search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 128738"

    • செங்கல்பட்டு நோக்கி சென்ற தனியார் பஸ் மற்றும் அரசு பஸ் இரண்டும் ஒரே சமயத்தில் புறப்பட்டது.
    • போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து விதிமுறை மீறி வந்த தனியார் பஸ்சுக்கு ரூ. 3 ஆயிரமும், அரசு பஸ்சுக்கு ரூ.1000-மும் அபராதமாக விதித்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் செங்கல்பட்டு நோக்கி சென்ற தனியார் பஸ் மற்றும் அரசு பஸ் இரண்டும் ஒரே சமயத்தில் புறப்பட்டது. இந்த இரண்டு பஸ்களின் டிரைவர்களும் யார் முதலில் செல்வது என ஏற்பட்ட போட்டி காரணமாக போக்குவரத்து விதியை மீறி எதிர் திசையில் சென்றனர். இதனால் அப்பகுதியில கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து விதிமுறை மீறி வந்த தனியார் பஸ்சுக்கு ரூ. 3 ஆயிரமும், அரசு பஸ்சுக்கு ரூ.1000-மும் அபராதமாக விதித்தனர்.

    • பேக்கரிகள் மற்றும் குளிர்பான கடைகள், மளிகை கடைகள், உணவகங்களில் திடீர் ஆய்வு செய்தனர்.
    • கலப்பட தேயிலை பயன்படுத்தியது கண்டறிந்து பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர்.ஏ. பானுசுஜாதா உத்தரவின் பேரில் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு நந்தகோபால் உள்ளிட்ட குழுவினர் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளான கனவனஹள்ளி, பூமரத்து பள்ளம், ஐந்தாவது மைல்கல், ஆத்துக்கொட்டாய், கரகூர் மற்றும் பெல்ரம்பட்டி பகுதிகளில் உள்ள தேநீர் கடைகள்,பேக்கரிகள் மற்றும் குளிர்பான கடைகள், மளிகை கடைகள், உணவகங்களில் திடீர் ஆய்வு செய்தனர்.

    இதில் 25-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு நடத்தியதில் 5-க்கும் மேற்பட்ட கடைகளில் கலப்பட தேயிலை பயன்படுத்தியது கண்டறிந்து பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

    மேற்படி கடைகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இரண்டு மளிகை கடைகளில் காலாவதியான உணவுப் பொருட்கள் வனஸ்பதி, ரவை, கடலை மாவு மற்றும் உரிய தயாரிப்பு தேதியில்லாத , லேபிள் விபரம் இல்லாத, முகவரி அச்சிடாத தின்பண்டங்கள் வைத்திருந்த இரண்டு மளிகை கடைகளுக்கு ஆயிரம் என இரண்டாயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, மேம்பாட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

    மேலும் சில மளிகை கடைகள் மற்றும் பேக்கரிகளில் உரிய முகவரி இல்லாத குளிர்பானங்கள் மற்றும் காலாவதியான குளிர் பானங்கள் பறிமுதல் செய்து அழித்து எச்சரிக்கை நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது.

    உரிய விபரங்கள் அச்சிடாத குளிர்பானங்களோ, தின்பண்டங்களோ, பொட்டலம், உணவு பொருட்களோ விற்பனை கூடாது எனவும் உரிய உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று அனைவரும் வணிகம் செய்ய எச்சரித்து நோட்டீஸ் அளித்தார். மேலும் இது போன்ற ஆய்வுகள் தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் நடைபெற உள்ளதாக மாவட்ட நியமன அலுவலர் தெரிவித்தார்.

    • நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
    • வாங்கிய 5 மாதங்களில் செல்போன் பழுது

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் குஞ்சன் விளையை சேர்ந்தவர் சுரேந்திரன். இவர் நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டிலுள்ள செல்போன் கடையில் ரூ.15,490 மதிப் புள்ள செல்போன் ஒன்று வாங்கினார். ஆனால் வாங்கிய 5 மாதங்களிலேயே செல்போன் பழுது ஏற் பட்டது.

    இதைத் தொடர்ந்து கடைக்காரரிடம் செல் போனை கொடுத்து சரி செய்து தருமாறு சுரேந்திரன் கூறினார். அப்போது ரூ.4,167 செலுத்தினால் பழுது பார்த்து கொடுப்பதாக கடைக்காரர் தெரிவித்தார்.ஆனால் வாரண்டி காலம் முடிவடையாததால் ஏன் பணம் கேட்கிறீர்கள் என்று சுரேந்திரன் கேட்டுள்ளார். எனினும் கடைக்காரர் பணம் கேட்டார்.

    இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சுரேந்திரன் இதுதொடர்பாக வக்கீல் மூலம் நோட்டிஸ் அனுப்பினார். அதன் பின்ன ரும் உரிய பதில் கிடைக்கா ததால் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணை யத்தில் சுரேந்திரன் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் விசாரித்தனர். இதைத் தொடர்ந்து செல்போன் கடையின் சேவை குறைப்பாட்டை சுட்டிக்காட்டி ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ் மற்றும் உறுப்பினர் சங்கர் ஆகியோர் உத்தரவிட்டனர்.

    மேலும் வழக்கு செலவு தொகை ரூ.5 ஆயிரம் மற்றும் புதிய செல்போன் அல்லது ஏற்கனவே செலுத்தப்பட்ட ரூ.15,490 ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்கவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

    • கடந்த 1-ந் தேதி முதல் மாநகராட்சி பகுதிகளில் சுற்றி திரியும் கால்நடைகளை காப்பகத்திற்கு கொண்டு சென்று பாதுகாக்கவும் மற்றும் உரிமையாளர்களுக்கு அபராத தொகை விதிக்கும் பணி தொடங்கப்பட்டது.
    • பிடிபடும் மாடுகளை 10 நாட்களுக்குள் அபராதம் செலுத்தி அழைத்து செல்லாவிட்டால் ஏலம் விடப்படும்.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூராக சுற்றித்திரியும் கால்நடைகளை மாநகராட்சி பணியாளர்கள் மூலம் காப்பகத்திற்கு கொண்டு செல்லவும், அபராத தொகை விதிக்கவும் தஞ்சாவூர் மாநகராட்சி மாமன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனுமதி பெறப்பட்டது.

    இதையடுத்து கடந்த 1-ந் தேதி முதல் மாநகராட்சி பகுதிகளில் சுற்றி திரியும் கால்நடைகளை காப்பகத்திற்கு கொண்டு சென்று பாதுகாக்கவும் மற்றும் உரிமையாளர்களுக்கு அபராத தொகை விதிக்கும் பணி தொடங்கப்பட்டது.

    இதன்படி, இன்று அருளானந்த நகர், புதிய பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மாடுகள் பிடிக்கப்பட்டு காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    இப்பணியானது தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணக்குமார், மாநகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ் காந்தி ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்றது. தொடர்ந்து இந்த பணி நடந்து வருகிறது.

    இது குறித்து மேயர் சண். ராமநாதன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சுற்றி திரிந்த மாடுகள் பிடிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதுவரை 60 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன. அப்படி பிடிபடும் மாடுகள் அந்தந்த வார்டுகளில் உள்ள காப்பகத்தில் கட்டி வைக்கப்பட்டு தேவையான வைக்கோல், புற்கள் கொடுக்கப்பட்டு வருகிறது.

    மாடுகளை பிடித்து செல்வதற்கு பிரத்யேகமான வாகனம் பயன்படுத்தப்படுகிறது.

    மாடுகளின் உரிமைதாரர்களுக்கு முதலில் ரூ.3000 அபராதம் விதிக்கிறோம்.

    இரண்டாவது முறையாக அதே மாடு பிடிக்கப்பட்டால் ரூ.4000, மூன்றாவது முறையாக பிடிபட்டால் ரூ.5000 அபராதம் விக்கப்படுகிறது.

    மீண்டும் அதே மாடு தொடர்ந்து பிடிப்பட்டால் மாநகராட்சியில் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும். இதேபோல் பிடிபடும் மாடுகளை 10 நாட்களுக்குள் அபராதம் செலுத்தி அழைத்து செல்லாவிட்டால் ஏலம் விடப்படும்.

    இதேபோல் குரங்குகள் பிடிக்கும் பணியும் நடந்து வருகிறது. இதுவரை 70 குரங்குகள் பிடிபட்டுள்ளன.

    தொடர்ந்து குதிரைகள் பிடிக்கும் மணி நடைபெற உள்ளது. மாடுகள் பிடிக்கும் பணியால் தற்போது தஞ்சாவூர் மாநகராட்சியில் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மழைநீர் வடிகால்களில் ஆங்காங்கே சட்ட விரோதமாக கழிவுநீர் இணைப்புகள் இணைக்கப்பட்டு உள்ளன.
    • மழைநீர் வடிகால்களில் சட்ட விரோதமாக கழிவுநீரை வெளியேற்றும் குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் தங்குதடையின்றி செல்லும் வகையில் மழைநீர் வடிகால் துறையின் மூலம் மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்பட்டு, பழுதடைந்த மழைநீர் வடிகால்கள் புனரமைக்கப்பட்டு தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

    மழைநீர் தங்குதடையின்றி செல்வதற்காக மட்டுமே அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்களில் ஆங்காங்கே சட்ட விரோதமாக கழிவுநீர் இணைப்புகள் இணைக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் மழைநீர் வடிகால்களில் மழைக் காலங்களில் மழைநீர் செல்வது தடைபட்டு நீர்த்தேக்கம் ஏற்படுகிறது. எனவே, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்களில் சட்ட விரோதமாக கழிவுநீரை வெளியேற்றும் குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    அதனடிப்படையில், 13.01.2023 முதல் 03.02.2023 வரை சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட களஆய்வுகளில் 1,813 சட்ட விரோத கழிவுநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டு அவற்றின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, ரூ.5,98,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
    • அலைக்கழித்ததால் வழக்கு தொடர்ந்த நுகர்வோர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் குலசேக ரன்புதூர் பகுதியைச் சேர்ந்த வர் பாலமுருகன். இவர் தோவாளையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் நகை அடகு வைத்து கடன் வாங்கி இருந்தார்.

    இந்த நகைைய பாலமுருக னுக்கு தெரியாமல் நிதி நிறுவனம் ஏலத்திற்கு விட முயன்றதாக கூறப்படுகிறது. இது பற்றி தெரியவந்ததும் பாலமுருகன் நகையை திருப்ப பணத்துடன் சென்றார்.

    அப்போது அவரை அலைக்கழித்ததுடன், பணம் செலுத்திய நாளில் இருந்து 20 நாட்கள் கழித்து தான் நகையை திருப்பி தரமுடியும் என நிதி நிறுவனம் கூறிய தாக தெரிகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பாலமுருகன், நிதி நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டீசு அனுப்பி உள்ளார். அதன்பிறகும் உதிய பதில் கிடைக்காததால், கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், பாலமுருகன் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பி னர் சங்கர் ஆகியோர் விசாரித்தனர். தொடர்ந்து தனியார் நிதி நிறுவனத்தின் சேவை குறைபாட்டை சுட்டிக் காட்டி பாலமுருக னுக்கு ரூ.1500 நஷ்ட ஈடு மற்றும் வழக்குச் செலவு ரூ. 5 ஆயிரம் என மொத்தம் ரூ. 20 ஆயிரம் வழங்க உத்தர விட்டனர்.

    • அபராதம் கட்டாமல் ஏமாற்றி வருபவர்களை போனில் அழைத்து நேரில் வரவழைத்து அபராத தொகையை வசூலித்து வருகின்றனர்.
    • அபராத வசூல் நடவடிக்கைகளில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசலும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் போக்குவரத்து விதி மீறல்களும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.

    இப்படி விதி மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளால் நாள்தோறும் விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு போக்குவரத்து போலீசார் விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி அபராதம் விதிப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள்.

    வேகமாக வாகனங்களை இயக்கியவர்கள் சிக்னலை மீறி சென்றவர்கள், ஹெல்மெட் அணியாமல் பயணித்தவர்கள் என பலருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    இது போன்று அபராதம் விதிக்கும்போது வாகன ஓட்டிகளிடம் போலீசார் பணமாக அபராத தொகையை வாங்குவதில்லை. டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் மட்டுமே ஈடுபட்டு வருகிறார்கள். பே.டி.எம் கியூ. ஆர்.கோடு மூலமாகவும் ஏ.டி.எம். கார்டு மூலமாகவும் அபராத தொகையை வசூலித்து வருகிறார்கள். விதி மீறலில் ஈடுபடும் நபர்களிடம் பணம் இல்லையென்றால் போலீசார் அபராத ரசீதை கையில் கொடுத்து ஆன்லைனில் பணத்தை செலுத்திவிடுமாறு கூறி விடுவார்கள்.

    இந்த அபராத தொகையை ஆன்லைனில் செலுத்தாமல் பலரும் காலம் தாழ்த்திக்கொண்டே வருவது வழக்கம். பலர் அபராதம் விதிக்கப்பட்டதையே மறந்து போய் இருப்பார்கள். இது போன்ற நபர்களிடம் இருந்து அபராத தொகையை வசூலிப்பதில் போக்குவரத்து போலீசார் ஏற்கனவே தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனி அலுவலகம் ஏற்படுத்தப்பட்டு அபராத வசூல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அபராதம் கட்டாமல் ஏமாற்றி வருபவர்களை போனில் அழைத்து நேரில் வரவழைத்து அபராத தொகையை வசூலித்து வருகின்றனர்.

    இந்நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் விதி மீறலில் ஈடுபடுபவர்களின் அபராத ரசீதை வாங்கி வைத்துக்கொண்டு அதைப்பற்றி கவலைப்படாமல் இருப்பவர்களை சாலையில் மடக்கி பிடித்து அபராத தொகையை வசூலிக்க உத்தரவிட்டுள்ளார்.

    போக்குவரத்து இணை ஆணையர் மயில்வாகனன் மேற்பார்வையில் அனைத்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்களும் அபராத வசூல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நடவடிக்கை நேற்று முதல் தொடங்கி உள்ளது. இனி சாலைகளில் நின்று விதிமீறல் வாகனங்களை பிடிக்கும் போக்குவரத்து போலீசார் வாகனங்களின் நம்பரை வைத்து குறிப்பிட்ட வாகனம் விதிமீறலில் ஈடுபட்டு அபராதம் செலுத்தாமல் இருந்தால் உடனடியாக அபராத தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுப்பார்கள். இதற்காக போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 3 இடங்களை தேர்வு செய்து முகாம் அமைத்து அபராத வசூல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கை நேற்று தொடங்கியது.

    இதன்படி அபராத வசூல் நடவடிக்கைகளில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் சிறப்பாக பணி புரிந்து அதிக அபராத தொகையை வசூலிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு பாராட்டு பத்திரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிக அபராத தொகையை வசூலிப்பவர்களுக்கு ரொக்கப்பரிசும் வழங்கப்பட உள்ளது. போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் இவர்களை நேரில் அழைத்து பாராட்ட உள்ளார். இப்படி போக்குவரத்து போலீசார் அபராத வசூல் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

    உங்கள் வாகனம் எங்கேயாவது போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டு உள்ளதா? என்பதை உடனடியாக ஆய்வு செய்து அதற்கான அபராத தொகையை கட்டி விடுங்கள். இல்லையென்றால் நீங்கள் வெளியில் செல்லும்போது போக்குவரத்து போலீசாரிடம் நிச்சயம் மாட்டிக்கொள்வீர்கள். அப்போது இத்தனை நாட்களாக ஏன் அபராத தொகையை கட்டவில்லை என்று போலீசார் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டிய கட்டாயம் ஏற்படலாம். எனவே உஷாராக இருங்கள்.

    இந்நிலையில் நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமை போக்குவரத்து இணை கமிஷனர் மயில்வாகனன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வேப்பேரியில் அவர் ஆய்வு செய்த போது உதவி கமிஷனர் கிறிஸ்டோபர், இன்ஸ்பெக்டர் பாண்டிவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

    • வழக்கை விசாரித்த நீதிமன்றம் கிளியின் உரிமையாளரான ஹூவாங்கிற்கு 2 மாத சிறை தண்டனையும், 91,350 டாலர் (74 லட்சம்) அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
    • தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளதாக ஹூவாங் தெரிவித்தார்.

    தைவானை சேர்ந்தவர் ஹூவாங். இவர் தனது வீட்டில் செல்லமாக கிளி ஒன்றை வளர்த்து வந்தார். அந்த கிளி 40 சென்டி மீட்டர் உயரம், 60 சென்டி மீட்டர் இறக்கையுடன் பெரிய அளவில் காணப்பட்டது.

    ஹூவாங் சம்பவத்தன்று அந்த கிளியை அப்பகுதியில் உள்ள பூங்காவிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அப்பகுதியை சேர்ந்த பிரபல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் லின் நடைபயிற்சி சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது திடீரென ஹவாங்கின் கிளியானது டாக்டர் லின் மீது பறந்து சென்று அவரது முதுகில் அமர்ந்து இறக்கையை பலமுறை அசைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர் லின் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

    இந்த சம்பவத்தில் டாக்டரின் இடுப்பு எலும்பும் முறிந்து விழுந்தது. இதனால் அவர் மருத்துவமனையில் தங்கி ஒரு வாரம் சிகிச்சை பெற்றுள்ளார். மேலும் காயம் முழுமையாக குணமடைய 3 மாதங்கள் ஆகியுள்ளது.

    இந்த சம்பவத்தால் டாக்டர் லின்னால் தொடர்ந்து 6 மாதங்கள் வேலை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.

    இதனால் வருமான ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்ட டாக்டர் லின் உரிய நிவாரணம் கேட்டு தைனான் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் தன்னால் தற்போது நடக்க முடிகிறது. ஆனால் அறுவை சிகிச்சை செய்யும் போது நீண்ட நேரம் நிற்க முடியவில்லை என டாக்டர் லின்னின் வழக்கறிஞர் வாதாடினார்.

    வழக்கை விசாரித்த நீதிமன்றம், கிளியின் உரிமையாளரான ஹூவாங்கிற்கு 2 மாத சிறை தண்டனையும், 91,350 டாலர் (74 லட்சம்) அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளதாக ஹூவாங் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில் தைனான் மாவட்ட நீதிமன்றம் காணாத அறியதொரு வழக்கு என்று கூறப்படுகிறது.

    • சிறப்பு வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டனர்.
    • சாலை போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    கோவை,

    கோவை மாநகரில் ஹெல்மெட் அணியாமல இருசக்கர வாகன ஓட்டி செல்பவர்களை கண்டறியும் வகையில் சிறப்பு வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டனர்.

    காளப்பட்டி ரோடு, சிங்காநல்லூர் உள்ளிட்ட 15 இடங்களில் நேற்று நடந்த வாகன தணிக்கையில், ெஹல்மெட் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை பிடித்து, ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் பலன்கள் குறித்து 1 மணி நேரம் விழிப்புணர்வு ஏற்படுத் தினர். பின்னர், அவர்களுக்கு தலா ரூ.1000 அபராதம் விதித்தனர்.

    இது குறித்து மாநகரபோலீஸ் கமிஷனர்.பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

    கோவையில் 90 சத வீத இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர். ஆனால் 10 சதவீதம் பேர் ஹெல்மெட் அணிவதில்லை.

    சாலை விதிகளை கடைபிடிப்பதன்மு க்கியத்து வத்தை வலியுறுத்தும் வகையில் 15 இடங்களில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. 400 போலீசார், கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் இணைந்து ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளை அழைத்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர். வாரம் ஒருமுறை வெவ்வேறு நாட்களில் இதுபோன்ற சிறப்புத் தணிக்கை நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    துணை கமிஷனர் மதிவாணன் கூறியதாவது:-

    ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2,543 பேருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஹெல்மெட் அணியாமல் வந்த 1,282 பேரில், 937 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. 345 பேரை எச்சரித்து அனுப்பி உள்ளோம். மொத்தம் 3,875 பேருக்கு சாலை போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • ‘கோ பர்ஸ்ட்’ நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கமும் பெற்றது.
    • இந்த விவகாரத்தை சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் விசாரித்தது.

    புதுடெல்லி :

    'கோ பர்ஸ்ட்' விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று கடந்த 9-ந்தேதி பெங்களூருவில் இருந்து டெல்லி சென்றது. இந்த விமானத்தில் ஏறுவதற்காக 55 பயணிகள் பெங்களூரு விமான நிலைய முனையத்தில் இருந்து விமானத்துக்கு அழைத்து செல்லப்படும் பஸ்சுக்காக காத்திருந்தனர்.

    ஆனால் அவர்களை ஏற்றாமலேயே இந்த விமானம் அங்கிருந்து கிளம்பி விட்டது. இதனால் அந்த பயணிகள் விமானத்தை தவறவிட்டனர்.

    இந்த விவகாரத்தை சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் விசாரித்தது. இது தொடர்பாக 'கோ பர்ஸ்ட்' நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கமும் பெற்றது. இந்த விசாரணை முடிவில் அந்த விமான நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து நேற்று உத்தரவிட்டது.

    விமானத்தில் பயணிகளை ஏற்றிச் செல்வது தொடர்பாக முனைய ஒருங்கிணைப்பாளர், வணிக ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இடையே சரியான தகவல் தொடர்பு இல்லாதது கண்டறியப்பட்டதாக இயக்குனரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    • கடந்த சில மாதங்களாகவே விலங்கினங்களை மர்மநபர்கள் யாருக்கும் தெரியாமல் வேட்டையாடி சமைத்து சாப்பிடுவதாக வனத்துறையினருக்கு புகார்கள் வந்து கொண்டிருந்தது.
    • வனப்பகுதியில் நேற்று சிலர் முயல் உள்ளிட்டவற்றை வேட்டையாடி சமைத்து கொண்டிருப்பதாக கடையம் வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே ஆம்பூரில் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்திற்கு உட்பட்ட வெளி மண்டல பகுதியில் காட்டுமுயல், காடை, கவுதாரி போன்ற விலங்குகள் அதிகமாக சுற்றித்திரிந்து வருகிறது.

