search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 136067"

    • சந்தோஷ் என்பவர் மாணவிக்கு தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
    • மாணவியின் பெற்றோர் வாலிபர் வேலை செய்யும் இடத்திற்கு சென்று தாக்கியுள்ளனர்.

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் சந்தைமேடு பகுதியை சேர்ந்த ஒருவரின் மகள் அதே பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    மாணவி தினமும் பள்ளிக்கு செல்லும் போது அதே பகுதியில் உள்ள தனியார் பேக்கரியில் பணியாற்றும் தீர்த்தம் கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர் மாணவிக்கு தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனை மாணவி தன்னுடைய தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

    இதனையடுத்து மாணவியின் பெற்றோர் வாலிபர் பேக்கரியில் வேலை செய்யும் இடத்திற்கு சென்று சந்தோஷை தாக்கியுள்ளனர். பின்னர் வேப்பங்குப்பம் போலீசில் புகார் செய்தனர்.

    வேலை செய்யும் இடத்திற்கு வந்து தன்னை தாக்கியதாக ஆத்திரமடைந்த சந்தோஷ் அவரது சகோதரர் திருநாவுக்கரசு மற்றும் நண்பர்கள் மணி, தரணி ஆகியோருடன் சேர்ந்து மாணவியின் வீட்டிற்குள் புகுந்து கட்டைகளால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    இதனால் பலத்த காயமுற்ற மாணவியின் குடும்பத்தினரை அருகில் இருந்தவர்கள் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    மேலும் இது குறித்து பள்ளி மாணவியின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். வாலிபரின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் மாணவியின் தந்தை உட்பட 3 பேரின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்நிலையில் மாணவிக்கு தொல்லை கொடுத்த வாலிபரையும் வீடு புகுந்து தாக்கியவர்களையும் கைது செய்ய கோரி மாணவியின் உறவினர்கள் ஒடுகத்தூர் பஸ் நிலையத்தில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது பெண்கள் 3 பேர் திடீரென தீக்குளிக்க முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. 

    • அவனியாபுரத்தில் 9-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • மாணவி தற்கொலை குறித்து வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை அவனியாபுரம் எம்.எம்.சி. காலனி ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் வழி விட்டான். இவரது மனைவி மீனாம்பாள். இவரது மகள் மீனாட்சி (வயது 14). இவர் அங்கு உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    மீனாட்சிக்கு படிப்பில் ஆர்வம் இல்லை என்று கூறப்படுகிறது. இருந்த போதிலும் அவரை பெற்றோர் படிக்கச் சொல்லி கட்டாயப்படு த்தியதாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த மீனாட்சி தனது உட லில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார். அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி மாணவி மீனாட்சி பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மாணவி தற்கொலை குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 9-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் அவனியாபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • எர்ணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி யில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 28-ந் தேதி அன்று பள்ளி விடுமுறை என்பதால் சசிரேகாவும், சஷீந்தரனும் வீட்டில் இருந்துள்ளனர்.
    • கோபியும் அவரது மனைவி கலைமதியும் வேலைக்கு சென்று விட்டனர். மாலையில் வேலை முடித்து திரும்பியபோது, வீட்டில் சசிரேகாவை காணவில்லை.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா

    நடந்தை அருகே சுங்கக்கா ரன்பட்டி பகுதியை சேர்ந்த

    வர் கோபி (வயது 38). இவரது மனைவி கலைமதி(33). இவர்கள் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு சசிரேகா(14) என்ற மகளும், சஷீந்திரன்( 8 ) என்ற மகனும் உள்ளனர்.

    சசிரேகா எர்ணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி யில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 28-ந் தேதி அன்று பள்ளி விடுமுறை என்பதால் சசிரேகாவும், சஷீந்தரனும் வீட்டில் இருந்துள்ளனர். கோபியும் அவரது மனைவி கலைமதியும் வேலைக்கு சென்று விட்டனர். மாலையில் வேலை முடித்து திரும்பியபோது, வீட்டில் சசிரேகாவை காணவில்லை.

    இது குறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரித்த போது, பகல் 11 மணியளவில் சசிரேகா ஜெராக்ஸ் எடுத்து வருவ தாக கூறிவிட்டு சென்றது தெரியவந்தது. ஆனால் அவர் இரவு வெகு நேர

    மாகியும் வீட்டிற்கு வர வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இது குறித்து நல்லூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பே

    ரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, சிறுமி மாய மானது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்.

    • மாணவி உள்பட 3 பேர் மாயமாகி உள்ளனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே அல்லம்பட்டியை சேர்ந்தவர் சின்னபாண்டியம்மாள்(40),கூலித்தொழிலாளி. இவரது மகள் பிளஸ்-2 படித்து வருகிறார். அவர் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதனை கண்டித்த சின்னபாண்டியம்மாள் செல்போனை பிடுங்கி வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று சின்னபாண்டியம்மாள் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவரது மகள் வீட்டில் இல்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து சின்னபாண்டியம்மாள் அளித்த புகாரின்பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சாத்தூர் சிதம்பரம் நகரை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மாவுமில் நடத்தி வருகிறார். இவரது மகன் சந்தோஷ்(23). கேட்டரிங் படித்துவிட்டு வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று கல்லாபெட்டியில் இருந்து ஜெயராஜூக்கு தெரியாமல் ரூ.500-ஐ சந்தோஷ் எடுத்துள்ளார். இதனை ஜெயராஜ் கண்டித்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு தெரியாமல் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு சந்தோஷ் வெளியே சென்றார்.

    அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து ஜெயராஜ் அளித்த புகாரின்பேரில் சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரியாபட்டி அருகே உள்ள திம்மாபுரம் காலனியை சேர்ந்தவர் சீனி.இவரது மகன் நாகராஜ்(24),கட்டிட தொழிலாளி.கோவையில் வேலைபார்த்து வந்தார். இந்த நிலையில் நாகராஜை ஊருக்கு வரும்படி சீனி அழைத்துள்ளார். ஊருக்கு வந்த நாகராஜ் சில நாட்கள் வீட்டில் இருந்தார். பின்னர் மீண்டும் வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் மாயமானார். இதுகுறித்து சீனி அளித்த புகாரின்பேரில் ஏ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


    • மாணவியின் பெற்றோர் நாகா்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
    • போலீசார் அபிஷேக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் (வயது 22). இவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு பாலி டெக்னிக் கல்லூரியில் படித்த போது, சக மாணவி ஒருவரிடம் நெருங்கி பழகி உள்ளார்.

    இந்த நிலையில் மாணவி யிடம் நைசாக பேசிய அபிஷேக், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலாத்காரம் செய்து உள்ளார். மேலும் அதனை வீடியோவாகவும் எடுத்து மாணவியை அடிக்கடி மிரட்டி உள்ளார்.

    இதுகுறித்து மாணவி யின் பெற்றோர் நாகா்கோ வில் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் அபிஷேக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    ஆனால் அபிஷேக், துபாய் நாட்டுக்கு தப்பிச் சென்று விட்டார். அவரை பிடிக்க போலீசார் நட வடிக்கை எடுத்து வந்த னர். இந்த நிலையில் 2½ ஆண்டுகளுக்கு பிறகு அபிஷேக் துபாயில் இருந்து ஊருக்கு வருவதாக நாகர்கோவில் மகளிர் போலீ சாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்று அபிஷேக்கை கைது செய்தனர்.

    அப்போது அவர் தனக்கு நெஞ்சு வலிப்ப தாக கூறியதால், ஆசாரி ப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்ப ட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் சிகிச்சை நிறைவடைந்ததை தொடர்ந்து, அபிஷேக் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.

