search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டோனி"

    • பும்ராவின் தலைப்பு இவை அனைத்தையும் விட முக்கியமானது என்று கம்பீர் கூறினார்.
    • இதில் ரோகித் சர்மா மற்றும் டோனியின் பெயர்கள் இடம் பெறவில்லை.

    புதுடெல்லி:

    சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி பிரீமியர் லீக் டி20 தொடரில் ஈஸ்ட் டெல்லி ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த தொடரின் போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் ஷிகர் தவான் ஒரு வேடிக்கையான உரையாடலில் கலந்து கொண்டார்.

    அதில் 'பாலிவுட் திரைப்பட தலைப்புகளில் இந்திய கிரிக்கெட் வீரர்களில் மிகவும் பொருத்தமானவர் யார் என கூற வேண்டும்.

    அந்த வகையில் கோலிக்காக, கம்பீர் "ஷாஹென்ஷா" (பேரரசர்) என்ற தலைப்பை தேர்ந்தெடுத்தார். யுவராஜ் சிங்கை "பாட்ஷா" என்று அழைத்தார் மற்றும் நகைச்சுவையாக தன்னை "கோபமான இளைஞன்" என்று குறிப்பிட்டார். சச்சின் டெண்டுல்கர் "தபாங்" என்று அழைக்கப்பட்டார். அதே நேரத்தில் பும்ரா "கிலாடி" என்ற பட்டத்தை பெற்றார். பும்ராவின் தலைப்பு "இவை அனைத்தையும் விட முக்கியமானது" என்று வலியுறுத்தினார்.

    துல்லியம் மற்றும் நம்பகத்தன்மைக்காக ராகுல் டிராவிட்டை "மிஸ்டர் பெர்ஃபெக்ஷனிஸ்ட்" என்று பெயரிட்டார். டைகர் சவுரவ் கங்குலி, கப்பார் ஷிகர் தவானை தேர்வு செய்தார்.

    ஆச்சரியம் என்னவென்றால், இந்த பிரிவின் போது ரோகித் சர்மா மற்றும் எம்.எஸ். டோனியின் பெயர்கள் காணாமல் போனது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது.


    இந்த பட்டியலில் ஷிகர் தவானிடமும் கேட்கப்பட்டது. அதற்கு தவான் அளித்த பதில் பின்வருமாறு:-

    பாட்ஷா: கிங் கோலி

    கோபமான இளைஞன்: சிராஜ்

    தபாங்: ஹர்திக் பாண்ட்யா

    ஷாஹென்ஷா: பும்ரா

    கிலாடி: சுப்மன் கில்

    மிஸ்டர் பெர்ஃபெக்ஷனிஸ்ட் (Mr. Perfectionist): சச்சின் டெண்டுல்கர்

    கப்பர்: சூர்யகுமார் யாதவ்

    என தவான் கூறினார்.

    • முன்னதாக EMotorad ,Cars24, Khatabook உள்ளிட்ட நிறுவனங்களில் டோனி முதலீடு செய்திருந்தார்
    • வாடகை வாகன சர்வீஸ்களை தனித்துவமான வகையில் எலெக்ட்ரிக் கார்களை பயன்படுத்தி வழங்கும் குறிக்கோளுடன் இயங்குவருகிறது

    இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனி ஆட்டோமொபைல் துறையில் தொடர்ந்து முதலீடுகளை செய்து வருகிறார். முன்னதாக EMotorad ,Cars24, Khatabook உள்ளிட்ட நிறுவனங்களில் டோனி முதலீடு செய்த நிலையில் தற்போது ஸ்டார்ட்டப் நிறுவனம் ஒன்றில் அதிகளவில் டோனி முதிலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

     ஹரியானா மாநிலம் குருகிராமில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஷ்டார்டப் ஆக தொடங்கப்பட்டு இயங்கி வரும் மின்சார வாகன நிறுவனம் புளூமார்ட்[BluSmart]. வளர்ந்து வரும் இந்நிறுவனம் ஓலா ஊபர் உள்ளிட்ட நிறுவனங்கள் அளிக்கும் வாடகை வாகன சர்வீஸ்களை தனித்துவமான வகையில் எலெக்ட்ரிக் கார்களை பயன்படுத்தி வழங்கும் குறிக்கோளுடன் இயங்குவருகிறது. தற்போதைக்கு டெல்லி,குருகிராம், நொய்டா, பெங்களூரு ஆகிய நகரங்களில் எலெக்ட்ரிக் கார் வாடகை சேவைகளை வழங்கிவரும் புளூமார்ட் இந்த வருட இறுதிக்குள் மும்பையில் தனது சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளது.

