search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 140445"

    • லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வளருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது
    • ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றியவர் சுப்பையா. இவர் 2009-ல் பச்சமுத்து என்பவருக்கு ரேஷன் கார்டு வழங்கலாம் என பரிந்துரை செய்வதற்கு ரூ.500 லஞ்சம் பெற்றுள்ளார். இது தொடர்பாக புதுக்கோட்டை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினர் சுப்பையா மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். புதுக்கோட்டை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பளித்தார். அதில் குற்றம் சாட்டப்பட்ட சுப்பையாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    • வாலிபருக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது
    • சிறுமிக்கு பாலியல் வன் கொடுமை

    புதுக்கோட்டை:

    கிருஷ்ணகிரிைய சேர்ந்தவர் அரசு (வயது 22). இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு தனியார் பேக்கரியில் வேலை செய்து வந்தார். கடந்த 2020-ல் 15 வயது சிறுமியை திருமணம் செய்து ெகாள்வதாக கூறி அவரை கடத்திச் ெசன்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து திருமயம் அனைத:து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அரசை கைது செய்தனர். புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பளித்தார். அதில், பாலியல் வன்கொடுமை செய்த அரசுக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ.2.5 லட்சம் அபராதமும் விதித்து அபராதத் தொகைகயை சிறுமிக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

    • உரிய ஆவணங்கள் இல்லாமல் இலங்கையில் இருந்து கள்ளதோணி மூலம் இந்தியாவுக்கு நுழைந்து தெரிந்தது.
    • வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    திருப்பூர் :

    ஈரோடு மாவட்ட 'க்யூ பிரிவு' போலீசார், திருப்பூர் மாவட்டம் காங்கயம் பகுதியில் சட்டவிரோதமாக வெளிநாட்டினர் சட்டவிரே ாதமாக தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் படி கண்காணித்து வந்தனர்.

    கடந்த 2020ம் ஆண்டு காங்கயம், காடையூரில் தங்கியிருந்த இலங்கை கிளிநொச்சியை சேர்ந்த தசிக்குமார், 36 என்வரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் இலங்கையில் இருந்து கள்ளதோணி மூலம் இந்தியாவுக்கு நுழைந்து தெரி ந்தது. அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதில் குற்றவாளி தசிக்குமாருக்கு மூன்று ஆண்டு சிறையும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து ஸ்வர்ணம் நடராஜன் தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.இதனையடுத்து அவரை சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

    • கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் 17-ந் தேதி கல்யாணராமன் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
    • வழக்கு எழும்பூரில் உள்ள கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினராக இருப்பவர் கல்யாணராமன். இவர், இரு மதங்களை சேர்ந்தவர்கள் மத்தியில் வெறுப்புணர்வு, மோதல், கலவரத்தைத் துாண்டும்விதமாக சமூக வலைதளத்தில் கருத்துகளை பதிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு மற்றும் சிட்லப்பாக்கம் போலீசார் 2017-ம் ஆண்டு மற்றும் 2018-ம் ஆண்டு வழக்குகள் பதிவு செய்தனர்.

    இந்நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் முகமது நபி குறித்து அவதூறாக பேசியதாக 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் கல்யாணராமன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    பின்னர் அவர் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    அதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் கல்யாணராமன் தொடர்ந்த வழக்கில், 'பிறரின் மத உணர்வுகளை புண்படுத்தும்வகையில் கருத்துகளை பதிவிட மாட்டேன்' என்ற பிரமாணபத்திரத்தை அவர் தாக்கல் செய்தார்.

    அதை மீறி, பிற மதம் குறித்து சமூக வலைதளத்தில் தொடர்ந்து அவதூறு கருத்துகளை பதிவிட்டுவருவதாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு, மாநகர கமிஷனர் அலுவலகத்தில் கல்யாணராமனுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது.

    அந்த புகாரின்படி, கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் 17-ந் தேதி கல்யாணராமன் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு எழும்பூரில் உள்ள கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிரிஜாராணி, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால் கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறை தண்டனை விதிக்கிறேன். அவர் ஏற்கனவே 2021-ம் ஆண்டு அக்டோபர் 17-ந் தேதி முதல் 2022-ம் ஆண்டு மார்ச் 28-ந் தேதி வரை சிறையில் இருந்துள்ளார். இந்த நாட்களை தண்டனைக் காலத்தில் கழித்துக்கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ளார். தண்டனைக் காலத்தைவிட ஏற்கனவே சிறையில் இருந்த நாட்கள் அதிகம் என்பதால், இந்த தீர்ப்பால் கல்யாணராமன் மீண்டும் சிறைக்குச் செல்லத் தேவையில்லை என்று கூறப்படுகிறது.

    • கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அந்த ஓட்டலுக்கு சென்ற பிரிசிலா மற்றும் டுமித்ரு அங்கு அறை எடுத்து தங்கினர்.
    • ஓட்டலின் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது பிரிசிலா மற்றும் டுமித்ரு திருட்டு அம்பலமானது.

    மாட்ரிட்:

    ஸ்பெயின் நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள கேசர்ஸ் நகரில் பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டலில் 19-ம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்ட ரூ.3 கோடி மதிப்புடைய 'ஒயின்' மதுபான பாட்டில் உள்பட பல பழமையான 'ஒயின்' மதுபான பாட்டில்கள் ரகசிய அறையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்தன.

    இந்த நிலையில் மெக்சிகோ நாட்டின் முன்னாள் அழகியான பிரிசிலா லாரா குவேரா என்பவர் தனது காதலர் கான்ஸ்டன்டின் கேப்ரியல் டுமித்ருவுடன் சேர்ந்து ஸ்பெயின் ஓட்டலில் இருந்து, பழமையான 'ஒயின்' மதுபான பாட்டில்களை திருட திட்டம் தீட்டினார். இதற்காக தனது காதலருடன் 3 முறை அந்த ஓட்டலுக்கு சென்று, திருட்டுக்கு ஒத்திகை பார்த்தார்.

    இறுதியாக கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அந்த ஓட்டலுக்கு சென்ற பிரிசிலா மற்றும் டுமித்ரு அங்கு அறை எடுத்து தங்கினர்.

    பின்னர் நள்ளிரவில் ஓட்டலின் வரவேற்பு அறைக்கு சென்ற பிரிசிலா, அங்கு பணியில் இருந்த ஊழியரிடம் தனக்கு உணவு தயார் செய்து தரும்படி வற்புறுத்தினார். முதலில் மறுத்த அந்த ஊழியர் பின்னர் உணவை தயார் செய்ய சமயலறைக்கு சென்றார்.

    அந்த சமயத்தில் டுமித்ரு வரவேற்பு அறையில் இருந்து, மதுபாட்டில்கள் வைக்கப்பட்டிருந்த ரகசிய அறையின் சாவியை எடுத்துக்கொண்டு அங்கு சென்றார்.

    ஆனால் அங்கு சென்ற பின்தான் தவறான சாவியை எடுத்து வந்தது தெரிய வந்தது. மீண்டும் வரவேற்பு அறைக்கு சென்ற ஊழியர் உணவுடன் அங்கு வந்தார். பின்னர் டுமித்ரு சைகை காட்ட அதை புரிந்து கொண்ட பிரிசிலா ஓட்டல் ஊழியரிடம் கனிவாக பேசி தனக்கு மேலும் உணவு வேண்டுமென கூறி அவரை சமையலறைக்கு அனுப்பினார்.

    பின்னர் டுமித்ரு சரியான சாவியை எடுத்துக்கொண்டு ரகசிய அறைக்கு சென்றார். அங்கு 19-ம் நூற்றாண்டின் மதுபாட்டில் உள்பட ரூ.13 கோடி மதிப்புடைய 45 மதுபாட்டில்களை பெரிய பையில் போட்டு தனது அறைக்கு எடுத்து சென்றார்.

    பின்னர் மறுநாள் காலை எதுவும் நடக்காததுபோல் இருவரும் ஓட்டல் அறையை காலி செய்துவிட்டு சென்றனர். இதனிடையே வழக்கம் போல் மதுபாட்டில்களை சரிபார்ப்பதற்காக ஊழியர்கள் ரகசிய அறைக்கு சென்றபோது மதுபாட்டில்கள் திருடுபோனது தெரியவந்தது.

    ஓட்டலின் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது பிரிசிலா மற்றும் டுமித்ரு திருட்டு அம்பலமானது. சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு வங்கி கொள்ளைக்கு இணையாக நேர்த்தியாக திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட இந்த திருட்டு சம்பவம் அப்போது சர்வதேச பத்திரிகைகளில் தலைப்பு செய்தியானது.

    இதையடுத்து, நாட்டை விட்டு தப்பி ஓடிய பிரிசிலா மற்றும் டுமித்ருவை சர்வதேச நாடுகளின் உதவியுடன் ஸ்பெயின் தேடியது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் குரேஷியாவில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஸ்பெயினுக்கு நாடு கடத்தப்பட்டு, வழக்கு விசாரணையை எதிர்கொண்டனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை கேசர்ஸ் நகர கோர்ட்டில் நேற்று முன்தினம் நடந்தது. விசாரணையின் முடிவில் பிரிசிலாவுக்கு 4 ஆண்டுகளும், டுமித்ருவுக்கு 4½ ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் அவர்கள் இருவரும் சம்பவம் நடந்த ஓட்டலுக்கு ரூ.6½ கோடி இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

    • ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கபட்டது
    • இந்த வழக்கு பெரம்பலூர் மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா வ.கீரனூரை சேர்ந்தவர் மணி(வயது 82). இவர் அரசு பஸ் டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கடந்த 2019-ம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த 6 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர் குன்னம் போலீஸ்நிலையத்தில் மணி மீது புகார் அளித்தனர். அதன்பேரில் போக்சோ உள்ளிட்ட சட்டங்களின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியை கைது செய்தனர்.

    இந்த வழக்கு பெரம்பலூர் மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுந்தர்ராஜன் ஆஜரானார்.இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்ததை தொடர்ந்து, நேற்று நீதிபதி முத்துகுமாரவேல் தீர்ப்பு கூறினார். அதில், மணிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மணியை போலீசார் திருச்சிக்கு அழைத்து சென்று மத்திய சிறையில் அடைத்தனர்.

    • அரியலூர் அருகே பாலியல் வழக்கில் கைதான வாலிபருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது
    • பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு அரசு ரூ.7 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அடுத்த கோக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹென்றிசேவியர் மகன் ஹெலிலன்ராஜ்(வயது23). இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு 9 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அரியலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், ஹெலிலன்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் குற்றவாளி ஹெலிலன்ராஜ்க்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1.10 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி அனந்தன் தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு அரசு ரூ.7 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து ஹெலிலன்ராஜ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞர் ம.ராஜா ஆஜராகினார்.


    • அரியலூர் அருகே போக்சோ வழக்கில் வாலிபருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கபட்டுள்ளது
    • ரூ.1லட்சத்து 10 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்த மேலநெடுவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்குமார் மகன் விஜயகுமார்(வயது25). இவர், அதே கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு வந்த 18 வயது சிறுமியை காதலித்துள்ளார். இதையடுத்து 2020ம் ஆண்டு சிறுமியை காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு விஜயகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தநிலையில் இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் பெண்ணை கடத்தியது மற்றும் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக விஜயகுமாருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1லட்சத்து 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.7 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து விஜயகுமார் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞர் ராஜா ஆஜரானார்.

    • குழந்தை திருமணம் செய்த வாலிபருக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கபட்டுள்ளது
    • பெரம்பலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே உள்ள கோனேரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த வர் தனது மகளை காணவில்லை எனவும், அரணாரை கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் லட்சுமணன் என்பவர் மீது சந்தேகமாகவுள்ளதாகவும் , தனது மகளை கண்டுபிடித்து தருமாறு பெரம்பலூர் போலீஸ் ஸ்டேசனில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.இதில் அரணாரை வடக்குகாலனியை சேர்ந்த மாரிமுத்து மகன் லட்சுமணன் (வயது31) என்பவர் சிறு வயது பெண் குழந்தை திருமணம் செய்து பாலியல் துன்புறுத்தல் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் லட்சுமணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இந்த வழக்கு பெரம்பலூர் மாவட்ட மகிளா கோர்ட்டில் நடந்து வந்து. அரசு தரப்பில் வக்கீல் சுந்தரராஜன் ஆஜரானார். நேற்று விசாரணை செய்த நீதிபதி முத்துகுமரவேல் குற்றவாளி லட்சுமணனுக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

