search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பும்ரா"

    • விமர்சனங்களுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு பும்ரா மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.
    • டி20 உலகக்கோப்பையின் ஒரு பகுதியாக நான் இருக்க மாட்டேன் என்பதில் வருத்தமடைகிறேன் என பும்ரா கூறினார்.

    ஐசிசி டி20 உலகக்கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் இன்னும் 10 நாட்களில் ஆஸ்திரேலியாவில் துவங்க உள்ளது. உலக டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் இத்தொடரில் நடப்பு சாம்பியனாக சொந்த மண்ணில் களமிறங்கும் ஆஸ்திரேலியாவுக்கு சவாலாக உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக திகழும் இந்தியா உட்பட டாப் 16 அணிகள் களமிறங்குகின்றன.

    இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கடைசி நேரத்தில் காயத்தால் வெளியேறினார். இந்த வருடம் இந்தியா பங்கேற்ற பெரும்பாலான டி20 தொடர்களில் ஓய்வெடுத்த பும்ரா அதையும் தாண்டி கடைசி நேரத்தில் காயத்தால் வெளியேறியுள்ளதை பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் இவர் ஐபிஎல் தொடரில் மும்பைக்காக அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார். ஆனால் நாட்டுக்காக ஓய்வெடுத்து முக்கிய நேரத்தில் காயமடைந்து வெளியேறி விடுவார் என்று ஆதாரங்களுடன் விமர்சித்தனர்.

    இருப்பினும் யாராவது நாட்டுக்காக உலகக்கோப்பை போன்ற தொடரில் வேண்டுமென்றே காயமடைந்து வெளியேறுவார்களா? என்று சில ரசிகர்கள் அவருக்கு ஆதரவையும் கொடுத்தனர்.

    இந்நிலையில் இதுபோன்ற தேவையற்ற விமர்சனங்களுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு பும்ரா மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.


    அந்த புகைப்படத்தில் "உங்களை பார்த்து குறைக்கும் ஒவ்வொரு நாய்க்கும் நீங்கள் கவனம் கொடுத்து நின்று அதன் மீது கல்லை தூக்கி எறிந்து கொண்டிருந்தால் உங்களால் எப்போதும் உங்களுடைய லட்சிய இலக்கைத் தொட முடியாது" என்று இருந்தது.

    முன்னதாக காயத்திலிருந்து வெளியேறினாலும் இந்திய அணிக்கு எப்போதும் தம்முடைய ஆதரவு உண்டு என அவர் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். டுவிட்டரில் கூறியதாவது:-

    இந்த டி20 உலகக்கோப்பையின் ஒரு பகுதியாக நான் இருக்க மாட்டேன் என்பதில் வருத்தமடைகிறேன். ஆனால் எனது காயத்துக்காக எனது அன்புக்குரியவர்களிடமிருந்து நான் பெற்ற வாழ்த்துக்கள், அன்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி. இங்கே குணமடைந்து கொண்டிருக்கும் நான் ஆஸ்திரேலியாவில் நம்முடைய அணியை உற்சாகப்படுத்துவேன் என்று கூறினார்.

    தற்போது முதுகுப்பகுதியில் எலும்பு முறிவை ஏற்பட்டுள்ளதால் காயத்திலிருந்து குணமடைய 6 மாதங்கள் தேவைப்படும் என்று செய்திகள் வெளியானாலும் இதுவரை ஜஸ்பிரித் பும்ராவின் முழுமையான காயம் பற்றிய தகவல் வெளியாகவில்லை. 

    • பும்ராவுக்கு மாற்றாக யார் இடம் பெறுவார் என்பதை ஆலோசித்து வருகிறோம்.
    • அவருடைய அறிக்கை கிடைத்தவுடன் எதை எவ்வாறு முன்னெடுத்து செல்வது பற்றி ஆலோசிப்போம்.

    இந்தூர்:

    20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 16-ந்தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. நவம்பர் 13-ந்தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன.

    இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்காள தேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக 2-வது சுற்றில் விளையாடும்.

    வெஸ்ட் இண்டீஸ், இலங்கை உள்பட 8 நாடுகள் முதல் சுற்றில் விளையாடும். இதில் இருந்து 4 அணிகள் 2-வது சுற்றுக்கு முன்னேறும். ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் 23-ந்தேதி பாகிஸ்தானை எதிர் கொள்கிறது.

    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவரான பும்ரா காயம் காரணமாக ஆடவில்லை. அவர் உலகக்கோப்பை போட்டியில் இருந்து விலகி உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பும்ரா இல்லாதது அணிக்கு பெரும் பின்னடைவாகும்.

    அவரது இடத்தில் மாற்று வீரர்களான முகமது ஷமி, தீபக் சாஹர் ஆகியோரில் ஒருவர் இடம் பெறலாம்.

    இந்த நிலையில் 20 ஓவர் உலகக்கோப்பையில் பும்ராவுக்கு பதிலாக முகமது ஷமி இடம் பெறுவாரா? என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் கேட்ட போது அவர் பதில் அளித்தார். இது தொடர்பாக டிராவிட் கூறியதாவது:-


    பும்ராவுக்கு மாற்றாக யார் இடம் பெறுவார் என்பதை ஆலோசித்து வருகிறோம். அக்டோபர் 15 வரை எங்களுக்கு நேரம் உள்ளது. முகமது ஷமி மாற்று வீரர்கள் பட்டியலில் உள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக தென் ஆப்பிரிக்கா தொடரில் அவர் ஆடவில்லை.

    அவர் தற்போது தேசிய கிரிக்கெட் அகடாமியின் கண்காணிப்பில் இருக்கிறார். அவர் எப்படி குணமடைந்து வருகிறார் என்பதை அறிக்கை மூலம் தான் தெரியவரும். கொரோனா பாதிப்பு 15 நாட்களுக்கு பிறகு அறிக்கை கிடைக்கும்.

    நாங்கள் ஒரு அழைப்பை விடுப்போம். அவருடைய அறிக்கை கிடைத்தவுடன் எதை எவ்வாறு முன்னெடுத்து செல்வது பற்றி ஆலோசிப்போம்.

    இவ்வாறு ராகுல் டிராவிட் கூறினார். 

    • 20 ஓவர் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இருந்து பும்ரா வெளியேறவில்லை.
    • உலகக்கோப்பை போட்டியின் இந்தியாவின் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் அக்டோபர் 23-ந்தேதி மோதுகிறது.

    புதுடெல்லி:

    20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16-ந்தேதி முதல் நவம்பர் 13-ந்தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.

    உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இருந்து முன்னணி வேகப்பந்து வீரரான ஜஸ்பிரீத் பும்ரா காயம் காரணமாக விலகி இருந்தார்.

    முதுகுவலி காயம் காரணமாக அவரால் உலகக்கோப்பையில் ஆட இயலவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. பும்ரா விலகியது இந்தியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவாகும். அவருக்கு பதிலாக மாற்று வீரர்களில் ஒருவர் இடம் பெறுவார் என்று கருதப்படுகிறது. இதற்காக முகமது ஷமி, தீபக் சாஹர் இடையே போட்டி நிலவுகிறது.

    இந்த நிலையில் 20 ஓவர் உலகக்கோப்பையில் பும்ரா விளையாட இன்னும் வாய்ப்பு இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    20 ஓவர் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இருந்து பும்ரா வெளியேறவில்லை. அவர் இன்னும் நீடிக்கிறார். பும்ராவின் நிலை குறித்து இன்னும் 2 அல்லது 3 நாட் களில் இறுதி முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு கங்குலி கூறி உள்ளார்.

    20 ஓவர் உலகக்கோப்பையில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வருகிற 6-ந்தேதி ஆஸ்திரேலியா புறப்பட்டு செல்கிறார்கள். 13-ந்தேதி வரை இந்திய அணி பெர்த் நகரில் இருக்கும்.

    உலகக்கோப்பை போட்டியின் இந்தியாவின் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் அக்டோபர் 23-ந்தேதி மோதுகிறது. அதற்கு முன்பு 2 பயிற்சி ஆட்டத்தில் ஆடுகிறது. அக்டோபர் 17-ந்தேதி ஆஸ்திரேலியாவுடனும், 19-ந்தேதி நியூசிலாந்துடனும் இந்தியா விளையாடுகிறது.

    • நேற்றைய ஆட்டத்தில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை உண்டாக்கியது.
    • இதுவரை 60 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி உள்ள பும்ரா, 70 விக்கெட்டுகள் கைப்பற்றி உள்ளார்.

    புதுடெல்லி:

    இந்திய அணி வீரர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகியதாக தகவல் வெளியாகி உள்ளது. முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக 4 முதல் 6 மாதங்கள் வரை பும்ரா விளையாட முடியாது என தகவல் வெளியாகி உள்ளது.

    இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணியுடனான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் பவுலிங் மோசமாக இருப்பதாக சமீப காலமாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், நேற்றைய போட்டியில் அதற்கு பதிலடி கொடுக்கப்பட்டது. ஏனென்றால் தென் ஆப்பிரிக்க அணியிடம் 106 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தனர்.

    என்ன தான் இந்திய அணி சிறப்பாக பந்துவீசிய போதும், ஜஸ்பிரித் பும்ரா விளையாடாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை உண்டாக்கியது. இந்த சூழ்நிலையில், அதாவது வரும் அக்டோபர் 6ம் தேதியன்று டி20 உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணி ஆஸ்திரேலியா புறப்படுகிறது. இந்த சமயத்தில் பும்ரா விவகாரத்தில் டி20 உலககோப்பையில் பங்கேற்பாரா என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. இந்த நிலையில், டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து காயம் காரணமாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகியதாக தகவல் வெளியாகியிருக்கிறது. முதுகு வலி காரணமாக அவதிப்பட்டு வரும் பும்ரா, டி20 உலககோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுவரை 60 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி உள்ள பும்ரா, 70 விக்கெட்டுகள் கைப்பற்றி உள்ளார்.

    • டி20 கிரிக்கெட்டில் பும்ராவின் பலமே ரன்களை கொடுக்காமல் கட்டுக்கோப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்துவதுதான்.
    • டி20 கிரிக்கெட்டில் இதுவரை அவர் எந்த போட்டியிலும் நான்கு சிக்சர்களை விட்டுக் கொடுத்தது கிடையாது.

    உலகின் சிறந்த பந்துவீச்சாளராக பார்க்கப்படும் பும்ரா இதுவரை இந்திய அணிக்காக 60 டி20 போட்டிகளில் விளையாடி 70 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    காயத்தால் ஆசிய கோப்பை தொடரில் விளையாடாமல் இருந்த பும்ரா டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் தற்போது நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்று விளையாடினார். இந்த தொடரின் முதல் போட்டியில் ஓய்வில் இருந்த பும்ரா இரண்டாவது போட்டியின் போது அற்புதமாக பந்து வீசி இருந்தார்.

    ஆனால் மூன்றாவது டி20 போட்டியில் அவர் நிறைய ரன்களை விட்டுக் கொடுத்தது அவருடைய பவுலிங் குறைபாட்டை வெளிக்காட்டியது. அதோடு டி20 கிரிக்கெட்டில் பும்ராவின் பலமே ரன்களை கொடுக்காமல் கட்டுக்கோப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்துவதுதான்.

    ஆனால் இதற்கு மாறாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மூன்றாவது டி20 போட்டியில் மோசமான சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். இந்த போட்டியில் பந்து வீசிய அவர் விக்கெட்டை வீழ்த்தாமல் 50 ரன்களை வாரி வழங்கினார். இதுவே டி20 கிரிக்கெட்டில் பும்ராவின் மோசமான சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக 2016-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிராக நான்கு ஓவர்களில் 47 ரன்கள் விட்டுக் கொடுத்திருந்தார்.

    அதன் பின்னர் தற்போது தான் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருக்கிறார். அதோடு டி20 கிரிக்கெட்டில் இதுவரை அவர் எந்த போட்டியிலும் நான்கு சிக்சர்களை விட்டுக் கொடுத்தது கிடையாது. ஆனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இந்த போட்டியில் அவர் நான்கு சிக்சர்களை விட்டுக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஷகீன் ஷா அப்ரிடியை விட பும்ரா ஆஸ்திரேலியாவில் அதிகமாக விளையாடியிருக்கிறார்
    • பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிடி உலக கோப்பைக்கான அணியில் இடம் பெற்றுள்ளார்.

