search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கழிப்பறை"

    நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனையின் பேரில் சிங்கப்பூர் ரசிகர்கள் கிருஷ்ணகிரி அரசு பள்ளிக்கு கழிப்பறை கட்டிக்கொடுத்துள்ளனர். #Rajinikanth #Rajinikanthfans
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஆனந்தூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சரியான கழிப்பறை வசதி இல்லை. இது தொடர்பாக பள்ளி சார்பில் கழிப்பறை கட்டித்தருமாறு நடிகர் ரஜினி காந்த்துக்கு கோரிக்கை விடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து ரஜினிகாந்த் ஆலோசனையின் பேரில் கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றமும், சிங்கப்பூர் ரஜினி மக்கள் மன்றமும் இணைந்து ரூ. 1 லட்சம் செலவில் கழிப்பறை கட்டிக்கொடுத்தனர். இதற்காக சென்னையில் உள்ள ரஜினி மக்கள் மன்ற தலைமை அலுவலகத்துக்கு நன்றி தெரிவித்து பள்ளி தலைமை ஆசிரியர் கடிதம் அனுப்பி உள்ளார்.

    நெடுநாட்களாக சரியான கழிவறை வசதி இல்லாமல் அவதிப்பட்டுக்கொண்டு இருந்த எங்கள் பள்ளிக்கு நாங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சிங்கப்பூர் ரஜினி மக்கள் மன்றமும், கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றமும் இணைந்து சுமார் 1 லட்சம் மதிப்பீட்டில் நவீன கழிவறையை இலவசமாக கட்டிக்கொடுத்து உள்ளனர்.

    இதற்காக எமது பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் ரஜினி காந்த்துக்கும், சிங்கப்பூர் மற்றும் கிருஷ்ணகிரி ரஜினி மக்கள் மன்றத்துக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #Rajinikanth #Rajinikanthfans
    குழந்தைகளுக்கு சிறு வயதிலே காலை கடன் பற்றிய முக்கியத்துவத்தை சொல்லி தர வேண்டும். தொடக்கத்திலே சொல்லி தருவது மிகவும் முக்கியம்.
    6 மாதத்துக்குப் பின்னர் திட உணவு சாப்பிட பழக்கமாகிய பிறகு குழந்தைகளின் மலம், சிறுநீர் இரண்டிலும் துர்நாற்றம் இருக்கவே செய்யும். சிறு குழந்தைகளாக இருக்கும்போது குழந்தைகளுக்கு மலம், சிறுநீர் வருகிறது எனச் சொல்ல தெரியாது. ஆனால், வளர வளர குழந்தைகளுக்கு இயற்கை கழிவுகள் வருகின்றன எனச் சொல்ல தெரியும். அதற்கான பயிற்சியை எப்போது தொடங்குவது? எப்படித் தொடங்குவது? என்று பார்க்கலாம்…

    குழந்தைகளுக்கு சிறு வயதிலே காலை கடன் பற்றிய முக்கியத்துவத்தை சொல்லி தர வேண்டும். தொடக்கத்திலே சொல்லி தருவது மிகவும் முக்கியம். குழந்தைகள் 14 - 15 மாதங்களுக்கு பின்பு தானாக உட்கார்ந்து மலம் கழிப்பது, சிறுநீர் கழிப்பதற்கானப் பழக்கத்துக்கு வருவார்கள். இந்த வயதுக்கு பின்னும் இந்தப் பழக்கத்துக்கு வரவில்லை என்றால், பெற்றோர் கட்டாயம் கழிப்பறைப் பயிற்சியைக் கொடுத்தாக வேண்டும்.

    எந்தப் பருவத்தில் கழிப்பறை பயிற்சி தரலாம்?

    * கழிப்பறைப் பயிற்சி தொடங்கும் முன் பேன்ட், ஜட்டி, பாவாடை போன்றவற்றை கழற்ற குழந்தைக்கு கற்று தர வேண்டும்.

    * ஒருவேளை ஆடையில் சிறுநீர் மலம் கழித்துவிட்டால்கூட எப்படி பக்குவமாக கழற்றுவது என சொல்லி தர வேண்டும்.



    * அதன் பின் தானாக ஆடைகளை மாட்டி கொள்ளும் முறையும் குழந்தைக்கு தெரிந்திருக்க வேண்டும்.

    * நடக்க ஆரம்பித்த குழந்தைகளுக்கு கழிப்பறை பயிற்சி சொல்லி தரலாம்.

    * குழந்தைகளுக்கு மலம் கழிக்க தற்போது பிளாஸ்டிக் கழிப்பறை தொட்டிகள் கிடைக்கின்றன. அதில் அமர வைத்துப் பழக்கலாம்.

    * குழந்தையை தினமும் இந்திய கழிப்பறையில் உட்கார்வது போல அமர வைத்துப் பழக்கப்படுத்தலாம். இப்படிதான் உட்கார வேண்டும் என சொல்லிக் கொடுக்கலாம்.

