search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேராசிரியர்கள்"

    • அலுவலக பணியாளர்கள், நடத்துனர், ஓட்டுநர் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
    • 1000-க்கும் மேற்பட்ட அனைத்து துறை மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    தஞ்சாவூர்:

    கும்பகோணம், இதயா மகளிர் கல்லூரி, பெண்கள் பாசறை மற்றும் வாசன் கண் மருத்துவமனை, கும்பகோணம் சார்பாக இதயா மகளிர் கல்லூரியில் உள்ள மாணவிகள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், நடத்துனர், ஓட்டுநர் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

    இந்நிகழ்வை கல்லூரி யின் முதல்வர் அருட்சகோதரி முனைவர். யூஜின் அமலா தொடங்கி வைத்தார். கணினிஅறிவியல் துறை தலைவர் மற்றும் பெண்கள் பாசறை ஒருங்கிணை ப்பாளர் முனைவர்.சி.பிரமிளா ரோசி, கணினி அறிவியல் துறை பேராசிரியர் முனைவர் கே. புவனேஸ்வரி மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் 1000-க்கும் மேற்பட்ட அனைத்து துறை மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த 2 பேராசிரியர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    ஊட்டி:

    தமிழகத்தில் உள்ள 8 மண்டலங்களில் 241 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் உள்ளன. இங்கு 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    அரசு கல்லூரிகளில் போலி பேராசிரியர்கள் பணியாற்றுவதாக உயர் கல்விதுறைக்கு தொடர்ச்சியாக புகார் சென்றது. புகாரின் அடிப்படையில் அனைத்து அரசு கல்லூரிகளிலும் பணியாற்றும் பேராசிரியர்களின் பணி பதிவேடு, சான்றிதழ் உண்மை தன்மை சரிபார்க்க உத்தரவிடப்பட்டது.

    மண்டல கல்லூரி கல்வி இயக்குனர் தலைமையிலான அதிகாரிகள் இதனை ஆய்வு செய்தனர். அப்போது நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் தாவரவியல் துறையில் பணியாற்றும் பேராசிரியராக பணியாற்றும் நாகேந்திரன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முனைவர் பட்டம் முடித்ததாக போலி சான்றிதழ் சமர்ப்பித்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனையடுத்து கல்லூரி கல்வி இயக்குனர் அறிவுறுத்தலின் பேரில் போலி சான்றிதழ் சமர்ப்பித்த 2 பேராசிரியர்கள் மீது ஊட்டி அரசு கலை கல்லூரி முதல்வர் மூர்த்தி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஏற்கனவே கடந்த ஆண்டு ஊட்டி அரசு கல்லூரியில் 3 பேர் வடமாநில பல்கலைக்கழக போலி சான்றிதழ்களை கொடுத்து பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் 3 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில் மீண்டும் 2 பேர் சிக்கி உள்ளனர். #OotyGovtArtsCollege
    அண்ணா பல்கலைக்கழகத்தில் மறுகூட்டல் மதிப்பெண் முறைகேடு தொடர்பாக பேராசிரியர்களிடம் விசாரணை நடத்துவதற்காக லஞ்ச ஒழிப்பு போலீசார் 600 கேள்விகள் தயாரித்து வைத்துள்ளனர். #AnnaUniversity
    சென்னை:

    அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு மறு கூட்டல் மதிப்பெண் முறைகேடு பற்றி லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    மாணவர்களிடம் ரூ.10 ஆயிரம் வரை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் போட்டும், தோல்வி அடைந்த மாணவர்களை தேர்ச்சி பெறச் செய்தும் முறைகேடு நடந்துள்ளது.

    இதுதொடர்பாக பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு முன்னாள் அதிகாரி உமா, பேராசிரியர்கள் ஆர்.சிவகுமார், பி.விஜயகுமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 3 பேரும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.


    ஆயிரக்கணக்கான மாணவர்களிடம் பல கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக லஞ்சஒழிப்பு விசாரணையில் தெரியவந்துள்ளது. பேராசிரியர்கள் சிவகுமார், விஜயகுமார் இருவருமே திண்டிவனம் என்ஜினீயரிங் கல்லூரியில் பணியாற்றினர்.

    மதிப்பெண் மறுகூட்டலுக்கான மண்டல அதிகாரியாக சிவகுமாரும், ஒருங்கிணைப்பாளராக விஜயகுமாரும் நியமிக்கப்பட்டு இருந்தனர். இவர்கள்தான் மதிப்பெண் மறுகூட்டலுக்கான தேர்வர்களை நியமித்துள்ளனர். தங்களிடம் மறுகூட்டலுக்கு வரும் விண்ணப்பங்களை தேர்வர்களுக்கு அனுப்பி அதிக மதிப்பெண் போடச் செய்துள்ளனர்.

    தற்போது இதுதொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. எந்த வகையில் எப்படியெல்லாம் முறைகேடு நடந்தது என்பது பற்றி லஞ்ச ஒழிப்பு போலீசார் பேராசிரியர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    இதற்காக லஞ்ச ஒழிப்பு போலீசார் 600 கேள்விகள் தயாரித்து வைத்துள்ளனர். இந்த கேள்விகளை வைத்து நேற்று முன்தினம் முதல் விசாரணையை தொடங்கி உள்ளனர். முதல்கட்டமாக 2 பேராசிரியர்களிடமும் விசாரணை நடத்துகிறார்கள். அடுத்தக்கட்டமாக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக பணிபுரிந்த உமாவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    2 பேராசிரியர்களும் விசாரணை அதிகாரிகளிடம் அளிக்கும் தகவலை வைத்து அதிகாரி உமாவிடம் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். அவர்களது பதில்களை ஒப்பிட்டு அடுத்தக்கட்ட விசாரணை நடத்தப்படும் என்று லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ×