search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசியக்கொடி"

    குடியரசு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் நடைபெற்ற கோலாகலமான நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தேசியக்கொடி ஏற்றி வைத்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். #RepublicDay #President #DelhiRajpath
    புதுடெல்லி:

    நாட்டின் 70-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் ராஜபாதையில் நடைபெற்ற பிரமாண்டமான விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.



    இந்திய ராணுவத்தின் பெருமை மிகு அணிவரிசை, ராணுவத்தின் முப்படை அணிவகுப்பைத் தொடர்ந்து, நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில், பல்வேறு மாநிலங்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.  மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் அலங்கார வாகனங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் கண்கவர் வாகனங்களும் அணிவகுத்து வருகின்றன. குடியரசு தின விழாவை கண்டுகளிப்பதற்காக ராஜபாதையில் பல லட்சம் மக்கள் திரண்டுள்ளனர்.

    டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார். குடியரசு தின விழாவையொட்டி தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் அந்தந்த மாநிலங்களில் நடைபெற்ற குடியரசு தின விழாக்களில், ஆளுநர் பங்கேற்று தேசியக்கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார். இதேபோல் நாடு முழுவதிலும் உள்ள அரசியல் கட்சி அலுவலகங்களிலும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. கட்சி தலைவர்கள் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். #RepublicDay #President #DelhiRajpath

    குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற விழாவில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசியக்கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார். #RepublicDay #RepublicDay2019 #TNGovernor
    சென்னை:

    நாட்டின் 70-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. சென்னையில் மெரினா கடற்கரை சாலையில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு, தேசிய கொடியை ஏற்றி வைத்து பல்வேறு படைப்பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார். தேசியக்கொடியை ஏற்றி வைத்தபோது விமானப்படை  ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது.



    விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

    சென்னையில் குடியரசு தினவிழாவையொட்டி மெரினா, காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்ற பகுதிகளில் கடலோர பாதுகாப்புப் படையினரும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

    மக்கள் அதிகம் கூடும் வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான வழிபாட்டுத் தலங்கள், ரெயில் மற்றும் பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #RepublicDay #RepublicDay2019 #TNGovernor

    கோவை ரெயில் நிலையத்தில் 100 அடி உயரத்தில் பறக்கும் தேசியக்கொடியை சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் சுப்பாராவ் இன்று ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
    கோவை:

    இந்தியன் ரெயில்வே தென்னக ரெயில்வே கோட்டத்துக்குட்பட்ட 8 ரெயில் நிலையங்களில் பிரமாண்ட தேசியக்கொடி அமைக்க உத்தரவிட்டது.

    இதனையடுத்து சேலம் ரெயில்வே கோட்டத்துக்குட்பட்ட கோவை ரெயில் நிலையத்தின் முன்புறம் 100 அடி உயரத்தில் கொடி கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கொடி கம்பத்தில் ஏற்றுவதற்காக 30 அடி நீளம், 20 அடி உயரத்தில் 9.5 கிலோ எடையில் பிரேத்யேகமாக பிரமாண்ட தேசியக்கொடி உருவாக்கப்பட்டது.

    இந்த பிரமாண்ட தேசியக்கொடியை சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் சுப்பாராவ் இன்று ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    பிரமாண்டமாக கோவை ரெயில் நிலையத்தில் பறக்கும் தேசியக்கொடியை ஏராளமான ரெயில் பயணிகள் கண்டு ரசித்தனர். இளைஞர்கள், இளம்பெண்கள் தேசியக்கொடி முன்பு நின்று தங்களது செல்போனில் செல்பி எடுத்து சென்றனர்.



    பாஜக அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் கம்பத்தில் கட்டி வைத்திருந்த தேசிய கொடியை ஏற்றும் போது கொடி கீழே விழுந்த நிகழ்வை வைத்து காங்கிரஸ் கிண்டல் ட்வீட் செய்துள்ளது. #IndependenceDayIndia #AmitShah #Congress
    புதுடெல்லி:

    நாட்டின் 72-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றி உரையாற்றினார். இதேபோல, அனைத்து மாநிலங்களிலும் முதல்வர்கள் தேசியக் கொடியை ஏற்று மரியாதை செலுத்தினார்கள்.

    இந்நிலையில், டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திலும் சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. அப்போது, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். இதில் தேசியக் கொடியை ஏற்றுவதற்குப் பதிலாக அமித் ஷா இறக்கியதால், சிலநிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.

    தேசியக் கொடியை ஏற்றுவதற்குச் சரி செய்து, அந்தக் கயிற்றை பாதுகாவலர் அமித் ஷாவிடம் கொடுத்தார். ஆனால் அமித் ஷா தேசியக் கொடியை மேலேஏற்றுவதற்கு பதிலாக, தவறுதலாக இறக்கும் கொடியை பிடித்து இழுக்கத் தொடங்கினார். இதனால், மேலே நிறுத்தப்பட்டு இருந்த தேசியக் கொடி திடீரென கீழே இறங்கி வந்தது.

    இதைப்பார்த்த சிலர் கைதட்டினாலும், பலர் சத்தமிட்டனர். உடனடியாக சுதாரித்துக் கொண்ட அமித் ஷா அவசர, அவசரமாக கயிற்றைப் பிடித்து மேலே இழுத்து, தேசியக்கொடியை ஏற்றினார். அமித்ஷா தேசியக் கொடியை ஏற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    அமித் ஷா தேசியக்கொடியைக் கீழே இறக்கும் வீடியோவை காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்து கிண்டல் செய்துள்ளது. 

    அதில், “தேசியக் கொடியை சரியாக கையாளாத் தெரியாதவர்கள் எவ்வாறு நாட்டைக் கையாண்டு வழிநடத்துவார்கள். தேசியக் கொடிக்கு இன்றுபோல் அவமதிப்பு இனிஅவமதிப்பு செய்ய முடியாது. மக்களிடம் தேசப்பற்றாளர்கள் என்று கூறிக்கொண்டு சான்றளித்துக் கொள்ளும் சிலருக்கு, தேசிய கீதத்தின் மரபுகள், மாண்புகூட தெரியவில்லை” எனக் கிண்டல் செய்துள்ளது.



    ஊட்டியில் சுதந்திர தின விழாவையொட்டி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நாளை(புதன்கிழமை) தேசியக்கொடியை ஏற்றுகிறார். நீலகிரி மாவட்டம் முழுவதும் 570 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். #IndependenceDay
    ஊட்டி:

    நாடு முழுவதும் சுதந்திர தின விழா நாளை (புதன்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா நாளை காலை 10 மணியளவில் ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. விழாவில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தேசியக்கொடியை ஏற்றி வைக்கிறார். அதனை தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். இதில் தேசிய மாணவர் படை மாணவர்கள் மற்றும் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்களின் அணிவகுப்பும் நடக்க உள்ளது.



    விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனங்கள் நடைபெறுகிறது. தொடர்ந்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். இந்த விழாவில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா, மாவட்ட வருவாய் அதிகாரி செல்வராஜ் மற்றும் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் கலந்துகொள்கிறார்கள். விழாவையொட்டி மைதானத்தை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு கொடிக்கம்பம் நடப்பட்டு, மேடை அமைக்கப்பட்டு உள்ளது. விழாவை பொதுமக்கள் பார்ப்பதற்காகவும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் தற்காலிகமாக கழிப்பறைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    விழாவுக்காக ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கடந்த சில நாட்களாக தினமும் காலையில் ஆயுதப்படை போலீசார் துப்பாக்கியுடன் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று நடைபெற்ற போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகையை போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா பார்வையிட்டார். மேலும் ஊட்டி அரசு கலைக்கல்லூரி தேசிய மாணவர் படை மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களும் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். விழா நடைபெறும் மைதானம் மற்றும் அங்குள்ள சாலையை தூய்மையான வைக்கும் பணியில் நகராட்சி சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

    விழாவை முன்னிட்டு போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா உத்தரவின்பேரில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி ஆகிய 3 தாலுகாக்களில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு(மதுவிலக்கு) கோபி தலைமையிலும், கூடலூர், பந்தலூர் ஆகிய தாலுகாக்களில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தம்பிதுரை தலைமையிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம் முழுவதும் 570 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். சேரம்பாடி, தாளூர், அய்யங்கொல்லி, கக்கனல்லா, எருமாடு, பாட்டவயல், நாடுகாணி, முள்ளி, மஞ்சூர், கெத்தை, குஞ்சப்பணை உள்ளிட்ட 16 சோதனைச்சாவடிகளில் இரவும், பகலும் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்துகிறார்கள். சோதனைக்கு பின்னரே வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது. குன்னூரில் 4 இடங்கள், ஊட்டியில் 4 இடங்கள், கூடலூரில் 1 இடம், கோத்தகிரியில் 1 இடம் என வாகன சோதனை நடத்தப்படுகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து விடுதிகளிலும் தங்கும் நபர்கள் குறித்த விவரங்களை போலீசார் கேட்டறிந்து சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். மாவட்ட கலெக்டர் பங்களாவில் இருந்து ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானம் வரை நாளை போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது. மைதானம் முழுவதும் போலீஸ் கண்காணிப்பில் உள்ளது. 
    ×