search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறைந்தது"

    கடந்த 11 ஆண்டுகளில் ஒப்பிடுகையில் இந்த ஆண்டுதான் காங்கிரசுக்கு 12 சதவீதம் வருமானம் குறைந்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. #Congress
    புதுடெல்லி:

    அரசியல் கட்சிகள் ஆண்டுதோறும் தங்களுக்கு கிடைக்கும் வருமானத்தை தேர்தல் கமி‌ஷனிடம் தாக்கல் செய்வது வழக்கம்.

    அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளின் வரவு-செலவு கணக்கை தணிக்கை செய்யும்.

    அதன்படி 2017-18ம் ஆண்டுக்கான வருமான விவரத்தை காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்து உள்ளது. அதில் 2017-18ம் ஆண்டு ரூ.199 கோடி வருமானம் கிடைத்து இருப்பதாக கூறி உள்ளது.

    காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 11 ஆண்டுகளில் இந்த ஆண்டுதான் வருமானத்தில் சரிவு ஏற்பட்டு உள்ளது. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் காங்கிரசுக்கு 12 சதவீதம் வருமானம் குறைந்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    2001-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சிக்கு அதிக வருமானம் இருந்தது. நாட்டிலேயே அதிக வருமானம் கொண்ட கட்சியாக முதலிடத்தில் காங்கிரஸ் இருந்தது.



    2014-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும் அன்பளிப்புகள் பெருமளவு குறைந்து விட்டது. இதனால் காங்கிரஸ் கட்சி வருமானம் பெறுவதில் மிகவும் பின்தங்கி உள்ளது.

    2017-18ம் ஆண்டு தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைக்கும் அன்பளிப்பு தொகையில் வெறும் ரூ. 5 கோடி மட்டுமே காங்கிரசுக்கு கிடைத்தது. ஆனால் பா.ஜனதா இத்தகைய வருமானத்தில் ரூ.210 கோடி வரை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    காங்கிரசுக்கு கிடைத்து உள்ள வருமானத்தில் கூப்பன்கள் விற்றதன் மூலம் ரூ.110 கோடி கிடைத்து உள்ளது. தலைவர்கள் பங்களிப்பு மூலம் ரூ.32 கோடி வந்துள்ளது.

    வருமானம் குறைந்ததால் சில மாநில கட்சிகளை விட காங்கிரஸ் பின்தங்கி உள்ளது. #Congress

    திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, அரியலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களிலும் பெருமளவு நிலத்தடி நீர் கடந்த ஒரு ஆண்டில் மிகவும் கீழே சென்றுள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது. #Groundwater
    சென்னை:

    தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்தபடி பெய்யவில்லை.

    கஜா புயல் காரணமாக சில மாவட்டங்களில் ஓரளவுக்கு மழை பெய்தது. கடந்த சில ஆண்டுகளாகவே நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து வந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவ மழை போதிய அளவு இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்து உள்ளது.

    தமிழகத்தில் உள்ள 33 மாவட்டங்களில் 20 மாவட்டத்தில் நிலத்தடி நீர் குறைந்து இருக்கிறது. அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 4.32 மீட்டருக்கு நிலத்தடி நீர்மட்டம் கீழே சென்றுள்ளது.

    அங்கு 2017-ம் ஆண்டு 6.74 மீட்டரில் இருந்த நிலத்தடி நீர் மட்டம் 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கணக்கின்படி 11.06 மீட்டரில் நிலத்தடி நீர் சென்று விட்டது.

    இதேபோல் திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, அரியலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களிலும் பெருமளவு நிலத்தடி நீர் கடந்த ஒரு ஆண்டில் மிகவும் கீழே சென்றுள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் குறித்து ஆய்வில் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் சென்னையில் வடகிழக்கு பருவமழை 55 சதவீதம் குறைவாக பெய்து இருக்கிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து இருக்கவே வாய்ப்பு உள்ளது. இதனால் வருகிற கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

    கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் மற்றும் நெல்லை, கோவை, ஈரோடு, மதுரை போன்ற மாவட்டங்களில் மழை பெய்தது. இதனால் அம்மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

    கோவை மாவட்டத்தில் 2017-ம் ஆண்டு 15.59 மீட்டரில் இருந்த நிலத்தடி நீர்மட்டம் 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12.34 மீட்டராக உள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் அதிகபட்சமாக 3.25 மீட்டர் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    இது தொடர்பாக தெற்காசிய நீர் ஆய்வு ஒழுங்கு முறை கூட்டமைப்பு தலைவர் கனகராஜன் கூறியதாவது:-

    நிலத்தடி நீர் மட்டம் உயராததற்கு பருவமழை சரியாக பெய்யாதது காரணமல்ல. நாம் நிலத்தடி நீர் உயர்வதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. 80 சதவீதம் மழை தண்ணீர் நிலத்தடிக்கு செல்லாமல் நிலத்திலேயே சென்று விடுகிறது.



    நீர் நிலைகளில் மழை தண்ணீரை சேமிக்காத வரை நிலத்தடி நீர்மட்டம் உயராது. நமது நீர் நிலைகள் பெரும்பாலும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன.

    இதனால் நிலத்தடி நீர் மட்டம் முற்றிலும் வறண்டு பாலைவனமாகும் நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Groundwater

    சபரிமலையில் நெய் அபிஷேகம் வருமானம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ரூ.20 லட்சம் குறைந்துள்ளது. #Sabarimala
    சபரிமலையில் தினமும் அதிகாலை 3 மணி முதல் பகல் 11 மணி வரை சுவாமி ஐயப்பனுக்கு பக்தர்கள் நெய் அபிஷேகம் செய்யலாம். தாமதமாக வரும் பக்தர்கள் இரவு சன்னிதானத்தில் தங்கியிருந்து மறுநாள் நெய் அபிஷேகம் செய்வார்கள்.

    தற்போது சன்னிதானத்தில் இரவு பக்தர்கள் தங்க தடை விதிக்கப்பட்டு உள்ளதால் பல பக்தர்களால் நெய் அபிஷேகம் செய்ய முடியவில்லை. இதன் மூலம் கிடைக்கும் வருமானமும் குறைந்து விட்டது. கடந்த ஆண்டு நடை திறந்த 16 நாளில் நெய் அபிஷேகம் மூலம் ரூ.41 லட்சத்து 48 ஆயிரம் வருமானம் கிடைத்தது. இந்த ஆண்டு நெய் அபிஷேக வருமானம் ரூ.21 லட்சத்து 48 ஆயிரம் மட்டுமே கிடைத்துள்ளது. இதன் மூலம் ரூ.20 லட்சம் வருமானம் குறைந்துள்ளது. #Sabarimala

    சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 440 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,930-க்கு விற்கிறது. #Goldprice
    சென்னை:

    சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 440 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,930-க்கு விற்கிறது.

    வெள்ளி ஒரு கிலோ ரூ.40 ஆயிரத்து 300 ஆகவும், ஒரு கிராம் ரூ.40.30 ஆகவும் உள்ளது. #Goldprice
    சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கருப்பு பண பதுக்கல் குறைந்து உள்ளதாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய நிதி மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்தார். #SwissBank #IndianDeposit #PiyushGoyal
    புதுடெல்லி:

    மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு, கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் 26-ந் தேதி பதவிக்கு வந்தது. அந்த காலகட்டம் முதல் வெளிநாடுகளில் இந்திய கருப்பு பண முதலைகளால் பதுக்கிவைக்கப்பட்டு உள்ள கருப்பு பணத்தை இந்தியாவில் கொண்டு வந்து சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.



    ஆனால் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கருப்பு பண பதுக்கல் 3 ஆண்டுகளாக குறைந்து வந்ததாகவும், கடந்த 2017-ம் ஆண்டில் கருப்பு பணத்துக்கு எதிரான மத்திய அரசின் கடும் நடவடிக்கைகளுக்கு மத்தியிலும், இந்தியர்களின் கருப்பு பண பதுக்கல் 50 சதவீதம் உயர்ந்து 1.01 பில்லியன் சுவிஸ் பிராங்க் (சுமார் ரூ.7 ஆயிரம் கோடி) ஆகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இது சுவிஸ் தேசிய வங்கியின் புள்ளிவிவரங்கள் என கூறப்பட்டது.

    இந்த புள்ளி விவரங்கள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

    இது தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய நிதி மந்திரி பியூஸ் கோயல் நேற்று கேள்வி நேரத்தின்போது விளக்கம் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கருப்பு பண பதுக்கல் 50 சதவீதம் உயர்ந்து உள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து சுவிஸ் அதிகாரிகளிடம் நான் விவாதித்தேன்.

    இதில், சுவிஸ் தேசிய வங்கியின் புள்ளிவிவரங்கள் சரியாக புரிந்து கொள்ளப்படாமல் தவறாக வழிநடத்துகிற தலைப்புகளுடன், ஆய்வுடன் வெளியிடப்படுகின்றன என்று சுவிஸ் அதிகாரிகள் கூறினர். இது தவறானது என்றும் சுவிஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்.

    சுவிஸ் வங்கிகளில் டெபாசிட் செய்கிற கருப்பு பணத்தை பொறுத்தவரையில், மிகவும் நம்பத்தகுந்த தகவல்கள் என்றால், அவை சர்வதேச செட்டில்மென்டுகள் வங்கியின் (பிஐஎஸ்) உள்ளூர் வங்கியியல் புள்ளிவிவரம் தான் என்று சுவிஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்.

    அதன்படி 2013-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையில் கருப்பு பண பதுக்கல் 80 சதவீதம் குறைந்து உள்ளது.

    2013-ம் ஆண்டு கருப்பு பண டெபாசிட் 2.6 பில்லியன் டாலர் (சுமார் ரூ.17,680 கோடி). 2014-ம் ஆண்டு இது 2.3 பில்லியன் டாலர் (சுமார் ரூ.15,640 கோடி). 2015-ம் ஆண்டு இது 1.4 பில்லியன் டாலர் (சுமார் ரூ.9,520 கோடி).

    கடந்த 2017-ம் ஆண்டில் மட்டும் இது 34.5 சதவீதம் சரிவு கண்டு உள்ளது. 2016-ம் ஆண்டு கருப்பு பண டெபாசிட்டுகளின் அளவு 800 மில்லியன் டாலர் (சுமார் ரூ.5,440 கோடி) ஆகும். இது 2017-ல் 524 மில்லியன் டாலராக (சுமார் ரூ.3,563 கோடி) குறைந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது தொடர்பாக நாடாளுமன்றத்துக்கு வெளியே பியூஸ் கோயல் பேட்டி அளித்தார். அப்போது சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கருப்பு பண பதுக்கல் அதிகரித்து இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாடியது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், ஆதாரம் இல்லாத தகவல்களின் அடிப்படையில் இப்படிப்பட்ட கருத்தை கூறி நாட்டுக்கு அவதூறு ஏற்படுத்துவது பற்றி ராகுல் காந்திதான் நாட்டுக்கு பதில் கூற வேண்டும்.

    அவர் உண்மைகளை அறிந்து கொள்ளாமலேயே இப்படி சொல்வதை வழக்கமாக்கி கொண்டு உள்ளார்.

    சுவிஸ் அதிகாரிகள் தந்த தகவல்கள்படி, 2016-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017-ம் ஆண்டு சுவிஸ் வங்கிகளில் கருப்பு பண டெபாசிட்டுகள் 34.5 சதவீதம் குறைந்து உள்ளது. 2017-ம் ஆண்டின் கடைசி காலாண்டில் (அக்டோபர்-டிசம்பர் 2017) 44 சதவீதம் குறைந்து உள்ளது. இது சர்வதேச செட்டில்மென்டுகள் வங்கியின் (பிஐஎஸ்) உள்ளூர் வங்கியியல் புள்ளிவிவரம் ஆகும்.

    இது மத்தியில் அமைந்து உள்ள மோடி அரசின் மீது மக்கள் கொண்டு உள்ள அச்சத்தை பிரதிபலிக்கிறது. கருப்பு பணம் பதுக்குகிறவர்கள் மீது மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #SwissBank #IndianDeposit #PiyushGoyal #Tamilnews
    நம்பியாற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதையடுத்து திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடை இன்று நீக்கப்பட்டது.
    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழை கடந்த 2 நாட்களாக வலுவடைந்தது. இதையொட்டி அருவி மற்றும் நீரோடைகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    களக்காடு தடுப்பணையே தெரியாதவாறு, தடுப்பணையை மூழ்கடித்தப்படி காட்டாற்று வெள்ளம் பாய்ந்தோடியது. ஆற்றுக்கு இறங்கி செல்லும் முதல்படி வரை வெள்ளம் கரை புரண்டது. இதுபோல திருக்குறுங்குடி நம்பியாற்றிலும் காட்டாற்று வெள்ளம் பாய்ந்தோடியது. சப்பாத்தில் உள்ள பாலத்தை வெள்ளம் மூழ்கடித்ததால் கடந்த 9-ந் தேதி திருமலை நம்பி கோயிலுக்கு சென்ற நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரும்பி வர முடியாமல் தவித்தனர். அவர்களை தீ அணைப்பு வீரர்கள் மற்றும் வனத்துறை, போலீசார் கயிறு கட்டி மீட்டனர்.

