search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 135996"

    நேபாளத்தில் கடும் குளிரில் இருந்து தற்காத்துக்கொள்ள குடிசைக்குள் மூட்டிய நெருப்பின் புகை மூட்டத்தால் மூச்சு திணறி தூக்கத்திலேயே பெண்ணும் 2 மகன்களும் இறந்தனர். #Mentruationhut
    காட்மாண்டு:

    நேபாளத்தில், மாதவிலக்கு காலத்தில் பெண்களை வீட்டில் இருந்து வெளியேற்றி கால்நடை கொட்டகை அல்லது தனிமைப்படுத்தப்பட்ட குடிசையில் தங்க வைக்கும் பழக்கம் நீண்ட காலமாக இருந்து வந்தது.

    தீண்டாமையின் மற்றொரு வடிவமாக பார்க்கப்படும் இந்த செயலை குற்றம் என அறிவித்து, இது தொடர்பாக தனி சட்டத்தை கடந்த 2017-ம் ஆண்டு நேபாள அரசு இயற்றியது. எனினும் நேபாளத்தில் பல கிராமங்களில் இன்னும் இந்த பழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில், பஜூரா மாவட்டத்தை சேர்ந்த ஆம்பா போஹரா (வயது 35) என்கிற பெண்ணுக்கு மாதவிலக்கு காலம் என்பதால் அவர் வீட்டில் இருந்து ஒதுக்கிவைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட குடிசையில் தங்க வைக்கப்பட்டார். அவரது 2 மகன்களும் அவருடன் தங்கி இருந்தனர்.

    இந்தநிலையில் குடிசையில் அவர்கள் 3 பேரும் பிணமாக கிடந்தனர். கடும் குளிரில் இருந்து தற்காத்துக்கொள்ள குடிசைக்குள் நெருப்பு மூட்டியதாகவும், அதனால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் மூச்சு திணறி தூக்கத்திலேயே 3 பேரும் இறந்ததாகவும் கூறப்படுகிறது.  #Mentruationhut
    பெங்களூரில் சொத்துக்காக கணவரை கொலை செய்ய திட்டமிட்ட மனைவி மற்றும் 2 மகன்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    பெங்களூரு எச்.ஏ.எல். பகுதிக்குட்பட்ட காளப்பா லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரா(48). இவரது மனைவி முனிரத்தினம்மா(45). இவர்களுக்கு சேதன்(20), அபிஷேக்(19) என்ற இரு மகன்கள் உள்ளனர். ராமச்சந்திரா, சரக்கு வேன் டிரைவர் ஆவார்.

    இந்த நிலையில், பெங்களூரு அருகே கித்தேகானஹள்ளி என்ற இடத்தில், ராமச்சந்திரா 8 வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டார். இந்த சொத்தை, மனைவி முனிரத்தினம்மா தங்களுக்கு தருமாறு கணவரிடம் கேட்டார்.

    இதுதொடர்பாக கணவன்-மனைவியிடையே பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து, முனி ரத்தினம்மா கோபித்துக் கொண்டு, தனது 2 மகன்களையும் அழைத்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். அத்துடன் சொத்துக்காக, நீதிமன்றத்தில் வழக்கும் போட்டார்.

    கடந்த 5-ந் தேதி இரவு, சில மர்ம நபர்கள், ராமச்சந்திராவை தொடர்பு கொண்டு, வாடகைக்கு வேன் வேண்டும் என்றும், எச்.ஏ.எல். கேட் அருகே வருமாறும் கூறினார்கள். இதையடுத்து அங்கு சென்ற ராமச்சந்திராவின் கை, கால்களை கட்டிப்போட்டும், தடி மற்றும் இரும்பு கம்பியால் தாக்கியும் வேனில் கொண்டு சென்றனர்.

    பின்னர், கித்தேகானஹள்ளியில் உள்ள ஒரு வீட்டில் அவரை அடைத்து வைத்து சொத்தை முனிரத்திம்மாவின் பெயரில் எழுதி தருமாறு கொலை மிரட்டல் விடுத்து, சித்ரவதை செய்தனர்.