     

    இந்த வருடத்துன் தொடக்கத்தில் துபாயிலும் தனது சேவையை புளூமார்ட் அறிமுகப்படுத்தியிருந்தது. ப்ரீ சீரிஸ்  நிதியுதவி சுற்று மூலம் புளூஸ்மார்ட் சுமார் 250 மில்லியன் டாலர்கள் முதலீடுகளை தற்போதுவரை ஈர்த்துள்ளது.

    மேலும் ரூ.550 கோடி வரை வருமானம் ஈட்டி வருகிறது. பெரு நிறுவனங்களில் அல்லாமல் வளர்ந்து வரும் நிறுவனங்களில் டோனி தொடர்ந்து முதலீடு செய்து வருவது கவனிக்கத்தக்கது. வளர்ந்து வரும் சந்தையில் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் புளூஸ்மார்டின் மின்சார வாகன சேவை பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • எம்.எஸ். டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆஃப்-ஸ்பின்னராக தனது வாழ்க்கையை தொடங்கிய அஸ்வின்.
    • சென்னை அணிக்காக அவர் என்னை தொடர்ந்து பயன்படுத்தினார்.

    விளையாட்டு உலகில் சிறந்த ஐகான், ரோல்மாடல், ஆசான் என பல்வேறு பெருமைகள் கொண்டவராக இருப்பவர் எம்.எஸ்.டோனி. பொதுவாக விளையாட்டு என்றாலே வெற்றி அல்லது தோல்வி ஆகிய இரண்டில் ஒன்றில் முடிந்து போகும் விஷயம்தான்.

    ஆனால் அதில் கற்ற படிப்பினைகளையும், பாடங்களையும், போராட்டங்களையும், நுணுக்கங்களையும் என பல்வேறு விஷயங்களையும் இளம் தலைமுறையினருக்கு கற்றுக்கொடுத்த வல்லவராக இருப்பதால் தான் டோனியை ஒரு தலைவனாகவே பலரும் பார்க்கிறார்கள்.

    சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய கிரிக்கெட்டின் அடையாளமாக உள்ளார். "கேரம் பால்" அஸ்வின் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் இந்தியாவின் நட்சத்திர மற்றும் முண்ணனி பந்து வீச்சாளார் ஆவார். மூத்த வீரர்களான சச்சின் & டிராவிட் அவர்களுக்கு அடுத்து ஐசிசி கிரிக்கெட் வீரர் விருதை பெற்ற ஒரே இந்திய வீரர் அஸ்வின். உலகில் கேரம்பால் வீசுவதில் உலகில் 2 பேர் அவற்றில் இவரும் ஒருவர்.

    எம்.எஸ். டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆஃப்-ஸ்பின்னராக தனது வாழ்க்கையை தொடங்கிய அஸ்வின், ரேங்க்களில் விரைவாக உயர்ந்து இந்திய அணிக்கு வலிமையான சக்தியாக மாறினார். இன்றும் இந்திய டெஸ்ட் அணியில் தூணாக தொடர்கிறார்.

    தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரரான ரவிச்சந்திரன் எம்.எஸ்.டோனியின் வழிகாட்டுதலின் கீழ் பணியாற்றும் அதிர்ஷ்டமும் பெற்றார். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக டோனி தன்னிடம் ஒரே அறிவுரையை தான் கூறியதாக அஸ்வின் சமீபத்தில் தெரிவித்தார்.

    மேலும், அவர் 15 ஆண்டுகளாக சொன்ன அறிவுரை தற்போது தான் தனக்கு புரிந்ததாகவும் அவர் தெரிவித்தார். இதுகுறித்து பேசும்போது, சென்னை அணிக்காக அவர் என்னை தொடர்ந்து பயன்படுத்தினார்.

    ஒருகட்டத்தில் புதிதாக முயற்சிக்கும் உனது வழக்கத்தை யாருக்காகவும் மாற்றிக் கொள்ளாதே. தொடர்ந்து உற்சாகமாகவும், வேடிக்கையாகவும் இரு என்று கூறினார். அவர் அப்படி சொன்னது கிரிக்கெட் மட்டுமின்றி ஒருவரின் மனவலிமை மற்றும் பல்வேறு விஷயங்களை பற்றி என்பதை இப்போது தான் புரிந்து கொண்டேன் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 42 பேர் கொண்ட குழுவுக்கு 125 கோடி ரூபாயை பரிசாக பி.சி.சி.ஐ. வழங்கியது.
    • 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக்கு பிறகு கிட்டத்தட்ட 11 வருட காத்திருப்புக்கு பிறகு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

    9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்தது. தொடரில் தோல்வியையே சந்திக்காமல் வீறுநடை போட்ட இந்திய அணி, கடந்த மாதம் 29-ந்தேதி நடந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில் 7 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்து சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

    20 ஓவர் உலகக் கோப்பையை 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி சொந்தமாக்கியதால் ஒட்டுமொத்த தேசமும் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தது. இதையடுத்து டி 20 உலகக் கோப்பையை வென்ற ரோகித் சர்மா தலைமையிலான அணி, ஊழியர்கள் மற்றும் பயிற்சி ஊழியர்கள் என 42 பேர் கொண்ட குழுவுக்கு 125 கோடி ரூபாயை பரிசாக பி.சி.சி.ஐ. வழங்கியது.

    இதில், இந்திய அணியில் வீரர்களுக்கு தலா 5 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும். இந்த பட்டியலில் ஒரு போட்டியில் கூட விளையாடாத வீரர்களும் உள்ளனர்.

    இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கும் ரூ.5 கோடியும், அவரது பயிற்சியாளர் ஊழியர்களுக்கு தலா ரூ. 1 கோடி வழங்கப்படுகிறது.

    பிசியோ, த்ரோ டவுன் நிபுணர்கள் போன்றவர்களுக்கு தலா ரூ. 2 கோடியும், தேர்வாளர்களுக்கு தலா ரூ.1 கோடி என பரிசு தொகை பிரித்து வழங்கப்பட்டது.

    2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக்கு பிறகு கிட்டத்தட்ட 11 வருட காத்திருப்புக்கு பிறகு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து ஐசிசி தொடர்களில் வெற்றி பெற்ற இந்திய அணி வீரர்கள் பெற்ற பரிசுகள் விவரம் வருமாறு:-

    2013ஆம் ஆண்டு டோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றபோது ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ.1 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்தது. அப்போது, உதவி ஊழியர்களுக்கு தலா ரூ.30 லட்சம் வழங்கப்பட்டது.

    2011 ஒருநாள் உலகக் கோப்பை வெற்றிக்கு முதலில் வீரர்களுக்கு தலா ரூ. 1 கோடி பரிசுத் தொகையை அறிவித்த வாரியம், அதன்பின்னர் ரூ. 2 கோடியாக மாற்றி அறிவித்து வழங்கியது. துணை ஊழியர்களுக்கு ரூ.50 லட்சமும், தேர்வாளர்களுக்கு தலா ரூ.25 லட்சமும் வெகுமதியாக வழங்கப்பட்டது.

    2007 ஐசிசி உலக டி20யை இந்தியா வென்ற பிறகு, ஒட்டுமொத்த அணிக்கும் 12 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

    • 2011-ம் ஆண்டு நடந்த ஒருநாள் போட்டி உலக கோப்பையை அவரது தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.
    • 1983-ம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான 50 ஓவர் உலக கோப்பையை அவரது தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.

    இந்திய அணிக்கு முதல் முறையாக உலக கோப்பையை பெற்றுக் கொடுத்தவர் கபில்தேவ். 1983-ம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான 50 ஓவர் உலக கோப்பையை அவரது தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.

    28 ஆண்டுகளுக்கு பிறகு டோனி 2-வது முறையாக 50 ஓவர் உலக கோப்பையை வென்று கொடுத்தார். 2011-ம் ஆண்டு நடந்த ஒருநாள் போட்டி உலக கோப்பையை அவரது தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.

