search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லூரிகள்"

    கர்நாடகத்தில் தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் காரணமாக இன்று பெரிய அளவில் பாதிப்பு இல்லை. அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. #BharatBandh
    பெங்களூரு:

    தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் காரணமாக கர்நாடகத்தில் இன்று பெரிய அளவில் பாதிப்பு இல்லை. பெங்களூருவில் இருந்து 2,543 ஊர்களுக்கு வழக்கமாக 3,300 பஸ்கள் இயக்கப்படும்.

    இன்று தொழிலாளர்கள் வேலைக்கு வராததால் 1,104 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இந்த பஸ்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. பயணிகள் ரெயிலும், மெட்ரோ ரெயிலும் இயக்கப்பட்டது.

    வேலைநிறுத்தம்  காரணமாக அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.

    இதேபோல பெங்களூரு பல்கலைக்கழகம் உள்பட மாநிலத்தில் உள்ள மற்ற பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. பெங்களூரு நகரில் ஆட்டோ, டாக்சிகள் இன்று வழக்கம்போல் ஓடின. தபால் மற்றும் வங்கி அலுவலகங்கள் திறந்து இருந்தாலும் ஊழியர்கள் வேலைக்கு வரவில்லை. இதேபோல கர்நாடக அரசு அலுவலகங்கள் திறந்து இருந்தன. ஊழியர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

    வேலை நிறுத்தத்துக்கு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை ஆதரவு தெரிவித்து இருந்தது. இதனால் இன்று சினிமா ஷூட்டிங் நடைபெறவில்லை.

    கர்நாடக மாநிலம் முழுவதும் 23 ஆயிரம் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இன்று வேலைநிறுத்தம் காரணமாக 10 ஆயிரத்துக்கும் குறைவான பஸ்களே இயக்கப்படுகின்றன.

    பெங்களூரு, மைசூரு உள்பட மாநிலம் முழுவதும் முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். #BharatBandh
    குஜராத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் சர்தார் வல்லபாய் படேலுக்கு சிறிய அளவிலான சிலைகளை நிறுவ அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. #StatueofUnity #SardarVallabhbhaiPatel
    ஆமதாபாத்:

    இரும்பு மனிதர் என போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலுக்கு 182 மீட்டர் உயரத்தில் குஜராத்தின் நர்மதை ஆற்றங்கரையோரம் சிலை நிறுவப்பட்டு உள்ளது. ஒற்றுமையின் சிலை என அழைக்கப்படும் உலகிலேயே உயரமான இந்த சிலையை கடந்த அக்டோபர் மாதம் 31-ந்தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார்.



    இந்தநிலையில் சர்தார் வல்லபாய் படேலின் நினைவு தினம் இன்று (சனிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி குஜராத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் ஒற்றுமையின் சிலையின் மாதிரியான சிறிய அளவிலான சிலைகளை நிறுவ அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. #StatueofUnity #SardarVallabhbhaiPatel

    கஜா புயல் காரணமாக கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, காரைக்கால் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். #GajaStorm #Schools #Holiday
    கடலூர்:

    வங்கக்கடலில் உருவான கஜா புயல் கடலூர் - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்று முதலில் கணிக்கப்பட்டது. அதன்பின்னர் புயல் நகரும் திசை மற்றும் அதன் வேகத்தில் மாற்றம் ஏற்பட்டதால் கடலூருக்கும் - பாம்பனுக்கும் இடையில் கரையை கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.  

    இந்நிலையில் கஜா புயல் நாளை மாலை கரையை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    புயல் கரை கடக்கும்போது கடலூர், நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.



    கஜா புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு  நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.

    கடலூர் மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்களை தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரவு, பகலாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கடலூரில் முன்னெச்சரிக்கை ஏற்பாடு குறித்து ஆய்வு செய்த சிறப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி, செல்போன்களை முன்கூட்டியே சார்ஜ் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

    இதேபோல் நாகை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, காரைக்கால்  மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கஜா புயல் கரையை கடக்கும்போது கனமழை பெய்யலாம் என்பதால் ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர். #GajaStorm #Schools #Holiday

    கேரளாவில் மழை வெள்ளத்தால் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகளை இன்று முதல் படிப்படியாக திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. #KeralaFloods
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் இதுவரை இல்லாத அளவிற்கு பெய்த கனமழையால் அந்த மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதக்கும் சூழ்நிலை உருவானது.

    இதனால் ஏராளமான பொதுமக்கள் வீடுகளை இழந்தனர். அவர்கள் மாநிலம் முழுவதும் உள்ள முகாம்களில் தஞ்சமடைந்தனர். அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை மாநில அரசு மேற்கொண்டது. மேலும் வெள்ளத்தில் சிக்கி தவித்த மக்களை முப்படையை சேர்ந்த வீரர்களும் மீட்கும்பணியில் ஈடுபட்டனர். இயல்பு நிலை திரும்புவதை தொடர்ந்து 13 பட்டாளியன் ராணுவ வீரர்கள் தங்கள் முகாம்களுக்கு திரும்பி விட்டனர்.

    கடந்த 3 நாட்களாக கேரளாவில் மழை ஓய்ந்துவிட்டது. இதனால் பொதுமக்கள் நிம்மதி பெரு மூச்சு விட்டு வருகிறார்கள். முகாம்களில் தங்கி உள்ள பொதுமக்களும் தங்கள் வீடுகளுக்கு திரும்ப தொடங்கி உள்ளனர்.

    வெள்ளத்தில் மூழ்கிய பலரது வீடுகள் முற்றிலுமாக இடிந்து சேதம் அடைந்து விட்டதால் அவர்கள் தவிப்புக்கு உள்ளாகி உள்ளனர். வெள்ளத்தில் தப்பிப் பிழைத்த வீடுகளும் உடனடியாக மக்கள் குடியேற முடியாதபடி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இவற்றை தூய்மை செய்து மக்கள் குடியேறி வருகிறார்கள்.

    இதனால் முகாம்களில் தங்கி உள்ளவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது. சுமார் 50 சதவீத மக்கள் முகாம்களில் இருந்து வீடுகளுக்கு திரும்பிவிட்டனர்.

    கேரளாவில் மழை வெள்ளத்தால் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகளை இன்று முதல் படிப்படியாக திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளில் உள்ள முகாம்களில் தங்கி உள்ள பொதுமக்கள் திருமண மண்டபம், சமூகநலக்கூடங்களுக்கு மாற்றப்பட்டு வருகிறார்கள்.

    கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் பத்தனம் திட்டா பகுதியில் உள்ள கோலஞ்சேரி முகாமில் தங்கி உள்ள பொதுமக்களை நேற்று சந்தித்தார். அப்போது அவர்களுக்கு தேவையான அனைத்து நிவாரண உதவிகளையும் மாநில அரசு தொடர்ந்து செய்யும் என்று உறுதி அளித்தார்.

    சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் ஓணம் பண்டிகைக்காக நேற்று நடை திறக்கப்பட்டது. பம்பை ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு காணப்படுவதால் பக்தர்கள் யாரும் கோவிலுக்கு செல்ல முடியவில்லை. சபரிமலையில் மழை காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இவற்றை மண்டல பூஜைக்கு முன்பு சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான திட்ட மதிப்பீடுகளை திருவிதாங்கூர் தேவசம் போர்டு தயார் செய்து வருகிறது.

    கேரளாவின் முக்கிய பண்டிகையான ஓணம் நாளை கொண்டாடப்படுகிறது. இன்று முதல் அதற்கான கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. முகாம்களில் தங்கி உள்ளவர்கள் ஓணம் ஊஞ்சல் ஆடி மகிழ்ந்தனர். மழை காரணமாக ஓணம் உற்சாகம் குறைந்தே காணப்படுகிறது.  #KeralaFloods
    ×