search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜி.கே.வாசன்"

    ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேருவதற்கு ‘நீட்’ தேர்வு முறை தடையாக இருப்பதாக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேருவதற்கு ‘நீட்’ தேர்வு முறை தடையாக இருந்ததாகவே கருதுகிறேன். தமிழக கல்வித்திட்டம், பயிற்சி முறை போன்றவற்றில் அதிக முக்கியத்துவம் கொடுத்து, மாணவர்களை ‘நீட்’ தேர்வு முறைக்கு முழுமையாக தயார்படுத்தவேண்டிய நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபடவேண்டும். ‘நீட்’ தேர்வின் முடிவில் தமிழகத்தை சேர்ந்தவர்களின் தேர்ச்சி சதவீதம் மிக குறைவு.

    அது மட்டுமல்ல முதல் 50 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த ஒரு மாணவி மட்டுமே இடம் பெற முடிந்தது. தமிழகத்தை சேர்ந்த மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறைந்ததற்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு. ‘நீட்’ தேர்வு முறையில் நடைபெற்ற குளறுபடிகளே இதற்கு காரணம்.

    தமிழக மாணவர்கள் குறிப்பாக கிராமம் முதல் நகரம் வரையுள்ள ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேருவதற்கு ‘நீட்’ தேர்வு முறை தடையாக இருந்ததாகவே கருதுகிறேன். மேலும் தமிழக கல்வித் திட்டம், பயிற்சி முறை போன்றவற்றில் அதிக முக்கியத்துவம் கொடுத்து அதன் அடிப்படையில் மாணவர்களை ‘நீட்’ தேர்வு முறைக்கு முழுமையாக தயார் படுத்தவேண்டிய நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபடவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    பெட்ரோலிய பொருட்களை விற்க எண்ணை நிறுவனங்களுக்கு வழங்கிய அனுமதியை திரும்ப பெற்று, பெட்ரோலிய பொருட்களை குறைந்த விலையில் விற்க மத்திய அரசே முன்வர வேண்டும் என ஜிகே வாசன் கூறியுள்ளா.#GKVasan
    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்ப தாவது:-

    இந்தியாவில் எண்ணை நிறுவனங்கள் பெட்ரோலிய பொருட்களின் விலையில் மாற்றம் என்ற பெயரில் அதன் விலையை உயர்த்து வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயரும் போது பெட்ரோலிய பொருட்களின் விலையை உடனடியாக உயர்த்த எண்ணை நிறுவனங்கள் முன்வருகின்றன. ஆனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை குறையும் போது அதற்கேற்ப நம் நாட்டில் எண்ணை நிறுவனங்கள் விலையை குறைக்க முன்வருவதில்லை.



    பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வால் காய்கறிகள் உள்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயருகிறது. பொது மக்கள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கான செலவும் கூடுகிறது. மொத்தத்தில் விலைவாசி படிப்படியாக உயர்ந்து ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்களுக்கு பொருளாதார சுமை அதிகமாகி பெரும் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

    பெட்ரோலிய பொருட்களை விற்க எண்ணை நிறுவனங்களுக்கு வழங்கிய அனுமதியை திரும்ப பெற்று, பெட்ரோலிய பொருட்களை குறைந்த விலையில் விற்க மத்திய அரசே முன்வர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.#GKVasan
    திமுக தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்த நாளை முன்னிட்டு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தனது பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளாா்.
    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்னும் நீண்ட காலம் நல்ல உடல்நலத்துடன் வாழ்ந்து அரசியலிலும், மக்கள் நலப் பணியிலும் சிறந்து விளங்க இயற்கையும், இறைவனும் என்றும் துணை நிற்க வேண்டும். கிராமப்புற முன்னேற்றத்திற்கும், ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்கும், சமூக சீர்திருத்தத்திற்கும், மாநில மக்கள் குறிப்பாக ஏழை, எளிய மக்கள் நலன் காக்கவும் குரல் கொடுத்த பெருமைக்குரியவர்.



    உலக தமிழ் மக்கள் மத்தியில் குறிப்பாக தமிழ் மொழியை பெரிதும் நேசிக்கிற, விரும்புகிற தமிழ் நெஞ்சங்களின் உள்ளங்களில் இவருக்கு என்று ஓர் தனி இடம் என்றும் உண்டு. கருணாநிதி இன்னும் நீண்ட காலம் நல்ல உடல்நலத்துடன் வாழ்ந்து அரசியலிலும், மக்கள் நலப்பணியிலும் சிறந்து விளங்க இயற்கையும், இறைவனும் என்றும் துணை நிற்க வேண்டும் என்று த.மா.கா. சார்பில் வாழ்த்துகிறேன். இவ்வாறு வாழ்த்து செய்தியில் அவர் கூறியுள்ளார். 
    தூத்துக்குடியில் இயல்பு வாழ்க்கை திரும்ப மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை விமான நிலையத்தில் ஜி.கே.வாசன் கூறினார்.
    கோவை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட பிரச்சனை. பொது மக்களின் உயிர் சம்பந்தப்பட்டது. சுற்றுப்புறசூழல், மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பிரச்சனை. எனவே ஆலையை மூட காலம் தாழ்த்தாமல் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடந்த 1 வாரமாக அந்த பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு இயல்பு வாழ்க்கை திரும்ப மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    துப்பாக்கிச்சூடு சம்பவம் காவல்துறை தோல்வியை காட்டுகிறது. 99 நாட்கள் பொதுமக்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். 100-வது நாள் போராட்டத்துக்கு எவ்வளவு பேர் வருவார்கள் என கணிக்கத்தவறியது உளவுத்துறையின் தோல்வி.

    தூத்துக்குடி மக்களின் மனநிலையை புரிந்து கொள்ள முடியாத அரசாக இந்த அரசு இருக்கிறது.

    பொது மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய அரசுகள் இனி ஆட்சிக்கு வர வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தேவையான விழிப்புணர்வு பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

    பெட்ரோல், டீசல் விலை வரலாற்றில் இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுக்க அவற்றை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும். மாநில அரசு வாட் வரியை குறைக்க வேண்டும்.

    நிபா காய்ச்சல் கேரளாவில் பரவி வருகிறது. எனவே எல்லையோரங்களான கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொள்ள வேண்டும்.

    அவினாசி உயர்மட்ட மேம்பாலத்தை பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாநில துணை தலைவர் கோவை தங்கம், மாவட்ட தலைவர்கள் வி.வி.வாசன், கே.என். ஜவஹர், அன்னூர் ராமலிங்கம், மாநில இளைஞரணி தலைவர் யுவராஜ், துணை தலைவர் அருண் பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். #Tamilnews
    தமிழ் மாநில காங்கிரஸ் மகளிரணி சார்பில் ‘மகளிர் ஆலோசனை மையம்’ தொடக்க விழா சென்னை மயிலாப்பூரில் நடந்தது. சிறப்பு விருந்தினராக கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்று, மகளிர் ஆலோசனை மையத்தை தொடங்கி வைத்தார்.
    சென்னை :