    மெல்போர்ன்:

    20 ஓவர் கிரிக்கெட் உலக கோப்பை போட்டி அடுத்த மாதம் 16-ந்தேதி முதல் நவம்பர் 13-ந்தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இதில் 16 அணிகள் பங்கேற்கின்றன.

    ஒவ்வொரு நாடும் தங்களது அணியை அறிவித்து விட்டன. இந்திய அணிக்கு முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா திரும்பி உள்ளார்.

    அதே போல் காயத்தில் இருந்து குணம் அடைந்த பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிடி உலக கோப்பைக்கான அணியில் இடம் பெற்றுள்ளார்.

    இந்த நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அளித்த பேட்டியின்போது, உலக கோப்பையில் பும்ரா, ஷகீன் ஷா அப்ரிடி இருவரில் யார் சிறப்பாக செயல்படுவார்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.

    அதற்கு அவர் பதிலளித்து கூறும் போது, ஷகீன் ஷா அப்ரிடியை விட பும்ரா முன்னிலையில் உள்ளார் என்று கருதுகிறேன். இதில் அனுபவத்தை வைத்து நான் பதில் கூறுகிறேன். பும்ரா ஆஸ்திரேலியாவில் ஓரளவு கிரிக்கெட் விளையாடி உள்ளார்.

    ஷகீன் ஷா அப்ரிடியை விட பும்ரா ஆஸ்திரேலியாவில் அதிகமாகவும், பெரிய போட்டிகளிலும் விளையாடி உள்ளார். இதனால் உலக கோப்பையில் அப்ரிடியை விட பும்ரா சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன்.

    20 ஓவர் போட்டியில் பும்ரா 58 போட்டியில் 69 விக்கெட்டும், ஷகீன் ஷா அப்ரிடி 40 போட்டியில் 47 விக்கெட்டும் எடுத்து உள்ளனர்.

    இதற்கிடையே இன்று நாக்பூரில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது 20 ஓவர் போட்டியில் பும்ரா களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து சூர்யகுமார் யாதவ் கூறும்போது, போட்டிக்கு பும்ரா தயாராக இருக்கிறார் என்றார்.

    • ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் பும்ரா காயம் காரணமாக விலகி உள்ளார்.
    • ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களமிறங்குகிறது.

    15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வருகிற 27-ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்தப் போட்டிகள் இலங்கையில் நடைபெறவிருந்த நிலையில், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்தொடரில் நடப்பு சாம்பியனான இந்தியா, 7 முறை கோப்பையை வென்ற அணியாக உள்ளது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் ஹர்த்திக் பாண்ட்யா பயிற்சியில் ஈடுபடும் போது பும்ரா போல பந்து வீசி வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

    அந்த இன்ஸ்டாகிராம் பதிவில் "எப்படி இருக்கிறது பூம்?" சிரிக்கும் ஈமோஜியுடன் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் பும்ராவை போல் பந்து வீசுவது போலவும் அதை கொண்டாடுவதும் போலவும் இருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    அவரது செயல் மற்றும் கொண்டாட்டம் இரண்டையும் பும்ரா பாராட்டினார். மேலும் க்ருணால் பாண்ட்யா மற்றும் பொல்லார்ட் இருவரும் வீடியோவிற்கு கமெண்ட் செய்தனர்.


    ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் பும்ரா காயம் காரணமாக விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களமிறங்குகிறது. துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஆகஸ்ட் 28-ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடுகிறது.

    • ஒருநாள் போட்டியில் பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டது.
    • இதில் நியூசிலாந்தின் டிரெண்ட் போல்ட் முதலிடம் பிடித்துள்ளார்.

    துபாய்:

    ஒருநாள் போட்டியில் சிறந்த பந்துவீச்சாளருக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது.

    இதில், பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து வீரர் டிரெண்ட் போல்ட் முதல் இடத்துக்கு முன்னேறினார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 2-ம் இடத்துக்கு தள்ளப்பட்டார். மூன்றாவது இடத்தில் பாகிஸ்தானின் ஷாஹீன் அப்ரிடி உள்ளார்.

    அதேபோல் பேட்டிங் தரவரிசையில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் முதல் இடத்தில் உள்ளார். 4-வது இடத்தில் விராட் கோலியும், 5வது இடத்தில் ரோகித் சர்மாவும் உள்ளனர்.