    முன்னதாக டோனி தலை மையில் இந்திய அணி 2007-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட 20 ஓவர் உலக கோப்பையை வென்றது. தற்போது 17 ஆண்டுகளுக்கு பிறகு ரோகித் சர்மா 2-வது முறையாக 20 ஓவர் உலக கோப்பையை கைப்பற்றியுள்ளார். கபில்தேவ், டோனி வரிசையில் ரோகித் சர்மா இணைந்துள்ளார்.

    டோனி 3 ஐ.சி.சி. கோப்பை யையும் (2007 இருபது ஓவர் உலக கோப்பை, 2011 ஒரு நாள் போட்டி உலக கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி), கபில்தேவ் (1983 ஒருநாள் போட்டி உலக கோப்பை), ரோகித் சர்மா (2024 இருபது ஓவர் உலக கோப்பை தலா ஒரு ஐ.சி.சி. கோப்பையை யும் பெற்றுக் கொடுத்தனர்.

    சாம்பியன் பட்டம் இந்திய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு தெண் டுல்கர், டோனி உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    • சிஎஸ்கே அணியில் இருந்து முன்னாள் கேப்டன் எம் எஸ் டோனி விடைபெற்றார்.
    • அதில் 'தல' பல்வேறு போஸ்களை கொடுத்துள்ளார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறியது.

    இந்நிலையில் சிஎஸ்கே அணியில் இருந்து முன்னாள் கேப்டன் எம் எஸ் டோனி விடைபெற்றார். அதனை தொடர்ந்து அவரது சொந்த ஊரான ராஞ்சிக்கு சென்றார்.


    சமீபத்தில் தந்தையர் தினம் அன்று அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்களை கூறி டோனி மகளுடன் இருந்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இதை தொடர்ந்து தனது வளர்ப்பு நாய்களுடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு சமூக வலைதளங்களில் வைரலானது.

    இந்நிலையில் சமூகவலை தளத்தில் தல டோனி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் ஹார்கட் செய்து புதிய தோற்றத்தில் காட்சியளிக்கிறார். அதில் 'தல' பல்வேறு போஸ்களை கொடுத்துள்ளார். சிரிப்பது போலும், முறைப்பது போலும் வெவ்வேறு தோற்றங்களில் செம க்யூட்டாக உள்ளார்.

    இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் "MASS" "Vaathi coming" என்று கமெண்டுகள் செய்து தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    • அவரது சொந்த ஊரான ராஞ்சிக்கு சென்றார்.
    • சமூக வலைதளங்களில் டோனி தனது வளர்ப்பு நாயுடன் இருக்கும் புகைப்படமும் வைரலாகி வருகிறது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் 18-ந் தேதி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதனால் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறியது.

    இந்நிலையில் சிஎஸ்கே அணியில் இருந்து முன்னாள் கேப்டன் எம் எஸ் டோனி விடைபெற்றார். அதனை தொடர்ந்து அவரது சொந்த ஊரான ராஞ்சிக்கு சென்றார்.


    தந்தையர் தினமான இன்று தனது எக்ஸ் தள பதிவில் அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள் என்று கூறி டோனி மகளுடன் தனது வளர்ப்பு நாயை தொட்டு வருடும் புகைப்படமும் வைரலாகி வருகிறது.

    தற்போது சமூக வலைதளங்களில் டோனி தனது வளர்ப்பு நாயுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது. 

    • திக்மான்சு ஜூலியா டைரக்டு செய்கிறார்.
    • பல்வங்கர் பாலு கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடிக்கிறார்.

    கிரிக்கெட் வீரர்கள் சச்சின், டோனி ஆகியோரின் வாழ்க்கை ஏற்கனவே திரைப்படமாக வந்துள்ளது. தற்போது கிரிக்கெட் வீரர் பல்வங்கர் பாலு வாழ்க்கையும் சினிமா படமாகிறது. இந்த படத்தில் பல்வங்கர் பாலு கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடிக்கிறார்.

