என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாயாவதி"
- உத்தரபிரதேசம் வழியாக பாதயாத்திரை மேற்கொள்ள இருக்கும் ராகுல் காஷ்மீரில் ஜனவரி 26-ந்தேதி பாத யாத்திரையை நிறைவு செய்ய உள்ளார்.
- காஷ்மீரில் ராகுல் பாதயாத்திரை நுழையும் போது உரிய ராணுவ பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று அம்மாநில கவர்னரிடம் காங்கிரஸ் மூத்த தலைவர்வர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
புதுடெல்லி:
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொண்டு உள்ளார்.
இதுவரை அவர் 9 மாநிலங்கள் வழியாக நடைபயணம் மேற்கொண்டு கடந்த வாரம் டெல்லியை சென்றடைந்தார். சுமார் 3000 கி.மீ. தூரம் ராகுல் நடந்துள்ளார்.
தற்போது வடமாநிலங்களில் அளவுக்கு அதிகமான குளிர் நிலவுவதால் ராகுல்காந்தியின் பாதயாத்திரைக்கு தற்காலிகமாக 9 நாட்கள் ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளது. அடுத்த மாதம் (ஜனவரி) 3-ந்தேதி மீண்டும் ராகுல்காந்தி ஒன்றுமை யாத்திரையை தொடங்க உள்ளார்.
உத்தரபிரதேசம் வழியாக பாதயாத்திரை மேற்கொள்ள இருக்கும் அவர் காஷ்மீரில் ஜனவரி 26-ந்தேதி பாத யாத்திரையை நிறைவு செய்ய உள்ளார். காஷ்மீரில் ராகுல் பாதயாத்திரை நுழையும் போது உரிய ராணுவ பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று அம்மாநில கவர்னரிடம் காங்கிரஸ் மூத்த தலைவர்வர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஒவ்வொரு மாநிலத்திலும் ராகுல் நடைபயணம் மேற்கொண்ட போது அந்ததந்த மாநில கட்சி தலைவர்களை யாத்திரைக்கு காங்கிரசார் அழைத்தனர். அந்த வகையில் உத்தரபிரதேசத்தில் நடைபயணம் மேற்கொள்ளும் போது ராகுலுடன் பாத யாத்திரையில் பங்கேற்க வருமாறு சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவிற்கும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதிக்கும் காங்கிரஸ் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால் ராகுலுடன் பாத யாத்திரையில் பங்கேற்க இயலாது என்று அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உத்தரபிரதேத்தில் 2 பெரிய கட்சி தலைவர்கள் ராகுல்யாத்திரையை புறக்கணிப்பது காங்கிசாரிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
- ஹபூருக்கு அழைத்து வந்த விசாரணை கைதி சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளார்.
- ஹமிர்பூரில் வலியை கொடுக்கும் கூட்டு பாலியல் பலாத்காரம் நடந்துள்ளது.
லக்னோ
உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா சார்பில் யோகி ஆதித்யநாத் முதல்-மந்திரியாக உள்ளார். அங்கு சமீப நாட்களாக தொடர்ந்து குற்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இதை முன்வைத்து மாநில அரசை பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான மாயாவதி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'யமுனை நதியில் பணி முடிக்கப்படாத பாலம் காரணமாக ஏராளமான மக்கள் படகு விபத்தில் கொல்லப்பட்டு உள்ளனர். ஹபூருக்கு அழைத்து வந்த விசாரணை கைதி சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளார். தற்போது ஹமிர்பூரில் வலியை கொடுக்கும் கூட்டு பாலியல் பலாத்காரம் நடந்துள்ளது. இந்த சம்பவங்கள் அனைத்தும், மாநிலத்தில் காட்டாட்சி நடப்பதை நிரூபித்து உள்ளன. மாநிலத்தில் வளர்ச்சியை பற்றி அரசு தம்பட்டம் அடிப்பது வெறும் ஏமாற்று வேலை' என சாடியுள்ளார்.
மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் கடுமையான வறுமை மற்றும் வேலையின்மை உள்ளதாக கூறியுள்ள மாயாவதி, அரசு இதில் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
- தலித் சிறுவன் பள்ளி ஆசிரியரால் தாக்கப்பட்டு உயிரிழந்தான்.
- சாதிக்கொடுமைகள் ராஜஸ்தான் மாநிலத்தில் தினமும் நடக்கின்றன.
லக்னோ :
ராஜஸ்தான் மாநிலம் சுரானா கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இந்திரகுமார் மேக்வால் என்ற தலித் சிறுவன் படித்துவந்தான்.
9 வயதான அந்தச் சிறுவன், பள்ளியில் உள்ள தண்ணீர் பானையில் இருந்து தண்ணீர் எடுத்து குடித்துள்ளான். அப்போது பள்ளி ஆசிரியர் அவனை தாக்கியதாக கூறப்படுகிறது. அதில் படுகாயமடைந்த அச்சிறுவன், குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவன் உயிரிழந்தான்.
இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், 'இதுபோன்று வலி ஏற்படுத்தும் சாதிக்கொடுமைகள் ராஜஸ்தான் மாநிலத்தில் ஏறக்குறைய தினமும் நடக்கின்றன. தலித் மக்கள் உள்ளிட்டோரின் உயிர், கவுரவத்தை காக்க காங்கிரஸ் அரசு தவறுவதையே சிறுவனின் சாவு காட்டுகிறது. எனவே ராஜஸ்தானில் தற்போதைய அரசை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்' என்று கூறியுள்ளார்.
- துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 6-ந்தேதி நடக்கிறது.
- மார்கரெட் ஆல்வாவுக்கு ஆதரவு அளிப்பதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.
லக்னோ :
நமது நாட்டின் அடுத்த துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், நாளை மறுதினம் (6-ந் தேதி) நடக்கிறது. இந்த தேர்தலில் பாராளுமன்றத்தின் இரு சபைகளின் எம்.பி.க்கள் ஓட்டு போட்டு, புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க உள்ளனர்.
இந்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக மம்தா பானர்ஜி ஆளும் மேற்கு வங்காள மாநிலத்தின் கவர்னராக இருந்த ஜெகதீப் தன்கர் (வயது 71) போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ராஜஸ்தான் முன்னாள் கவர்னர் மார்கரெட் ஆல்வா (80) களம் காண்கிறார்.
துணை ஜனாதிபதி தேர்தலில் ஓட்டுப்பதிவுக்கான தேதி நெருங்கிவிட்ட தருணத்தில், பா.ஜ.க. வேட்பாளர் ஜெகதீப் தன்கருக்கு மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதையொட்டி மாயாவதி நேற்று டுவிட்டரில் வெளியிட்ட பதிவுகளில் கூறி இருப்பதாவது:-
நாட்டின் உச்ச பதவியான ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் மத்தியில் ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்பது நன்றாக தெரிந்த ஒன்றுதான்.
தற்போது 6-ந் தேதி நடக்கிற துணை ஜனாதிபதி தேர்தலிலும் அதே நிலைதான் நிலவுகிறது. அப்படிப்பட்ட ஒரு சூழலில், பரந்த பொது நலனையும், அதன் நகர்வையும் மனதில்கொண்டு, எங்கள் கட்சி ஜெதீப் தன்கருக்கு தனது ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சிக்கு மக்களவையில் 10 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் ஒரு எம்.பி.யும் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி தேர்தலில் மாயாவதியின் கட்சி, பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக களம் கண்ட திரவுபதி முர்முவுக்கு தனது ஆதரவை வழங்கியது நினைவுகூரத்தக்கது.
இதற்கிடையே எதிர்க்கட்சி பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவுக்கு ஆதரவு அளிப்பதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. இந்த தகவலை அந்த கட்சி எம்.பி. சஞ்சய்சிங் அறிவித்துள்ளார்.
- பா.ஜ.க. வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு தெரிவித்தது.
- ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா களமிறங்கியுள்ளார்.
புதுடெல்லி:
ஜனாதிபதி தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 21-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா களமிறங்கியுள்ளார்.
இதற்கிடையே, ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் திரவுபதி முர்மு நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் இருவரும் பல்வேறு கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவினை திரட்டி வருகின்றனர்.
இந்நிலையில், பா.ஜ.க. வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு அளிப்பதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு மத்தியில் தேர்தல் நடைபெற இருக்கிறது. முன் கூட்டியே தேர்தல் நடத்தப்படலாம் என்றும், பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படலாம் என்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
அரசியல் கட்சிகள் தேசிய அளவிலும், மாநில அளவிலும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. மத்தியில் பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ் மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக மாநில கட்சிகளுடன் காங்கிரஸ் தலைவர்கள் பேச்சு நடத்தி வருகிறார்கள்.
உத்தரப்பிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தன. இது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
மற்ற தொகுதிகள் ஒதுக்கீடு பற்றி தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மேலும் ராஷ்டீரிய லோக் தளம், நிஷாத் கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்க சமாஜ்வாடி கட்சி ஒப்புக்கொண்டுள்ளது.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் அகிலேஷ் யாதவ், முலாயம்சிங் யாதவ், மாயாவதி ஆகியோர் போட்டியிட முடிவு செய்துள்ளனர். மாயாவதி 2004-ம் ஆண்டுக்குப்பின் பாராளுமன்ற மேல்-சபை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார். தற்போது 10 ஆண்டுகளுக்கு பின்பு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #ParliamentElection2019 #Congress #Mayawati #AkhileshYadav
நாட்டின் பல்வேறு துறைகளின் பணிகளை ஆய்வு செய்வதற்காகவும், உரிய ஆலோசனைகளை வழங்குவதற்காகவும் பாராளுமன்ற எம்.பி.க்களை கொண்டு குழுக்கள் அமைக்கப்படுவது வழக்கம்.
இவ்வாறு பாராளுமன்றத்தில் 24 குழுக்கள் செயல்படுகின்றன. அவற்றில் மக்களவைக்கு 16 குழுக்களும், மேல்-சபைக்கு 8 குழுக்களும் அமைக்கப்படும்.
இந்த குழுக்கள் ஒவ்வொன்றுக்கும் மூத்த எம்.பி.க்கள் தலைவராகவும், மற்றவர்கள் உறுப்பினர்களாகவும் இருப்பார்கள். இந்த குழுவுக்கு பல்வேறு அதிகாரங்கள் வழங்கப்படும்.
எங்குவேண்டுமானாலும் ஆய்வு நடத்தலாம், எந்த அதிகாரியை வேண்டுமானாலும் விசாரணை நடத்தலாம் என்ற அளவிற்கு உயர்ந்தபட்ச அதிகாரங்கள் இந்த குழுக்களுக்கு உண்டு.
எனவே இந்த குழுக்களில் இடம் பெறுவதற்கு எம்.பி.க்கள் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் மேல்சபை எம்.பி.யாக உள்ள பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா எந்த குழுவிலும் இடம் பெறாமல் ஒதுங்கியே இருக்கிறார்.
மேல்-சபையில் எம்.பி.க்களின் பதவி காலம் முடிவு மற்றும் மரணம் காரணமாக 50 எம்.பி.க்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டனர். எனவே 8 நிலைக்குழுக்களும், மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு குழுவிலும் கூட அமித்ஷா இடம் பெறவில்லை. ஏன் அவர் இதில் ஆர்வம் காட்டவில்லை என்று தெரியவில்லை.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூட அவர் தலைவராக இருந்த காலத்தில் எந்த நிலைக் குழுவிலும் இடம் பெறவில்லை. இப்போது தலைவர் பதவி இல்லாத நேரத்திலும் குழுவில் இடம் பெறவில்லை. அதே போல பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் எந்த குழுவிலும் இடம் பெறவில்லை.
அதே நேரத்தில் மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு பொதுச் செயலாளர் சீத்தாராம் எச்சூரி பல்வேறு குழுக்களில் இடம் பெற்றுள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூட நிதி கமிட்டியில் இடம் பெற்று இருக்கிறார். அதே போல காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வெளி விவகார கமிட்டியில் இடம் பெற்றுள்ளார். #BJP #AmitShah
பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பகுஜன் சமாஜ்கட்சி, மாயாவதி, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்பட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் மாயாவதியும், அகிலேஷ் யாதவும் எதிரும் புதிருமாக இருந்து வந்தனர். ஆனால் அங்கு பா.ஜனதா ஆட்சி அமைந்த பிறகு இந்த இரு கட்சி தலைவர்களும் கைக்கோர்த்து செயல்படும் நிலை உருவானது. உத்தரப்பிரதேசத்தில் நடந்த கோரக்பூர், புல்பூர் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அகிலேஷ் யாதவும், மாயாவதி கூட்டணி அமைத்து போட்டி போட்டு பா.ஜனதா வேட்பாளர்களை தோற்கடித்தார். ஆனாலும் இருகட்சி தலைவர்களும் இதுவரை ஒரே மேடையில் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டது கிடையாது.
இந்த நிலையில் குமாரசாமி பதவியேற்பு நிகழ்ச்சியில் அகிலேஷ் யாதவும், மாயாவதியும் ஒரே மேடையில் பங்கேற்கிறார்கள். இது உத்தரப்பிரதேசத்தில் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், குமாரசாமி பதவியேற்பு விழாவுக்கு செல்லவில்லை. அவருக்கு பதில் 4 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட தி.மு.க. குழு பெங்களூர் சென்று பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார்கள்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசனுக்கும் குமாரசாமி அழைப்பு விடுத்து இருந்தார். இதை ஏற்று கமல்ஹாசன் கலந்து கொள்கிறார். காவிரிக்காக கர்நாடகத்துடன் பேச்சு நடத்துவதற்காக முதல் அடியாகவே இதில் கலந்து கொள்வதாக கமல்ஹாசன் கூறினார். #KarnatakaFloorTest #Kumarasamy #AkhileshYadav #Mayawati #ChandrashekarRao #NaveenPatnaik
உத்தரப்பிரதேசம் மாநிலம் முன்னாள் முதல்-மந்திரியும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி தற்போது உள்ள அரசு பங்களாவிலிருந்து, தனக்கு சொந்தமான 15 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களாவிற்கு குடியேற உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்