    இதனைதொடர்ந்து சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி களக்காடு புலிகள் காப்பகத்தை மூட, களக்காடு புலிகள் காப்பக கள இயக்குனர் மற்றும் தலைமை வன பாதுகாவலர் அன்வர்தீன் ஆலோசனையின் பேரில், களக்காடு துணை இயக்குனரும், வன உயிரின காப்பாளருமான ஆரோக்கியராஜ் சேவியர் உத்தரவிட்டார்.

    எனவே 10-ந் தேதி புலிகள் காப்பகம் மூடப்பட்டது. இதையடுத்து தலையணை மற்றும் திருக்குறுங்குடி நம்பி கோயில் நுழைவு வாயில்கள் மூடப்பட்டு, அங்கு வனசரகர் புகழேந்தி தலைமையில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இந்நிலையில் நம்பியாற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதையடுத்து திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடை இன்று நீக்கப்பட்டது. இதனால் நம்பிகோவிலுக்கு பக்தர்கள் செல்லத்தொடங்கினர்.

    இந்நிலையில் களக்காடு தலையணையில் வெள்ளபெருக்கு குறையாததால் அங்கு செல்ல விதிக்கப்பட்ட தடை 5-வது நாளாக இன்றும் தடை நீடிக்கிறது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்று 2 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து மேலும் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து ஒவ்வொரு நாளும் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வந்தது. கடந்த ஒரு வாரமாக நீர்வரத்து அதிகரித்த வண்ணம் வந்தது.

    30-ந் தேதி வினாடிக்கு 5ஆயிரத்து 60 கனஅடியாக வந்த நீர்வரத்து நேற்று முன்தினம் 5ஆயிரத்து 429 கனஅடியாக அதிகரித்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தற்போது மழை குறைந்து உள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தும் நேற்று முதல் சரிந்து வருகிறது.

    நேற்று காலை 4 ஆயிரத்து 18 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 2 ஆயிரத்து 628 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    நீர்திறப்பை காட்டிலும் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் 36.72 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று 37.33 அடியாக உயர்ந்தது. இன்று காலை இது 37.69 அடியாக உயர்ந்து உள்ளது.

    இதேபோல் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் 2 ஆயிரத்து 800 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 2 ஆயிரம் கனஅடியாக குறைந்து உள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து மேலும் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

    குற்றால அருவிகளில் குறைவாக தண்ணீர் விழுவதால் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது
    தென்காசி:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் போது குற்றாலத்தில் சீசன் தொடங்கும். இதை தொடர்ந்த ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட்டு மாதங்களில் குற்றால அருவிகளில் தண்ணீர் நன்றாக விழும்.

    குற்றால சீசனையொட்டி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஏராளமானவர்கள் வருவார்கள். நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்குவதற்கு முன்பாகவே சீசனுக்கான அறிகுறி காணப்பட்டது. கடந்த வாரம் சாரல் மழை விட்டு, விட்டு பெய்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவியில் தண்ணீர் மிதமாக விழுந்தது.

    மேலும் கேரளாவில் தென்மேற்கு பருவ மழை பெய்ததால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

    குற்றாலத்தில் சீசன் களை கட்ட தொடங்கி பிரதான அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவியில் தண்ணீர் விழ தொடங்கியதை அறிந்த சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு படையெடுத்து வந்தனர். அருவிகளில் தண்ணீர் விழத்தொடங்கியதால் சீசன் தொடங்கி விட்டதாக சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்யவில்லை. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர்வரத்து குறைந்து காணப்படுகிறது. இன்று காலை குற்றாலத்தில் குறைவாக தண்ணீர் விழுந்தாலும் இதமான தட்பவெப்பநிலை காணப்படுகிறது. இதையடுத்து சுற்றுலாப்பயணிகளின் கூட்டமும் அதிகமாகவே காணப்படுகிறது.


    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஆயிரம் கன அடியாக குறைந்தது. நீர்வரத்தை விட நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.
    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    நேற்று முன்தினம் அதிகபட்சமாக 1970 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் மழை குறைந்ததால் நேற்று மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் வரத்து 1577 கன அடியாக குறைந்தது.

    இன்று இது மேலும் குறைந்து ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக நேற்று மாலை முதல்நீர் திறப்பு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் 2 நாட்களாக படிப்படியாக உயர்ந்து வந்த நீர்மட்டம் தற்போது மீண்டும் குறையத் தொடங்கி உள்ளது.

    நேற்று முன்தினம் 35.03 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்றுகாலை 35.21 அடியாக உயர்ந்தது. இன்று காலை இது 35.13 அடியாக குறைந்துள்ளது.

    நீர்வரத்தை விட நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.

    ×