    இவர் ஏற்கனவே கால்பந்து விளையாட்டு வீரர் சையத் அப்துல் ரஹீம் வாழ்க்கை படத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வங்கர் பாலு வாழ்க்கை கதை புத்தகத்தை மையமாக வைத்து இந்த படத்தின் திரைக்கதையை எழுதி உள்ளனர். திக்மான்சு ஜூலியா டைரக்டு செய்கிறார்.

    தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பல்வங்கர் பாலு புனேயில் உள்ள ஒரு கிரிக்கெட் கிளப்பில் தனது பயணத்தை ஆரம்பித்து பின்னர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தேர்வு செய்யப்பட்டார். அவரது கிரிக்கெட் வாழ்க்கை எத்தகைய சவால் நிறைந்ததாக இருந்தது என்பதை இந்த படத்தில் காட்ட உள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஜூன் 9 ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள நாசவ் கவுண்ட்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வைத்து இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.
    • நாசவ் சர்வதேச கிரிக்கெட் மைதானம் சீரமைக்கப்பட்டு புதுப் பொலிவுடன் மாறியுள்ளது.

    அதிரடிக்கு பெயர் போன 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2007-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. தென்ஆப்பிரிக்காவில் நடந்த முதலாவது உலகக் கோப்பையில் டோனி தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானை தோற்கடித்து வரலாறு படைத்தது. ஒரு சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டதை தவிர்த்து, 2 ஆண்டுக்கு ஒரு முறை 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

    இதன்படி 9-வது 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்துகின்றன. இன்று  தொடங்கி வருகிற 29-ந் தேதி வரை நடைபெறும் இந்த 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், நியூசிலாந்து உள்பட 20 அணிகள் பங்கேற்கின்றன. அணிகள் ஏ, பி, சி, டி என 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

     

    'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய 5 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெறும். சூப்பர்-8 சுற்றுக்கு வரும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் தலா ஒரு முறை மோதும்.

    இதன் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதி முன்னேறும். வெஸ்ட் இண்டீசில் 6 மைதானங்களில் இறுதிப்போட்டி உள்பட 39 ஆட்டங்களும், அமெரிக்காவில் 3 மைதானங்களில் 16 ஆட்டங்களும் நடக்கின்றன. அமெரிக்காவில் உலகக் கோப்பை போட்டி அரங்கேறுவது இதுவே முதல் முறையாகும்.

     

    இந்த தொடரில் வரும் ஜூன் 9 ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள நாசவ் கவுண்ட்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் (Nassau County International Cricket Stadium) வைத்து இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்நிலையில் நாசவ் சர்வதேச கிரிக்கெட் மைதானம் சீரமைக்கப்பட்டு புதுப் பொலிவுடன் மாறியுள்ளது.

    பனி மூடிய மைதானத்தை கடந்த பிப்ரவரி மாதம் புதுப்பிக்க ஆரம்பிக்கும்போது எடுத்த புகைப்படமும், மே மாத முடிவில் புதுப்பிக்கப்பட்டதற்கு பிந்தைய படமும் வெளியாகி இரண்டிலும் உள்ள வித்தியாசம் மலைக்க வைக்கக் கூடியதாக உள்ளது. இந்த மைதானத்தின் மதிப்பு ரூ.250 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ஐபிஎல் 2024 தொடரிலிருந்து சிஎஸ்கே வெளியேறிய நிலையில் டோனி தற்போது தனது சொந்த ஊரான ராஞ்சியில் ஓய்வெடுத்து வருகிறார்.
    • பெங்களூரில் இருந்து ராஞ்சிக்கு விமானத்தின் எகானமி கிளாஸில் டோனி பயணித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    ஐபிஎல் 2024 தொடரிலிருந்து சிஎஸ்கே வெளியேறிய நிலையில் டோனி தற்போது தனது சொந்த ஊரான ராஞ்சியில் ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் பெங்களூரில் இருந்து ராஞ்சிக்கு விமானத்தின் எகானமி கிளாஸில் டோனி பயணித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில், தோனி தனது பெட்டியை மேல் உள்ள ரேக்கில் வைத்துவிட்டு தனது இருக்கையில் அமர்ந்திருப்பது பதிவாகியுள்ளது. சக பயணிகள் டோனியை தங்கள் போன் கேமராக்களில் படம்பிடித்து அவரின் எளிமையை கைதட்டி வரவேற்றனர்.