    • கொலை முயற்சி வழக்கில் சகோதரர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
    • இடப்பிரச்சினை தொடர்பாக இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, நமையூரை சேர்ந்த கந்தன் என்பவருக்கும், காலனி தெருவை சேர்ந்த கலியமூர்த்தி (வயது 39) என்பவருக்கும் இடப்பிரச்சினை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் அவர்கள் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக மங்களமேடு போலீசார் கலியமூர்த்தி தரப்பினர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த பெரம்பலூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

    இதில், இந்த வழக்கின் குற்றவாளிகளான கலியமூர்த்திக்கு 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும், அவரது தம்பி கருணாநிதிக்கும் (35), மற்றொரு தம்பியான சரத்குமாருக்கும் (32) தலா ஒரு ஆண்டு சிறை தண்டனையுடன், ரூ.ஆயிரம் அபராதமும் மற்றும் 2 நபர்களை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்தும் தீர்ப்பளித்தார். மேற்படி கொலை முயற்சி வழக்கில் சிறப்பாக செயல்பட்டு புலன் விசாரணையை முடித்து குற்றவாளிகளின் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த மங்களமேடு போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷியாம்ளா தேவி வெகுவாக பாராட்டினார்.

    • பெரம்பலூரில் கொலை முயற்சியில் ஈடுபட்ட 3 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது
    • இதில் படுகாயமடைந்த கந்தன் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்

    பெரம்பலூர்:

    விவசாயியை தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட 3 பேருக்கு சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் மாவட்ட குற்றவியல் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, நமையூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிமுத்து மகன் கந்தன். இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த கண்ணுசாமி மகன் கலியமூர்த்தி (வயது39) என்பவருக்கும் இடப்பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இதில் கடந்த 2020ம் ஆண்டு நடந்த தகராறில் கலியமூர்த்தி (39), அவரது தம்பிகள் கருணாநிதி (35), சரத்குமார் (32) ஆகியோர் கந்தனை தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

    இதில் படுகாயமடைந்த கந்தன் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்த புகாரின்பேரில் மங்களமேடு போலீசார் வழக்கு பதிந்து குற்றவாளிகள் கலியமூர்த்தி உட்பட 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் 3 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த வழக்கு பெரம்பலூர் மாவட்ட முதன்மை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி மூர்த்தி கொலை முயற்சியில் ஈடுபட்ட கலியமூர்த்திக்கு 6 மாதம் சிறை தண்டனையும், கருணாநிதி மற்றும் சரத்குமார் ஆகியோருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனையும், மூன்று பேருக்கும் தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.


    • கடந்த 3-ந் தேதி காலையில் வீட்டை பூட்டி விட்டு தோட்டத்திற்கு சென்றுள்ளார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வந்தனர்.

    அவிநாசி :

    சேவூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சேவூர் அருகே மங்கரசுவலையபாளையம் கிருஷ்ணபிள்ளை தோட்டத்தை சேர்ந்தவர் ராமசாமி. விவசாயி. இவர் கடந்த 3-ந் தேதி காலையில் வீட்டை பூட்டி விட்டு தோட்டத்திற்கு சென்றுள்ளார். மதியம் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து சேவூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் சேவூர் மங்கரசுவலையாபாளையம் தண்ணீர்பந்தல் பஸ் நிறுத்தம் அருகே போலீசார் நேற்று வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள் சேவூர் அருகே புதுச்சந்தையை சேர்ந்த புக்கான்மூர்த்தி (வயது 45), வையாபுரிகவுண்டன் புதூரைச் சேர்ந்த பீட்டர் ராஜேந்திரன் (40), மங்கரசுவலையாபாளையத்தைச் சேர்ந்த சண்டி என்கிற கருப்புசாமி (38) என்றும், இவர்கள் 3 பேரும் ராமசாமி வீட்டில் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    ×