search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டோனி"

    • டோனி ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலக போவதாக சிலர் பதிவிட்டனர்.
    • இதுதான் உற்சாகமான செய்தியா..? என ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி, திடீரென தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் இன்று மதியம் 2 மணிக்கு உங்கள் அனைவருடனும் சில உற்சாகமான தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன் என்று கூறி இருந்தார். பேஸ்புக்கில் நேரலையில் ரசிகர்களை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார். இதனால் ஏதோ புதிய அறிவிப்பை வெளியிடப்போகிறார் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர்.

    டோனி வெளியிடும் முக்கிய தகவல் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதிக்கத் தொடங்கினர். டோனி ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலக போவதாக சிலர் பதிவிட்டனர். டோனி புதிய தொழில் தொடங்குவது அல்லது சினிமா படம் தயாரிப்பது பற்றி தகவல் தெரிவிப்பார் என்றும் தகவல் வெளியானது. மேலும் அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு டோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் அதை பற்றி தெரிவிப்பார் என்றும் சில ரசிகர்கள் கணித்தனர்.

    ஆனால் இந்த யூகங்களுக்கு எல்லாம் மாறாக, பேஸ்புக் நேரலையில் அவர் அறிவித்த விஷயம், இதெல்லாம் ஒரு விஷயமா? என்று ரசிகர்களை பேச வைத்தது. சொன்னபடி பகல் 2 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட டோனி, ஓரியோ பிஸ்கட் ஒன்றை அறிமுகம் செய்துவிட்டு எழுந்து சென்றார். இதனால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இந்தியாவில் டோனி மீண்டும் ஓரியோவை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த பிராண்ட் முன்னதாக 2011 இல் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த ஆண்டு இந்தியா உலகக் கோப்பையை வென்றது. இன்றைய பிராண்ட் விளம்பரத்தில், முந்தைய வெளியீடு மற்றும் உலகக் கோப்பை வெற்றியை தற்போதைய சூழ்நிலையுடன் ஒப்பிட்டார். இந்தியா மீண்டும் உலகக் கோப்பையை வெல்ல முடியும் என்றும் தெரிவித்தார்.

    இதுதான் உற்சாகமான செய்தியா..? என ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். தனது பிராண்ட் விளம்பரத்திற்காக, தன்னை பின்தொடரும் கோடிக்கணக்கான ரசிகர்களை பயன்படுத்தியிருப்பதாகவே நினைக்கத் தோன்றுகிறது. இதற்காக ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.

    • எம்.எஸ்.டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக உள்ளார்.
    • டோனி ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலக போவதாக சிலர் பதிவிட்டனர்.

    ராஞ்சி:

    இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் டோனி. சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்ட அவர் ஐ.பி.எல் போட்டியில் விளையாடி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக உள்ளார்.

    இந்த நிலையில் டோனி தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் இன்று (25-ந்தேதி) மதியம் 2 மணிக்கு உங்கள் அனைவருடனும் சில உற்சாகமான தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன் என்று கூறி இருந்தார்.

    பேஸ்புக்கில் நேரலையில் ரசிகர்களை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார். இதனால் ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. டோனி வெளியிடும் முக்கிய தகவல் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதித்தனர். டோனி ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலக போவதாக சிலர் பதிவிட்டனர்.

    டோனி புதிய தொழில் தொடங்குவது அல்லது சினிமா படம் தயாரிப்பது பற்றி தகவல் தெரிவிப்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு டோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் அதை பற்றி தெரிவிப்பார் என்றும் ரசிகர்கள் கணித்து இருக்கிறார்கள்.

    அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் டோனி விளையாடுவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்து இருந்தது. உள்ளூர் ரசிகர்கள் முன்பு விடைபெற விரும்புகிறேன் என்று டோனியும் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டோனி தலைமையில் ஐ.பி.எல். போட்டியில் நான் விளையாடிய போது அவரிடமிருந்து நிறையக் கற்றுக்கொண்டுள்ளேன்.
    • டோனிபோல் நான் அமைதியான அணுகுமுறையை எனது தலைமையில் பின்பற்றத் தொடங்கி உள்ளேன்.

