்திற்கும், உணவு, பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கும், கிராம நிர்வாக அதிகாரி களுக்கும், சுகாதார துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர்.

    அவர் கள் வந்து பார்த்து ஆய்வு செய்து போது வேர்க்கிளம்பி பகுதியை சேர்ந்த பேக்கரி கடையில் உள்ள காலாவதியான பொருள்கள் என்று தெரிய வந்தது. உடனே கடை யின் உரிமையாளர் வர வழைக்கப்பட்டனர்.

    கண்ணனூர் ஊராட்சி மன்றம் சார்பாக இரண்டு டெம்போக்களுக்கும் அபராதமாக ரூ.2100 விதிக்கப்பட்டது. அந்த பணம் உடனே பேக்கரி கடை உரிமையாளரிடம் இருந்து வசூலிக்கப்பட்டது.

    தீவிர விசாரணைக்கு பிறகு அந்த கடை உரிமை யாளரிடம் காலாவதியான பொருள்கள் அனைத்தும் அழிக்க வேண்டும் என்று எழுத்து பூர்மாக அதிகாரிகள் எழுதி வாங்கி கொண்டு அனுப்பி வைத்தனர்.

    சுமார் 3, 4 ஆண்டுகளாக ஒரு பேக்கரி கடையில் இவ்வளவு காலாவதியான பொருட் களை எப்படி பாது காத்து வைத்தார்கள் என்பது குறித்து உடனே மாவட்ட நிர்வாகம் தலை யிட்டு சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதே மாதிரி மாவட்டம் முழுவதும் உள்ள பேக்கரி கடைகளிலும் உள்ள பொருட்களை ஆய்வு செய்ய வேண்டும். காலாவதியான பொருட்களை கண்டறிந்து அழிக்கவேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர்.

    • மதுரையில் மின் திருட்டில் ஈடுபட்டவர்களிடம் ரூ.18.26 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
    • மின் திருட்டு தொடர்பாக தகவல் மண்டல செயலாக்க பிரிவு பொறியாளர் நம்பரில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.

    மதுரை

    மதுரை மண்டல அம லாக்கப்பிரிவு மின்வாரிய செயற்பொறியாளர் பிரபாகரன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

    மதுரை மண்டலத்தில் மின் திருட்டு நடப்பதாக புகார் வந்தது. இதன் அடிப்படையில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, மற்றும் தூத்துக் குடியை சேர்ந்த மின்வாரிய அமலாக்கப்பிரிவு அதி காரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.அப்போது நெல்லை மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட குருவிகுளம், திருவேங்கடம், தெற்கு அப்பர்குளம், மறுகால்குறிச்சி, களக்காடு, மீனவன்குளம், திருக்குறுங்குடி, ராஜாபுதூர் ஆகிய பகுதிகளில் 16 இடங்களில் மின் திருட்டு கண்டறியப் பட்டது. எனவே மின் வாரியத்துக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டும் வகையில், சம்பந்தப் பட்ட வாடிக்கையாளர் களிடம் 16 லட்சத்து 92 ஆயிரத்து 730 ரூபாய் அபராதம் வசூலிக்கப் பட்டது. இதுதவிர வாடிக்கையாளர்கள் சிலர் குற்றத்தை ஒப்புக்கொண்டு, 1 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தினர். எனவே அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    மதுரை மண்டலத்தில் மின் திருட்டில் ஈடுபட்டதாக வாடிக்கையாளர்களிடம் ஒட்டுமொத்தமாக 18 லட்சத்து 26 ஆயிரத்து 730 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

    மதுரை மண்டலத்தில் மின் திருட்டு தொடர்பாக தகவல் எதுவும் தெரிய வந்தால், மண்டல செயலாக்க பிரிவு பொறியாளர் செல்போன்: 94430-37508 நம்பரில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்" என்று கூறப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • 20 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடைக்காரருக்கு ரூ.200 அபராதம் விதித்தனர்.
    • 300 அடி தூரத்துக்குள் பீடி, சிகரெட், புகையிலை பொருட்கள் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே தியாகராஜபுரத்தில் உள்ள பெட்டிக்கடையில் கள்ளக்குறிச்சி சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மருத்துவர் ராஜா உத்தரவின்பேரில் புதுப்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்குமார் மேற்பார்வையில் சுகாதார மேற்பார்வையாளர் பால்ஏசுதாஸ், பொன்னுசாமி, சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், பாலமுருகன், பாலசேகர், பாசில், குணதீபன்(பயிற்சி) ஆகியோரை கொண்ட குழுவினர் சோதனை மேற்கொண்டனர். 

    அப்போது அங்கு விற்பனைக்காக வைத்திருந்த 20 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடைக்காரருக்கு ரூ.200 அபராதம் விதித்தனர். பள்ளி வளாகத்தில் இருந்து 300 அடி தூரத்துக்குள் பீடி, சிகரெட், புகையிலை பொருட்கள் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது பற்றி விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வழங்கினர். தொடர்ந்து எஸ்.வி. பாளையம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 6 பெட்டிக்கடைகளின் உரிமையாளர்களக்கு அபராதம் விதித்து எச்சரித்தனர்.

    • மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்
    • போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை

    அரியலூர்

    அரியலூர் தேரடி அருகில் போக்குவரத்து காவல்துறை சார்பில் போக்குவரத்து விதி மீறல்களுக்கு புதிய அபராதம் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விழிப்பு–ணர்வு நிகழ்ச்சி நடை–பெற்றது.

    நிகழ்ச்சியில் போக்கு–வரத்து இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் கூறியதாவது

    போக்குவரத்து விதி மீறல் புதிய அபராதம் விதிப்பது குறித்து அரசு அறிவித்துள்ளது, அரசின் உத்தரவை அமுல்படுத்துவது காவல்துறையின் கடமை–யாகும், போலீசார் வாகன தணிக்கையின் போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால், முதல் முறை ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும், மறுமுறை மீறினால் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படும்சிறை தண்டனை கூட விதிக்க சட்டத்தில் இடம் இருக்கி–ன்றது.

    ஆவணம் இன்றி சென்றால் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும், ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டினால் ரூ. 5 ஆயிரம் அபராதமும், வாகனம் வேகமாக ஓட்டி–னால் ஐந்தாயிரமும், மறுமுறை ஓட்டினால் பத்தாயிரமும் அபராதம் விதிக்கப்படும்.

    வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தி–னால் ஆயிரமும்மறுமுறை பத்தாயிரம் அபராதம் விதிக்கப்படும். ஹெல்மெட் அணியாமல் சென்றால் ஆயிரம் அபராதம் விதிக்க–ப்படும் காவல்துறை–யின் மூலம் வாகன சோதனை கடுமையாக்கப்பட்டுள்ளது.

    அதனால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென போக்கு–வரத்துதுறை போலீசார் எச்சரித்து–ள்ளனர்.

    • ஒரு கடையில் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடை உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
    • தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்ற கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கோட்டார் பகுதியில் கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதாக வந்த தகவலை தொடர்ந்து சுகாதார அதிகாரி ராஜ்குமார், சுகாதார ஆய்வாளர் பகவதி பெருமாள் ஆகியோர் இன்று காலை அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அங்குள்ள ஒரு கடையில் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கடை உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் கடையில் இருந்த பிளாஸ்டிக் பொருட்களையும் அதிகாரி கள் பறிமுதல் செய்த னர். இதுபோல மற்றொரு கடையில் அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது அங்கும் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது. இதைத் தொடர்ந்து அந்த கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதுடன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 2 கடைகளிலும் ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதுபோல அந்த பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்ற கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    • 1000 வழக்குகள் பதிவு
    • 10 லட்சம் வரை அபராதம் வசூல்

    திருப்பத்தூர்:

    தமிழகத்தில் சாலை விபத்துகளை குறைக்க புதிய போக்குவரத்து சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தை ஓட்டி சென்றால் ரூ.1000 அபராதம் மது அருந்திவிட்டு வாகன ஓட்டினில் ரூ.10,000 அபராதம் விதிக்கும் சட்டம் தமிழகத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது.