    நேற்று முன்தினம் இரவு, ராமச்சந்திராவின் கதறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்ற ஒருவர், ராமச்சந்திரா அடைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு விரைந்து வந்த எச்.ஏ.எல். போலீசார், ராமச்சந்திராவை மீட்டனர். மேலும் அவர் தன்னை கொலை செய்ய திட்டமிட்டதாக புகார் அளித்ததன்பேரில், மனைவி முனிரத்தினம்மா மற்றும் 2 மகன்கள், உறவினர் சிவகுமார்(42) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

    இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
    தன்னை வீட்டை விட்டு துரத்தி விட்டதாக மகன்கள் மீது மறைந்த மத்திய மந்திரி அர்ஜூன் சிங் மனைவி சரோஜ் குமாரி கோர்ட்டில் வழக்கு தொடுத்து உள்ளார். #ArjunSingh #SarojKumari
    போபால்:

    மத்திய பிரதேச மாநில முதல்-மந்திரியாகவும், மத்திய மந்திரியாகவும் இருந்தவர் மறைந்த அர்ஜூன் சிங். இவரது மனைவி சரோஜ் குமாரி (வயது 87). இவருக்கு மத்திய பிரதேச சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அஜய் சிங் மற்றும் அபிமன்யு சிங் என 2 மகன்கள்.

    இவர்கள் மீது போபால் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ், சரோஜ் குமாரி ஒரு வழக்கு தொடுத்து உள்ளார்.



    அதில் அவர் தன்னை தனது மகன்கள் வீட்டை விட்டு துரத்தி விட்டதாக வேதனையுடன் குறிப்பிட்டு உள்ளார்.

    வயதான நிலையிலும் தனது மகள் வீணா சிங், வெளிநாடு வாழ் தொழில் அதிபர் சாம் வர்மா ஆகியோருடன் கோர்ட்டுக்கு வந்து இந்த வழக்கை சரோஜ் குமாரி தாக்கல் செய்து உள்ளார்.

    வழக்கில் அவர், “எனது மகன்கள் அபிமன்யு சிங், அஜய் சிங் ஆகியோர் என்னை என் சொந்த வீட்டில் இருந்து துரத்தி விட்டனர். என்னை பராமரிக்கவும் மறுத்து விட்டனர். எனவேதான் கோர்ட்டின் உதவியை நாடி உள்ளேன்” என்று கூறி உள்ளார்.

    இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற மாஜிஸ்திரேட்டு, இது குறித்து பதில் அளிக்க அஜய் சிங்குக்கும், அபிமன்யு சிங்குக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

    வழக்கின் அடுத்தகட்ட விசாரணை, அடுத்த மாதம் 19-ந் தேதிக்கு ஒத்தி போடப்பட்டு உள்ளது. #ArjunSingh #SarojKumari  #tamilnews
    தாயின் ஓய்வூதியத்தை பெறும் ஆசையில், 4 மாதங்களாக இறந்த தாயின் உடலை அடக்கம் செய்யாமல், வீட்டிலேயே பதப்படுத்தி வைத்திருந்த மகன்களை பற்றி செய்தி தற்போது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. #MotherDeath #Pension
    வாரணாசி:

    உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பேலுபூர் பகுதியைச் சேர்ந்தவர் அமராவதி தேவி. சுங்கத்துறை சூப்பிரண்டாக பணியாற்றி வந்த இவருடைய கணவர், சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதையடுத்து, அமராவதி தேவி, ரூ.40 ஆயிரம் மாத ஓய்வூதியமாக பெற்று வந்தார். அவருக்கு 5 மகன்கள் உள்ளனர்.

    இந்நிலையில், அமராவதி தேவி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால், பக்கத்து வீட்டுக்காரர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் அந்த வீட்டை சோதனையிட்டபோது, ஒரு அறையில் அமராவதியின் உடல் பதப்படுத்தி வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். அவரது கை பெருவிரலில் மை கறையும் இருந்தது.

    அமராவதி தேவி, கடந்த ஜனவரி 13-ந் தேதியே இறந்து விட்டதும், அவரது விரல் ரேகையை பயன்படுத்தி, அவரது ஓய்வூதியத்தை பெறும் ஆசையில், 5 மகன்களும் அவரது உடலை அடக்கம் செய்யாமல், வீட்டிலேயே பதப்படுத்தி வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    அமராவதி தேவி உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.   #MotherDeath #Pension
    ×