    கடந்த சில மாதங்களாகவே அந்த விலங்கினங்களை மர்மநபர்கள் யாருக்கும் தெரியாமல் வேட்டையாடி சமைத்து சாப்பிடுவதாக வனத்துறையினருக்கு புகார்கள் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் நேற்று அந்த வனப்பகுதியில் சிலர் முயல் உள்ளிட்டவற்றை வேட்டையாடி சமைத்து கொண்டிருப்பதாக கடையம் வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். அப்போது வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாடி கறி சமைத்து கொண்டிருந்த 5 பேரை சுற்றிவளைத்தனர்.

    தொடர்ந்து அவர்களிடம் வனத்துறையினர் விசாரித்தபோது, கடையம் அருகே உள்ள காவூரை அடுத்த ராமச்சந்திராபுரம் பகுதியை சேர்ந்த ராஜீவ் காந்தி, முருகன், சூரியநாராயணன், பிரபாகரன், சரவணன் ஆகியோர் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

    • கூடுதலாக ஆட்கள் ஏற்றி சென்றவர்களுக்கு ரூ.1000 அபராதம்.
    • மஞ்சள் கலரில் நம்பர் பிளேட்டுகளும், எழுத்துக்கள் கருப்பு கலரிலும் இருக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவுப்படி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா அறிவுறுத்தலின் பேரில் தஞ்சையில் இன்று போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் புதிய பஸ் நிலையம் முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அனைத்து மோட்டார் சைக்கிள்களையும் நிறுத்தி டிரைவிங் லைசன்ஸ், இன்சூரன்ஸ் சரியான முறையில் உள்ளதா ? மோட்டார் வாகன சட்டப்படி நம்பர் பிளேட் வடிவமைக்கப்பட்டுள்ளதா ? ஹெல்மெட் அணிந்துள்ளார்களா ? போன்றவை குறித்து சோதனை செய்தனர்.

    இதில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. லைசன்ஸ், இன்சூரன்ஸ் இல்லாதவர்களுக்கு ரூ.5000 அபராதமும், அதனை புதுப்பிக்காதவர்களுக்கு அபராதமும், மோட்டார் வாகன சட்ட விதிமுறைகள் படி நம்பர் பிளேட் வடிவமைக்காதவர்களுக்கு அதாவது நம்பர் பிளேட்டில் நம்பரை தவிர வாசகம் எழுதி இருத்தல், நம்பர் இல்லாமல் வெறும் வாசகம் மட்டும் எழுதி இருத்தல், வாகனத்தின் ஒரு பக்கத்தில் நம்பர் பிளேட் இல்லாமல் இருத்தல் போன்ற விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு ரூ.1000 மற்றும் இருசக்கர வாகனத்தில் இருவரை தவிர கூடுதலாக ஆட்கள் ஏற்றி சென்றவர்களுக்கு ரூ.1000 அபராதமும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

    இதேபோல் நகரின் பல்வேறு இடங்களிலும் அதிரடி வாகன சோதனை நடந்து வருகிறது.

    இது குறித்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் கூறும் போது:-

    மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி அனைத்து தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளும் வெள்ளை கலரில் இருக்க வேண்டும். அவற்றில் உள்ள எழுத்துக்கள் கருப்பு கலரில் இருக்க வேண்டும். வர்த்தக வாகனங்களில் மஞ்சள் கலரில் நம்பர் பிளேட்டுகளும், அவற்றில் உள்ள எழுத்துக்கள் கருப்பு கலரிலும் இருக்க வேண்டும். இவற்றில் முரண்பாடு இருந்தால் உடனுக்குடன் அபராதம் விதிக்கப்படுகிறது.

    இதேபோல் லைசன்ஸ், இன்சூரன்ஸ் இல்லாதவர்கள் மற்றும் அதனை புதுப்பிக்க தவறியவர்கள், ஹெல்மெட் இல்லாமல் வாகன ஓட்டுபவர்கள், காரில் சீட் பெல்ட் இல்லாமல் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிப்பதோடு மோட்டார் வாகன சட்ட விதிமுறைகள் குறித்து எடுத்துக் கூறி வருகிறோம். முறையாக அந்த விதிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தி வருகிறோம்.

    நகரில் அனைவரும் வாகன சட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். தொடர்ந்து வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

    ×