    நெல்லை:

    டி.என்.பி.எல். போட்டியில் திருச்சி வாரியர்சை வீழ்த்தி திருப்பூர் அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கியது.

    நெல்லை சங்கர் நகர் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய திருச்சி வாரியர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன் எடுத்தது.

    முரளி விஜய் 16 பந்தில் 34 ரன்னும் (6 பவுண்டரி ,1 சிக்சர் ), அமித் சாத்விக் 21 பந்தில் 26 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். அஸ்வின் கிறிஸ்ட் 2 விக்கெட்டும், மோகன் பிரசாத், எம். முகமது, லட்சுமி சத்யநாராயணன் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் ஆடிய திருப்பூர் தமிழன்ஸ் 18.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    துஷ்கர் ரகேஜா 26 பந்தில் 46 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), சுப்பிரமணியன் ஆனந்த் 26 பந்தில் 35 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்), எம். முகமது 15 பந்தில் 29 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். சரவணகுமார் 3 விக்கெட்டும், மதிவாணன் 2 விக்கெட்டும், பொய்யாமொழி 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    திருப்பூர் தமிழன்ஸ் அணி ஒரு கட்டத்தில் 14.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 98 ரன் என்ற பரிதாப நிலையில் இருந்தது.

    7-வது விக்கெட்டான துஷ்கர் ரகேஜா-எம்.முகமது ஜோடி சிறப்பாக ஆடி அணியை வெற்றி பெற வைத்தது. இந்த வெற்றி குறித்து திருப்பூர் அணியின் கேப்டன் ஸ்ரீகாந்த் அணிருதா கூறியதாவது:-

    டோனி தலைமையில் ஐ.பி.எல். போட்டியில் நான் விளையாடிய போது அவரிடமிருந்து நிறையக் கற்றுக்கொண்டுள்ளேன். அவரைப்போல் நான் அமைதியான அணுகுமுறையை எனது தலைமையில் பின்பற்றத் தொடங்கி உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆட்டநாயகன் விருது பெற்ற எஸ்.முகமது கூறும்போது, "எந்த சூழலிலும் நான் நெருக்கடியை உணரவில்லை இறுதிவரை களத்தில் நின்றால் வெற்றி பெற முடியும் என்று உறுதியோடு நம்பினோம். அதற்கான பலன் எங்களுக்கு கிடைத்தது" என்றார்.

    திருச்சி அணி முதல் தோல்வியை தழுவியது. தோல்வி குறித்து அந்த அணி கேப்டன் ராஹில் ஷா கூறும்போது, "எங்களது பேட்டிங்கில் இன்னும் 15-20 ரன்கள் கூடுதலாக எடுத்திருக்கலாம். அதே நேரத்தில் எங்களுக்கு கிடைத்த வெற்றிக்கான தருணத்தை நாங்கள் தவறவிட்டு விட்டோம்" என்றார்.

    நெல்லையில் டி.என்.பி.எல். ஆட்டங்கள் முடிந்து விட்டன. இன்றும், நாளையும் ஓய்வு நாளாகும்.

    30-ந் தேதியில் இருந்து திண்டுக்கல்லில் போட்டிகள் நடக்கிறது. அன்று நடைபெறும் ஆட்டங்களில் நெல்லை ராயல் கிங்ஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் (மாலை 3.15), மதுரை பாந்தர்ஸ்-கோவை கிங்ஸ் (இரவு 7.15) அணிகள் மோதுகின்றன. * * * திருச்சி அணியின் தொடக்க வீரர் முரளி விஜய் தன்னை அவுட் செய்த திருப்பூர் தமிழன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் எம்.முகமதுவை பாராட்டினார்.

    நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. #NZvIND #TeamIndia
    நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி, அங்கு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேப்பியரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

    இந்நிலையில், இரு அணிகளும் மோதும் 2வது ஒரு நாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான், ரோகித் சர்மா இருவரும் அதிரடியாக விளையாடினார்கள். அரை சதம் கடந்த இருவரும், நியூசிலாந்து பந்துவீச்சை சிதறடித்து, ரன் குவித்தனர். ஷிகர் தவான் 66  ரன்களும், ரோகித் சர்மா 87 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். கேப்டன் விராட் கோலி 43 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தாலும், அம்பதி ராயுடு மற்றும் டோனி இருவரும் அணியின் ஸ்கோரை மேலும் உயர்த்தினர். ராயுடு 47 ரன்களில் ஆட்டமிழந்தார். டோனி அரை சதத்தை நெருங்கினார். 

    50 ஓவர் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 324 ரன்கள் குவித்தது. கடைசி நேரத்தில் பந்துகளை பறக்கவிட்ட கேதர் ஜாதவ், 3 பவுண்டரி ஒரு சிக்சருடன், 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். டோனி 48 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    இதையடுத்து 325 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. துவக்கம் முதலே நியூசிலாந்து அணிக்கு, இந்திய பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி அளித்தனர். அடித்து ஆட முற்பட்ட டாப் ஆர்டர் வீரர்கள், குறைந்த ரன்களில் நடையைக் கட்டினர். இதனால் அணியின் ரன் ரேட் சரியத் தொடங்கியது. அதன்பின்னர், குல்தீப் யாதவ் சீரான இடைவெளியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 166 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது நியூசிலாந்து.

    கடும் நெருக்கடிக்கு மத்தியிலும் அதிரடியாக ஆடிய பிரேஸ்வெல், பந்துகளை சிக்சரும் பவுண்டரிகளுமாக பறக்க விட்டு அரை சதம் கடந்தார். 46 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 57 ரன்கள் விளாசிய அவர், புவனேஸ்வர் குமார் பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி விக்கெட்டான பெர்குசனை (12) சாகல் வீழ்த்த, நியூசிலாந்து அணி 40.2 ஓவர்களில் 234 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால், 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. ரோகித் சர்மா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 

    இந்த வெற்றியின் மூலம், 5 போட்டி கொண்ட தொடரில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. 3வது போட்டி நாளை மறுநாள் நடைபெற உள்ளது.  #NZvIND #TeamIndia
    ஐபிஎல் 2018 தொடரில் கோப்பையை கைப்பற்ற காரணமாக இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஷேன் வாட்சனுக்கு கேப்டன் டோனி பாராட்டுகள் தெரிவித்துள்ளார். #IPL2018 #CSK #MSDhoni #shockingwatson
    புதுடெல்லி:

    ஐபிஎல் 2018 தொடர் நேற்று முடிவடைந்தது. இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐதராபாத் அணியை தோற்கடித்து வெற்றி கோப்பையை கைப்பற்றியது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஷேன் வாட்சன் மிகவும் சிறப்பாக விளையாடினார். 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் கடைசி வரை நின்று வெற்றியை பெற்று தந்தார்.

    கோப்பையை கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியை கொண்டாடி வருகிறது. இந்நிலையில், வெற்றிக்கோப்பையை கையில் வைத்து, தனது மனைவி, குழந்தையுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் டோனி பதிவு செய்திருந்தார். அத்துடன், சென்னை அணிக்கு ஆதரவு தெரிவித்த ரசிகர்கள் மற்றும் மும்பைக்கை நன்றி. 'ஷேன் ஷாக்கிங் வாட்சன்' சிறப்பாக இன்னிங்ஸ் விளையாடி வெற்றியை பெற்று தந்தார். ஷிவா டிராபியை வாங்குவது குறித்து கவலைப்பட வில்லை. அவள் மைதானத்தில் இறங்கி ஓட வேண்டும் என எண்ணினாள்.


    இவ்வாறு டோனி குறிப்பிட்டிருந்தார். வாட்சனை, ஷாக்கிங் வாட்சன் என அவர் குறிப்பிட்டிருந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இரண்டு ஆண்டுகள் தடைக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி ரசிகர்களிடையே பெரும் உற்றாகத்தை ஏற்படுத்தியுள்ளது. #IPL2018 #CSK #MSDhoni #shockingwatson
    ஐ.பி.எல். தொடரில், ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 62 பந்தில் சதம் அடித்த அம்பதி ராயுடுவை, வெற்றிக்கு பிறகு கேப்டன் டோனி பாராட்டி உள்ளார். #SRHvCSK #Dhoni #AmbatiRayudu
    புனே:

    ஐ.பி.எல் போட்டியில் ஐதராபாத்தை மீண்டும் வீழ்த்தி சென்னை அணி ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றது. புனேயில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சன்ரைசஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன் எடுத்தது.

    பின்னர் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 19 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 180 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க வீரர் அம்பதி ராயுடு அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 62 பந்தில் 100 ரன்குவித்தார். இதில் 7 பவுண்டரிகளும், 7 சிக்சர்களும் அடங்கும். ஐ.பி.எல் போட்டியில் அவரது முதல் சதம் இதுவாகும்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெற்ற 8-வது வெற்றியாகும். இதன் மூலம் ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. தான் விளையாடிய அனைத்து ஐ.பி.எல். போட்டிகளிலும் ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேறிய ஒரே அணி என்ற முத்திரையை சென்னை சூப்பர் கிங்ஸ் பதித்தது.

    2 ஆண்டு தடைக்கு பிறகு விளையாடும் அந்த அணி இந்த தொடரில் சிறப்பாக ஆடி வருகிறது. ஐதராபாத்தை மீண்டும் வீழ்த்தியது. ஏற்கனவே அந்த அணியை அதன் சொந்த மண்ணில் 4 ரன்னில் வென்று இருந்தது.

    இந்த வெற்றி குறித்து சென்னை சூப்பர்கிங்ஸ் கேப்டன் டோனி கூறியதாவது:-


    இந்த ஆடுகளத்தில் 2-வது பகுதியில் பந்து அதிகமாக ‘சுவிங்’ ஆகும் என்று நினைத்தேன். ஆனால் அப்படி நடக்காதது அதிர்ச்சியாக இருந்தது. வாட்சனும், அம்பதி ராயுடுவும் சிறப்பாக ஆடினார்கள். வாய்ப்பு கிடைத்த போது பவுண்டரிகளாக விளாசினார்கள். இல்லையென்றால் ஐதராபாத் அணி நிர்ணயித்த 180 ரன்னை சேஸ் செய்வது கடினமாக இருக்கும்.

    ஐ.பி.எல். போட்டி தொடங்குவதற்கு முன்பே அம்பதி ராயுடுக்கு அணியில் இடத்தை ஒதுக்கி வைத்து விட்டேன். ஏனென்றால் அவர் திறமை மீது உயர்ந்த மதிப்பு வைத்து இருக்கிறேன். வேகப்பந்து, சுழற்பந்து என இரண்டிலும் அவர் சிறப்பாக விளையாடக்கூடியவர்.

    அவரை பார்த்தால் அதிரடி பேட்ஸ்மேன் மாதிரி தெரியாது. ஆனால் எப்போதுமே சிறந்த ஷாட்களை ஆடக் கூடியவர். அதனால் கேதர் ஜாதவ் உடல் தகுதியுடன் இருந்தால் ராயுடுவை தொடக்க வீரராக களம் இறக்க முதலிலேயே முடிவு செய்துவிட்டேன். ஜாதவ் 4 அல்லது 5-வது வீரராக களமிறங்க முடிவு செய்தோம்.

    எதிர்பாராதவிதமாக நாங்கள் ஒரு போட்டியில் மட்டுமே சென்னையில் ஆடினோம். அடுத்து புனேக்கு வந்து விட்டோம். இங்கும் ரசிகர்கள் ஆதரவு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு டோனி கூறியுள்ளார்.

    சென்னை அணி 13-வது ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்சை 18-ந்தேதி சந்திக்கிறது. ஐதராபாத் அணி 17-ந்தேதி பெங்களூரை எதிர்கொள்கிறது. #SRHvCSK #CSKvSRH #Dhoni #AmbatiRayudu
    ×