search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பும்ரா"

    • லாங் ஆன், லாங் ஆஃப் திசைகளில் ஃபீல்டர்களை பும்ரா நிற்கவைத்திருந்தார்.
    • கடைசி 15 - 20 ஓவர்களில் கூட ஃபீல்டர்களை முன்பு வரவைத்திருந்தால் பேர்ஸ்டோவுக்கு சிரமமாக இருந்து இருக்கும்.

    பர்மிங்கம்:

    இங்கிலாந்து-இந்தியா இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் பர்மிங்கம் மைதானத்தில் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 416 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 284 ரன்கள் சேர்த்தது.

    132 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. இந்திய அணி தனது 2-வது இன்னிங்சில் 245 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து வெற்றிபெற இந்திய அணி 378 ரன்கள் நிர்ணயித்தது.

    இந்த நிலையில் நேற்றைய 4-வது நாள் போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் பும்ரா சரியாக கேப்டன்சி செய்யவில்லை என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது-: பும்ரா தனது யோசனைகளை சரியாகப் பயன்படுத்தவில்லை.

    பேட்ஸ்மேன்களால் சுலபமாக கணிக்க முடியும்படி பந்துவீசிவிட்டனர். அதுமட்டுமின்றி ஃபீல்டிங்கிலும் இந்தியா சரியான வியூகங்களை வகுக்கவில்லை. இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடிய போதும், தொடர்ச்சியாக லாங் ஆன், லாங் ஆஃப் திசைகளில் ஃபீல்டர்களை பும்ரா நிற்கவைத்திருந்தார். அது பெரிய முட்டாள்தனம். கடைசி 15 - 20 ஓவர்களில் கூட ஃபீல்டர்களை முன்பு வரவைத்திருந்தால் பேர்ஸ்டோவுக்கு சிரமமாக இருந்து இருக்கும். அதையும் அவர்கள் செய்யவில்லை.

    இவ்வாறு பீட்டர்சன் தெரிவித்தார்.

    • இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ்-ன் 40 ஆண்டு கால சாதனையை பும்ரா முறியடித்துள்ளார்.
    • இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் கபில் தேவ் 22 விக்கெட்டுகள் எடுத்திருந்தார்.

    இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. நான்கு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 378 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது இந்தியா.

    இரண்டாவது இன்னிங்சை விளையாடி வரும் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 259 ரன்கள் எடுத்துள்ளது. இதில் பும்ரா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ்-ன் 40 ஆண்டு கால சாதனையை பும்ரா முறியடித்துள்ளார்.

    இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய வீரர்கள் பட்டியலில் கபில் தேவ்வை பின்னுக்கு தள்ளி பும்ரா முன்னேறி உள்ளார். 1981-1982-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் கபில் தேவ் 22 விக்கெட்டுகள் எடுத்திருந்தார். அந்த சாதனை தற்போது பும்ரா (23 விக்கெட்டுகள்) முறியத்துள்ளார். அதற்கு அடுத்தப்படியாக புவனேஸ்வர் குமார் உள்ளார். அவர் 2014-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக 19 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதனை தொடர்ந்து ஜாகீர் கான்(2007), இஷாந்த சர்மா(2018) 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

    மேலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா (SENA) ஆகிய நாடுகளில் 100 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த 6-வது இந்திய வீரர் என்ற சாதனையையும் பும்ரா படைத்துள்ளார். இந்திய வீரர்களில் அனில் கும்ளே (141), இஷாந்த் சர்மா (130), ஜாகீர் கான் (119), முகமது சமி (119) கபில் தே (119) ஆகியோர் இந்த பட்டியலில் உள்ளனர்.

    • 5-வது டெஸ்ட்டில் இந்திய அணியின் கேப்டன் பும்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
    • 2014-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக 19 விக்கெட்டுகளை புவனேஸ்வர் குமார் கைப்பற்றினார்.

    இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. நான்கு போட்டிகள் முடிவடைந்த நிலையில் 5-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. 3-ம் நாள் ஆட்டம் முடிவடைந்த நிலையில் 4-வது நாள் ஆட்டம் இன்று 3 மணிக்கு தொடங்கும்.

    3-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்துள்ளது. இந்த டெஸ்ட்டில் இந்திய அணியின் கேப்டன் பும்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய வீரர்கள் பட்டியலில் பும்ரா முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இவர் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதற்கு அடுத்தப்படியாக புவனேஸ்வர் குமார் உள்ளார். அவர் 2014-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக 19 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    3-வது இடத்தில் ஜாகீர் கான்(2007), இஷாந்த சர்மா(2018) 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

    • இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்தியாவின் ரிஷப் பண்ட், ஜடேஜா ஆகியோர் சதமடித்தனர்.
    • இங்கிலாந்துக்கு எதிரான முதல் இன்னிங்சில் இந்தியாவின் பும்ரா 3 விக்கெட் வீழ்த்தினார்.

    பர்மிங்காம்:

    இந்தியா, இங்கிலாந்து மோதும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 84.5 ஓவர்களில் 416 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரிஷப் பண்ட் 146 ரன்களும், ஜடேஜா 104 ரன்களும், பும்ரா 31 ரன்களும் எடுத்தனர்.

    இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டும், மேட்டி பாட்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் லீஸ் 6 ரன்னிலும், ஜாக் கிராலி 9 ரன்னிலும், ஒல்லி போப் 10 ரன்னிலும் வெளியேறினர். இங்கிலாந்து இன்னிங்சின்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது பாதிக்கப்பட்டது.

    அடுத்து இறங்கிய ஜோ ரூட், பேர்ஸ்டோவ் ஜோடி பொறுமையுடன் ஆடியது. ஜோ ரூட் 31 ரன்னில் ஆட்டமிழந்தார், ஜாக் லீச் டக் அவுட்டானார்.

    இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்திருந்தது. பேர்ஸ்டோவ் 12 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதையடுத்து அந்த அணி இந்தியாவை விட 332 ரன்கள் பின்தங்கியுள்ளது.

    இந்தியா சார்பில் பும்ரா 3 விக்கெட்டும், சிராஜ், ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • பும்ரா எப்போதும் தனது பந்து வீச்சில் கவனமாக இருப்பார்.
    • கேப்டனாக இருப்பதை காட்டிலும் பும்ரா ஒரு பந்து வீச்சாளராக எங்களுக்கு அதிகம் தேவை.

    எட்ஜ்பஸ்டன்:

    இங்கிலாந்துக்கு எதிராக நேற்று தொடங்கிய 5-வது டெஸ்டில் இந்திய அணிக்கு கேப்டனாக வேகப்பந்து வீரர் பும்ரா பணியாற்றினார்.

    ரோகித் சர்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அவருக்கு இந்த அதிர்ஷ்டம் கிடைத்தது. கபில்தேவுக்கு பிறகு கேப்டன் பொறுப்பை வகித்த வேகப்பந்து வீரர் என்ற பெருமையை பும்ரா பெற்றார்.

    இந்த நிலையில் வேகப்பந்து வீரரான பும்ரா கேப்டனாக பணியாற்றுவது எளிது அல்ல என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    பும்ரா எப்போதும் தனது பந்து வீச்சில் கவனமாக இருப்பார். ஆட்டத்தின் போக்கை கணிப்பதில் வல்லவர். ஆட்டத்தின் தன்மைக்கு ஏற்றவாறு திறமையுடன் பந்து வீசக்கூடியவர்.

    பும்ரா இதுவரை கேப்டனாக இருந்தது இல்லை. இதனால் புதிய பொறுப்பு அவருக்கு சவாலானதாக இருக்கும். ஆனாலும் நாங்கள் அவருக்கு எங்களது ஆதரவை தொடர்ந்து அளிப்போம்.

    ஒரு வேகப்பந்து வீச்சாளர் கேப்டனாக செயல்படுவது சாதாரணமான காரியம் அல்ல. தனது பந்து வீச்சிலும் கவனம் செலுத்த வேண்டும். கேப்டனாக இருப்பதை காட்டிலும் பும்ரா ஒரு பந்து வீச்சாளராக எங்களுக்கு அதிகம் தேவை.

    இவ்வாறு ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

    • டோனி இந்திய அணியை முதன் முறையாக வழி நடத்துவதற்கு முன்பு எந்த அணிக்கும் கேப்டனாக இருந்ததில்லை என்று என்னிடம் தெரிவித்தார்.
    • கடந்த கால வெற்றிகளை பார்க்க மாட்டோம். ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெறவே விரும்புவோம்.

    பர்மிங்காம்:

    கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்த போது கொரோனா காரணமாக 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தள்ளி வைக்கப்பட்டது.

    இந்த டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஸ்பஸ்டனில் இந்திய நேரடிப்படி இன்று மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது.

    சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி பலம் வாய்ந்து காணப்படுகிறது. இதனால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா தொற்று குணமாகததால் இந்த டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார். இதையடுத்து தற்காலிக கேப்டனாக வேகப்பந்து வீச்சாளரான பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் பும்ரா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    இங்கிலாந்து அணி எப்படி விளையாடுகிறது என்பதில் நான் கவனம் செலுத்தவில்லை. எங்கள் பலம் பற்றி எங்களுக்கு தெரியும். எங்களது பணியை சிறப்பாக செய்தால், எந்த இடத்திலும், எந்த சூழ்நிலையிலும் வெற்றி பெற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

    எனவே எங்கள் அணி மீது அதிக கவனம் செலுத்த விரும்புகிறோம். மற்ற அணி என்ன செய்கிறது என்பதை பற்றி வீரர்களுக்கு மன ரீதியாக அழுத்தம் கொடுக்க விரும்புவில்லை.

    நம் பணியை நன்றாக செய்தால் அதற்கான பலன் நம் இடத்தில் வந்து விழும். சரியான மனநிலையில் எங்களை வெல்வது மிகவும் கடினம்.

    கடந்த கால வெற்றிகளை பார்க்க மாட்டோம். ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெறவே விரும்புவோம். இந்த தருணத்தில் வெற்றி பெற முயற்சிக்கிறோம்.

    அழுத்தம் இருக்கும் போது பெறப்படும் வெற்றி மிகவும் நன்றாக இருக்கும். நான் எப்போதும் பொறுப்புகளுக்கு தயாராக இருக்கிறேன். கடினமான சாவல்களை எதிர்கொள்ள விரும்புகிறேன்.

    நான் பல கிரிக்கெட் வீரர்களிடம் பேசி இருக்கிறேன். டோனியிடம் பேசியது எனக்கு நினைவிருக்கிறது. அவர் இந்திய அணியை முதன் முறையாக வழி நடத்துவதற்கு முன்பு எந்த அணிக்கும் கேப்டனாக இருந்ததில்லை என்று என்னிடம் தெரிவித்தார். தற்போது அவர் எல்லா காலத்திலும் மிகவும் வெற்றி கரமான கேப்டன்களில் ஒருவராக திகழ்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரோகித் சர்மாவுக்கு நேற்று மீண்டும் கொரோனா பரிசோதனை நடைபெற்றது.
    • ரோகித் சர்மா இன்னும் முழுமையாக குணமடையவில்லை.

    பர்மிங்காம்:

    கொரோனா அச்சுறுத்தலால் கடந்த ஆண்டு தள்ளி வைக்கப்பட்ட இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் ஜூலை 1-ம் தேதி தொடங்குகிறது

    இதற்கிடையே, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

    இந்நிலையில் கேப்டன் ரோகித் சர்மா இன்னும் முழுமையாக குணமடையாததால், இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார். அவர் இந்தப் போட்டியிலிருந்து விலகியுள்ளார் என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் இந்திய அணியை வழிநடத்தும் பொறுப்பு வேகப்பந்து வீச்சாளரான பும்ராவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் போட்டியில் பும்ரா தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது.

    28 வயதான பும்ரா இதற்கு முன்பு எந்த அணிக்கும் கேப்டனாக இருந்ததில்லை. மேலும், 1987-ம் ஆண்டு கபில்தேவுக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்தும் வேகப்பந்து வீச்சாளர் என்ற சிறப்பையும் அவர் பெற உள்ளார்.

    • ரோகித் சர்மாவுக்கு இன்று மீண்டும் கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது.
    • பரிசோதனை முடிவு அடிப்படையில் பும்ராவுக்கு கேப்டன் வாய்ப்பு வழங்கப்படும்.

    பர்மிங்காம்:

    கொரோனா அச்சுறுத்தலால் கடந்த ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நாளை இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.

    இந்நிலையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் அவர் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதில் சிக்கில் நீடிக்கிறது.

    இதனிடையே, ரோகித் சர்மாவுக்கு பதில் இந்திய அணியை வேகப்பந்து வீச்சாளரும் துணை கேப்டனுமான பும்ரா வழிநடத்துவார் என்று பிசிசிஐ தகவல்கள் தெரிவித்துள்ளன.

    எனினும் இன்று ரோகித் சர்மாவுக்கு நடத்தப்படும் கொரோனா பரிசோதனையின் முடிவில் அவர் போட்டியில் பங்கேற்பாரா இல்லையா என்பது உறுதிசெய்யப்படும் என பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

    அப்படி வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் கபில்தேவுக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்தும் வேகப்பந்து வீச்சாளர் என்ற சிறப்பையும் பும்ரா பெற உள்ளார்.

    • இந்திய அணி முதல் இன்னிங்சில், 8 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் எடுத்தது.
    • நான்கு இந்திய வீரர்கள் லீசெஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடினார்கள்.

    லீசெஸ்டர்:

    கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி, அந்நாட்டின் லீசெஸ்டர்ஷைர் அணிக்கு எதிராக 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்றது.

    இதில் இந்திய வீரர்கள் ரிஷப்பண்ட், புஜாரா, பும்ரா, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் லீசெஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடினார்கள். முதல் இன்னிங்சில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. அதிபட்சமாக ஸ்ரீகர் பாரத் 70 ரன்கள் குவித்தார்.

    பின்னர் களமிறங்கிய லீசெஸ்டர்ஷைர் அணி 244 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 9 விக்கெட்டுக்கு 364 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

    இதில் முன்னாள் கேப்டன் விராட் கோலி 67 ரன்கள் எடுத்தார். ரவீந்திர ஜடேஜா 56 ரன் அடித்தார். நேற்று நடைபெற்ற கடைசி நாள் ஆட்டத்தில் லீசெஸ்டர்ஷைர் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்திருந்த போது போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி ஜூலை 1 ஆம் தேதி தொடங்குகிறது.

    • பும்ரா வீசிய பந்தில் ரோகித் சர்மா காயமடைந்தார்.
    • பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    இந்திய அணி -லீசெஸ்டயர் அணிக்களுக்கு இடையேயான முதல் பயிற்சி ஆட்டம் இன்று தொடங்கியது. ரிஷப்பண்ட், புஜாரா, பும்ரா, பிரசித் கிருஷ்ணா ஆகிய 4 இந்திய வீரர்கள் லீசெஸ்டயர் அணிக்காக ஆடுகிறார்கள்.

    பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஜோடி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரனான ரோகித் சர்மா இதுவரை பும்ராவுக்கு எதிராக விளையாடியதில்லை என்று கூறலாம்.

    இந்திய அணியிலும் சரி ஐபிஎல் போட்டியிலும் சரி இருவரையும் ஒரே அணியில் பார்த்துவிட்டு தற்போது இந்த பயிற்சி ஆட்டத்தில் எதிரெதிர் அணிகளில் பார்த்தது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

                                                                            பும்ரா வீசிய பந்தில் காயமடைந்த ரோகித் சர்மா 

    பும்ரா வீசிய பந்தில் ரோகித் சர்மா காயமடைந்தார். இதனால் மருத்துவ குழுவினர் வந்து சிகிச்சை அளித்தனர். சிறிது நேரத்தில் ரோகித் சர்மா இயல்பு நிலைக்கு திரும்பி பேட்டிங்கை தொடர்ந்தார்.

    இந்திய அணி உணவு இடைவேளை வரை 5 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 25, சுப்மன் கில் 21, விஹாரி 3, ஸ்ரேயாஸ் அய்யர் 0, ஜடேஜா 11 என வெளியேறினர். விராட் கோலி 9 ரன்னிலும் பரத் 6 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா, உலகின் தலைசிறந்த யார்க்கர் பவுலர் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் புகழாரம் சூட்டியுள்ளார்.
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான வாசிம் அக்ரம் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தற்போதுள்ள சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா யார்க்கர் வீசுவதில் சிறப்பாக உள்ளார். இந்த ஆண்டு நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் பும்ரா கடைசி கட்ட பந்துவீச்சில் பெரிய வித்தியாசத்தையும், தாக்கத்தையும் நிச்சயம் ஏற்படுத்துவார்.