    • உடந்தையாக இருந்த தந்தையும் சிக்கினார்
    • திருமணத்தில் பங்கேற்றவர்களிடமும் விசாரிக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    கன்னியாகுமரி:

    களியக்காவிளையை அடுத்த நெடுமங்காடு பகுதியை சேர்ந்தவர் அல் அமீர் (வயது 23).

    இவர் அதே பகுதியை சேர்ந்த மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்தார். இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டதை அடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    இந்த நிலையில் அல் அமீர் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். அதன் பின்பு அவர் தன்மீது வழக்கு தொடர்ந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து சமரசம் பேசியுள்ளார்.

    அப்போது மாணவியை அவரே திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். இதையடுத்து அல்அமீருக்கும், மாண விக்கும் கடந்த 18-ந் தேதி திருமணம் நடந்துள்ளது.

    மைனர் பெண்ணை அல்அமீர் திருமணம் செய்த தகவல் குழந்தைகள் நல அலுவலர்களுக்கு தெரியவந்தது.அவர்கள் இதுபற்றி போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்தனர். பின்னர் மைனர் பெண்ணை திருமணம் செய்ததாக அல்அமீரை கைது செய்தனர்.மேலும் இதற்கு உடந்தையாக இருந்ததாக சிறுமியின் தந்தை மற்றும் திருமணத்தை நடத்தி வைத்தவர் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இந்த திருமணத்தில் பங்கேற்றவர்களிடமும் சம்பவம் குறித்து விசாரிக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறியதால் பரபரப்பு
    • அபிஷேக் சிகிச்சை பெற்று வரும் வார்டுக்கு வெளியே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் (வயது 22).

    இவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு பாலி டெக்னிக் கல்லூரியில் படித்த போது, சக மாணவி ஒருவரிடம் நெருங்கி பழகி உள்ளார். அந்த சமயத்தில் மாணவியிடம் திடீரென காதலை அபிஷேக் வெளிப்படுத்தி உள்ளார்.

    ஆனால் மாணவி அதனை ஏற்கவில்லை. எனினும் இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். இந்த நிலையில் மாணவியிடம் நைசாக பேசிய அபிஷேக், அவரை நண்பரின் வீட்டுக்கு வரவழைத்து உள்ளார். அப்போது குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து உள்ளார். இதனை குடித்த சற்று நேரத்தில் மாணவி மயங்கிய தாக தெரிகிறது. இதனை பயன்படுத்தி மாணவியை அபிஷேக் பலாத்காரம் செய்து உள்ளார்.

    அந்த காட்சியை அவர் வீடியோவாகவும் எடுத்து உள்ளார். மயக்கம் தெளிந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமைகளை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இந்த விவகாரத்தை வெளியே சொன்னால், நாம் இருவரும் சேர்ந்து இருக்கும் ஆபாச வீடியோவை சமூக வலை தளத்தில் பரப்பி விடுவேன் என அபிஷேக், மாணவியை மிரட்டி உள்ளார்.

    இதனால் நடந்த விஷ யத்தை மாணவி வெளியே தெரிவிக்க வில்லை. கல்லூரி படிப்பு முடிந்த பிறகும் அபிஷேக் தொடர்ந்து மாணவியை மிரட்டி வந்து உள்ளார். எனவே வேறு வழியின்றி மாணவி தனக்கு நடந்த கொடுமையை பெற்றோரிடம் கூறி கதறி அழுதார்.

    இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் நாகா்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் அபிஷேக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த சம்பவம் கடந்த 2020-ம் ஆண்டு நடந்தது. இதற்கிடையே படிப்பை முடித்த அபிஷேக், மாணவி புகார் கொடுத்ததை அறிந்த தும் துபாய் நாட்டுக்கு சென்று தலைமறைவானார். அவரை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர்.

    மேலும் இந்த விவகா ரம் தெரிந்து தான், அபிஷேக்கை, அவருடைய தந்தை வில்சன்குமார் வெளிநாட்டுக்கு அனுப்பி யது போலீசாரின் விசார ணையில் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவர் மீதும், அபிஷேக்கின் செய லுக்கு உடந்தையாக இருந்த நண்பர் அனீஸ் மீதும் போலீ சார் வழக்குப்பதிவு செய்த னர். இந்த நிலையில் 2½ ஆண்டுகளுக்கு பிறகு அபிஷேக் துபாயில் இருந்து சொந்த ஊருக்கு வருவதாக நாகர்கோவில் மகளிர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்று அபிஷேக்கை கைது செய்தனர்.

    இதைத் தொடர்ந்து அவரை பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்து வக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது தனக்கு நெஞ்சு வலிப்பதாக அபிஷேக் கூறி னார்.

    இதைத் தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் உள் நோயாளியாக அனு மதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அபிஷேக் சிகிச்சை பெற்று வரும் வார்டுக்கு வெளியே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி கனிகா தேர்வு.
    • மாநில அளவிலான சாலையோர சைக்கிள் போட்டிக்கு 11-ம் வகுப்பு மாணவி ஷமீனராகவி தகுதி.

    சீர்காழி:

    தமிழ்நாடு மாநில அளவிலான குடியரசு மற்றும் பாரதியார் தின புதிய விளையாட்டுப் போட்டிகள் அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் என்ற இடத்தில் நடைபெற உள்ளது.

    இப்போட்டியானது கம்பு சண்டை, ஒற்றை கம்பு, இரட்டை கம்பு என அனைத்து வயது பிரிவினருக்கும் இப்போட்டி நடைபெற உள்ளது.

    இப்போட்டிக்கு 13 மாணவ, மாணவிகள் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியிலிருந்து தகுதி பெற்றுள்ளனர். 6-ம் வகுப்பு மாணவி யாழினி, 7-ம் வகுப்பு மாணவி யுவேத்திதா, 9-ம் வகுப்பு மாணவி தீபிகா,

    கீர்த்தனா , 11-ம் வகுப்பு மாணவி ஷாமிலி, 12-ம் வகுப்பு மாணவி கனிகா, எட்டாம் வகுப்பு மாணவர்கள் ரிஷிகாந்த், ஆதவன், நீசார்தின் 9-ம் வகுப்பு மாணவன் சபரிநாதன் மற்றும்

    10-ம் வகுப்பு மாணவர்கள் அஜய், சிவப்பிரவின் ஆகியோர்கள் சிலம்பம் மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    மேலும் மாநில அளவிலான சாலையோர சைக்கிள் போட்டிக்கு 11-ம் வகுப்பு மாணவி ஷமீனராகவி தகுதி பெற்றுள்ளார்.

    மாநில போட்டிக்கு தகுதி பெற்ற மாணவ மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் அறிவுடைநம்பி பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் வரதராஜன், துளசிரங்கன், மேலும் உடற்கல்வி இயக்குனர் முரளிதரன் உடற்கல்வி ஆசிரியர்கள் முரளி, மார்கண்டன், சக்திவேல், ஹரிஹரன், ராகேஷ் மேலும் பள்ளியின் முன்னாள் செயலர் பாலசுப்பிர மணியன், பள்ளி செயலர் ராமகிருஷ்ணன், பள்ளி குழு தலைவர் சொக்கலிங்கம் ஆகியோர் வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.

    • மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் அடிக்கடி பின் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்தார். இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறினார். அவர்கள் வாலிபரை கண்டித்ததாக தெரிகிறது.
    • மாணவி கல்லூரிக்கு செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார் .அங்கு வந்த வாலிபர் திடீரென மாணவியிடம் தகராறில் ஈடுபட்டார்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வேதநகர் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் இறச்சகுளம் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    தினமும் இவர் கல்லூரிக்கு பஸ்ஸில் செல்வது வழக்கம். அப்போது மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் அடிக்கடி பின் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்தார். இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறினார். அவர்கள் வாலிபரை கண்டித்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் மாணவி கல்லூரிக்கு செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார் .அங்கு வந்த வாலிபர் திடீரென மாணவியிடம் தகராறில் ஈடுபட்டார். மாணவியின் கையில் வைத்திருந்த செல்போனை பிடுங்கி உடைத்ததுடன் மிரட்டல் விடுத்தார். பின்னர் அங்கிருந்து சென்று விட்டார்.

    இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுது உள்ளார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சம்பவம் குறித்து கோட்டார் போலீசில் புகார் செய்தனர்.

    புகாரின்பேரில் வாலிபர் மீது கொலை மிரட்டல் உட்பட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அகில இந்திய பல்கலைக்கழக அளவிலான டேக்வாண்டோ போட்டியில் சேலம் மாணவி சாதனை படைத்தார்.
    • டேக்வாண்டா போட்டியில் வெற்றி பெற்ற சேலம் மாணவி சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான டேக்வாண்டோ போட்டியில் இந்தியா சார்பில் விளையாட தேர்ந்தெடுக்கப்–பட்டுள்ளார்.

    சேலம்:

    கடந்த ஜனவரி மாதம் 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் அமைந்துள்ள குருநானக் தேவ் பல்கலைக்கழகத்தில் 2022-23 -ம் ஆண்டிற்கான அகில இந்திய பல்கலைக்கழக டேக்வாண்டோ போட்டிகள் நடைபெற்றன.

    இதில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணயத்தின் எம்ஐஎம்எஸ் திட்டத்தின் கீழ் பயிற்சி பெறும் அனுஷியா பிரியதர்ஷினி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் சார்பில் 62 கிலோ எடை பிரிவில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

    இவர் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான டேக்வாண்டோ போட்டிகளில் பதக்கம் வெல்வது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.இவர் சேலத்தில் அமைந்துள்ள அத்தீனா டேக்வாண்டோ பயிற்சி மையத்தில் சிறப்பு டேக்வாண்டோ பயிற்சி பெற்று வருகிறார்.

    மேலும் தென்னிந்தியாவிலிருந்து உலக டேக்வாண்டோ சாம்பியன்ஷிப்பில் பங்கேற்ற முதல் பெண் அனுஷியா பிரியதர்ஷினி என்பது குறிப்பிடத்தக்கது.

    இவர் , வருகிற ஜூலை மாதம் சீனா செங்குடுவில் நடைபெறவுள்ள சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான டேக்வாண்டோ போட்டியில் இந்தியா சார்பில் விளையாட தேர்ந்தெடுக்கப்–பட்டுள்ளார்.

    இவருக்கு இவர் பயிலும் திண்டுக்கல் ஜிடிஎன் கலைக் கல்லூரியின் தாளாளர், கல்லூரி இயக்குநர், உடற்கல்வி இயக்குநர், பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

    • கீழ்வேளூரை அடுத்த தென்மருதூரை சேர்ந்தவர் தேவதாஸ் ஆந்தகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார்.
    • அங்குள்ள 5-ம்வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக புகார் எழுந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த தென்மருதூரை சேர்ந்தவர் தேவதாஸ் (வயது 38).

    இவர் ஆந்தகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில் அவர் அங்குள்ள 5-ம்வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக புகார் எழுந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கார்த்திகேயன் விசாரணைக்கு உத்த ரவிட்டார்.

    விசாரணையில் ஆசிரியர் தேவதாஸ் மீது கூறப்பட்ட புகாரில் உண்மை இருப்பது தெரியவந்தது.

    அதனைத்தொடர்ந்து அவரை சஸ்பென்ட் செய்து மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

    இது குறித்து வட்டார கல்வி அலுவலர் மணிகண்டன் கீழ்வேளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இந்த புகார் மனு நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்த தகவல் அறிந்ததும் ஆசிரியர் தேவதாஸ் தப்பியோடி விட்டார்.

    அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    மேலும் பாதிப்புக்கு உள்ளான ஆந்தகுடி தொடக்க பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் பாலியல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தினர் நாகை அருகே அரசு பள்ளியில் ஆசிரியர் 5-ம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் தீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சிறந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் படைப்புகள் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்கள் மற்றும் பிற அலுவலக வளாகங்களில் காட்சிப்படுத்தப்படும்.
    • குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அறிவிப்பு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு காவல்துறை சார்பில் 4 தலைப்புகளில் ஓவியப்போட்டி கடந்த ஆண்டு நடந்தது. அப்போது சுமார் 3 ஆயிரம் ஓவியங்கள் கிடைக்க பெற்று 12-7-2022 அன்று பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு சிறப்பான முறையில் ஓவியங்கள் வரைந்தவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதேபோல இந்த ஆண்டும் போட்டிகள் நடக்கின்றன.

    கல்வியின் நோக்கம் ஒருவரின் சொந்த வாழ்க்கையை மேம்படுத்துவது மட்டுமல்ல மற்றவர்களின் வாழ்க்கையையும் மேம்படுத்துவதும் ஆகும். சமூகமும், உலகமும் தற்போது இருப்பதை விட சிறந்த இடத்தில் இருப்பதை உறுதி செய்வதும் ஆகும். எனவே காவல்துறை தொடர்பான பல்வேறு அம்சங்களை பொறுத்து மாணவர்களிடையே பங்கேற்பு கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த ஆண்டு வரைதல், ஓவியம், சுவரொட்டி ஆகிய போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

    "போதை பொருட்கள் நமக்கு வேண்டாம், பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகள், மூத்த குடிமக்கள்-நமது பொக்கிஷம் மற்றும் நமது பெருமை, சைபர் கிரைம் குற்றங்களில் கவனமாகவும், பாதுகாப்பாகவும் இருங்கள், காவல்துறை வழங்கும் சேவைகள் பற்றிய எனது பார்வை" ஆகிய தலைப்புகளில் போட்டியானது நடக்கும். 1-ம் வகுப்பு முதல் 7-ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 8-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை ஒரு பிரிவாகவும், அனைத்து கல்லூரி மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும் என 3 பிரிவுகளாக போட்டி நடக்கும். ஒரு மாணவர் அதிகபட்சம் 3 தலைப்புகளில் பங்கேற்கலாம்.

    மாணவர்கள் அவரவர் விருப்பப்படி ஒன்றுக்கு மேற்பட்ட கருப்பொ ருள்களில் பங்கேற்கலாம். மாணவர்களின் படைப்பு களை பெறுவதற்கான கடைசி தேதி வருகிற 20-ந்தேதி ஆகும். மாணவர்களின் படைப்புகளை ஒவ்வொரு கல்லூரியும், பள்ளியும் அனைத்து ஓவியங்களையும் சேகரித்து அதனை ஒரு கவர் கடிதத்துடன் அனுப்ப வேண்டும். நேரடி யாகவோ அல்லது தபால் மூலமாகவோ நாகர்கோவி லில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவல கத்துக்கு அனுப்ப வேண்டும். 3 உறுப்பி னர்களை கொண்ட குழு மாண வர்களிடம் பெறப்பட்ட அனைத்து படைப்பு களையும் ஆய்வு செய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த படைப்புகளுக்கு வெகுமதிகள் வழங்கப்படும்.

    முடிவுகள் 25-ந்தேதி அறிவிக்கப்படும். சிறந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் படைப்பு கள் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்கள் மற்றும் பிற அலுவலக வளாகங்களில் காட்சிப்ப டுத்தப்படும்.லும் சிறந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் படைப்பு கள் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்கள் மற்றும் பிற அலுவலக வளாகங்களில் காட்சிப்ப டுத்தப்படும். மேலும் சந்தேங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 94981 03903 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×