    அதன்படி திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் கடந்த 3 நாட்களாக போலீசார் அதிரடி வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய போலீஸ் உட்கோட்டங்களில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ஹெல்மெட் இல்லாமல் வாகன ஓட்டியதாகவும், அதிவேகமாக வாகன ஓட்டியது என சுமார் 1000 வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    • மாத்தூர் வயல்வெளி பகுதியில் வலை வைத்து மடையான் பறவைகளை வேட்டையாடினர்.
    • வழக்குப்பதிவு செய்து இருவருக்கும் தலா ரூ.20 ஆயிரம் அபராதம்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வனசரகத்திற்கு உட்பட்ட வயல்வெளிகள், சமவெளிப் பகுதிகளில் மடையான், கொக்கு பறவைகளை வேட்டையாடியவர்களை பிடிக்க திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷ் உத்தரவின் பேரில் சீர்காழி வன சரக அலுவலர் ஜோசப் டேனியல் தலைமையில் தனி குழு அமைத்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது தரங்கம்பாடி வட்டம் ஆக்கூர் புங்கையன் தோப்பு மாத்தூர் வயல்வெளி பகுதியில் வலை வைத்து மடையான் பறவைகளை வேட்டையாடியவர்களை பிடித்து வனத்துறையினர். விசாரணை செய்ததில் ஆக்கூர் புங்கையன் தோப்பு பகுதியை சேர்ந்த சத்தியராஜ் (40) மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (37) என்பது தெரிய வந்தது.

    வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்த வனத்துறையினர் தலா ரூ.20 ஆயிரம் வீதம் ரூ.40 ஆயிரம் இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டு அவர்களிடம் இருந்து வலைகள் மற்றும் பறவைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • அபராதம் என்பது அடையாளமாக இருக்க வேண்டுமே தவிர, பகல் கொள்ளையாக இருக்க கூடாது என முன்னாள் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
    • இளைய சமுதாயத்தின் மீதான பொருளாதார சுரண்டல் எனவும் கூறியுள்ளார்.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும், 4 சக்கர வாகன ஓட்டிகளுக்கும் சாலை விபத்து குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.

    சட்டம் மக்களை பாதுகாக்கத் தான். ஆனால் மக்களுக்கான பாதுகாப்பு சட்டம், தற்போது மக்களை வாட்டி வதைக்கும் நிலையில் உள்ளது.

    கடந்த ஒரு வார காலமாக எங்கு பார்த்தாலும் வேதனை குரலை இளைஞர் சமுதாயம் எழுப்பி வருகிறது.

    தமிழகத்தில் ஏறக்குறைய 2½ கோடி இருசக்கர வாகனங்கள் உள்ளன. இந்த 2½ கோடி இருசக்கர வாகனத்திற்கும் இந்த அரசு அபதாரம் விதிக்குமோ? இது மறைமுக பொருளாதார சுரண்டல் இல்லையா?

    இளைஞர்களை முடக்கும் வேலையா? அபராதம் என்பது அடையாளமாக இருக்க வேண்டுமே தவிர, அது பகல் கொள்ளையாக இருக்க கூடாது.

    இளைய சமுதாயத்தில் நம்பிக்கை ஒளி ஏற்ற வேண்டிய அரசு, இன்றைக்கு வாகன விதிமீறல் என்று சொல்லி அபாண்டமாக பொருளாதார சுரண்டலை இளைய சமுதாயத்தின் மீது ஏவி இருக்கிற மிகப்பெரிய தாக்குதலை நிறுத்த வேண்டும்.

    ஆகவே இந்த அரசு கணிவுடன் பரிசீலிக்க வேண்டும். அரசின் நடவடிக்கையில் மனித நேயம் இருக்க வேண்டும். நோக்கம் சரியானதாக இருக்க வேண்டும்.

    அரசு கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக கடைபிடிக்கட்டும். ஆனால் அது அபராதம் என்பது அடையாளமாக இருக்க வேண்டுமே தவிர அபாயகரமான கட்டணமாக இருக்கக் கூடாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குமரியில் ஒரே நாள் சோதனையில் ரூ.4 லட்சம் வசூல்
    • வாகன ஓட்டிகளுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் புதியதாக உயர்த்தப்பட்ட அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    நேற்று முன்தினம் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய 317 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. நேற்றும் மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி வாகன சோதனை மேற்கொண்டனர். வடசேரி பகுதியில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அருண் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தி னார்கள்.

    அப்போது ஹெல்மெட் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களுக்கு அபரா தம் விதிக்கப்பட்டது. பெண் கள் சிலரும் இந்த ஹெல்மெட் சோதனையில் சிக்கி இருந்தனர். ஹெல்மெட் அணியாமல் வந்தவர்க ளுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அறிவுரைகளை வழங்கினார். ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்து அவர்களுக்கு எடுத்துக் கூறினார்.

    அப்போது அவர் கூறிய தாவது:-

    ஹெல்மெட் உயிர் கவசமாகும். அதை கண்டிப் பாக அனைவரும் அணிய வேண்டும்.சாலை விதிமுறை களை கடைபிடித்தால் மட்டுமே விபத்துகளை தடுக்க முடியும். தற்பொ ழுது போக்குவரத்து விதிமீறல் அபராதங்கள் உயர்த்தப்பட்டுள்ளது.ஹெல்மெட் அணியா விட்டால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். பின்னால் ஹெல்மெட் அணியாமல் இருப்பவருக்கும் அபாரம் விதிக்கப்படும்.

    மது போதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10000 செல் போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் ரூ.1000 லைசென்ஸ் இல்லாவிட்டால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும்.அபராதம் விதிப்பது போலீசாரின் நோக்கம் அல்ல. சாலை விதிகளை பாதுகாத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்களது நோக்கம் ஆகும். உங்களை தற்காத்துக் கொள்ள நீங்கள் அனைவரும் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    தக்கலை, குளச்சல், கன்னி யாகுமரி, நாகர்கோவில் சப்-டிவிஷனுக்குட்பட்ட பகுதிகளிலும் போலீசார் அதிரடி சோதனை மேற் கொண்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் வந்த பலருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. இருசக்கர வாகனங்களில் பின்னால் ஹெல்மெட் அணியாமல் இருந்தவர்களுக்கும் போலீ சார் அபராதம் விதித்தனர்.

    நேற்று ஹெல்மெட் அணி யாமல் வந்த 401 பேருக்கு அபராதம் விதிக் கப்பட்டது. இதன் மூலமாக ரூ.4 லட்சத்து 1000 வசூல் ஆகி உள்ளது. மேலும் சாலை விதிமுறைகளை கடை பிடிக்காத 199 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 600 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 317 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்தவர்களுக்கும் போலீசார் அபராதம் விதித்தனர்.
    • நேற்று ஒரே நாளில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக விதிக்கப்பட்ட அபராத தொகைரூ. 3 லட்சத்து 17 ஆயிரம் ஆகும்.
    • மேலும் போக்குவரத்து விதிகளை மீறியதாக 197 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர்.

    நாகர்கோவில், அக்.27-

    புதிய சட்டத்திருத்தத்தின்படி போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு கூடுதல் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் நேற்று மாவட்டம் முழுவதும் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான போலீசார் செட்டிகுளம் கலெக்டர் அலுவலக சந்திப்பு, கோட்டார், வடசேரி பகுதிகளில் அதிரடி வாகன சோதனை நடத்தினார்கள்.

    அப்போது ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர். நாகர்கோவில் நகரில் மட்டும் ஹெல்மெட் அணியாமல் வந்ததாக 64 பேருக்கு போக்குவரத்து பிரிவு போலீசார் அபராதம் விதித்துள்ளனர் .இதன் மூலமாகரூ. 64 ஆயிரம் வசூல் ஆகியுள்ளது. இதே போல் கோட்டார், வடசேரி போலீசாரும் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர். கன்னியாகுமரி, தக்கலை, குளச்சல் சப் டிவிசன்களுக்கு உட்பட்ட பகுதிகளிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள் பலரும் சிக்கினார்கள் . பெண்களும் சிக்கி தவித்தனர்.

    மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 317 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்தவர்களுக்கும் போலீசார் அபராதம் விதித்தனர். நேற்று ஒரே நாளில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக விதிக்கப்பட்ட அபராத தொகைரூ. 3 லட்சத்து 17 ஆயிரம் ஆகும்.

    மேலும் போக்குவரத்து விதிகளை மீறியதாக 197 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர். நாகர்கோவில் மாநகரப் பகுதியில் இன்று காலையிலும் ஹெல்மெட் சோதனை நடந்தது. ‌ஹெல்மெட் அணியாமல் பின்னால் இருந்தவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

    ×