search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடோன்"

    பொன்னேரி குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.10 கோடி மதிப்பிலான காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் குடோனுக்கு சீல் வைத்தனர்.
    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த நாலூர் ஏரிக்கரையில் பழைய குடோன் உள்ளது.

    இங்கிருந்து கடந்த சில நாட்களாக திடீரென பூச்சிகொல்லி மருந்து வாசனை வீசியது. இதனால் அப்பகுதி மக்கள் மூச்சுவிட முடியாமலும், உடல் நல பாதிப்பாலும் அவதிப்பட்டனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் நந்தகுமாருக்கு தகவல் கொடுத்தனர். அவரது தலைமையில் அதிகாரிகள் குடோனில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

    அங்கு குவியல் குவியலாக ஏராளமான காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகள், உரங்கள் ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. மேலும் அதன் மீது புதிதாக லேபிள் ஒட்டி மறு விற்பனைக்காக சந்தைக்கு அனுப்புவதும் தெரிய வந்தது.

    இதையடுத்து குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.10 கோடி மதிப்பிலான காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை பறிமுதல் செய்தனர். குடோனுக்கும் சீல் வைத்தனர்.

    இது தொடர்பாக குடோன் மேற்பார்வையாளர் ஜஸ்வந்த் சிங், காவலாளி ரஹீமின் ஆகியோரை மீஞ்சூர் போலீசார் கைது செய்தனர். தலைமறைவான குடோன் உரிமையாளர் ராகுல் சஞ்சயை தேடி வருகின்றனர்.

    கழுகுமலையில் தீப்பெட்டி தொழிற்சாலை குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தீக்குச்சி மூட்டைகள் எரிந்து நாசமாயின.
    கழுகுமலை:

    கழுகுமலை பஸ் நிலையம் அருகில் தீப்பெட்டி தொழிற்சாலை நடத்தி வருபவர் ராஜேந்திரன் (வயது 56). இவரது வீடு, தொழிற்சாலை வளாகத்தில் உள்ளது. நேற்று காலை 7 மணி அளவில் தொழிலாளர்கள் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்போது தொழிற்சாலை வளாகத்தில் உள்ள குடோனில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.அந்த குடோனில் மருந்து முக்கிய தீக்குச்சிகளை மூட்டைகளில் அடைத்து வைத்து இருந்தனர். அவற்றில் தீப்பிடித்ததால் குடோன் முழுவதும் மளமளவென்று தீ பரவியது. இதனால் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அலறியடித்தவாறு வெளியே ஓடி வந்தனர்.

    இதுகுறித்து கழுகுமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) பொன்ராஜ் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்து முக்கிய தீக்குச்சி மூட்டைகள் எரிந்து நாசமாயின. மேலும் கட்டிடமும் சேதம் அடைந்தது.

    தீயணைப்பு வீரர்கள் துரிதமாக வந்து தீயை அணைத்ததால், தீப்பெட்டி தொழிற்சாலைக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கழுகுமலை போலீசார் விசாரித்து வருகின்றனர். 
    மீஞ்சூரில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 70 மூட்டை குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.
    பொன்னேரி:

    தமிழகத்தில் புகையிலை, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

    அதிகாரிகளின் கண்காணிப்பையும் மீறி கடைகளில் குட்கா, புகையிலை தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. வட மாநிலங்களில் இருந்து லாரி, ரெயில்கள் மூலம் அவை தமிழகத்துக்கு கடத்தி வரப்படுவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் மீஞ்சூரில் உள்ள குடோனில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்திக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து பொன்னேரி டி.எஸ்.பி. ராஜா, மீஞ்சூர் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் மளிகை கடை அருகே இருந்த குடோனில் இன்று காலை அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது மூட்டை மூட்டையாக குட்கா, புகையிலை பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கைப்பற்றப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்தனர். மொத்தம் 70 மூட்டைகளில் புகையிலை இருந்தது. இதன் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.

    குடோன் உரிமையாளர் பாலாஜி தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அவர் சிக்கினால்தான் குட்கா எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? எப்படி சப்ளை செய்யப்படுகிறது? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்ற விபரம் தெரியவரும்.

    மீஞ்சூர் பகுதிக்கு வட மாநிலங்களில் இருந்து ரெயில், கார் மூலம் புகையிலை கொண்டு வரப்படுவதாக கூறப்படுகிறது. இதையடுத்து ரெயில்களை கண்காணிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    புதுவை பெரிய மார்க்கெட் குடோன்களில் கார்ப்பைட் கல் மூலம் பழுக்க வைத்த 500 கிலோ பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை அரசின் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இன்று காலை பெரிய மார்க்கெட்டில் உள்ள பழக்கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர்.

    உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தன்ராஜ் தலைமையில் பழக்கடைகளுக்கு சொந்தமான குடோன்களில் வேதி பொருட்கள் (கார்ப்பைட் கல்) மூலம் பழங்கள் பழுக்க வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் பழங்கள் கார்ப்பைட் கல் மூலம் பழுக்க வைக்கப்பட்டிருந்தை கண்டு பிடித்தனர். இதையடுத்து 500 கிலோ பழங்களை பறிமுதல் செய்தனர். முன்னதாக நேற்று புகையிலை தடுப்பு தினத்தை முன்னிட்டு ரங்கப்பிள்ளை வீதி உணவு கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையின் போது கடைகளில் குட்கா, பான்பராக் ஆகியவை பதுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    ×