    தமிழ் மாநில காங்கிரஸ் மகளிரணி சார்பில் ‘மகளிர் ஆலோசனை மையம்’ தொடக்க விழா சென்னை மயிலாப்பூரில் நடந்தது. மகளிரணி தலைவர் ராணிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பானு லாரன்ஸ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்று, மகளிர் ஆலோசனை மையத்தை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஜி.கே.வாசன் பேசுகையில், “காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இது மாறவேண்டும் என்றால் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச கடும் தண்டனை விதிக்கவேண்டும். அப்போதுதான் குற்றங்கள் குறைந்து, பெண்கள் நிம்மதியாக நடமாடுவார்கள். பெண்களுக்காக தொடங்கப்பட்டுள்ள எங்கள் ஆலோசனை மையத்தை அணுகி, தங்கள் பிரச்சினைகளை தெரிவித்தால் உரிய தீர்வை எங்கள் நிர்வாகிகள் ஏற்படுத்தி தருவார்கள்” என்றார். நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த துணைத்தலைவர்கள் பி.எஸ்.ஞானதேசிகன், கோவைத்தங்கம், பொதுச்செயலாளர் விடியல் சேகர், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    முன்னதாக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கல்லூரி மாணவிகளுடன், ஜி.கே.வாசன் கலந்துரையாடினார். இதில் அரசியல், போராட்டம், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்டவை தொடர்பாக கல்லூரி மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு ஜி.கே.வாசன் பதில் அளித்தார். இறுதியில் மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. 
    காவிரி மேலாண்மை ஆணையத்தை இந்த மாத இறுதிக்குள் அமைக்க வேண்டும் என ஜி.கே.வாசன் கூறினார்.
    திருவாரூர்:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று திருவாரூர் வந்தார். அப்போது அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    காவிரி பிரச்சினையில் கிடைத்த வெற்றி தமிழக விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றியாகும். சுப்ரீம் கோர்ட்டு அளித்த காவிரி தீர்ப்பை 48 மணி நேரத்தில் மத்திய அரசு, அரசிதழில் வெளியிட வேண்டும்.

    காவிரி மேலாண்மை ஆணையத்தினை உடனடியாக இந்த மாத இறுதிக்குள் அமைக்க வேண்டும். அதற்கு முழு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.

    காவிரியில் இருந்து 2 வாரங்களில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர்் திறக்க முடியும்.

    காவிரி நீர் பிரச்சினையால் 4 மாநிலங்களில் அதிகம் பாதிக்கப்பட்டது தமிழகம் தான். இதில் காங்கிரஸ், பா.ஜனதா ஆகிய இரு தேசிய கட்சிகளும் கண்டு கொள்ளாமல் கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கவே கவனம் செலுத்தி வந்தனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்வு ஏற்பட்டு பொதுமக்களை கடுமையாக பாதிக்கிறது.

    எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். தமிழக மக்கள் மீது மத்திய அரசு வலுக்கட்டாயமாக ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களை திணிக்கிறது. அதனை மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள். கவர்னர் என்பவர் மரியாதைக்குரியவர். அவர் நடுநிலை தவறாமல் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மாநில செயற்குழு உறுப்பினர் சுரேஷ் மூப்பனார், மாவட்ட தலைவர் குடவாசல் தினகரன், துணைத்தலைவர் செல்லதுரை, செயலாளர் ராதாகிருஷ்ணன், பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன், நகர தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் உடன் இருந்தனர். 
    விசைத்தறி கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை முக்கிய கவனத்தில் கொண்டு அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசை ஜி.கே. வாசன் வலுயுறுத்தி உள்ளார். #GKVasan #TNGovernment
    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய பா.ஜ.க. அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் விசைத்தறி உற்பத்தியாளர்களும், ஒப்பந்த முறையில் துணிகளை உற்பத்தி செய்து கொடுப்பவர்களும் பாதிக்கப்பட்டனர். வீடுகளில் விசைத்தறி மற்றும் அதன் சார்ந்த பிற தொழில் செய்பவர்கள் ஏற்கனவே தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் அவர்களின் கோரிக்கைகள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. விசைத்தறி கூலி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு சம்பந்தமான ஒப்பந்தம் முடியும் தருவாயில் கூலி உயர்வு கேட்டு, நியாயமான கோரிக்கையை முன் வைத்து கடந்த 30.04.2018 அன்று முதல் வேலை நிறுத்தத்தை தொடங்கினர். ஆனால் இதனை தமிழக அரசு கவனத்தில் கொண்டதாக தெரியவில்லை.



    ஒரு நெசவு தொழிலாளி ஒரு நாள் 9 மணி நேரம் வேலை செய்தால் ரூபாய் 180 ரூபாய் கூலி பெறும் அவல நிலையில் அவர்களின் வாழ்க்கை நகர்ந்து கொண்டு இருக்கிறது. தற்போதைய விலைவாசியில் குடும்பத்தை காப்பாற்ற வேண்டுமென்றால் விசைத்தறி கூலி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு மிகவும் அவசியமானது. எனவே தமிழக அரசு விசைத்தறி கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை முக்கிய கவனத்தில் கொண்டு அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். #GKVasan #TNGovernment
    காவிரி விவகாரத்தில் தமிழக விவசாயிகளுக்கு பா.ஜ.க., காங்கிரஸ் துரோகம் செய்கின்றன என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். #GKVasan #Cauvery
    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வர்த்தகர் அணி சார்பில் வணிகர் தினவிழாவையொட்டி சாதனையாளர்கள் சிறப்பு விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நிருபர்கள் சங்க கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார்.

    வர்த்தகர் அணி மாநில தலைவர் ஆர்.எஸ்.முத்து முன்னிலை வகித்தார். மூத்த துணைத்தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், துணைத்தலைவர் கோவைதங்கம், தென்சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் கொட்டிவாக்கம் முருகன், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், மாநில இணைச்செயலாளர் மால்மருகன், இளைஞரணி மாவட்ட தலைவர் ஜெயம் ஜெ.கக்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் பல்வேறு துறைகளில் சிறந்துவிளங்கிய நடிகர் ரமேஷ்கண்ணா(கலைத்துறை), கே.ராஜா(வணிகத்துறை), தேவானந்த்(கல்வித்துறை), கே.கே.பில்டர்ஸ் (கட்டிடத்துறை), சங்கர்ராஜ்(உணவுத்துறை), டாக்டர் காமராஜ்(மருத்துவத்துறை) உள்பட 9 பேருக்கு ஜி.கே.வாசன் விருதுகளை வழங்கி சிறப்பித்தார். இதையடுத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

    * சென்னை விமானநிலையம் காமராஜ் உள்நாட்டு முனையம் என்று இருந்ததை, அதில் உள்ள காமராஜ் பெயரை நீக்க இருக்கின்றனர். அதை நீக்கக்கூடாது. காமராஜர் உள்நாட்டு முனையம் என்ற பெயர் இருக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொள்கிறோம்.

    * தமிழக அரசு வணிக நல வாரியத்தை சீரமைத்து அதில் வணிக பிரதிநிதிகளை வாரிய உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும்.

    * ஆன்லைன் வர்த்தகத்தால் சில்லரை வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. மருந்து பொருட்கள் கூட ஆன்லைனில் விற்கும் நிலை இருக்கிறது. அதை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அதைத்தொடர்ந்து ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். கர்நாடக அரசு தமிழகத்துக்கு 4 டி.எம்.சி. தண்ணீர் வழங்கும் என்று ஏங்கிக்கொண்டு இருந்த விவசாயிகளுக்கு மத்திய பா.ஜ.க.வும், கர்நாடக காங்கிரசும் துரோகத்தையும், அநீதியையும் இழைத்து இருக்கின்றன. தொடர்ந்து இந்த 2 கட்சிகளும் தேர்தல் தான் முக்கியம் என்றும், தமிழக விவசாயிகளுக்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது என்றும் உறுதியாக இருக்கிறார்கள்.

    இந்த கட்சிகளை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள். மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக அறிக்கை வழங்க வேண்டும். சட்டத்துக்கு மதிப்பு கொடுத்து கர்நாடக அரசு 4 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக வழங்க வேண்டும்.

    த.மா.கா. தனித்தன்மையோடு இயக்கத்தை பலப்படுத்துகிறது. பெரிய கட்சிகளோ, சின்ன கட்சிகளோ இப்போதுள்ள சூழ்நிலையில் கூட்டணி அவசியம். தேர்தல் வரும்போது, த.மா.கா. சார்பில் கூட்டணி குறித்து ஆலோசிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ×