search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சில்மிஷம்"

    தூத்துக்குடியில் பள்ளி மாணவியிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்ட தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அய்யர்விளையை சேர்ந்தவர் அந்தோணி பாக்கியம் (வயது 48). கூலி தொழிலாளி. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணிற்கு 14 வயதில் ஒரு மகள் உள்ளார். அவள் தூத்துக்குடியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறாள். திருமணத்திற்கு பின்னர் அந்த பெண் தனது மகளுடன் அந்தோணி பாக்கியம் வீட்டில் வசித்து வருகின்றனர். 

    இந்நிலையில் சிறுமியிடம் அந்தோணி பாக்கியம் அடிக்கடி செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை அந்த மாணவி தனது தாயிடம் கூறியுள்ளார். 

    இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் தொழிலாளி அந்தோணி பாக்கியத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
    பாராளுமன்ற தேர்தலையொட்டி உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் வெளியான வாக்காளர் பட்டியலில் துர்காவதி என்ற பெயருக்கு அருகில் நடிகை சன்னி லியோன் படம் இடம்பெற்றுள்ளது. #SunnyLeone #UPvoterslist
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியாளருக்கும் உயரதிகாரிக்கும் இடையில் சமீபத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை பணிநீக்கம் செய்து உயரதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

    வேலை பறிபோன ஆத்திரத்தில் அந்த பணியாளர் வாக்காளர் பட்டியலில் உள்ள சில பெயர்களுக்கான புகைப்படங்களில் தனது ‘சில்மிஷத்தை’ காட்டிவிட்டு சென்றுள்ளார்.

    துர்காவதி என்னும் வாக்களரின் பெயருக்கு நடிகை சன்னி லியோன் புகைப்படமும், சிலரது பெயரில் மான், புறா போன்ற புகைப்படங்களையும் வைத்த விஷ்னு சர்மா என்னும் அந்த பணியாளர், அம்மாநில முன்னாள் மந்திரியான நரட் ராய் என்பவரின் பெயருக்கு பக்கத்தில் யானை படத்தை வைத்துள்ளார்.

    இதைதொடர்ந்து, பணிநீக்கம் செய்யப்பட்ட அவர் மீது பாலியா மாவட்டத்தில் உள்ள கோத்வாலி காவல் நிலையத்தில் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. #SunnyLeone #UPvoterslist
    சிங்கப்பூரில் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த 4 பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட இந்திய டாக்டரை 2 வாரம் ஜெயிலில் அடைக்க மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார்.
    சிங்கப்பூர்:

    இந்தியாவை சேர்ந்த டாக்டர் ஜெகதீப் சிங் அரோரா (வயது 46). இவர் தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக, தன் மனைவி மற்றும் 11 வயதான மகளுடன் சிங்கப்பூருக்கு சென்றார். பிரபல சுற்றுலா தலம் ஒன்றில் உள்ள ஓட்டலில் குடும்பத்துடன் தங்கினார்.

    அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த 4 பெண்களிடம் அவர் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதுதொடர்பான புகாரின்பேரில், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரை 2 வாரம் ஜெயிலில் அடைக்க சிங்கப்பூர் மாவட்ட நீதிபதி நா பெங் ஹாங் உத்தரவிட்டார்.

    குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அரோராவுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை அல்லது அபராதம் அல்லது கசையடி அல்லது எல்லாம் சேர்த்து தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. தான் பெரிய தவறு செய்து விட்டதாக கோர்ட்டில் அரோரா தெரிவித்தார்.

    ரெயிலில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த டிக்கெட் பரிசோதகர் அனீஷ்குமாரை பணி இடைநீக்கம் செய்து சேலம் ரெயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் விஜூவின் உத்தரவிட்டுள்ளார்.
    சேலம்:

    சென்னையை சேர்ந்த ஒரு தம்பதி, தங்களது மகளுடன் கடந்த 4-ந் தேதி ஊட்டிக்கு சென்றனர். பின்னர், கோவை வந்த அவர்கள் அங்கிருந்து சென்னை வரும் சேரன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணம் செய்தனர். இந்த ரெயில், சேலம்-ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே வந்து கொண்டிருந்தது.

    அப்போது, ரெயிலில் இருந்த டிக்கெட் பரிசோதகரான கோவையை அடுத்த போத்தனூர் காந்திநகரை சேர்ந்த அனீஷ்குமார் (வயது 25) என்பவர், அந்த தம்பதியின் 6 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் தூங்கி கொண்டிருந்த அந்த சிறுமி திடீரென எழுந்து சத்தம் போட்டதால் அவளது பெற்றோர் மற்றும் சக பயணிகள், அனீஷ்குமாரை பிடித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் தரப்பில் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அனீஷ்குமாரை கைது செய்தனர். மேலும், அவர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

    இந்த நிலையில், டிக்கெட் பரிசோதகர் அனீஷ்குமாரை பணி இடைநீக்கம் செய்து சேலம் ரெயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் விஜூவின் உத்தரவிட்டுள்ளார். 
    ×