    * தினமும் 6-10 முறை சிறுநீர் கழிக்கவும் 1 அல்லது 2 முறை மலம் கழிக்கும் பழக்கத்துக்கும் குழந்தைகளை கொண்டு வர வேண்டும். காலைக்கடன்களைக் கழிக்கும் பயிற்சியை சொல்லி தர வேண்டும்.

    * சிறுநீரோ மலமோ கழிக்க வேண்டும் என உணர்வு வந்தவுடன் அம்மா, அப்பா அல்லது அருகில் இருப்பவரிடம் சொல்ல வேண்டும் எனக் குழந்தைக்கு சொல்லி கொடுங்கள்.

    * இதை ஒரு நாள், இரண்டு நாள் மட்டும் சொல்லிவிட்டு நிறுத்த கூடாது. தினந்தோறும் சொல்லி குழந்தைக்கு புரிய வையுங்கள்.

    * குழந்தைகளுக்கு பெரும்பாலும் இந்திய கழிப்பறையை பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் வெஸ்டர்ன் கழிப்பறைப் பயன்படுத்துவது உடல்நலத்துக்கு நல்லதல்ல.

    பிரிட்டன் நாட்டில் உள்ள பிரிஸ்ட்டல் பல்கலைக்கழகம் மாற்றுப் பாலினத்தவர்களின் கழிப்பறை வசதிக்காக சுமார் 30 கோடி ரூபாயை செலவிட முன்வந்துள்ளது. #BristolUniversity #neutralunitoilets
    லண்டன்:

    உலகின் பல நாடுகளில் ஆண்-பெண்களுக்கு நிகராக மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சம உரிமைகள் தேவை என உரிமைக்குரல் ஒலித்து வருகிறது. இந்த கோரிக்கையை சில நாடுகள் உடனடியாக செவிமடுத்து, செயலில் இறங்குகின்றன. பல நாடுகளில் செவிடன் காதில் ஊதிய சங்காக இந்த குரல் தேய்ந்து மறைந்து விடுகிறது.

    இந்நிலையில், மனித உரிமைகளுக்கு முன்னுரிமை அளிக்கும்  பிரிட்டன் நாட்டின் பிரிஸ்ட்டல் நகரில் இயங்கிவரும் பிரிஸ்ட்டல் பல்கலைக்கழக நிர்வாகம் மூன்றாம் பாலினத்தவர்கள் பயன்படுத்தத்தக்க கழிப்பறைகளை கட்டுவதற்காக 34 லட்சம் பவுண்டுகளை செலவிட முன்வந்துள்ளது.

    இந்த பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 30 கட்டிடங்களில் தற்போது இருபாலருக்கு உள்ள கழிப்பறைகளைபோல் இன்னும் நான்காண்டுகளில் மூன்றாம் பாலினத்தவர்களும் கழிப்பறைகளை அமைத்து தர திட்டமிடப்பட்டுள்ளதாக பிரிஸ்ட்டல் பல்கலைக்கழகத்தின் சம உரிமை, சுதந்திரம், அணுகுமுறை சார்ந்த விவகாரங்களுக்கான அதிகாரி ஸல்லி பேட்டர்சன் தெரிவித்துள்ளார். #BristolUniversity #neutralunitoilets
    தூக்க கலக்கத்தில் கழிப்பறை படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த 4 வயது சிறுவன் தலையில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தான்.
    முதுகுளத்தூர்:

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள காமாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாங்கம். அவருடைய மகன் விஷ்வத் பாலா (வயது 4). பள்ளிக்கூடத்தில் எல்.கே.ஜி. படித்து வந்தான்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தூக்கத்தில் இருந்து எழுந்த சிறுவன் விஷ்வத் பாலா, கழிப்பறைக்கு சென்றான். தூக்க கலக்கத்தில் இருந்த அவன், படிக்கட்டில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

    இதில் சிறுவனின் பின்தலையில் அடிபட்டு அவன் அலறினான். உடனே சிறுவனின் தாயார் ஓடிவந்து, தலையில் லேசாகத்தான் அடிபட்டுள்ளது என்று நினைத்து தடவி விட்டுள்ளார். தைலமும் தேய்த்துவிட்டதாக தெரிகிறது. பின்னர் சிறுவனை தூங்க வைத்தார்.

    காலையில் எழுந்து பார்த்த போது, சிறுவன் அசைவற்று கிடப்பதை கண்டு அவனுடைய தாயாரும், குடும்பத்தினரும் பதறினர். உடனே அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவன் விஷ்வத்பாலாவை டாக்டர் பரிசோதித்த போது, அவன் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. மகனை பிணக்கோலத்தில் பார்த்து அவனுடைய தாயாரும், குடும்பத்தினரும் கதறியது பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் முதுகுளத்தூர் போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால், பிரேத பரிசோதனை செய்வதில் தாமதம் ஏற்பட்டதாக கூறி, உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    முதுகுளத்தூர் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் சிறுவனின் உடல் அவனுடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    ×