    அவர் மற்ற வேகப்பந்து வீச்சாளர்களிடம் இருந்து வித்தியாசமான ஆக்சனுடன் பந்து வீசுகிறார். பும்ராவின் சிறப்பே அவர் சாதாரணமாக யார்க்கர்களை வீசும் திறமை பெற்று இருப்பதுதான். வக்கார் யூனிஸ்போல் ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டியிலும் யார்க்கர் பந்து வீசுகிறார்.



    ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்றது மிகப்பெரிய சாதனையாகும். பலவீனமான ஆஸ்திரேலிய அணியை பற்றி நான் விவாதிக்க விரும்பவில்லை. உண்மையில் இந்திய அணியினர் முழு திறமையை வெளிப்படுத்தினர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஐ.பி.எல். போட்டியில், மும்பை அணியிடம் 3 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது குறித்து பஞ்சாப் கேப்டன் அஸ்வின், மீண்டும் ஒருமுறை தான் சிறந்த பவுலர் என்பதை பும்ரா நிரூபித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். #IPL2018
    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று மும்பையில் நடந்த ஆட்டத்தில் மும்பை 3 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி 6-வது வெற்றியை பெற்றது.

    முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 186 ரன் எடுத்தது. அடுத்த விளையாடிய பஞ்சாப் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 183 ரன் எடுத்தது. இந்த வெற்றி மூலம் மும்பை பிளே-ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது.

    7-வது தோல்வியை சந்தித்த பஞ்சாப் அணிக்கு பிளே-ஆப் சுற்று வாய்ப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த அணி ரன் ரேட்டில் (-0.490) மோசமாக இருக்கிறது.

    தனது கடைசி லீக் ஆட்டத்தில் (சென்னைக்கு எதிராக) நல்ல ரன் ரேட்டுடன் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். மும்பைக்கு எதிரான தோல்வி குறித்து பஞ்சாப் கேப்டன் அஸ்வின் கூறியதாவது:-


    இலக்கை சேசிங் செய்த போது பேட்டிங் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் கடைசி கட்டத்தில் சரியாக செயல்படவில்லை. மும்பை வீரர் பும்ரா சிறப்பாக பந்து வீசினார். மீண்டும் ஒரு முறை தான் சிறந்த பவுலர் என்பதை நிரூபித்துள்ளார். கடந்த போட்டியில் (பெங்களூருக்கு எதிராக) நாங்கள் மிகவும் மோசமாக விளையாடினோம்.

    அது பற்றி எங்கள் பேட்ஸ்மேன்களிடம் ஆலோசித்தோம். லோகேஷ் ராகுல், ஆரோன் பிஞ்ச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடைசி கட்டத்தில் ராகுல் அவுட் ஆன விதம் சரியா, தவறா  என்று கூறுவது மிகவும் கடினம். அந்த பந்தை அவர் தவறாக அடித்து விட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வெற்றி குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது:-


    முக்கியமான இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியை அளிக்கிறது. எதை எதிர்பார்த்தேனோ அதை வீரர்கள் செய்து முடித்தார்கள். இந்த ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமானது என்பதிலும், அதிகமான ஸ்கோர் குவிக்க முடியும் என்பதும் தெரியும்.

    நாங்கள் மிடில் ஓவரில் தடுமாறிவிட்டோம். பொல்லார்ட் எப்போதுமே எங்கள் அணியின் மேட்ச் வின்னர் தான். கடந்த சில ஆட்டங்களில் அவரை நீக்கிவிட்டு விளையாடினோம். அது எப்பேதும் கடினமான முடிவு தான். 11 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்படாததற்காக அவர் வருத்தப்பட்டார்.

    கடைசி கட்ட ஓவர்களில் டுமினி வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதனால் பொல்லார்டுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்க நினைத்தேன். நெருக்கடியான சூழ்நிலையில் அவர் எப்போதுமே நன்றாக ஆடக்கூடியவர். அதை அவர் சரியாகவே செய்தார். பும்ரா கடந்த இரண்டு வருடங்களாக சிறப்பாக பந்துவீசி வருகிறார். பொறுப்பை எடுத்துக்கொண்டு அவர் அபாரமாக வீசினார்.

    இவ்வாறு அவர் கூறினார். #IPL2018 #MIvKXIP #Ashwin
    ×