    ஆல் ரவுண்டருக்கான தரவரிசையில் இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா 8-வது இடத்தில் உள்ளார்.

    • இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் 4 இடங்கள் பின் தங்கி 7 இடத்திற்கு தள்ளப்பட்டார்.
    • முதல் ஒருநாள் போட்டியில் 19 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் பும்ரா முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    ஒருநாள் போட்டியின் சிறந்த பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி பந்து வீச்சாளர்களில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 3 இடங்கள் முன்னேறி முதல் இடத்தை பிடித்தார்.

    இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் 19 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் அவர் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    நியூசிலாந்து அணியை சேர்ந்த போல்ட் 712 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் 681 புள்ளிகளுடன் பாகிஸ்தானை சேர்ந்த அப்ரிடி 3-வது இடத்திலும் உள்ளனர். இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் 4 இடங்கள் பின் தங்கி 7 இடத்திற்கு தள்ளப்பட்டார்.

    • முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
    • இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஓவல்: 

    இங்கிலாந்திற்கு எதிராக ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் ரோகித் சர்மா 5 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 250 சிக்ஸ்ர்கள் குவித்த முதல் இந்தியர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார். இந்த சாதனை படைத்ததில் சர்வதேச அளவில் முதல் இடத்தில் அப்ரிடி (351சிக்ஸர்), இரண்டாவது இடத்தில் கிறிஸ் கெயில் (331சிக்ஸர்), 3வது இடத்தில் ஜெயசூர்யா (270 சிக்ஸர்) உள்ளனர். ரோகித் சர்மாவுக்கு 4வது இடம் கிடைத்துள்ளது.

    நேற்றைய போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதி விரைவாக 150 விக்கெட்களை கைப்பற்றிய இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். மொத்தம் 80 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஷமி 150 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார்.

    இதற்கு முன்னர் இந்திய வீரர் அஜித் அகர்கர் 97 போட்டிகளில் விளையாடி 150 ஒருநாள் விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். சர்வதேச அளவில் அதி விரைவாக 150 விக்கெட்களை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான், ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்ஸ் மற்றும் பாகிஸ்தானின் சக்லைன் முஷ்டாக் ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

    இனிடையே நேற்றைய போட்டியில் 7.2 ஓவர் வீசிய இந்திய வேகபந்து வீச்சாளர் பும்ரா 19 ரன்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றி இருந்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தின் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

    • இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பும்ரா 6 விக்கெட் வீழ்த்தினார்.
    • முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வென்றது.

    ஓவல்:

    இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 25.2 ஓவரில் 110 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கேப்டன் ஜோஸ் பட்லர் 30 ரன்னும், டேவிட் வில்லி 21 ரன்னும்எடுத்தனர். முன்னணி வீரர்களான ஜேசன் ராய், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டோன் ஆகியோர் டக் அவுட்டாகினர்.

    இந்தியா சார்பில் பும்ரா 6 விக்கெட்டும், ஷமி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆடினர்.

    தவான் நிதானமாக ஆட ரோகித் சர்மா அதிரடியில் இறங்கினார். அரை சதம் கடந்த அவர் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார்.

    இறுதியில், இந்தியா 18.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 114 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ரோகித் சர்மா76 ரன்னும், ஷிகர் தவான் 31 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    • முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • கேப்டன் ஜோஸ் பட்லர் அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்தார்.

    ஓவல்:

    இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இந்திய அணியில் காயம் காரணமாக விராட் கோலி விலகினார். அவருக்கு பதிலாக ஷ்ரேயாஸ் அய்யர் அணியில் இடம் பிடித்தார்.

    அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. ஆரம்பம் முதலே இந்திய அணியினர் அசத்தலாக பந்து வீசினர்.

    தொடக்க ஆட்டக்காரரான ஜேசன் ராய், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டோன் ஆகியோர் டக் அவுட்டாகினர்.

    அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஜோஸ் பட்லர் 30 ரன்னும், டேவிட் வில்லி 21 ரன்னும், பிரைடன் கார்சே 15 ரன்னும், மொயீன் அலி 14 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், இங்கிலாந்து அணி 110 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் பும்ரா 6 விக்கெட்டும், ஷமி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ×