search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எரிசாராயம்"

    மதுரை அருகே காரில் கடத்தப்பட்ட எரிசாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர்.

    பேரையூர்:

    மதுரை மாவட்ட தனிப்பிரிவு போலீசார் திருமங்கலம் அருகே உள்ள திரளி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வேகமாக ஒரு கார் வந்தது. அதனை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

    காரில் வந்த 2 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் போலீசார் சந்தேகமடைந்தனர். இதனைத் தொடர்ந்து காருக்குள் சோதனை நடத்திய போது எரிசாராயம் கடத்தப்படுவது தெரியவந் தது. காரில் இருந்த 480 எரிசாராய பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் காரில் வந்த கன்னியாகுமரி மாவட்டம் பெரியவிளையைச் சேர்ந்த ராஜாமணி மகன் துளசி (வயது 37), மதுரை கே.புதூர் காளிதாஸ் மகன் கணேசன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    எரிசாராயம் எங்கு தயாரிக்கப்பட்டது? அதனை எங்கு கடத்துகிறார்கள்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கும்மிடிப்பூண்டி அருகே எரிசாராயம் கடத்திய டிரைவர் மற்றும் கிளீனரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரில் உள்ள ஒருங்கிணைந்த நவீன சோதனைச் சாவடியில் இன்று அதிகாலை 4 மணி அளவில் நாமக்கல் மாவட்ட மது விலக்கு பிரிவு கூடுதல் சூப்பிரண்டு செந்தில் மேற்பார்வையில் மதுவிலக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ரகசிய தகவலின் அடிப்படையில் ஆந்திராவில் இருந்து வந்த டேங்கர் லாரி ஒன்றை போலீசார் சோதனை செய்தனர். இந்த லாரியில் 25 லிட்டர் எரிசாராயம் ஐதராபாத்தில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு கடத்திச்செல்வது தெரியவந்தது.

    லாரியில் இருந்த டிரைவரை முதலில் பிடித்த போலீசார், தப்பி ஓட முயன்ற கிளீனரையும் மடக்கி பிடித்தனர். எரிசாராயம் கடத்தி வந்த டேங்கர் லாரியை நாமக்கல் மது விலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர்.

    டிரைவர், கிளீனர் ஆகியோரை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியானாவில் இருந்து கேரளாவுக்கு லாரியில் எரிசாராயம் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரில் உள்ள ஒருங்கிணைந்த நவீன சோதனைச் சாவடியில் நாமக்கல் மாவட்ட மது விலக்கு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் செந்தில் மேற்பார்வையில் திருவள்ளூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ரகசிய தகவலின் அடிப்படையில் ஆந்திரா வழியாக சென்னை நோக்கி வந்த குறிப்பிட்ட சரக்கு லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் 338 பிளாஸ்டிக் கேன்களில் 11 ஆயிரத்து 830 லிட்டர் எரி சாராயம் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. அரியானாவில் இருந்து கடத்தி வந்த எரிசாராயம் சென்னை வழியாக கேரளாவுக்கு கொண்டு செல்ல இருந்ததாக லாரியில் இருந்த 3 பேரும் தெரிவித்தனர்.

    மேலும் சென்னை போரூர் சுங்கச்சாவடி வரை சென்றதும் அங்கிருந்து மதுரவாயலை சேர்ந்த பாபு என்கிற ரமேஷ் என்பவரின் வழிகாட்டுதலின்படி ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு அந்த லாரி செல்ல இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து லாரி டிரைவர் திண்டிவனத்தை சேர்ந்த ரமேஷ், கிளீனராக இருந்த மேல்மலையனூர் முருகன், மாமண்டூர் சங்கர் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்கள் போலீசாரிடம் கூறும்போது, டெல்லியில் இருந்து இவ்வாறு எரிசாராயம் தொடர்ந்து திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களின் வழியே கடத்தப்பட்டு வருவதாகவும், இதே போல மற்றொரு லாரி சுமார் 6 மணி நேரம் கழித்து டெல்லியில் இருந்து புறப்பட்டதாகவும், அந்த லாரி எந்த வழியில் தமிழ்நாட்டிற்குள் வருகிறது என்பது தங்களுக்கு தெரியவில்லை என்றும் தெரிவித்தனர்.

    தமிழகத்தில் கள்ள சாராயத்தால் ஏற்பட்ட பல உயிரிழப்புகளுக்கு பின்னணியில் இந்த கும்பல் தொடர்ந்து இருந்து வருவது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    எரிசாராயம் கடத்திவரும் மற்றொரு லாரியை பிடிக்கும் வகையில் வேலூர், திருவண்ணாமலை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளையும் தற்போது போலீசார் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து உள்ளனர்.

    இது தவிர ஆந்திர மாநிலம் நெல்லூரில், தமிழக போலீசார் மாறு வேடத்தில் முகாமிட்டு வடமாநிலத்தில் இருந்து அப்பகுதியை கடந்து தமிழக எல்லை பகுதிக்குள் நுழையும் எரிசாராய கடத்தல் லாரிகள் குறித்து ரகசியமாக தகவல்களை சேகரித்து வருகிறார்கள்.

    திருக்கோவிலூர் அருகே விளைநிலத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 630 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் அருகே உள்ள மேலப்பழங்கூர் கிராமத்தில் விவசாயி ஒருவருக்கு சொந்தமான விளை நிலத்தில் பிளாஸ்டிக் கேன்களில் எரிசாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவமாக திருக்கோவிலூர் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் மேலப்பழங்கூருக்கு விரைந்து வந்து, விளை நிலத்தில் சோதனை நடத்தியதில், நிலத்தில் தலா 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 18 பிளாஸ்டிக் கேன்களில் 630 லிட்டர் எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து போலீசார் எரிசாராய கேன்களை பறிமுதல் செய்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அதேஊரை சேர்ந்த சூசைராஜ், மணிகண்டன் உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பல் எரிசாராயத்தை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து எரிசாராயத்தை பதுக்கி வைத்ததாக சூசைராஜ்(வயது 39), மணிகண்டன்(39) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை தேடி வருகிறார்கள். 
    ×