    தொடர்ந்து இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் டோனியின் எளிமையை மெச்சி தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் வைத்து நடைபெற்ற ஆர்சிபி உடனான ஆட்டத்தில் தோல்விக்கு பின்னர் ஆர்சிபி அணியினருக்கு டோனி கை கொடுக்காமல் மைத்தனத்தில் இருந்து சென்றது சர்ச்சையான நிலையில் அந்த களங்கத்தைப் போக்கும் வகையில் இந்த வீடியோவைப் பகிர்ந்து டோனியின் நற்பண்புகளை ரசிகர்கள் உச்சி முகர்ந்து வருகின்றனர். இதற்கிடையில் 6 ஆம் கட்ட தேர்தலான இன்று ( மே 250 பீகார் மாநிலம் ராஞ்சியில் டோனி வாக்களித்து குறிப்பிடத்தக்கது.

     

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை அணி தனது கடைசி லீக் போட்டியில் விளையாடியது.
    • பெங்களூரு அணி டோனிக்கு கை குலுக்காமல் சென்றது சமூக வலைதளங்களில் சர்சையை கிளப்பியது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை அணி தனது கடைசி லீக் போட்டியில் விளையாடியது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் சென்னை அணி பெங்களூரு அணியிடம் 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதால் சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்தது.

    பெங்களூரு அணி டோனிக்கு  கை குலுக்காமல் சென்றது சமூக வலைதளங்களில் சர்சையை கிளப்பியது.

    இந்தப் போட்டிதான் டோனியின் கடைசி ஐ.பி.எல் என்ற கருத்து பரவி வருகிறது. இந்த நிலையில் டோனி தனது எதிர்காலம் குறித்து எங்களிடம் எதுவும் பேசவில்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ். விஸ்வநாதன் நேற்று தெரிவித்தார். அவர் முடிவு எடுக்க நாங்கள் நேரம் கொடுப்போம் என்று கூறிய நிலையில்

    டோனி கால் தசை நார் வலிக்கு  அறுவை சிகிச்சை லண்டனில் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த சிகிச்சையை முடித்துவிட்டு அவரது எதிர்கால திட்டங்களை குறித்து யோசிக்க போகிறார். இந்த சிகிச்சையில் இருந்து குணமாக 5- 6 மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது.

    • பெங்களூரு அணியுடனான போட்டியின்போது அவர் ஆட்டம் இழந்த போது ஏமாற்றத்துடன் காணப்பட்டார்.
    • நாங்கள் அவர் மீண்டும் விளையாடுவதைப் பார்க்க விரும்புகிறோம்.

    ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரு அணியிடம் 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதால் சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்தது.

    இந்தப் போட்டிதான் டோனியின் கடைசி ஐ.பி.எல் என்ற கருத்து பரவி வருகிறது. இந்த நிலையில் டோனி தனது எதிர்காலம் குறித்து எங்களிடம் எதுவும் பேசவில்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ். விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    எதிர்காலம் குறித்து டோனி எந்த முடிவையும் அணி நிர்வாகத்திடம் தெரிவிக்கவில்லை. நாங்கள் அதைப் பற்றி பேசவில்லை, நாங்கள் அவரிடம் கேட்க மாட்டோம். நாங்கள் அவரை முடிவு செய்ய அனுமதிப்போம் என்பது உங்களுக்கு தெரியும்.அவர் எங்களுக்குத் தெரிவிப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சி.எஸ்.கே. அணியில் விளையாடிய முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு கூறியதாவது:-

    இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறவில்லை. அவ்வளவுதான். எனவே இதுவே டோனியின் கடைசி ஐ.பி.எல். போட்டியாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அவரது கிரிக்கெட் பயணத்தை இப்படி முடிப்பதைப் பார்க்க நான் விரும்பவில்லை.

    பெங்களூரு அணியுடனான போட்டியின்போது அவர் ஆட்டம் இழந்த போது ஏமாற்றத்துடன் காணப்பட்டார். பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்று கோப்பையை வெல்ல வேண்டும் என்று டோனி நினைத்தார். நாங்கள் அவர் மீண்டும் விளையாடுவதைப் பார்க்க விரும்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×