search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஞ்ஞானிகள்"

    ஊட்டியில் இன்று தொடங்கிய தேசிய அறிவியல் கருத்தரங்கில் இந்தியாவில் மண் வளம் மற்றும் நீர் வளத்தில் சிறந்து விளங்கிய 26 விஞ்ஞானிகளுக்கு விருதுகளை வழங்கி கவர்னர் பன்வாரிலால் புரோகித் பாராட்டினார். #BanwarilalPurohit
    ஊட்டி:

    ஊட்டி தீட்டுக்கல் பகுதியில் செயல்பட்டு வரும் இந்திய மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் மண் மற்றும் நீர் வள தொழில்நுட்பங்கள் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து 28-வது தேசிய அளவிலான அறிவியல் கருத்தரங்கம் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் இன்று நடைபெற்றது.

    இதில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு குத்து விளக்கேற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்து இந்தியாவில் மண் வளம் மற்றும் நீர் வளத்தில் சிறந்து விளங்கிய 26 விஞ்ஞானிகளுக்கு விருதுகளை வழங்கி பாராட்டினார். மண் வளம் மற்றும் நீர் வளங்களில் காலநிலை மாற்றத்தின் தாக்கம், மண் அரிப்பு, நிலச்சரிவு, மழைநீர் சேகரிப்பு உட்பட 10 தலைப்புகளில் மூன்று நாட்கள் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கில் 300க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் , கல்வியாளர்கள், அரசு சாரா நிறுவனங்கள், கொள்கை வகுப்பாளர்கள், விவசாய சங்கங்களின் முக்கிய பிரதிநிதிகள், ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

    கருத்தரங்கிற்கு பின்னர் உருவாக்கப்படும் திட்ட அறிக்கைகள் அரசு மற்றும் சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பரிந்துரை செய்யப்படும்.

    இன்று நடைபெற்ற இந்த கருத்தரங்கில் இந்திய மண் வள பாதுகாப்பு சங்கம் தலைவர் சுராஜ் பான், அணுசக்தி கழக முன்னாள் தலைவர் டாக்டர் சீனிவாசன், நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஊட்டியில் தேசிய அளவிலான அறிவியல் கருத்தரங்கம் முதல் முறையாக நடைபெறுவது இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனைத் தொடர்ந்து ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள ராஜ்பவனில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பொதுமக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்களிடம் கோரிக்கை மனுக்களை பெறுகிறார். தொடர்ந்து ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் தூய்மை இந்தியா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். #TNGover #BanwarilalPurohit
    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாளை மறுநாள் ஊட்டிக்கு வருகை தரஉள்ளார். அப்போது தேசிய அளவிலான அறிவியல் கருத்தரங்கை தொடங்கி வைக்கிறார். #TNGovernor #Banwarilalpurohit
    ஊட்டி:

    இந்தியாவில் கடந்த 1954-ம் ஆண்டு இந்திய மண்வள பாதுகாப்பு சங்கம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், வல்லுனர்களை கொண்டு இயங்கி வருகிறது.

    இந்த சங்கம் மற்றும் ஊட்டியில் இயங்கி வரும் இந்திய மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் மண் மற்றும் நீர்வள தொழில்நுட்பங்கள், காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்த 28-வது தேசிய அளவிலான அறிவியல் கருத்தரங்கம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நாளை மறுநாள்(வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது.

    இதில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து, இந்தியாவில் சிறந்த விஞ்ஞானிகள் 25 பேருக்கு விருதுகளை வழங்குகிறார்.

    மண் மற்றும் நீர் வளங்களில் காலநிலை மாற்றத்தின் தாக்கம், மண் அரிப்பு, நிலச்சரிவு, மழைநீர் சேகரிப்பு மற்றும் காலநிலை மாற்ற சூழலில் அதன் பன்முக பயன்பாடு, மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை புதிய தொழில்நுட்பங்களின் உதவியோடு மதிப்பீடு செய்தல், பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம், தோட்டக்கலை பயிர்கள், வனங்கள் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், எந்திரமயமாக்கப்பட்ட மண் மற்றும் நீர் வள மேலாண்மை துல்லிய பண்ணையம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாடு உள்பட 10 தலைப்புகளில் கருத்தரங்கம் நடக்கிறது.

    கருத்தரங்கில் 300-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், அரசு சாரா நிறுவனங்கள், கொள்கை வகுப்பாளர்கள், விவசாய சங்கங்களின் முக்கிய பிரதிநிதிகள், ஆராய்ச்சியாளர்கள் கலந்துகொள்கின்றனர்.

    கருத்தரங்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 2-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்திய மண்வள பாதுகாப்பு சங்க தலைவர் சுராஜ் பான், அணுசக்தி கழக முன்னாள் தலைவர் டாக்டர் எம்.ஆர்.சீனிவாசன், நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள்.

    தொடர்ந்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் மதியம் 2 மணி முதல் மாலை 3.30 மணி வரை ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள ராஜ்பவனில் மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் அளிக்க விருப்பம் உள்ளவர்களை சந்தித்து, கோரிக்கை மனுக்களை பெற உள்ளார். #TNGovernor #Banwarilalpurohit
    மாற்று அறுவை சிகிச்சை மூலம் மனித இருதயத்துக்கு பதிலாக பன்றியின் இருதயத்தை பொருத்தும் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். #pigheart
    பெர்லின்:

    இருதய நோய்கள் காரணமாக ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக மாரடைப்பு மூலம் பலர் மரணம் அடைகின்றனர். மருந்து மாத்திரைகள் மூலம் அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இருந்தாலும் இருதய மாற்று அறுவை சிகிச்சையே சிறந்தது என நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால் இருதயம் கிடைக்காமல் ஆயிரக்கணக்கான மக்கள் காத்து கிடக்கின்றனர்.

    எனவே, மனித இருதயத்துக்கு பதிலாக பன்றியின் இருதயத்தை பொருத்தும் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

    ஜெர்மனியின் முனிச்லுத்விக் மேக்சி மில்லியன் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் இதுகுறித்த ஆய்வில் தீவிரமாக உள்ளனர்.

    அவர்கள் பன்றியின் இருதயத்தை எடுத்து வால் இல்லாத ‘பபூன்’ இனத்தை சேர்ந்த 10 குரங்குகளுக்கு பொருத்தினர். ஆய்வில் 5 குரங்குகள் நீண்டநாட்கள் உயிர் வாழ்ந்தன. ஒரு குரங்கு 51 நாட்களும், 2 குரங்குகள் 3 மாதங்களும் உயிருடன் இருந்தன. மேலும் 2 குரங்குகள் 6 மாதங்களுக்கு மேலாக உயிர் வாழ்ந்தன.



    இது ஒரு நல்ல முன்னேற்றம். இதன்மூலம் மனிதர்களுக்கும் பன்றி இருதயத்தை வெற்றிகரமாக பொருத்தலாம் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எனவே இந்த ஆய்வை மேலும் தீவிரப்படுத்தி உள்ளனர். அந்த ஆய்வு கட்டுரை ‘நேச்சர்’ என்ற அறிவியல் இதழில் வெளியாகி உள்ளது. #pigheart
    கொடைக்கானல் பகுதியில் ‘கஜா’ புயலின் தாக்கம் அதிகரிக்க காரணம் குறித்து வானிலை ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர். #GajaCyclone
    கொடைக்கானல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 16-ந்தேதி ‘கஜா‘ புயல் கோரத்தாண்டவம் ஆடியது. அன்றைய தினம் மாவட்டம் முழுவதும் காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரை பலத்த சூறாவளி காற்றுடன், கனமழை கொட்டித்தீர்த்தது. அதன்பிறகு மழை மற்றும் காற்றின் வேகம் குறைந்தது.

    ‘கஜா’ புயலால் மாவட்டம் முழுவதும் சுமார் 1,500 மின்கம்பங்கள் மற்றும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன. இதனால் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கொடைக்கானலில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் கடந்த 2 நாட்களாக இருளில் சிக்கி தவிக்கின்றன.

    ‘கஜா’ புயலால் திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் தான் அதிக பாதிப்புகளை சந்தித்தது. கனமழைக்கு கொடைக்கானல் பகுதியில் 5 பேர் இறந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ‘கஜா’ புயல் பாதிப்பால் மாவட்டம் முழுவதும் சுமார் 4 மணி நேரம் கனமழை பெய்த நிலையில், கொடைக்கானல் பகுதிகளில் மட்டும் புயலின் தாக்கத்தால் 24 மணி நேரம் மழை பெய்தது.

    இது குறித்து கொடைக்கானல் அப்சர்வேட்டரியில் உள்ள மத்திய அரசு வானிலை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் செல்வேந்திரன், பாண்டி ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    ‘கஜா’ புயல் காரணமாக கடந்த 15-ந்தேதி இரவு 9 மணி முதல் 16-ந்தேதி இரவு 9 மணி வரை, 24 மணி நேரம் கொடைக்கானல் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் தான் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அதிகபட்சமாக அப்சர்வேட்டரியில் சுமார் 20 செ.மீ. மழை பதிவானது.

    புயல் காரணமாக 16-ந்தேதி காலை முதல் மதியம் மணி வரை பலத்த காற்று வீசியது. இந்த காற்று வடக்கு, மேற்கு, தெற்கு மற்றும் தென் கிழக்கு பகுதிகளில் இருந்து மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வரை வீசியது. இதற்கு காரணம் ‘கஜா’ புயலின் மையப்பகுதி கொடைக்கானல் பகுதியில் கடந்தது தான்.

    இதனால் பெய்த பலத்த மழையினால் ஏராளமான மரங்கள் சாய்ந்தது, மண்சரிவும் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து புயல் வலுவிழந்து அரபிக் கடலை நோக்கி சென்றது. ‘கஜா’ புயல் கடலில் இருந்த போது அதன் விட்டம் 24 கிலோ மீட்டராக இருந்தது. அது, கொடைக்கானல் பகுதிக்கு வந்தபோது மிகவும் குறுகி விட்டது.

    கொடைக்கானல் பகுதியில் வடகிழக்கு பருவமழை வழக்கமாக அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை நீடிக்கும். ஆனால் கேரள மாநிலத்தில் நிலவிய புயல் காரணமாக வடகிழக்கு பருவமழை தொடங்குவது தாமதம் ஆனது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இந்த மழை டிசம்பர் மாதம் வரை இல்லாமல் அதற்கு மேலும் நீடிக்கும் நிலை உள்ளது. இந்த ஆண்டு கூடுதலாக மழை பெய்யும் வாய்ப்பு அதிகமாக இருக்கும் என தெரிகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #GajaCyclone

    இந்தோனேசியாவை தாக்கிய சுனாமி ஏற்பட்டதை ஏன் கருவிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது விஞ்ஞானிகளை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. #Indonesiaquake #Indonesiaquaketsunami
    ஐதராபாத்:

    இந்தோனேசியாவில் கடந்த 28-ந்தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் சுனாமி உருவாகி அங்குள்ள பேலு நகரையும் அதை சுற்றி உள்ள பகுதிகளையும் தாக்கியது.

    இதில் 800 பேர் வரை பலியாகி உள்ளனர். மேலும் பலர் உயிர் இழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. கடலில் சுனாமி ஏற்பட்டால் அதை முன்கூட்டியே கண்டுபிடிப்பதற்காக பல நாடுகள் சேர்ந்து கடலில் பல்வேறு கருவிகளை பொருத்தி உள்ளன.

    ஆனால் இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு சுனாமி தாக்குவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. கருவிகளிலும் அது பதிவாகவில்லை. சிறிது நேரத்திற்கு பிறகு திடீரென சுனாமி ஏற்பட்டு தாக்கியது. இதனால் பெரிய அளவில் உயிர் பலியும் ஏற்பட்டுள்ளது.

    சுனாமி ஏற்பட்டதை ஏன் கருவிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது விஞ்ஞானிகளை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.


    சுனாமி ஏற்படுவதை முன் கூட்டியே கண்டுபிடிக்க இந்தியாவும் கருவிகளை பொருத்தி உள்ளது. ஐதராபாத்தில் உள்ள கடல் தகவல் தேசிய மையம் இதை கண்காணித்து வருகிறது. அவர்களுக்கும் சுனாமி வருவது பற்றி கருவிகள் எதுவும் தெரிவிக்கவில்லை.

    இது சம்பந்தமாக அந்த மையத்தின் டைரக்டர் ஷெனாய் கூறியதாவது:-

    நிலநடுக்கம் ஏற்பட்டதுமே கருவிகள் மூலம் தெரிந்து கொண்டோம். உடனே இந்தோனேசியா உள்ள சர்வதேச தொடர்புகளுக்கு தகவல் தெரிவித்தோம். ஆனால் நாம் கடலில் பொருத்தி உள்ள மிதவைகள், கண்காணிப்பு கருவிகளில் சுனாமி வருவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. 3 மணி நேரம் தொடர்ந்து கண்காணித்தோம். அப்போதும் அறிகுறி தெரியவில்லை. நிலநடுக்கம் ஏற்பட்டதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனாலும் அறிகுறி தெரியாததால் வாபஸ் பெறப்பட்டது.

    இவ்வாறு ஷெனாய் கூறினார்.

    கடல் ஆய்வியல் மையத்தின் தலைவர் பட்டாபி ராமராவ் கூறியதாவது:-

    சுனாமியை கண்டுபிடிக்கும் கருவியில் எந்தவித அறிகுறியும் பதிவாகவில்லை. இது ஒரு ஆச்சரியமான வி‌ஷயமாக இருக்கிறது. 2 காரணங்களால் இது கருவியில் பதிவாகாமல் இருந்து இருக்கலாம். நிலநடுக்கம் ஏற்பட்டதும் கடலுக்கு அடியில் நிலச்சரிவு ஏற்பட்டு அதன் மூலம் சுனாமி கீழ் இருந்து உருவாகி இருக்கலாம். அல்லது நிலநடுக்கம் ஏற்பட்டதும் சிறிய அளவில் சுனாமி உருவாகி பூகோள ரீதியாக அது பெரிதாக மாறி இருக்கலாம். எனவே தான் முன்கூட்டியே கருவிகளில் அளவீடு காட்டவில்லை. இது ஒரு அதிசயமான வி‌ஷயமாகத்தான் தெரிகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Indonesiaquake  #Indonesiaquaketsunami
    ×